விக்கியின் கேள்விகள் சரியானவை. பேசுவது மட்டுமே தலைமைபண்பு இல்லை. சரியான முடிவை எடுப்பது, எதை பேசுவது எதை பேசாமல் விடுவது என பல. நேர்காணலில் உளறிகொட்டுவது, சீண்டுவதை, போட்டுவாங்குவதை கூட புரிந்துகொள்ளாதன்மை. ராஜா நாடாரை "போனை வையுடா dvd" என்பதா தலைமைபண்பு?
சீமான் கோவத்தில் பேசிவிட்டார் என்பது சிறுபிள்ளைத்தனம். ஒருவர் தன்னை சீண்டுகிறார் என்று தெரிந்தால், தொடர்பை துண்டித்துஇருக்கலாமே, அதைவிடுத்து அசிங்கமாக பேசினால் அதை பொதுவெளியில் வெளியிடதான் செய்வார்கள்? இதை மாற்றிக்கொள்ளாவிட்டால் பாதிப்பு கட்சிக்கு தான்.
கோவத்தில் எதுவேண்டுமானாலும் பேசலாமா? எல்லோரும் இதை செய்வோமா? சீமான் தேர்தல்நேரத்தில் கட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பல வேலைகளை செய்துள்ளார். இதனால் பாதிக்கப்படுவது நாம்தமிழர்கட்சி மட்டும் அல்ல, தமிழ்தேசியம் என்ற கொள்கை தான். தேர்தல் முடிந்துவிட்டது, இனி இதை பேசாமல் விடமுடியாது.
தமிழ்த்தேசியம் என்ற புனிதமான கொள்கையின் தலைமை இப்படி தரங்கெட்ட வகையில் பேசினால் (மற்றவர்கள் இப்படி பேசாமல் இல்லை, ஆனால் அவர்கள் அதை நாலு சுவற்றுக்குள், நேரடியாக, பிறர் அதை பதிவு செய்துவிடாவண்ணம் கவனமாக செயல்படுவர்), மற்றவருக்கு மட்டும் தான் தண்டனையா, இவரை கட்சி என்ன செய்யும்?
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
@vickykarikalan விக்கியின் கருத்துக்கள் அனைத்திலும் உடன்பாடு இல்லை, சிலவற்றில் அணுகுமுறை சரியில்லை. மற்றபடி, அவரின் பல கருத்துக்கள் சரியானவை, கவனத்தில் எடுத்து கொள்ளபட வேண்டியவை. அதேபோல், அருளினியனின் கருத்துக்களில் சில முரண்பாடுகள் உள்ளன. ஆனால், அவை முற்றிலும் ஒதுக்கப்பட வேண்டியவை அல்ல.
@vickykarikalan எங்கவீட்டு காக்கா மஞ்சள்கரு தான் சாப்பிடும் என்ற வெட்டி பந்தா, சீமானுக்கு அந்த கருத்தையே சொல்லணும்னு அவசியமில்லையே, ஏன் வாயை கொடுத்து வாங்கி கட்டவேண்டும்? எதற்கு தனக்கு தானே ஆப்பு வைக்கவேண்டும்? உளறுவாயாக இருப்பது கெடுதலாக முடியும். எதை சொல்லணும், எதை விடணும் என்பது முக்கியம்.
@vickykarikalan விக்கி வாரிசு அரசியல் பற்றிய கருத்தில் சாஹுல் அமீது மகள் பற்றி பேசாமல் விட்டு இருக்கலாம். ஒருவர் கட்சியில் பெரிய பங்களிப்பை தந்திருக்கும் போது, அவரின் குடும்பத்தாருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது தவறில்லை. ஆனால், அது ஒன்றே தகுதியாக அவருக்கு பதவிகள் தருவது தவறு.
@Jeba_here தவறான பார்வை.
பாஜவை எதிர்கொள்ள சரியான வழி இருவேறு தத்துவங்களை தமிழ்நாடு முன்னிறுத்துவதே. அதாவது திராவிடம், தமிழ்த்தேசியம். பாஜகவை திராவிட, தமிழ்த்தேசிய கட்சிகள் சேர்ந்து முதல் எதிரியாக இந்த தேர்தலில் எதிர்ப்பதால் அவர்கள் ஓடி போய்விடுவார்களா? 1/n
அடுத்த தேர்தலில் பணத்தை கொண்டு அடித்து இன்னும் பிரபலமான முகங்களை அழைத்து வரத்தான் போகிறார்கள். அதிகாரம், பணம் இருக்கும் வரை அவர்களை தவிர்க்க முடியாது. இனமாக, மதநல்லிணக்கம் பேசி, அனைவரின் ஆன்மீகத்தை ஏற்றுக்கொண்டு ஒன்றிணைவதே பாஜகவை வீழ்த்தும் கொள்கை. (2/n)
ஆரியத்தை முதன்மையாக எதிர்க்கவேண்டும் என்று திமுக நினைத்தால், திமுக மோதவேண்டியது தமிழ்த்தேசியத்துடன். தமிழ்த்தேசியத்தை புறக்கணித்து அதை விட வெகு சிலரே ஆதரிக்கும் ஆரியத்தை முதன்மையாக காட்டினால், ஆரியம் தான் வளரும். திமுக தமிழ்த்தேசியத்தை புறக்கணிப்பது ஆரியத்தை தான் வளர்க்கும்.(3/n)
இதுவரை பல காணொளிகளை பொறுமையாக பார்த்துவிட்டேன். இது தான் எனது சாராம்சம். கல்யாணசுந்தரம் மீது பல *சரியான* குற்றசாட்டுகள் உள்ளன (சில தவறானவை). ஆனால், அவற்றை சீமான் ஏன் கல்யாணசுந்தரத்திடம் பகிர்ந்துகொள்ளவில்லை? 5 மாதம் வரை ஏன் அவரின் அழைப்புகளை எடுக்கவில்லை, வந்தவரை சந்திக்கவில்லை?
இடும்பை காணொளியோ, துரைமுருகன் காணொளியோ, சீமானின் காணொளியோ இந்த பிரச்சனையை சரிவர பேசவில்லை. அதில், பல குறைபாடுகள், முரண்பாடுகள் உள்ளன. நான் பார்த்த செந்தில்நாதனின் காணொளியும், தடம் காணொளியும் இதை சரியாக அணுகி இருந்தனர். கல்யாணசுந்தரத்தின் மீதான குற்றசாட்டை சரியாக சொல்லியிருந்தனர்.
அக்காணொளிகளில், கல்யாணசுந்தரம் கட்சி நிகழ்வுகளை, போராட்டங்களை முகநூலில் பகிரவில்லை என்ற சரியான குற்றசாட்டை சொல்லியுருந்தனர். அவர் பகிராதது மிக பெரிய தவறு. நான் முகநூலில் இல்லை எனவே எனக்கு இது தெரியாது. இதற்கு கட்சி கண்டிப்பாக விளக்கம் கேட்டு இருக்கவேண்டும், கேட்பதில் தவறில்லை.
அண்ணன் கொடுத்ததுதான் எல்லாம் என்றால், அண்ணனுகான வெளிச்சத்தை கொடுத்தது தேசியதலைவர் பிரபாகரன். ஆம், சீமான் எல்லோரும் பிரபாகரன் படத்தை வைத்துக்கொள்ள பயந்த நேரத்தில் அதை முன்னிறுத்தினார். அவர் பிரபாகரனை முன்னிறுத்தியதால்தான் அவரை எல்லோருக்கும் பிடித்தது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
இனஅழிப்பு நடந்ததால் வந்த கோபத்தின் விளைவு தான் நாம் தமிழர் கட்சிக்கான ஆதரவு என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். சீமானுக்காக வந்த கூட்டம் அல்ல. அது ஈழ தமிழருக்காக வந்த கூட்டம், தேசிய தலைவருக்காக தானாக சேர்ந்த கூட்டம். அதிதி புகழ்ச்சி சீமானுக்கு கொடுக்கவேண்டாம். அவர் ஒருங்கிணைத்தார்.
ஒன்னும் தெரியாத சிலருக்கு / பலருக்கு ஈழ புரிதல் ஏற்படுத்தினார். சீமான் புகழ்ச்சிக்கு உரித்தானவர் இல்லை என்பது என் கருத்து அல்ல. அதீத புகழ்ச்சி, சீமானிசம், ரசிகமனப்பான்மை தான் தவறு. ரசிகமனப்பான்மை இல்லாமல் தான் பலர் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர். மற்ற கட்சிகள் போல் செய்வது தவறு.