வணக்கம்.
1000 வருடங்களுக்கு முன்பே 2020-21 வருடத்தின் நிலையை கணித்த தமிழன்.

சர்வாரி வருடத்தில் சாதிகள் பதினேட்டும் தீராத நோயினால் திரிவார்கள். மழையில்லாமல் பூமி விளையாது.புத்திரர்களும் மற்றவர்களும் எமனின்றி சாவார்கள்.
-இடைக்காடர் சித்தர்.
காலம்:சங்ககாலம்.
m.facebook.com/story.php?stor…
1000 வருடங்களுக்கு-2
சார்வரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி 2020, பங்குனி 31ஆம் நாள் திங்கட்கிழமை இரவு 8.23 மணிக்கு துலா லக்கினம் தனுசு ராசியில் பிறந்திருந்தது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு,
1000 வருடங்களுக்கு-3
மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு,சனி,தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
சார்வரி ஆண்டுக்கு தமிழில் வீறியெழல் என்று பெயர்.இது 60 ஆண்டுகளில் 34வது வருடம் இந்த புத்தாண்டு எப்படி இருக்கும் என்று இடைக்காடர் சித்தர்

ஐீவசமாதி.
1000 வருடங்களுக்கு-4
தனது நூலில் வெண்பாவாக சொல்லியிருக்கிறார்.

"சாருவரி ஆண்டதனிற் சாதிபதினெட்டுமே

தீரமறு நோயால் திரிவார்கள் - மாரியில்லை

பூமி விளைவில்லாமற் புத்திரரும் மற்றவரும்

ஏமமின்றி சாவார் இயம்பு"

சார்வரி ஆண்டில்...

m.facebook.com/story.php?stor…
1000 வருடங்களுக்கு-5
பதினெட்டு வகைச் சாதி மக்களும் வீரமிழந்து தீரம் அற்றுப்போய் நோயால் வெதும்பித் திரிவார்கள். மழையில்லை, நன்செய்ப் பயிர்கள் விளைச்சல் அறவே இருக்காது. பூமியில் நவதானியங்களும் விளைச்சல் பாதிக்கும். தானிய விளைச்சல் இன்றி மக்கள் பட்டினியால் மடிவர்.
1000 வருடங்களுக்கு-6
மண்ணின் மைந்தர்களுக்கு பாதுகாப்பு இருக்காது என வெண்பா சொல்கிறது.

இடைக்காட்டுச் சித்தர்

இடைக்காட்டுச் சித்தர் தமிழ்நாட்டுச் சித்தர்களில் ஒருவர். இவர் இடைக்காடு என்றவூரில் வாழ்ந்தவர். இடையர் குடியிலே பிறந்தவர். இதனால் இடைக்காடுச் சித்தர் எனப் பெயர் பெற்றார்.
1000 வருடங்களுக்கு-7

இடைக்காடு-முல்லை நிலம். இங்கு ஆடு மாடு மேய்ப்பவர் - இடையர் - கோனார் எனப்படுவர். இக்கோனாரையும் ஆடுமாடுகளையும், முன்னிறுத்தி பாடியதால் இப்பெயர் பெற்றார் என்பர். பதினெண் சித்தர் வகைக்குள் இவரும் அடங்குவார்.
இவரது வரலாறு துணியப்படவில்லை.
m.facebook.com/story.php?stor…
1000 வருடங்களுக்கு-8
இவர் கொங்கணர் என்பாரின் சீடர் என்றும் சித்தர்கள் காலம் எனப்படும் கிபி 10-15 ஆம் நூற்றாண்டினர் என்றும் கூறுகின்றனர். சங்க காலத்தினர் என்ற கருத்தும் நிலவுகிறது. இவரது பாடல்கள் இடைக்காட்டுச் சித்தர் பாடல் என்ற நூலிலே இடம்பெறுகின்றன.

m.facebook.com/story.php?stor…
1000 வருடங்களுக்கு-9

இடைக்காடரின் ஞானசூத்திரம் 70 என்ற நூல் மிகவும் சிறப்புடையது. இவர் திருவண்ணாமலையில் சமாதியடைந்தார். ஜனன சாகரத்தில் சமாதியடைந்தார் என்று போகர் கூறுகிறார்.
1000 வருடங்களுக்கு-10

அடுத்து பிலவ ஆண்டு பலனை இடைக்காடர் சங்க பாடலுடன் நாளை பதிவு செய்கிறேன் .நன்றி

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mathavan Venugopal

Mathavan Venugopal Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MVenukopal

5 Dec 20
வணக்கம்.
மனதளவில் நொறுங்கி போய் செயலிழக்கும்போது எவ்வாறு மீண்டு வருவது?!
ஒரு ஆரோக்கியமான ஆண் உடலுறவில் ஈடுபட்டவுடன் வெளியேறும் விந்தணுக்களின் எண்ணிக்கை 400 மில்லியன் என்று அறிவியல் கூறுகிறது.பகுதி-1/10

wix.to/pcBmDHE?ref=2_…

m.facebook.com/story.php?stor…
மனதளவில்-2/10
எனவே விவாதத்தின் படி அந்த அளவு விந்தணுக்கள் ஒரு பெண்ணின் வயிற்றில் ஒரு இடத்தைக் கண்டால் 400 மில்லியன் குழந்தைகள் உருவாக்கப்படுவார்கள்!
இந்த 400 மில்லியன் விந்து, தாயின் கருப்பை நோக்கி பைத்தியம் போல் ஓடும்போது 300-500 விந்து மட்டுமே உயிர்வாழ்கிறது.
மனதளவில்-3/10
மற்றும் மீதமுள்ள அணுக்கள் வழியில் சோர்வு அல்லது தோல்வியால் இறக்கின்றனர். இந்த 300-500 விந்தணுக்கள் கருமுட்டையை அடைய முடிந்தது. அவற்றில் ஒன்று மட்டுமே மிகவும் வலுவான விந்து, கருமுட்டையை உரமாக்குகிறது அல்லது கருமுட்டையில் ஒரு இடத்தைப் பிடிக்கும்.
Read 12 tweets
4 Dec 20
வணக்கம்
வரலாற்றில் முதல் முறையாக எந்த இராணுவ மூலோபாயம் அல்லது ஆயுதத்தை எந்த நாடு பயன்படுத்தியது? எந்தப் போரில்?
வரலாறு என்பதே 5000 வருடங்குக்கு முன்பாகத்தான் தொடங்கியிருக்கிறது. அதற்கு முன்பும் மனிதன் வாழ்ந்திருக்கிறான்,வரலாறும் உண்டு. ஆனால் அதற்கான அத்தாட்சிகள் குறைவு.பகுதி-1/7
வரலாற்றில்-2/7
எழுதப்பட்ட வரலாற்றில் சீனாவில் சன் ஜு அல்லது சன் ஜி என அழைக்கப்பட்ட மிகைத் திறமை வாய்ந்த ராணுவ தளபதி இருந்தார்.அவர் 544 - 496 BC வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.
அவர் போர்க் கலை என்றொரு மிகச்சிறந்த போர்த் இராணுவ மூலோபாயப் புத்தகம் எழுதியுள்ளார்.
wix.to/UMD0DHA?ref=2_…
வரலாற்றில்-3/7
அதனை சரித்திரத்தின் முதல் ராணுவ மூலோபாயம் அல்லது போர்த்தந்திரப் புத்தகம் எனலாம்.

இன்றும்கூட இதிலுள்ள தந்திரங்கள், சூத்திரங்கள் ராணுவக் கல்லூரிகளில் கற்பிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, சந்தைப்படுத்தல் துறையிலும் (Marketing field) பயன்படுத்தப்படுகிறது.
Read 8 tweets
23 Nov 20
வணக்கம்.
கார்த்திகை மாவீரர் நாளில் ஈழத் தமிழருக்காக ஒரு குரல்!ஈழ ஆதரவாளர் கமலா ஹாரீஸ் அமெரிக்க துணை அதிபராக வரும் நேரத்தில்,உலக அரங்கில் பெருகி வரும் புலிகள் மற்றும் ஈழத் தமிழர் ஆரதவு.. இலங்கையில் இனப்படுகொலையை தடுப்பதற்கு தவறிவிட்டது ஐ. நா. சபை - ஒபாமா குற்றச்சாட்டு!(பகுதி-1/7)
கார்த்திகை மாவீரர்-2/7
இலங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் (ethnic slaughter) தடுக்க ஜக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார்.
உறுதியளிக்கப்பட்ட நிலம்' (A Promised Land) என்னும் தனது நினைவுத் தொகுப்பு நூலில்
கார்த்திகை மாவீரர்-3/7
ஐ. நாவின் கையாகலாகாத் தனத்தை இவ்வாறு பதிவு செய்துள்ளார் பராக் ஒபாமா.
சோமாலியா போன்ற தோல்வி கண்ட அரசுகளை மீளக்கட்டியமைப்பதற்கோ அல்லது இலங்கை போன்ற நாடுகளில் இனரீ தியான படுகொலைகளைத் தடுப்பதற்கோ ஐ.நாவின் உறுப்பு நாடுகளிடையே வழிமுறைகளோ அன்றி கூட்டு விருப்பமோ
Read 11 tweets
22 Nov 20
பழந்தமிழரின் சிறந்த தொழில் நுட்பம்!
எனக்கு ஆச்சர்யம் தர கூடியது "வெண்கல சிலை " செய்யும் தொழில் நுட்பம் இதனை"Lost Wax Technique என்பர்
இது சிந்து சமவெளி நாகரிகம் தொற்றே நம்மிடம் இன்றளவும் இருக்கிறது. படத்தில் இருப்பது சிந்து சமவெளி காலத்து சிலை!(பெரிதுபடுத்தி பார்க்கவும்)பகுதி 1/5
பழந்தமிழரின்-2/5
கும்பகோணத்தில் செய்யப்படும் சிலைகள் யாவுமே இந்த முறையை சேர்ந்தவை தான்.
இதனை செய்யும் முறை
1. மெழுகில் (மரம் அல்லது தேன் கூடு ) தேவையான சிற்பத்தை செய்ய வேண்டும்
2. பின்னர் அந்த சிற்பத்தை சுற்றி களிமண் கொண்டு கெட்டியாக பூச வேண்டும் இது காய 2 மாதங்கள் கூட ஆகும்.
பழந்தமிழரின்-3/5
3. இப்போது இறுகிய அந்த சிலையை ஏதேனும் ஓரிடத்தில் துளை இட்டு நெருப்பில் வைக்க வேண்டும்
4. இப்போது உள்ளிருக்கும் மெழுகு உருகி விடும்
5. இதனுள் வெண்கலத்தை உற்ற வேண்டும்
6. பின்னர் மேலே உள்ள களிமண்ணை உடைத்து விடலாம்.

wix.to/L0APBzk?ref=2_…
Read 5 tweets
21 Nov 20
வணக்கம்.
ஒரிசா கடற்கரை ஓரங்களில் இன்னனும் தமிழ் பாரம்பரியமாக பேசப்படுகிறது.ஊர்ப் பெரியவர்கள் தாங்கள் தாமிரபரணி(இலங்கை)வந்ததாக இன்னமும் கூறிக் கொள்கிறார்கள்!இதற்கு ஏதும் வரலாற்று ஆதாரம் உள்ளதா அண்ணா என ஒரு சகோதரரின் கேள்வி?உண்மைதான் என் பதில்!இதோ(பகுதி-1/7)
wix.to/4UC7Bzc?ref=2_…
ஒரிசா கடற்கரை-2/7
வட இந்தியாவில் உள்ள வங்காளம், ஒரிசா ஆகிய பகுதிகள் முந்தைய காலத்தில் லாலா தேசம் என்று அழைக்கப்பட்டது. இந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் சிங்கபாகு.அவனுடைய மகனே தந்தையினால் 700 பேர்களுடன் துரத்தப்பட்டு இலங்கை வந்தடைகிறான்.அங்கு...

wix.to/4UC7Bzc?ref=2_…
ஒரிசா கடற்கரை-3/7
இலங்கை நாட்டில் விஜயன் காலடி வைத்ததும், அங்கு ஒரு மரத்தடியில் குவேனி என்ற பெண் அமர்ந்திருக்கிறாள்.அவள் தமிழ் பெண்.நாகர் இனப் பெண்.

குவேனி என்ற சொல், கவினி என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு ஆகும். கவினி என்றால் “பேரழகு படைத்தவள்” என்று பொருள்படும்.
Read 8 tweets
20 Nov 20
வணக்கம்.
அரசமரம் எப்படி மரங்களின் அரசனானது?எங்கிருந்து வந்தது?அரசமரத்தின் கதை என்ன?அரச மரம் மரங்களின் அரசனுமில்லை! அரச மரத்திற்கும் அரசுக்கும் எந்த தொடர்புமில்லை!ஏனெனில் அதன் உண்மையான,தொன்மையான பெயர் அரை மரம் ஆகும்.பார்க்க:YouTube-ல் அரச மரத்தின் இரைச்சல்.
அரச மரம்-2/5
' அரைமரவியற்றே' - (தொல்காப்பியம்).
அரைமரம் என்றே - அரச மரத்தின் பெயரை தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

அரை மரம் என்பதே மருவி தற்காலத்தில் அரச மரம் ஆகியுள்ளது.

அரை > அரைசு > அரசு.

அரை மரம் என்ற பெயர்த் தோற்றம் குறித்து விளங்குவோம்.

wix.to/nUDdBzU?ref=2_… ImageImageImageImage
அரச மரம்-3/5
அரை > அரைசு மரம் - என்றால் அரைச்சல் எழுப்பும் மரம் (ஓசை எழுப்பும் மரம்) என்று பொருள்.
நெடிதுயர்ந்து வளரும் அரை மரத்தின் இலைகள் காற்றில் சலசலக்கும் ஓசையானது மற்ற மரங்களை விட மிகுதியாக அமைதியைக் கலைக்கக் கூடியது.
அறிவார்ந்த நம் முன்னோர்கள் எவ்வளவு தீர ஆய்ந்து, ImageImageImageImage
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!