வைணவ ஆலயங்களில் நவக்கிரக சன்னிதி தனியாக இருப்பதில்லை ஏன்???
சிவன் கோயில்களில் இருப்பது போல் நவக்கிரகங்களைச் சுற்றி வர முடியாது! ஏன் என்று சிந்தித்து இருக்கீங்களா? தினமும் நாம் சொல்லும் வேங்கடேச சுப்ரபாதத்தில் நவக்கிரகம் பற்றி வரும்..
த்வத் தாச தாச சரமாவதி தாச தாசா
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்!!
நவக்கிரகங்கள் = ஒன்பது கோள்கள் முதலில் பட்டியல் போடுறாங்க
சூர்ய = சூர்யன் (ஞாயிறு)
இந்து = சந்திரன் (திங்கள்)
பெளம = செவ்வாய்
புத = புதன்
வாக்பதி = வாக்குக்கு அதிபதி பிரகஸ்பதி; அதாவது குரு (வியாழன்)
காவ்ய = காவியக் கவிதை வல்லுநர்; அதாவது சுக்கிரன் (வெள்ளி)
செளரி = சனி பகவான்
ச்வர்பானு = ராகு
கேது = கேது
திருமலையில் பெருமாளின் காலடியில் சந்திர கலை உள்ளது. ஜோதிடத்தில் சந்திர தோஷப் பரிகாரத் தலமாகத் திருப்பதி விளங்குகிறது! பொதுவாக வைணவ ஆலயங்களில், நவக்கிரகங்களுக்குத் தனியாகச் சன்னிதி கிடையாது! (மதுரை கூடலழகர் ஆலயம், மற்றும் சில ஆலயங்களை தவிர);
இதனால் பெருமாள் கோவில்களில் நவக்கிரகங்களுக்கு மதிப்பில்லை என்று பொருளாகிவிடாது!
அங்கும் நவக்கிரகங்களைக் குறித்து பூஜைகள் – பஞ்சாங்க ஸ்ரவணம், ஹோமம் எல்லாம் உண்டு தான்! சுதர்சனம் என்னும் சக்கரத்தாழ்வார் பூஜையிலேயே நவக்கிரகங்களும் இடம் பெற்றுவிடும்!
வைணவத்தில் தாயாருக்கும் பெருமாளுக்கும் மட்டுமே பெரும் இடம் தரப்பட்டிருக்கும்! பரிவார தேவதைகள், நித்ய சூரிகள் – இவர்களுக்கு எல்லாம் தனியாகச் சன்னிதி கிடையாது!
இவர்கள் எல்லாம் பெருமாளின் இடத்திலேயே இருந்து கொண்டு, அவரை அரூபியாகச் சேவித்துக் கொண்டு இருப்பதாக ஐதீகம்!
படைத்தலைவர் விஷ்வக்சேனர் (சேனை) முதலியாருக்கு கூட நிறைய ஆலயங்களில் தனியாகச் சன்னதி இருக்காது. ஶ்ரீவைணவத்தில் பெருமாளின் அடியார்களுக்கும், அவரை பாடிய ஆழ்வார்கள் ஆசார்யர்களுக்கு மட்டும் சன்னிதி இருக்கும்! இதுவே அவரது அடியார்கள் பெருமை!
பெருமாளின் அதிகாரிகளைக் காட்டிலும் அடியவர்களுக்கே அதிக அதிகாரம் தரப்படுகிறது. அதாவது மோட்சம் வழங்கும் அதிகாரம் வரை ஏன்? அதிகாரிகளை முன்னிறுத்தினால் சக்தியும் வலிமையும் முன்னிறுத்தப்படும். அடியவரை முன்னிறுத்தினால் அன்பும் பக்தியும் தானே வளரும்! அதனால் தான் இது போன்றதொரு அமைப்பு!
பெருமாள் ஆலயங்களின் அமைப்பு ஒரு குடும்பம் வாழும் வீட்டைப் போன்றது! அங்கே தாய் தந்தை குழந்தைகளைத் தான் பிரதானமாகப் பார்க்கலாம்! நவக்கிரகங்களும் இறைவனின் அதிகாரிகள்; அவரவர் கர்ம பலனை வழங்கும் அதிகாரிகள்!
அவர்களுக்கு உண்டான மரியாதையும், மதிப்பும், பூசனையும் உண்டு! ஆனால் வெளிப்படையாக முன்னிறுத்தப்படுவதில்லை!
அவர்களுக்கும் சேர்த்து அவர்களையும் கட்டிக்காக்கும் பெருமாளே முன்னிறுத்தப்படுகிறார். அவரின் திருவுருவத்திலேயே நவக்கிரகங்களும் அடங்கி விடுகிறார்கள்!
ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
🇮🇳🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தர்ப்பணம் என்ற வடமொழி சொல்லுக்கு
சந்தோஷமடைதல் என்று பொருள்.
தர்ப்பயாமி என்று சொல்லும்பொழுது
சந்தோஷமடையுங்கள் என்று பொருள்
கொள்ளலாம்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த இமொட்டோ
என்ற ஆராய்ச்சியாளர் நீர்ல் நேர்மறை
சொற்களை பிரயோகித்தபொழுது நீரில்
உள்ள மூலக்கூறுகள் ஒரு
முறைமையுடனும் ஒழுங்குடனும்
வரிசைப்படுத்தப்படுவதை கண்டார்.
அதேசமயம், எதிர்மறை சொற்களை
அந்த நீரில் பயன்படுத்தியபொழுது
அந்த மூலக்கூறுகள் தாறுமாறாக
அமைந்ததைகண்டார்.
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச ஆதார விலை: மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்றுக்கொண்டது பஞ்சாப் அரசு
வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்றுக்கொண்டது பஞ்சாப் அரசு.
வேளாண் சந்தையில் விவசாயிகளுக்கு முழுமையான விலை சென்று சேர வேண்டும் என்பதற்காக மத்திய அரசு இடைத்தரகர்கள் மூலமாக அல்லாமல் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
ஆனால், பஞ்சாப் அரசு இடைத்தரகர்கள் வழியாக விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை வழங்கும் முறையைத் தொடர அனுமதிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தது. இதை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
மே.வங்கத்தில் பா.ஜ., தான் வெற்றி பெறும்: பிரசாந்த் கிஷோரின் ஆடியோ வெளியானதால் பரபரப்பு
கோல்கட்டா: திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து வரும் பிரசாந்த் கிஷோர், ‛மேற்கு வங்கத்தில் பா.ஜ., தான் வெற்றி பெறும்' என பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.
இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ், பா.ஜ., இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இரு கட்சிகளும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வரும் சூழலில், திரிணமுல் காங்., கட்சிக்கு தேர்தல் வியூகங்களை பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ‛ஐ-பாக்' நிறுவனம் வகுத்துக் கொடுத்து வருகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலில், தலைநகர் சென்னையில், 16.6 லட்சம் பேர் ஓட்டுப் போடவில்லையாம்.
'சென்னையில் பெரும்பாலும் படித்தோர், விபரம் அறிந்தோர் தான் இருக்கின்றனர்' என, தமிழகத்தின் பிற பகுதி மக்கள் நினைத்துக் கொண்டிருந்தது, தவறு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, கொரோனா நோய் பரவலை காரணம் கூற முடியாது. சென்னைவாசிகள், சமூக இடைவெளியை பின்பற்றித் தான் வாழ்கின்றனரா என்ன?தேர்தல் ஆணையம், சென்னை மீது தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
சிறுபான்மையினர் ஆதரவை கோரும் மம்தா: பிறரை யோசிக்கச் சொல்லும் அமித்ஷா
கோல்கட்டா: “சிறுபான்மையினரின் ஆதரவை மம்தா எதிர்பார்க்கிறார். மற்றவர்களின் ஆதரவை அவர் கோரவில்லை. அவர்கள் தற்போது முடிவெடுப்பார்கள்.” என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
மேற்கு வங்க சட்டமன்றத்துக்கான 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்கு 31 சதவீதத்துக்கு அதிகமான வாக்கு வங்கி முஸ்லிம்களுக்கு உள்ளது. இடது முன்னணி 34 ஆண்டுகள் ஆட்சியில் நீடித்ததற்கும், மம்தா 2011-ல் வென்றதுக்கு பின்னணியில் இம்முக்கிய காரணி உண்டு.
இந்த முறையும் அதே போன்று அவர்களின் வாக்குகள் ஆட்சியை தீர்மானிப்பதில் பங்காற்றும். முஸ்லிம் வாக்கு வங்கியில் ஏற்படும் எந்தவொரு பிரிவும் 90 தொகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
*தல சிறப்பு* முருகனின் சரவணபவ எனும் ஷடாச்சர மந்திரத்தை நினைவுபடுத்தும் வகையில் ஆறுபடிகள் ஏறிச் சென்று முருகனை வழிபடுவது சிறப்பு.
🙏🇮🇳1
*பொது தகவல்* கோயில் பிரகாரத்திற்கு தெற்கில் கருணை கணபதியும், வடக்கில் அங்காரகனும் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். 🙏🇮🇳2
கோஷ்டத்தில் குரு பகவானும், ஜெயதுர்காவும் தனி சன்னதியில் வீற்றிருக்க ராமர், சீதை, லட்சுமணர், அபிதகுசலாம்பிகை சமேத அருணாச்சலேஸ்வரரும் அருள்பாலிக்கின்றனர். நவகிரகங்களும் தனி சன்னதி கொண்டு அருள்புரிகின்றனர்.