கொலைகார இந்திய அரசு:-

இந்தியா ஆக்சிஜனுக்காக தத்தளித்த போது தேவையை விட நான்கு மடங்கு ஆக்சிஜன் எஃகு உருக்காலைகளின் சேமிப்பு தொட்டிகளில் இருந்தது என உச்சநீதி மன்றத்தில் மத்திய எஃகு அமைச்சகம் தகவல்.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து
வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன.
ஆனால் கொடுமை என்ன தெரியுமா?

கடந்த ஒருவாரமாக, அதாவது ஏப்ரல் 20ஆம் தேதி முதல் உச்சமாக ஆக்சிஜன் தேவைப்பட்ட நேரத்தில் இந்தியாவில் உள்ள sail எஃகு ஆலைகளில் மட்டும் சுமார் 16,500
டன் மருத்துவ திரவு ஆக்சிஜன் சேமிப்பு தொட்டிகளில் சேமிக்கப்பட்டு, பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளது என்று எஃகு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா நோயாளிகள் அதிகமாக இருந்த 12 மாநிலங்களில் உள்ளவர்களுக்கு தேவைப்பட்ட ஆக்சிஜன் அளவு 4,880 டன், ஆனால் சேமிப்பில் இருந்த கையிருப்பு தேவையை விட
மூன்று மடங்கு. இதைக் கொண்டு செல்வதற்கான முறையான ஒருங்கிணைப்பு இல்லாததால் பல நூற்றுக்கணக்கான இந்தியர்களை நாம் இழந்துள்ளோம்.
16,000 டன்களை கொண்டுசெல்வதற்கான 1,200 வாகனங்கள் நம்மிடம் உள்ளன, இருந்தும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை நாம் இழந்துள்ளோம்.
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன்
தயாரித்துதான் இந்தியாவை காப்பாற்ற முடியும் என்று சொல்வது எவ்வளவு பெரிய பித்தலாட்டம் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில், கொரோனாவால் நிகழும் ஒவ்வொரு மரணத்திற்கும் இந்திய அரசே பொறுப்பு, மோடியே காரணம். உரக்கச் சொல்வோம்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with G. Sundarrajan

G. Sundarrajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SundarrajanG

29 Apr
உத்தரப்பிரதேசத்தில் ஆக்ஸிஜனுக்கு தட்டுப்பாடே இல்லை என்கிறார் அம்மாநில முதல்வர் யோகி. ஆனால், அங்கு தொடர்ந்து இழப்புகள் அதிகரித்துவருகின்றன. உண்மையில் அந்த மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து பிபிசியின் சமீராத்மஜ் மிஸ்ரா ஒரு அதிர வைக்கும் கட்டுரையை எழுதியிருக்கிறார்.
1. மாநிலம் முழுவதுமே கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் இடம் தேடி அலைகிறார்கள். அல்லது இடம் கிடைக்காமல் உயிரிழக்கிறார்கள். ஆனால், உத்தர பிரதேசத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடோ மருத்துவமனை படுக்கை வசதிகள் இல்லாத நிலையோ கிடையாது என்கிறார் யோகி.
2. முதல்வரின் கூற்றுக்கு மாறாக,
உத்தர பிரதேசத்தின் பல மருத்துவமனைகளில் போதிய ஆக்சிஜன்,வென்டிலேட்டர், படுக்கை வசதிகள் கிடைக்காமல் பலநோயாளிகள் இறந்து போனதையும் அதற்கு முன்னதாக, நோயாளிகளின் உறவினர்கள் சமூக ஊடகங்கள் மூலம் உதவி கேட்டு அபயக்குரல் விடுத்த காட்சிகளையும் பார்க்க முடிந்தது.
3. உத்தர பிரதேசத்தில் முதல்வர்
Read 11 tweets
24 Apr
ராகுல் காந்தி இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத சக்தி:-
கடந்த மார்ச் 15ஆம்தேதி The Hindu நாளிதழில் ராகுல் காந்தி குறித்த ஒரு கட்டுரையை Rajesh Mahapatraவும் Rohan D'Souzaவும் எழுதியிருந்தனர்.இந்திய அரசியலில் பிரதமர் மோதியின் ஆபத்தான அரசியலுக்கு மாற்று ராகுல் காந்தி மட்டுமே என்பதை
அந்தக் கட்டுரையில் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அந்தக் கட்டுரையின் சுருக்கமான மொழிபெயர்ப்பு இது:
1. இந்தியாவில் இருவிதமான குடிசைத் தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. ஒன்று, ராகுல் காந்திக்கு தொடர்ந்து அறிவுரைகள் கூறுவது. மற்றொன்று, அவரெல்லாம் ஒரு ஆளா என்று ஒதுக்கித் தள்ளுவது.
ஆனால், இந்த இருதரப்பாலும் புரிந்துகொள்ள முடியாத ஒன்று, ராகுல் எப்படி பா.ஜ.கவுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார் என்பதைத்தான்.
2. மோதியைப் பொறுத்தவரை சீன பாணியிலான அரசியல் சூழலையே விரும்புகிறார். சீன கம்யூனிஸ்ட் கட்சியைப் போல பா.ஜ.க. இந்தியாவை ஆதிக்கம் செலுத்த வேண்டுமென நினைக்கிறார்.
Read 13 tweets
24 Apr
#கடல்_அட்டை (Sea cucumber):-
பார்ப்பதற்கு நீண்ட உருளையான உருவத்துடன் (உருண்டை வடிவ சிற்றினங்களும் உண்டு) காணப்படும் இக்கடலுயிரினம் ஆங்கிலத்தில் sea cucumber என அழைக்கப்படுகிறது. முட்த்தோலி வகையைச் சார்ந்த இவ்வுயிரினம் தமிழில் கடல் அட்டை, கடல் வெள்ளரி (தமிழ்ப்படுத்தப்பட்ட
வார்த்தை என்று நினைக்கிறேன்) என்ற பெயர்களால் சுட்டப்படுகிறது. (வேறு வட்டாரப் பெயர்கள் இருப்பின் நண்பர்கள் தெரிவியுங்கள்)
கடல் தரையில் மிதவை உயிரினங்களையும் மட்கியத் தாவரங்களையும் உண்டு வாழும் இவ்வுயிரினத்தின் உடலானது நெகிழும் தன்மையுள்ள சதைப்பற்றான தோலால் போர்த்தப்பட்டிருக்கிறது.
பொதுவாக இவை ஆபத்தற்றவை என்றாலும் ஆபத்துக்கு உள்ளாக்கப்படும்போது(சில உள்ளினங்களில்) ஒரு பிசுபிசுப்பான ஒட்டும் தன்மையுடையத் திரவத்தை வெளியேற்றுகின்றன. இத்திரவம் கண்களில் பட்டால் நிரந்தர பார்வையிழப்பை ஏற்படுத்தக் கூடியது.
உடலின் ஒருமுனையில் அமைந்திருக்கும் வாயில் குட்டி மரங்களை ஒத்த
Read 7 tweets
23 Apr
கோவிட் வருவதற்கு முன்னர் தமிழ்நாட்டில் உள்ள 35அரசு மருத்துவமனைகளில் (குறிப்பு;- மாநிலத்தில் அல்ல,அரசு மருத்துமனைகளில் மட்டும்) உள்ள திரவ ஆக்சிஜன் உற்பத்தி திறன் 355கி.லி. கோவிட் தொற்றின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் இன்னும் அதிக அளவு ஆக்சிஜன் தேவைப்படும் என்று எண்ணிய தமிழக அரசு
இந்த உற்பத்தி திறனை அதிகரிக்க முடிவெடுத்தது. மேலும் 30 அரசு மருத்துவமனைகளில் 431கி.லி திரவ ஆக்சிஜன் உற்பத்தியை நிறுவியது. இதுவும் மீறி தேவைப்பட்டால் இருக்கட்டும் என்று இன்னொரு 100கிலி திறன் கொண்ட உருவாக்க ஆலைகளை அமைக்கிறது. இதைத்தவிர தமிழகம் எங்குமுள்ள ஆக்சிஜன் உருவாக்க ஆலைகளின்
திறனை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது.
அப்படியே பாஜக ஆளக்கூடிய மத்திய பிரதேசம் செல்வோம், நான்கு தினங்களுக்கு முன்னர்தான் அந்த மாநில முதல்வர் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி, அம்மாநிலத்தில் உள்ள 37மாவட்டங்களிலும் ஆக்சிஜன் ஆலைகளை அமைக்க உத்தரவிட்டுள்ளார். அதாவது தமிழக அரசு 55-60
Read 4 tweets
7 Apr
"இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது", இது பராசக்தி திரைப்படத்தில் கலைஞர் எழுதி சிவாஜி பேசிய புகழ்பெற்ற வசனம். இது எதுக்கு இப்போது என்று நினைத்தால், படியுங்கள்.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னக
அமர்விற்கு துறைசார் நிபுண உறுப்பினராக, தமிழக முன்னாள் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனை நியமித்திருப்பது சட்டத்திற்கு புறம்பானது மட்டுமல்ல அறமற்ற செயலும் கூட.

பசுமை தீர்ப்பாயத்தின் நிபுண உறுப்பினராக ஐந்து ஆண்டுகள் சூழலியல் துறைகளில், நிறுவனங்களில் பணியாற்றி இருக்கவேண்டும், ஆனால்
கிரிஜாவிற்கு அந்த அனுபவம் கிடையாது. அவருடைய நியமனத்தை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில் அவர் பசுமை தீர்ப்பாயத்தின் "தென்னக அமர்வுக்கு" நிபுண உறுப்பினராக அமர்த்தப்பட்ட உத்தரவு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இது அறமற்ற செயல்,
Read 6 tweets
25 Mar
"எனக்கு மாதவிடாய் நாட்களே புடிக்காது, 6-7 நாட்களுக்கு என்னால் எதுவும் செய்யமுடியாது, சானிடரி நாப்கின் வாங்கும் அளவிற்கு என்னிடம் வசதி இல்லை, அந்த நாட்களில் பள்ளிக்கு செல்லமுடியாமல் போய்விடும்" என்கிறார் ஒடிசா மாநிலம் கட்டக் மாவட்டத்தை சேர்ந்த 14வயது நிவேதிதா மொஹபத்ரா. இதில்
நிவேதிதா மட்டும் தனித்தல்ல, இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவியர் மாதவிடாயால் பள்ளிக்கு செல்லமுடியாமல் உள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த தேசிய "குடும்ப சுகாதார கணக்கெடுப்பில்", ஒடிசாவில் மட்டும் சுமார் 53% பெண்கள் சுகாதாரமற்ற வழிமுறைகளை பின்பற்றி மாதவிடாயை
கையாளுகிறார்கள் என்று தெரியவந்தது .
இந்த அவலநிலையை போக்குவதற்காக கடந்த2018 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி ஒடிசா அரசாங்கம் "குஷி" திட்டத்தை துவக்கியது.இந்த திட்டத்தின் படி,அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 17லட்சம் மாணவியருக்கு இலவசமாக "சானிடரி நாப்கின்"
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!