இது உங்கள் இடம்: வாய்தாவை ஒழிப்போம்!

நா.மு.நாச்சியப்பன், காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: சென்னை உயர் நீதிமன்றம், 'ஊழல் வழக்குகளில் தேவையின்றி வாய்தா வழங்குவதை, நீதிமன்றங்கள் தவிர்க்க வேண்டும்' என, அறிவுறுத்தி உள்ளது.
மேலும், 'ஊழல் வழக்குகளை, பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்தால், சட்டத்தின் நோக்கம் நிறைவேறாது; இதனால், சட்டத்தின் பிடியில் இருந்து, குற்றம் சாட்டப்பட்டவர் தப்ப வழி ஏற்படும்' என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அதிகாரம் இருந்தால், ஒரு ஊழல் வழக்கை, 20 ஆண்டுகள் கூட இழுத்தடிக்க முடியும் என்பதை, நாம் பார்த்திருக்கிறோம். நீதிமன்றம் கொடுக்கும், 'வாய்தா' என்ற சலுகை தான், பல குற்றவாளிகளை வாழ வைக்கிறது; அவர்கள் மீண்டும் தவறு செய்ய, ஊக்குவிக்கிறது.
'ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர், நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைக்கும் வரை, எந்தப் பதவியும் வகிக்கக் கூடாது' என, சட்டம் இயற்ற வேண்டும்.வழக்குகளை விரைந்து முடிக்கும் அளவிற்கு, நீதிமன்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். வழக்கிற்கு, காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்.
நீதி வழங்குவதற்கு பெரும் இடையூறாக இருப்பது, நீதிமன்றம் வழங்கும், தேவையற்ற வாய்தா தான். எதிர்காலத்தில், வாய்தா இல்லாத நீதிமன்றங்கள் உருவாக வேண்டும். குற்றவாளிகளுக்கு, நீதிமன்றத்தைக் கண்டால், அச்சம் ஏற்பட வேண்டும்.

தினமலர்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

9 Apr
மஹாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி: மாநில பா.ஜ., வலியுறுத்தல்

மும்பை:''ஊழல் வழக்குகளில், அமைச்சர்கள் சிக்கி பதவியிழந்து வருகின்றனர். இதைவிட, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேறு என்ன காரணம் வேண்டும்,'' என, மஹாராஷ்டிரா பா.ஜ., தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார்.
புலனாய்வு

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., அடங்கிய கூட்டணி அரசு அமைந்துள்ளது.தேசியவாத காங்.,கைச் சேர்ந்த, மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது, முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங், ஊழல் புகார் கூறினார்.
அதைஅடுத்து, அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.இந்த நிலையில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருள் நிரம்பிய கார் நிறுத்தப்பட்ட வழக்கில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சச்சின் வாஸே கைது செய்யப்பட்டார். அவரிடம், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது.
Read 10 tweets
9 Apr
ஆஞ்சநேயர் பிறப்பிடம்: உகாதியில் ஆதாரங்கள்

திருப்பதி : ஆஞ்சநேயர் பிறப்பிடம், திருமலையில் உள்ள அஞ்னாத்திரி மலைத் தொடர் என்பதற்கான ஆதாரங்களை, தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி அன்று வெளியிட உள்ளதாக, திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஏழுமலையான் குடியிருக்கும் திருமலை, ஆஞ்சநேயரின் பிறப்பிடமாகவும் அடையாளம் காணப்பட உள்ளது.
இதுகுறித்து பல புராண இதிகாசங்களை ஆராய்ந்து அறிய, ஆறு பண்டிதர்கள் அடங்கிய குழு ஒன்றை, திருமலை தேவஸ்தானம் அமைத்தது. அவர்களும், பல புராணங்கள், கிரந்தங்கள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து தகவல்களை சேகரித்து உள்ளனர்.
Read 4 tweets
9 Apr
இது உங்கள் இடம்: அவர்களுக்கு ஏன் சலுகை?

ஆனந்த் வெங்கட், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், 72 சதவீதம் மட்டுமே ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.
அப்படியென்றால், மீதமுள்ள, 28 சதவீதம் பேர், பெரிய புத்திசாலிகளா? 100க்கும் மேற்பட்ட, கி.மீ., கடந்து, சொந்த ஊருக்கு சென்று, ஓட்டு அளித்தோர் எல்லாம் முட்டாள்களா?

என்ன காரணத்தால், இவ்வளவு பெரிய எண்ணிக்கையில், வாக்காளர்கள் ஓட்டு அளிக்காமல் இருந்திருக்கின்றனர்?
ஓட்டு அளிக்க பணம் கொடுப்பது குற்றம் தான். ஆனால் இவர்கள், பணம் தந்தால் கூட ஓட்டு அளிக்க மாட்டார்கள் என்று, தெளிவாகத் தெரிகிறது.

ஜனநாயகத்தை மதிக்கத் தெரியாத அரசியல்வாதிகள் மீது, நாம் கோபம் கொள்கிறோம். அதே போல, ஜனநாயகத்தை மதிக்காத குடிமகன்களை என்ன செய்வது?
Read 8 tweets
9 Apr
திருவந்திபுரம்-கடலூர்

ஒருமுறை பெருமாளுக்கு தாகம் எடுத்த போது கருடனை நீர் கொண்டு வரப் பணித்தார். கேட்டது பெருமாள். அவர் குடிப்பதற்காக நந்நீரைத் தேடி புறப்பட்டார் கருடன். கருடன் நீர் கொண்டு வர நேரமாகவே ஆதி சேஷனை நீர் கொண்டு வரப் பணித்தார்.

🇮🇳🙏1 Image
ஆதிசேஷன் நீருக்காக அலையாமல், தன் சக்திமிக்க வாலால் பூமியில் ஓங்கி அடிக்க நந்நீர் பீறிட்டு வந்தது. பெருமாள் தாகம் தணித்தார்.
இதனால் இத்தலத்தில் உள்ள தீர்த்தம் #சேஷ_தீர்த்தம் என்று அழைக்கப் படுகிறது. 🇮🇳🙏2
உடலில் பால் உண்ணி உள்ளவர்கள் இக் கிணற்றில் உப்பு, வெல்லம் போட்டு பிரார்த்தனை செய்தால் குணமடையும். ஆதி சேஷனால் நிர்மாணிக்கப்பட்ட இத் தலமே #திருவஹிந்திபுரம் ஆகும். இது கடலூர் மாவட்டத்தில் உள்ளது. ஆதி சேஷனால் நிர்மாணிக்கப்பட்ட கிணறு இன்னும் உள்ளது.

🇮🇳🙏3
Read 5 tweets
8 Apr
வைணவ ஆலயங்களில் நவக்கிரக சன்னிதி தனியாக இருப்பதில்லை ஏன்???

சிவன் கோயில்களில் இருப்பது போல் நவக்கிரகங்களைச் சுற்றி வர முடியாது! ஏன் என்று சிந்தித்து இருக்கீங்களா? தினமும் நாம் சொல்லும் வேங்கடேச சுப்ரபாதத்தில் நவக்கிரகம் பற்றி வரும்..
ஸ்லோகம்

சூர்யேந்து பெளம புத வாக்பதி காவ்ய செளரி ச்வர்பானு கேது திவிஷத் பரிஷத் ப்ரதானா!!

த்வத் தாச தாச சரமாவதி தாச தாசா
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்!!

நவக்கிரகங்கள் = ஒன்பது கோள்கள் முதலில் பட்டியல் போடுறாங்க
சூர்ய = சூர்யன் (ஞாயிறு)
இந்து = சந்திரன் (திங்கள்)
பெளம = செவ்வாய்
புத = புதன்
வாக்பதி = வாக்குக்கு அதிபதி பிரகஸ்பதி; அதாவது குரு (வியாழன்)
காவ்ய = காவியக் கவிதை வல்லுநர்; அதாவது சுக்கிரன் (வெள்ளி)
செளரி = சனி பகவான்
ச்வர்பானு = ராகு
கேது = கேது
Read 11 tweets
8 Apr
இது உங்கள் இடம் : இதிலும் இரண்டில் ஒன்று தான்!

முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடுநிலைவாதிகள், '50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியில், தமிழகம் சீர்குலைந்து விட்டது.
இந்த இரு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக நேர்மையான ஒரு ஆட்சி அமைய வேண்டும்' என, நினைத்தனர். நடிகர் ரஜினி மூலம், தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்த்தோருக்கு ஏமாற்றம் கிடைத்தது என்றாலும், அதே திரை துறையிலிருந்து, அரசியலுக்கு வந்த கமல், ஆச்சரியம் அளித்தார்.
ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இல்லாமல், அ.தி.மு.க., ---- தி.மு.க., சந்திக்கும் முதல் சட்டசபைத் தேர்தல் இது. அதனால், இந்த தேர்தலில் பரபரப்புக் காணப்பட்டது. ஜெ., மறைவுக்கு பின், பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு, ஆட்சியையும், கட்சியையும் திறம்பட நிர்வகித்தார்,முதல்வர் இ.பி.எஸ்.,
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!