@vickykarikalan விக்கியின் கருத்துக்கள் அனைத்திலும் உடன்பாடு இல்லை, சிலவற்றில் அணுகுமுறை சரியில்லை. மற்றபடி, அவரின் பல கருத்துக்கள் சரியானவை, கவனத்தில் எடுத்து கொள்ளபட வேண்டியவை. அதேபோல், அருளினியனின் கருத்துக்களில் சில முரண்பாடுகள் உள்ளன. ஆனால், அவை முற்றிலும் ஒதுக்கப்பட வேண்டியவை அல்ல.
@vickykarikalan எங்கவீட்டு காக்கா மஞ்சள்கரு தான் சாப்பிடும் என்ற வெட்டி பந்தா, சீமானுக்கு அந்த கருத்தையே சொல்லணும்னு அவசியமில்லையே, ஏன் வாயை கொடுத்து வாங்கி கட்டவேண்டும்? எதற்கு தனக்கு தானே ஆப்பு வைக்கவேண்டும்? உளறுவாயாக இருப்பது கெடுதலாக முடியும். எதை சொல்லணும், எதை விடணும் என்பது முக்கியம்.
@vickykarikalan விக்கி வாரிசு அரசியல் பற்றிய கருத்தில் சாஹுல் அமீது மகள் பற்றி பேசாமல் விட்டு இருக்கலாம். ஒருவர் கட்சியில் பெரிய பங்களிப்பை தந்திருக்கும் போது, அவரின் குடும்பத்தாருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது தவறில்லை. ஆனால், அது ஒன்றே தகுதியாக அவருக்கு பதவிகள் தருவது தவறு.
@vickykarikalan யாராவது களத்தில் இருப்பவருக்கு மட்டுமே வாய்ப்புகள் கொடுக்கப்படவேண்டும் என்று சீமானிடம் முறையிட்டால், அதற்கு தகுந்த முறையில் விளக்கத்தை அளிப்பது தலைமையின் கடமை. முறையிடும் வரை காத்திருக்காமல், அதற்க்கான விளக்கத்தை கட்சி வட்டத்தில் தெரிவிக்கவேண்டும். களப்பணி போல் பணஉதவியும் தேவையே.
@vickykarikalan முறையிடுபவனை வாயிக்கு வந்தபடி தகாதபடி பேசுவது தலைமைக்கு அழகு அல்ல. எதை தொலைபேசியில் பேசவேண்டும், எதை நேரில் பேசவேண்டும் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும். கண்டபடி பேசினால், இன்னொரு விஜய்காந்தாக மாற்றிவிடுவார்கள். ஜனநாயகமுறையாக இல்லாமல், ஒருவரிடம் அதிகார குவிப்பு தவறு.
@vickykarikalan சீமான் இறையாண்மையுள்ள மாநில சுயாட்சி கேட்கமாட்டேன் என்று கொள்கையில் மாறுபடுவது தவறு. ஊடகங்கள் நம்மை காட்ட மறுப்பதால், அவர்களுக்கு பணம் கொடுத்து நம்மை காட்டவைப்பது, லஞ்சம் கொடுப்பது போல் தான். இதற்காக நம் கொள்கையான பிரபாகரனை தூக்கி தூர போட்ட சம்பவமும் இந்த தேர்தலில் நடந்தது.
@vickykarikalan இதையெல்லாம் சொல்லும் அருளினியன் "சீமான் ஆளுமை" என்று எழுதி சீமான் ரசிகராக இருந்தது தவறு. இப்போது இவரே சீமானை "திராவிட சிசு" என்று அழைப்பதும் முரண். கட்சியில் ஜால்றா போடும் கூட்டம், கட்சியைவைத்து பிழைப்புநடத்த வந்துள்ளது என்பது சரியே. சிந்தனையாளர் ஆன்றோர் பேரவை இப்போது இருக்கிறதா?
@vickykarikalan விக்கியின் கருத்தான கட்சிக்கு வாக்குவிகிதம் உயருவதால், தமிழ்தேசியத்துக்கு ஒரு பலனும் இல்லை என்பது சரியே. வாக்குவிகிதம் எவ்வளவு உயர்ந்தாலும் ஒற்றை முகமாக அதிகாரத்தை தன்னிடம் குவித்து வைத்திருப்பதால் அது சிமானுக்கு மட்டுமே பலன் தரும். அது மறைமுக அரசியல் பேரத்துக்கு வழிவகுக்கும்.
@vickykarikalan கட்சிக்கு 75 லட்சம் கடன் இருப்பது எதனால்? நன்கொடையாக கிடைக்கும் பணத்தில் இருந்து கட்சியை ஏன் நடத்தமுடியவில்லை? செலவுகளை கட்டுப்படுத்த தெரியவில்லையா? கடன் கொடுக்கிறார்கள் என்பதற்காக வாங்குவதா? இந்த கடனுக்கான கணக்கு வழக்கு என்ன? கடன் வாங்கும் அளவிற்கு தவிர்க்க முடியாத செலவு என்ன?
@vickykarikalan பிறருக்கு எடுத்துக்காட்டாய் இருக்கவேண்டிவர், வெளிநாட்டு நாய், கிளி போன்றவரை பிறர் கொடுத்தாலும், அதை பெற்றுக்கொள்ளாமல் தவிர்க்க வேண்டும். அவர் வீட்டில் இருக்கும் அந்த வெளிநாட்டு நாய், கிளி போன்றவைகளை வேறொருவருக்கு தருவதே சரி. இவை குடும்பத்தாரின் விருப்பம் என்றால், அதில் தவறில்லை.
@vickykarikalan ஓட்டலில் ரூம் போட சொல்லி கட்சிக்காரரை கேட்பது தவறு. கட்சி நிதியில் அவசியமான வசதி, அளவுக்கு மட்டுமே செலவுகளை செய்யவேண்டும். கட்சிபணி அலுப்புகளை போக்க, களைப்பாற, தொல்லையின்றி நிம்மதியாக தூங்க இடம் வேண்டும். தினமும் ஜிம்மை எதிர்பார்ப்பதை விட, தன்னுடனே சிலவற்றை வைத்துகொள்ளவேண்டும்.
@vickykarikalan ஒருநாளுக்கு 14 ஆயிரம் ருபாய் கொடுத்து, 15 நாள் தங்கி முன்ஜாமீன் கையெழுத்து போட இவ்வளவு செலவு தேவையா? இதை கட்சியில் வேறு எவராவது செய்யமுடியுமா? அருளினியன் சொல்வது தவறு என்றால் அதன் உண்மைத்தன்மையை பிறர் வெளிப்படுத்தவேண்டும். என்ன நடந்தது, என்ன செலவு என்பது உட்பட.
@vickykarikalan சிலர் ஓட்டல் வாடகை 4 ஆயிரம் ருபாய் தான் என்று screenshot எடுத்து அனுப்புகிறார்கள், ஓட்டலில் ஒவ்வொரு நாளும் வாடகை ஏற்றஇறக்கம் இருக்கும். விக்கியும் அந்த ஓட்டல் ரூமின் வாடகை 15 ஆயிரம் தான் என்பதற்கு ஒரு screenshot எடுத்து போட்டுள்ளார். இதற்கு கட்சியின் பதில் என்ன? உண்மை என்ன?
@vickykarikalan ஒரு நாளுக்கு 14 ஆயிரம் வாடகை கொடுத்து 15 நாள் கட்சி பணத்தில் முன் ஜாமீன் கையெழுத்து போடுவது, கட்சியின் பணத்தை விரயம் செய்வதை தவிர வேறு என்ன? சீமான் முழுநேர கட்சி தலைவராக மட்டும் இருக்காமல், இயக்குரனாக படம் எடுத்து சம்பாதிக்க வேண்டும். கட்சி கொள்கையை பரப்ப திரை ஊடகம் பயன்படும்.
@vickykarikalan இயக்குனராக இருப்பதால் ஒரு வசதி உள்ளது, சிலவற்றை தனது உதவியாளர்களை விட்டு எடுக்க வைக்கலாம். தனது நேரத்தை தானே வரையறை செய்துகொள்ளலாம். கட்சிக்காரர்களிடமே சீமானுடைய படத்தை தயாரிக்கும் அளவிற்கு பலம் உள்ளது. பெரிய திரைநாயகனுக்கு காத்திருக்காமல், சரியான கதைக்கரு கொண்டு இயக்கவேண்டும்.
@vickykarikalan எளிமையாக இல்லாத போது, சுகபோகமாக இருக்க நினைக்கும் போது ஊழல் பெருகும். கட்சி பணத்தை தனக்கு மறைமுகமாக கொடுக்கப்பட்ட லஞ்சமாக கருதி செலவு செய்யாமல், கட்சியின் கொள்கைக்காக, தமிழர் நலனுக்கு கொடுக்கப்பட்ட நன்கொடை என்ற எண்ணம் வேண்டும். ஊதாரிதனமான செலவுகளை தவிர்க்க வேண்டும்.
@vickykarikalan 4 பதாகை வைக்க 40 ஆயிரம் கட்சி செலவு கணக்கு காட்டப்படுகிறது என்பது கவலைக்குரியது. ஊழல்வாதிகளை கட்சி பொறுப்பாளராக திணிக்கும் போது இப்படி தான் நடக்கும். ஒருவர் மட்டுமே முடிவுகளை எடுக்கும் போது, அது தவறுகளுக்கு வித்திடும். ஆமாம் சாமி ஆட்களை தன்னைசுற்றி வைத்திருப்பது சரியான பாதை அல்ல.
@vickykarikalan இந்த அருளினியன் சொல்வது போல, நாம் தமிழர் கட்சியை விட்டு செல்பவர்கள் திராவிட, ஆரிய கட்சியில் சேராமல், தமிழ்த்தேசிய வழியில் நிற்க வேண்டும். தமிழ்த்தேசிய கட்சி தொடங்க வேண்டும். பாரிசாலன், அருளினியன், விக்கி போன்றோர் அதற்கான முன்னெடுப்புகளை செய்யவேண்டும். போட்டி இருந்தால்தான் நல்லது.
@vickykarikalan வியனரசு கமல்ஹாசன் கன்னடர் என்று சொல்லியது சரியே. அக்காலகட்டத்தில் சீமான் கமலை தமிழர் என்கிற புரிதலிலே அணுகினார் என்பது தெரியும். வியனரசு பிற்பாடு திமுக, கனிமொழி ஆதரவு நிலை எடுத்தது தவறு. காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தவரை நாம் தமிழர் தூத்துக்குடி வேட்பாளராக நிறுத்தியது தவறு.
@vickykarikalan சசிகலாவையும், எடப்பாடியையும் சேர்த்துவைக்கும் தரகர் வேலை சீமானுக்கு தேவையில்லை. தானாக கட்சியில் ஜனநாயக ரீதியில் எதும் விவாதிக்காமல் செயல்படுவது தவறு. சீமானின் தவறுகளை கட்சி காது கொடுத்து கேட்காதபோது, பொதுவெளியில் வைக்கிறார்கள். அதில் தவறில்லை. அதன் உண்மைத்தன்மையை பாருங்கள்.
@vickykarikalan பொட்டுஅம்மான் பற்றிய குரல் பதிவு போலி என்று சீமான் சொல்லும் போது, அதை திமுக செய்த அவதூறு என்று வழக்கு பதிய வேண்டும். வழக்கை நடத்த பணம் இல்லை என்றால், நான் தருகிறேன். அதேபோல், ராஜா நாடாரிடம் நடந்த கீழ்த்தர உரையாடல் உண்மையா இல்லையா என்பதை சீமான் தெரிவிக்கவேண்டும்.
@vickykarikalan விடுதலைப்புலிகள் தளபதி பொட்டுஅம்மான் பற்றி ஒரு தெரு நாய் போலியாக சீமான் போன்று குரல் பதிவு செய்து தேர்தல் நேரத்தில் திமுக அதை பரப்பும் போது, விடுதலைப்புலிகளை காதலிக்கும் நாம் அதை எதிர்த்து வழக்கு பதிவதைவிட வேறு என்ன செய்துவிட போகிறோம்? நாம் தமிழர் கட்சியும், சீமானும் செய்வார்களா?
விக்கியின் கேள்விகள் சரியானவை. பேசுவது மட்டுமே தலைமைபண்பு இல்லை. சரியான முடிவை எடுப்பது, எதை பேசுவது எதை பேசாமல் விடுவது என பல. நேர்காணலில் உளறிகொட்டுவது, சீண்டுவதை, போட்டுவாங்குவதை கூட புரிந்துகொள்ளாதன்மை. ராஜா நாடாரை "போனை வையுடா dvd" என்பதா தலைமைபண்பு?
சீமான் கோவத்தில் பேசிவிட்டார் என்பது சிறுபிள்ளைத்தனம். ஒருவர் தன்னை சீண்டுகிறார் என்று தெரிந்தால், தொடர்பை துண்டித்துஇருக்கலாமே, அதைவிடுத்து அசிங்கமாக பேசினால் அதை பொதுவெளியில் வெளியிடதான் செய்வார்கள்? இதை மாற்றிக்கொள்ளாவிட்டால் பாதிப்பு கட்சிக்கு தான்.
கோவத்தில் எதுவேண்டுமானாலும் பேசலாமா? எல்லோரும் இதை செய்வோமா? சீமான் தேர்தல்நேரத்தில் கட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பல வேலைகளை செய்துள்ளார். இதனால் பாதிக்கப்படுவது நாம்தமிழர்கட்சி மட்டும் அல்ல, தமிழ்தேசியம் என்ற கொள்கை தான். தேர்தல் முடிந்துவிட்டது, இனி இதை பேசாமல் விடமுடியாது.
@Jeba_here தவறான பார்வை.
பாஜவை எதிர்கொள்ள சரியான வழி இருவேறு தத்துவங்களை தமிழ்நாடு முன்னிறுத்துவதே. அதாவது திராவிடம், தமிழ்த்தேசியம். பாஜகவை திராவிட, தமிழ்த்தேசிய கட்சிகள் சேர்ந்து முதல் எதிரியாக இந்த தேர்தலில் எதிர்ப்பதால் அவர்கள் ஓடி போய்விடுவார்களா? 1/n
அடுத்த தேர்தலில் பணத்தை கொண்டு அடித்து இன்னும் பிரபலமான முகங்களை அழைத்து வரத்தான் போகிறார்கள். அதிகாரம், பணம் இருக்கும் வரை அவர்களை தவிர்க்க முடியாது. இனமாக, மதநல்லிணக்கம் பேசி, அனைவரின் ஆன்மீகத்தை ஏற்றுக்கொண்டு ஒன்றிணைவதே பாஜகவை வீழ்த்தும் கொள்கை. (2/n)
ஆரியத்தை முதன்மையாக எதிர்க்கவேண்டும் என்று திமுக நினைத்தால், திமுக மோதவேண்டியது தமிழ்த்தேசியத்துடன். தமிழ்த்தேசியத்தை புறக்கணித்து அதை விட வெகு சிலரே ஆதரிக்கும் ஆரியத்தை முதன்மையாக காட்டினால், ஆரியம் தான் வளரும். திமுக தமிழ்த்தேசியத்தை புறக்கணிப்பது ஆரியத்தை தான் வளர்க்கும்.(3/n)
இதுவரை பல காணொளிகளை பொறுமையாக பார்த்துவிட்டேன். இது தான் எனது சாராம்சம். கல்யாணசுந்தரம் மீது பல *சரியான* குற்றசாட்டுகள் உள்ளன (சில தவறானவை). ஆனால், அவற்றை சீமான் ஏன் கல்யாணசுந்தரத்திடம் பகிர்ந்துகொள்ளவில்லை? 5 மாதம் வரை ஏன் அவரின் அழைப்புகளை எடுக்கவில்லை, வந்தவரை சந்திக்கவில்லை?
இடும்பை காணொளியோ, துரைமுருகன் காணொளியோ, சீமானின் காணொளியோ இந்த பிரச்சனையை சரிவர பேசவில்லை. அதில், பல குறைபாடுகள், முரண்பாடுகள் உள்ளன. நான் பார்த்த செந்தில்நாதனின் காணொளியும், தடம் காணொளியும் இதை சரியாக அணுகி இருந்தனர். கல்யாணசுந்தரத்தின் மீதான குற்றசாட்டை சரியாக சொல்லியிருந்தனர்.
அக்காணொளிகளில், கல்யாணசுந்தரம் கட்சி நிகழ்வுகளை, போராட்டங்களை முகநூலில் பகிரவில்லை என்ற சரியான குற்றசாட்டை சொல்லியுருந்தனர். அவர் பகிராதது மிக பெரிய தவறு. நான் முகநூலில் இல்லை எனவே எனக்கு இது தெரியாது. இதற்கு கட்சி கண்டிப்பாக விளக்கம் கேட்டு இருக்கவேண்டும், கேட்பதில் தவறில்லை.
அண்ணன் கொடுத்ததுதான் எல்லாம் என்றால், அண்ணனுகான வெளிச்சத்தை கொடுத்தது தேசியதலைவர் பிரபாகரன். ஆம், சீமான் எல்லோரும் பிரபாகரன் படத்தை வைத்துக்கொள்ள பயந்த நேரத்தில் அதை முன்னிறுத்தினார். அவர் பிரபாகரனை முன்னிறுத்தியதால்தான் அவரை எல்லோருக்கும் பிடித்தது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
இனஅழிப்பு நடந்ததால் வந்த கோபத்தின் விளைவு தான் நாம் தமிழர் கட்சிக்கான ஆதரவு என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். சீமானுக்காக வந்த கூட்டம் அல்ல. அது ஈழ தமிழருக்காக வந்த கூட்டம், தேசிய தலைவருக்காக தானாக சேர்ந்த கூட்டம். அதிதி புகழ்ச்சி சீமானுக்கு கொடுக்கவேண்டாம். அவர் ஒருங்கிணைத்தார்.
ஒன்னும் தெரியாத சிலருக்கு / பலருக்கு ஈழ புரிதல் ஏற்படுத்தினார். சீமான் புகழ்ச்சிக்கு உரித்தானவர் இல்லை என்பது என் கருத்து அல்ல. அதீத புகழ்ச்சி, சீமானிசம், ரசிகமனப்பான்மை தான் தவறு. ரசிகமனப்பான்மை இல்லாமல் தான் பலர் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர். மற்ற கட்சிகள் போல் செய்வது தவறு.