Stanley Rajan post. தமிழக நிதியமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் தியாகராஜனாரின் பேட்டி காண நேர்ந்தது. அந்த பேட்டியின் விவாதம் இந்துகோவில்களை அரசின் கட்டுபாட்டில் இருந்துவிடுவிப்பது பற்றியது, அதற்கு என்னவெல்லாமோ சொல்லி விஷயத்தை திசை மாற்றுகின்றார். மதுரை முதல் தென்காசிவரை கோவில்
கும்பாபிஷேகம் செய்த குடும்பம் எங்களுடையது என்கின்றார், அதே நேரம் எல்லா மக்களுக்குமான மதுரை ஆலய நுழைவினை பசும்பொன் தேவரும் வைத்தியநாத அய்யரும் செய்தார்கள் என்பதை மறைக்கின்றார். அது போக மருதுபாண்டியர் கட்டிய மண்டபங்களெல்லாம் தங்கள் மேலாண்மையில் அடையாளம் மாற்றபட்டது என்பதையும்,
சமீபத்தில் மீனாட்சி அம்மன் கோவில் நிலம் கழிவறை ஆக்கபட்ட சர்ச்சையில் #திமுக பிரமுகர் சிக்கியதையும் மௌவுனமாக ஒப்புகொள்கின்றார். மதுரை ஆலயத்தில் நாங்கள் என்பதிலே இந்த ஒப்புதல் பெறபடுகின்றது. மதுரையில் மீனாட்சி அடையாளத்தை அழித்து, சொக்கன் அடையாளத்தை அழித்து பெரியார் பேருந்து
நிலையமெல்லாம் எங்களால் என்பதும் அந்த ஒப்புதலில் வருகிறது. தென்காசி கோவில் பற்றி சொல்கின்றார் ஆனால் பழுதுபட்ட அந்த ஆலய கோபுரத்தை #எம்ஜிஆரும் #சிவந்திஆதித்தனும் செம்மைபடுத்தி குடமுழுக்கு நடத்தினார்கள் என்பதை நம்மைத்தான் சொல்ல வைக்கின்றார். பிராமணன் எந்த கோவிலை கட்டினான் என்கிறார்,
நல்லது. அதாவது அரசன் கோவில் கட்டினான் பிராமணன் எவனும் அரசன் அல்ல என்பதை ஒத்துக் கொள்கின்றார், இதனால் பிராமண
ஆதிக்கம் பிராமண ஆட்சி என ஒன்றும் இருந்ததில்லை என்பதையும் ஒப்புகொள்கின்றார். அன்னாரின் மிக காமெடியான பேச்சு, இந்து ஆலயமெல்லாம் மன்னர் கட்டியது அப்படியானால் இந்து மன்னர்கள்
வாரிசுகள் வந்தால் கொடுத்துவிடலாம் என்கின்றார். அப்படியே மொகலாய வாரிசு கேட்டால் தாஜ்மஹலாலையும் ஆற்காடு நவாபுக்கு தமிழ்நாட்டு மசூதிகள் பலவும் கொடுக்க முடியுமா என்றால் பதிலே வராது. பென்னிகுயிக் பேரனுக்கு முல்லை பெரியாறு அணையினை கொடுக்க முடியுமா? இப்படி ஒரு மாதிரி பிதற்றும் அன்னார்
திடீரென ஜக்கியினை பிடித்து அவன் இவன் காடுகளை ஆக்கிரமித்தான் என ஏக பிதற்றல்? அப்படி ஜக்கி ஆக்கிரமித்தது உண்மை எனில் அரசு வழக்கு தொடரலாம் அதை ஏன் செய்யவில்லை? ஜக்கி சொன்ன கூற்றை அப்படியே திரிக்கின்றார், ஜக்கி சொன்னது இந்து ஆலயங்கள் அறநிலைய துறையிடம் இருந்து விடுவிக்க படவேண்டும்
என்பதே, மற்றபடி தன்னிடம் கொடுங்கள் என அவர் கேட்டதில்லை. இவராக எதையோ சொல்லி அவரை திட்டிக் கொண்டிருக்கின்றார், எல்லா இந்துக்களின் குரலாக ஜக்கி சொன்னார் என்பதன்றி வேறல்ல விஷயம். அறநிலையதுறையில் என்ன குறை என கேட்கின்றார் அமைச்சர், இதற்கு சில கேள்விகளை நாம் கேட்கலாம். இந்து ஆலயங்களில்
பணியாற்ற ஆகம விதிகளும், இந்து சம்பிரதாயங்களும், வேதங்களும் தெரிந்தவர்கள்தான் வேண்டும், அந்த துறைக்கு ஏதோ அலுவலகத்துக்கு ஆட்கள் எடுப்பது போல ஏன் TNPSC தேர்வு எழுதியவர்கள் வரவேண்டும்? இந்து அறநிலையதுறையினை சீர்படுத்தி இந்து ஆகமம் உள்ளிட்ட தனி பாடப் பிரிவில் தேர்ந்த இந்துக்கள்
மட்டுமே அங்கு பணியாற்ற முடியும் என்ற நிலை வைத்தால் என்ன? இந்து அறநிலையதுறை இருந்தும் சிலை கடத்தலும், ஆலய சொத்துக்களும் கொள்ளை போனது எப்படி? என்ன செய்து கொண்டிருந்தது அறநிலைய துறை? தமிழகத்தில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் பாழ்பட்டு நிற்குமா? ஒரு மசூதி இடிந்து கிடக்குமா? ஆனால் எத்தனை ஆயிரம்
இந்து ஆலயங்கள் ஏன் பழுதடைந்து கிடக்கின்றது, அறநிலைய துறை அவற்றை ஏன் அழியவிட்டது? அர்ச்சகர் சம்பளம் ₹1000 க்குகீழுள்ள கோவில்களை பற்றியோ அந்த ஏழை அர்ச்சகர் பற்றியோ அறநிலையதுறை சிந்திக்காதது ஏன்? தன் கட்டுபாட்டில் உள்ள கோவிலுக்கு கும்பாபிஷேகமும் இதர பணிகளும் அறநிலையதுறை செய்யாமல்
அக்கோவில் பக்தர்கள் தனியார் கம்பெனிகளிடம் கையேந்துவது ஏன்? இதற்கெல்லாம் அமைச்சர் பதில் சொல்வாரா என்றால் இல்லை. அறநிலையதுறை என்பது இந்து ஆலயங்களை ஏதோ கடை போல் நிர்வகிக்கின்றன, அதைத்தான் முதலில் சாடுகிறார்கள் இந்துகள். அதை கோவிலாக கோவிலுக்குரிய புனிதத்துடன் நடத்துங்கள் என்றால் அது
எப்படி தவறாகும்? இந்து கோவில்களை மீட்டு யாரிடம் கொடுப்பீர்கள், அது பிராமண ஆதிக்கத்துக்கு வழிவகுக்கும் என அர்த்தமில்லாமல் பேசுகின்றார் அமைச்சர். அவர் மதுரைக்காரரா என்பதிலே சந்தேகம் மேலோங்குகின்றது, காரணம் மீனாட்சி அம்மன் ஆலய வரலாறே அவருக்கு தெரியவில்லை. மதுரை ஆலயத்தை அந்த ஆதீனமே
நிர்வகித்தது, திருஞான சம்பந்தரின் மதுரை வருகையும் ஆதீனத்தை செம்மைபடுத்தி அவர் அதை நிர்வாகிக்க வழிசெய்த வகையும் வரலாறு. பாண்டிய மன்னன் என்பவன் மேலான்மை மட்டும் செய்தான், யாகம் செய்தான், கோவில் கோபுரம் கட்டினான், மேற்கொண்டு கோவிலுக்கு தேவை என்றால் நிதி ஒதுக்கினான். நிர்வாகமெல்லாம்
ஆதீனங்களே செய்தன‌. இப்பொழுது நிதி அமைச்சரிடம் அழுத்தமாக இந்துக்கள் கேட்பது அதுதான், இங்கு ஆதீனங்களும் மடங்களுமே ஆலயங்களை நிர்வகித்தன, அதன் மேல் ஜமீன்கள் இருந்தார்கள் அரசர்கள் இருந்தார்கள். வெள்ளையன் ஆட்சியில் அரசரெல்லாம் அதன் பின் ஏற்பட்ட குழப்பத்திலேதான் அரசு ஆலயங்களை எடுத்தது
தமிழகத்தில் 3000 மடங்கள் இருந்தன அவற்றுக்கு ஏகபட்ட நிலபுலன்கள் இருந்தன, அவைகளே அவற்றை கொண்டு கோவில்களை நிர்வகித்தது. இப்பொழுது அந்த மடங்கள், ஆதீனங்களிடம் கோவில்களை கொடுத்து அவற்றின் சொத்துக்களையும் கொடுத்தால் அவர்கள் பக்தரோடு இணைந்து அழகாக பரிபாலனம் செய்வார்கள். இங்கு ஒரு சில
ஆலயங்களை தவிர ஏராளமான ஆலயங்கள் பக்தர்களாலே பராமரிக்கபடுகின்றது என்பது ரகசியமல்ல, ஆலயம் விடுவிக்கபட்டால் அதன் பராமரிப்பை நிர்வாகத்த ஆதீனங்களுடன் சேர்ந்து மக்கள் செய்வார்கள். இவ்வளவுக்கும் ஆதீனங்கள், மடங்களில் சுமார் 80% பிராமணர் இருக்கும் மடங்களே அல்ல, அவர்கள் வசம் இருக்கும்
மடங்கள் வெகு வெகு சில மட்டுமே. மடங்கள் ஆதீனங்களுக்கு கோவில்களை கொடுத்துவிட்டு அரசு மேற்பார்வை செய்யட்டும் அதில் என்ன தயக்கம்? இதில் இவருக்கு என்ன சிக்கல்? ஒரு நிதியமைச்சராக தமிழக இந்து ஆலயங்கள் அரசின் வருமானத்தில் எவ்வளவு பெரும் பங்கை கொடுக்கின்றன என்பது அவருக்கு தெரியாதா? அதே
நேரம் இந்து ஆலயங்களின் அவலநிலை தெரியாதா?
அதை மறைத்து வஞ்சகமாக பதிலளித்தால் அவருக்கு மனசாட்சியே இல்லை என்பதை தவிர என்ன சொல்ல முடியும்? அவரின் பேட்டியெல்லாம் விதண்டாவாதம், வலிய திரித்த பொய்கள், மாற்றபட்ட மறைக்கபட்ட வரலாறுகள், ஜக்கி கேட்ட நியாயமான கேள்வியினை திசை திருப்பி என்னென்னமோ
சொன்ன வன்மங்கள்.
பேட்டியில் அவர் சொன்ன இந்துவிரோத கருத்துக்களை விட கடுமையானது அவரின் உடல்மொழி, ஏதோ பாண்டிய மன்னனின் வாரிசு போல் ஒரு தோற்றம். தான் ஒரு அமைச்சர் என்பதோ, மகா முக்கியமான துறையின் பொறுப்பாளர் என்பதோ, அதற்குரிய கண்ணியம் காக்கபட வேண்டும் என்பதெல்லாம் அவருக்கு தெரியவில்லை
ஜக்கி மேல் ஆயிரம் சர்ச்சைகளை யார் சொன்னாலும் எது வழக்கானது எது நிரூபிக்கபட்டது? அவரை அவன் இவன் என குதிப்பதெல்லாம் சரியல்ல.‌ ஜக்கியின் வயதுக்காவது மரியாதை கொடுக்க வேண்டும். ஒரு மரியாதை தெரியாத தமிழர், அறம் தெரியாத, மதுரை குலபெருமையின் மாண்பு தெரியாத ஒருவர் நிதி அமைச்சர் என்பது
நிச்சயம் திமுக அரசின் கருப்பு புள்ளி. இந்த அரசு உதயநிதியின் வருங்கால திமுக அரசு எப்படி இருக்கும் என்பதை காட்டுகிறது, #அன்பில்மகேஷ் #தியாகராஜன் போன்றோரின் பதவிகள் அதை சொல்கின்றன‌. அறம் தவறிய, நாகரீகம் அற்ற ஒரு ஏதேச்சதிகார கும்பலிடம் தமிழகம் அடுத்த ஐந்து ஆண்டுக்கு சிக்கிவிட்டதோ என
அச்சம் ஏற்படுகின்றது. திருச்சி திருவரங்க ஆலயத்து ஜீயர் பதவி விற்பனைக்கு என்பது போல் வந்த அறிவிப்பின் அதிர்ச்சிக்கு பதிலளிக்கும் முன்னே, இந்து ஆலயங்களுக்கு விடுதலையே இல்லை என நிதியமைச்சர் சொல்வது பெரும் அதிர்ச்சி. உதயநிதி ஆட்சியே இப்படி என்றால் அடுத்து இன்பநிதி ஆட்சியில் என்னென்ன
பேசுவார்களோ என்பதை நினைக்கும்பொழுதே பகீரென்கின்றது
இந்துக்கள் திருந்தாமல் இந்துக்கள் சிந்தியாமல் இந்துக்கள் தங்கள் மத நிலையினையும் ஆலயங்கள் நிலையினயும் உணராதவரை இதெல்லாம் நடந்து கொண்டே இருக்கும் என்பது தமிழக தலைவிதி.
#ஸ்டாலின் ஆட்சியின் தொடக்கத்திலே இந்து வெறுப்பு தலைவிரித்தாட
தொடங்கியிருப்பது நல்ல அறிகுறி அல்ல, இதை அடக்கி வைக்கும் பொறுப்பு அவருக்கு உண்டு
இல்லை காலம் அவருக்கு பல விஷயங்களை காட்டும். இந்து அறநிலைய துறை அமைச்சரே கடவுள் இல்லை என சொல்லி பதவி ஏற்றபொழுது நிதி அமைச்சர் இப்படித்தான் பேசுவார், இதெல்லாம் யாருடைய தவறு?

R Narayanan
Cho Fans Club

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

1 May
Dr Devi Prasad Shetty, a renowned Cardiologist of Narayana Hridayalaya, Bangalore has put out a video giving very valuable advice on how to handle the pandemic today. He says #Covid is not treated just by Oxygen which is the crisis now, patients need manpower-nurses & junior Drs
Who actually attend to the patients and are really responsible for saving all the Covid patients. He says all the medical personnel have done a wonderful job so far but having worked tirelessly for more than a year they are fatigued. He offers solutions. Give appointment order
For all the nurses who have finished their course but waiting to take the exams, passed out doctors waiting to take #NEET for PG & Drs passed out from foreign Uni waiting to take their qualifying exam to get registered to work make them work in Covid wards for one year & give
Read 6 tweets
29 Apr
வார்த்தைகளால் விவரிக்க முடியாத தருணம். இரண்டு நாட்களுக்கு முன்னர் எனது நண்பரது உறவினர் ஒருவர் சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா வால் இறந்துவிட்டார். அவரை தகனம் செய்ய அரசாங்க வாகனம் கிடைப்பதில் தாமதமானதால் அதிகாரிகள் உங்களுக்கு உடனே வேண்டுமானால் தனியார் வாகனத்தை வைத்து கொண்டு
செல்லுங்கள் என்றனர். இறந்தவரின் மகன் வேனுக்கு விசாரித்ததில் அதிர்ச்சி காத்திருந்தது. ஒருவரும் கொண்டு செல்ல முன்வரவில்லை. சிலர் மருத்துவமனையில் இருந்து காட்டிற்கு கொண்டு செல்ல இருபதாயிரம் கேட்டனர். இறந்தவரின் மகன் அழுதே விட்டார். ஏழை இறந்தால் அனாதை பிணம்தான் என்று புலம்பினார்.
இந்த சமயத்தில் முன்பின் தெரியாத ஒருவர் வந்து இந்த நம்பர்க்கு கால் பண்ணுங்கள். கவலை வேண்டாம் என்று சொல்லிவிட்டு போய்விட்டார். பின்னர் நடந்ததுதான் கடவுள் செயல். போன் செய்தவுடன் இவர்களின் விவரங்களை கேட்டு சிறிது நேரத்திலேயே தனியார் வாகனத்தை கொரோனா வழிகாட்டுதல்படி ஏற்பாடு செய்து
Read 8 tweets
27 Apr
கஞ்சி காமாக்ஷி, மதுரை மீனாக்ஷி, காசி விசாலாக்ஷி என்று சொல்லுவதே ஒரு மந்திரம் தான். அதில் #மீனாக்ஷி தேவியின் சரித்திரம் அற்புதமானது. மலயத்வஜ பாண்டிய மன்னர் மதுரையில் பிள்ளை வரம் வேண்டி அஸ்வமேத யாகம் செய்கிறார். இந்திரன் வந்து நீ புத்திரகாமேஷ்டி யாகம் செய் அந்த அம்பாளே உனக்கு வந்து
பிறப்பாள் என்று கூறுகிறார். மலையத்வஜ பாண்டியனுடைய மனைவி காஞ்சனமாலை போன பிறவியில் அம்பாளே தனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என்று வேண்டியவள். அதற்கேற்ப மன்னரும் புத்திரகாமேஷ்டி யாகம் செய்கிறார். அந்த யாக குண்டத்தில் இருந்து மூணு வயது குழந்தையாக, அம்பாள் பச்சை நிறத்தில் வெளி
வருகிறாள். காஞ்சனமாலை எடுத்து அணைத்து பால் கொடுக்கறாள். குழந்தைக்கு ஆச்சரியமாக மூன்று ஸ்தனங்கள் உள்ளன! மன்னரும் சுந்தரேச பெருமானிடம் போய் வேண்டியவுடன் ‘நீ வளர்த்துக் கொண்டு வா. இந்த குழந்தை தன்னோட கணவனை பார்த்தவுடனே அந்த மூன்றாவது ஸ்தனம் மறைந்துவிடும் என்கிறார் இறைவன். அவ்வாறே
Read 28 tweets
25 Apr
இன்னிக்கு ராமநவமி இல்லை தான். அதுக்காக ராமனை நினைக்காமல் இருக்கலாமா? ஸ்ரீ ராமச்சந்திரனை தஸரத சக்ரவர்த்தி மட்டும் ராமா என்று அழைத்து வந்தாராம். தந்தை என்ற முறையில் இந்த அதிகாரம் அவருக்கு மட்டுமே உண்டு. தாயான கௌஸல்யா மகனை வாத்சல்யத்துடன் ராமபத்ரா என்று அழைத்து வந்தாள். சிற்றன்னை
கைகேயி, ஶ்ரீராமன் குழந்தையாக இருந்தபோது ஆகாயத்தில் இருக்கும் சந்திரன் வேண்டும் என்று அழுதபோது ஒரு கண்ணாடியில் சந்திரனின் பிம்பத்தை காண்பித்து ஸமாதானப் படுத்துகிறாள், அவள் ராமச்சந்திரா என்று அழைத்து வந்தாள். ப்ரம்ம ரிஷியான வசிஷ்டர் ஸ்ரீ ராமனை பரதத்துவம் என்று அறிந்து வேதஸே என்று
அழைத்தார். அயோத்யா நகரத்து மக்கள் எங்களுடைய ரகுவம்ஸத்து அரசன் என்ற பொருளில் ரகுநாத என்று அழைத்தனர். ஸீதாதேவி நாத என்றே அழைத்து வந்தாள். அப்படி அழைப்பதற்கு சீதைக்கு மட்டுமே உரிமை உண்டு. மிதிலை நகரத்து மக்கள் அனைவரும் எங்களது ஸீதாதேவியின் பதி என்ற அபிமானத்தினால் ஸீதாயபதயே என்று
Read 4 tweets
10 Apr
I got a forward in my school group. So many Hindus in the group were going 👏🏽👌🏼👌🏼 over it! I am posting the FW & my reply given there!
A pregnant mother asked her daughter, What do u want- A brother or a sister?
Daughter: Brother
Mother: Like whom?
Daughter: Like RAVAN
Mother:
What the hell are you saying? Are you out of your mind?
Daughter: Why not Mom? He left all his Royalship & Kingdom all because his sister was disrespected. Even after picking up his enemy’s wife, he didn’t ever touch her. Why wouldn’t I want to have a brother like him?
What would
I do with a brother like Ram who left his pregnant wife after listening to a Dhobi though his wife always stood by his side like a shadow? After giving Agni Pareeksha & suffering 14 years of exile. Mom, you being a wife & sister to someone, until when will you keep on asking for
Read 23 tweets
10 Apr
Jaya Jaya Sankara Hara Hara Sankara,
I really don’t know what to say except for the fact that humanity is dying right in front of our eyes. This shows one thing clearly, rapidly deteriorating dharma and a big gaping hole in this Punniya Bhumi when it comes Gho Matha Samrakshanam.
All these cows that were cruelly attacked have been roaming around in severe pain for several days with the Madurai public watching it doing nothing about the situation despite it being in the local news papers. What is more inhumane and pathetic some local groups took pictures
of the cows, flaunted it in social media, collected funds but did nothing for the cows. While there are animal welfare activists in many areas who take interest in such incidents and come forward to help, they do not have the people, resources, funds, experience, or other means
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(