அந்த அரண்மனையில் மன்னர் திருதராஷ்டிரன் தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார். "துரோணாச்சார்யரே! எனக்கு ஒரு சந்தேகம்" என்று ஆரம்பித்தார் மன்னர் திருதராஷ்டிரன். "கேளுங்கள் மன்னா!’’
"சீடர்களிடம் பாரபட்சம் காட்டாமல், வித்தை கற்பிப்பதுதானே நல்ல ஆசானின் இலக்கணம்?"திருதராஷ்டிரன் கேட்டார்.
"ஆம் மன்னா"பதிலளித்தார் துரோணர்."தாங்கள் நல்லதோர் ஆசானாகத் திகழவேண்டும் என்பதே எனது விருப்பம்"என்றார் மன்னர்."மன்னா என்ன கூறுகிறீர்கள்?"திடுக்கிட்டார் துரோணர்.
"துரோணரே!பாண்டவர்களையும் எனதருமைப்பிள்ளைகளையும் சரிசமமாக பாவித்து வித்தைகளைக் கற்பிக்க வேண்டும்."
பாண்டவர்கள் மீது பொறாமை கொண்ட துரியோதனாதிகள், தன்னைப் பற்றி கோள் சொல்லி இருப்பார்கள்"என்று உணர்ந்து கொண்டார் துரோணர்.பிறகு அவர்,"மன்னிக்க வேண்டும் மன்னா. நான் எந்தவித பாகுபாடும் காட்டுவதில்லை. ஆர்வம், முயற்சி,உத்வேகம்,தனித்தன்மை போன்ற இயல்புகள் எல்லோரிடமும் ஒரே மாதிரி அமைவதில்லை,
என்பதைத் தாங்கள் உணர வேண்டும்"என்று திருதராஷ்டிரனிடம் எடுத்துக் கூறினார். அதோடு கௌரவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று துரோணருக்குத் தோன்றியது.
மறுநாள்,காலை நேரத்தில் பாண்டவர்களும் கௌரவர்களும் வித்தைகள் பயில்வதற்காக வந்து சேர்ந்தனர். துரோணரை வணங்கினர்.
அவர்களிடம் துரோணர், "சீடர்களே! இன்று நான் ஓர் அரிய வித்தையை உங்களுக்கு கற்பிக்கப் போகிறேன். அதற்காக நாம் காட்டுக்குச் செல்லலாம்"என்றார். உடனே அனைவரும் துரோணருடன் புறப்பட்டனர்.ஓர் ஆற்றங்கரையை அடைந்தனர்.
சீடர்களை அங்கு அமருமாறு கூறிய துரோணர்,
ஆற்றுமணலில் தன் விரலால் ஒரு ஸ்லோகத்தை எழுதினார்.
"சீடர்களே,இன்று உங்களுக்கு கற்பிக்கப் போகும் வித்தை மூலம் ஒரு காட்டையே எரித்து பஸ்பமாக்கி விடலாம். நான் எவ்வாறு இந்த ஸ்லோகத்தை உச்சரித்து அம்பைப் பிரயோகிக்கிறேன் என்று கூர்ந்து கவனியுங்கள்" என்றவர் அர்ஜுனனிடம்,
அர்ஜுனா! கமண்டலத்தை எடுத்து வர மறந்துவிட்டேன். நீ விரைவாகச் சென்று, ஆசிரமத்தில் இருந்து அதை எடுத்து வா" என்றார். 'குருநாதர் கற்பிக்கும்,இந்த அரிய வித்தையை கற்கும் வாய்ப்பு நழுவி விடுமோ?’ என்ற கவலையுடன் குருநாதரின் குடிலை நோக்கி விரைந்தான் அர்ஜுனன்.
கமண்டலத்துடன் திரும்பியவன்,அவர்கள் ஆற்றங்கரையைத் தாண்டி செல்வதைப் பார்த்தான். உடனே ஆற்றைக் கடந்து அவர்களிடம் சென்றான்.கமண்டலத்தை குருநாதரிடம் தந்தான். "குருவே! என்னை மன்னியுங்கள்.சற்றுத் தாமதமாகி விட்டது" என்றான் அர்ஜுனன். அவனிடமிருந்து கமண்டலத்தைப் பெற்றுக் கொண்ட துரோணர்,
மற்றவர்களிடம் தனது உரையைத் தொடர்ந்தார்."நல்லது சீடர்களே.இன்று கற்பித்த வித்தையில்,எவருக்காவது சந்தேகம் இருந்தால்,என்னிடம் கேளுங்கள்"."குருவே! நான் வருவதற்குள் பாடம் முடிந்துவிட்டதா?"என்று ஏமாற்றமாகக் கேட்டான் அர்ஜுனன்."ஆம்!"என்று அவனுக்கு பதிலளித்த துரோணர் மற்றவர்களை நோக்கி,
"சரி ஒவ்வொருவராக வந்து ஸ்லோகம் சொல்லி, அம்பைப் பிரயோகித்து,அந்தக் காட்டுப் பகுதியை எரியுங்கள் பார்க்கலாம்"என்றார்.கௌரவர்கள் நூறு பேர், பாண்டவர்கள் நால்வர் (அர்ஜுனனைத் தவிர) என ஒவ்வொருவராக வந்து ஸ்லோகத்தை உச்சரித்து,அஸ்திரம் பிரயோகித்தனர்.ஆனால் பலன் இல்லை.
"என் உழைப்பு மொத்தமும் வீண்" என்று கோபத்தில் கத்தினார் துரோணர்."குருவே தாங்கள் ஆணையிட்டால், அந்தக் காட்டை நான் எரித்துக் காட்டுகிறேன்" என்று அர்ஜுனன் முன்வந்தான்.
உடனே கௌரவர்களிடையே பெரும் சலசலப்பும் கேலிக் கூக்குரல்களும் எழுந்தன. "சரிதான், பாடம் நடத்தும்போது இவன் ஆளே இல்லை.
பாடத்தை கவனித்த நம்மாலேயே ஒன்றும் செய்யமுடியவில்லை. இவன் எரித்துக் காட்டப் போகிறானாம். நல்ல வேடிக்கை" என்று இகழ்ந்தனர்."வீணாக குருவின் கோபத்துக்கு,ஆளாகப் போகிறான்" என்றான் கௌரவர்களில் ஒருவன். துரோணர் அர்ஜுனனிடம்,"எங்கே,எரித்துக்காட்டு பார்க்கலாம்" என்றார்.
வில்லையும் அம்பையும் எடுத்த அர்ஜுனன், கண்களை மூடி, ஸ்லோகத்தை உச்சரித்து அம்பைப் பிரயோகித்தான். உடனே காடு 'திகுதிகு'வென தீப்பிடித்து எரிந்தது. கௌரவர்கள் உட்பட அனைவருக்கும் பிரமிப்பு."அர்ஜுனா! மந்திர உபதேசம் செய்யும்போது நீ இங்கு இல்லை. பிறக எப்படி உன்னால் இதைச் சாதிக்க முடிந்தது?"
என்று துரோணர் கேட்டார்."குருவே! கமண்டலத்துடன் ஆற்றங்கரைக்கு வந்தபோது, அங்கு நீங்கள் மணலில் எழுதிய மந்திர ஸ்லோகம் பார்த்தேன். சொல்லும்முறை படித்தேன். அதை மனதில் பதிய வைத்தேன். அவ்வளவுதான்". துரோணரின் முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டது.
"ஒரு சீடனிடம் ஆர்வமும், கடின உழைப்பும் இருந்தால், குருவின் போதனையை எப்படியும் கற்றுக் கொள்ளலாம் என்பதற்கு அர்ஜுனனே சாட்சி!’’ என்ற துரோணர் பொருட்செறிவுடன் கௌரவர்களைப் பார்த்தார். அதன் வீரியத்தைத் தாங்க முடியாமல் வெட்கித் தலைகுனிந்தனர் கௌரவர்கள்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Avvai 🇮🇳

Avvai 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Avvaitweets

13 Mar
போர் முடிவடைந்த பிறகு,அஸ்தினாபுரத்தில் முறைப்படி தர்மருக்கு ராஜ்யாபிஷேகம் நடந்தது.பீஷ்மரின் தர்மோபதேசத்தால் தருமர் முடிசூட்டிக் கொண்டாலும்,அவரது மனம் கலக்கத்துடனேயே இருந்தது.ஒருநாள் சகோதர்களுடன் சென்று பீஷ்மருக்கு அருகில் அமர்ந்த தருமர்,தமது உள்ளத்தில் உள்ள சந்தேகங்களை கேட்டார்.
"பிதாமகரே! நல்ல குலத்தில் பிறந்தவர்கள் எவரும் வாய்க்காத நிலையில்,நற்குணமும் பண்பும் நிறைந்த வேற்று குலத்தவரை தனது அமைச்சராகவோ நண்பராகவோ ஓர் அரசன் ஏற்றுக் கொள்ளலாமா?”. பீஷ்மர் பதிலளித்தார், ”தருமா! இதுகுறித்து ஒரு கதை கூறுகிறேன் கேள்.
மனித நடமாட்டம் அதிகம் இல்லாத வனத்தில் முனிவர் ஒருவர் வசித்தார்.மகா யோகியான அவர்,முக்காலமும் உணர்ந்தவர். அந்த வனத்தில் உள்ள கொடிய விலங்குகள் கூட,அவரிடம் சகஜமாக பழகி வந்தன.அங்கு, நாய் ஒன்றும் இருந்தது. முனிவரைப் போலவே அந்த நாயும் சாத்வீகமானது. மாமிசத்தை ஏறெடுத்தும் பார்க்காமல்,
Read 12 tweets
12 Mar
ஸ்ரீராமன் காட்டிற்கு வனவாசம் போகவேண்டும் என்று தந்தையின் உத்தரவு. சீதையும் லக்ஷ்மணனும் அவர் கூடவே சென்றார்கள். கங்கை நதியை கடந்து அக்கரை செல்லவேண்டும். அப்போதுதான் முதன்முதலாக குகன்,ஸ்ரீராமனைப் பார்க்கிறார். ஶ்ரீராமனைப் பற்றி சகல விஷயங்களும் அவருக்குத் தெரியும். Image
நாட்டைத் துறந்து தன்முன் நிற்கும்,மரவுரி தரித்த ஸ்ரீராமனைக் காணமுடியாமல் கண்களில் குகனுக்குக் கண்ணீர்த்திரை. "என்னால் உனக்கு என்ன உதவி ஆகவேண்டும் ஸ்ரீராமா?” என பக்தியோடு கேட்டார். "கங்கையைக் கடந்து அக்கரை செல்லவேண்டும் குஹா" எனக் கூறினார் ஶ்ரீராமர்.
அப்போது ஒரு படகு யாரையோ இறக்கி விட்டுவிட்டு புறப்படத் தயாராக இருந்தது.அந்த படகோட்டியின் பெயர் கேவத். குகன் அவனை அணுகி, "கேவத் உன் படகை இங்கே கொண்டுவா” எனச்சொல்ல, படகு நெருங்கி வந்தது.”கேவத், இதோ நிற்கிறார்களே, இது யார் தெரியுமா? அயோத்தி மஹாராஜா
ஸ்ரீராமர்,அது சீதாதேவி,அவர் மனைவி,
Read 12 tweets
6 Mar
பஞ்ச பூதத்தலங்களுள் அக்னித் தலமான திருவண்ணாமலையை பிரபுடதேவராயன் எனும் மன்னன் ஆட்சி செய்த காலம். ஒருநாள்,சபையில் அமைச்சர்கள் புடைசூழ வீற்றிருந்தான் மன்னன். அப்போது மன்னனின் நெருங்கிய நண்பனும்,ஆஸ்தான பண்டிதனுமான சம்பந்தாண்டான் அங்கு வந்தான்.
சமணக்கவியான சம்பந்தாண்டான் மந்திர சாஸ்திரங்கள் கற்றறிந்தவன்.தேவி உபாசகனும்கூட. அவனை மகிழ்ச்சியுடன் வரவேற்றான் மன்னன்.தனது ஆசனத்தில் அமர்ந்த சம்பந்தாண்டான் மெல்லிய குரலில், ”மன்னா, நண்பன் என்ற முறையில் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.ஆனால்…” என்று
நிறுத்தியவன்,மன்னனின் முகத்தை ஏறிட்டான். சம்பந்தாண்டாரே!எதுவாயினும் தயங்காமல் சொல்லுங்கள்!” என்றார் மன்னர்.சம்பந்தாண்டான் தொடர்ந்தான்: ”மன்னா! சமீப காலமாகத் தங்களுடன் நட்புறவாடி வரும்,அருணகிரியைப் பற்றி தங்களது அபிப்ராயம்?”
அந்தப் பெயரைக் கேட்டதும் மன்னனின் முகத்தில் பிரகாசம்!
Read 19 tweets
28 Feb
அவருடைய இயற்பெயர் ஸ்ரீனிவாச நாயக்.கி.பி.1480லேயே 9கோடி சொத்திற்கு அதிபதி.ஆனால் ஒரு மகாகருமி.நாயக் 18வயதில், கடவுள் பக்தையான,தான-தர்மத்தில் சிறந்தவளான, சரஸ்வதி எனும் பெண்ணை மணந்தார்.அவர் வாழ்ந்த ஊரில் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் பாண்டுரங்கனாகக் காட்சியளித்தான்.
மக்கள் தெருவில் தினமும் பஜனை பாடுவார்கள்.நாயக் கண்டுகொள்ளமாட்டார்.பார்த்தான் பாண்டுரங்கன்.ஒரு முதிய ஏழை அந்தணன் உருவில்,ஏழு வயது சிறுவனோடு,நாயக்கின் கடைமுன் வந்து நின்றான் இறைவன்."ஐயா!தர்மப்பிரபுவே"
நாயக் அந்த அந்தணனை திரும்பிக்கூட பார்க்கவில்லை. விடுவானா இறைவன்?
திரும்பவும் கூப்பிட்டார்."டேய்!யாருடா நீ?"அதட்டினார் நாயக்.
"ஐயா நான் ஓர் ஏழை பிராமணன்.இவன் என் ஒரே மகன்.ஏழு வயது.பூநூல் போடவேண்டும்.நீங்கள் உதவி செய்தால் நடக்கும் பிரபு.ஏதாவது கொஞ்சம் பணம் கொடுங்கள் சாமி."
"போ போ வேறு எங்காவது பிச்சை எடு.என்னிடம் பணமே இல்லை"விரட்டினார் நாயக்.
Read 24 tweets
17 Feb
ரயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது.டிக்கெட் பரிசோதகரின் காலில் ஏதோ இடறியது. குனிந்து அதை எடுத்தார்.அது ஒரு பழைய மணி பர்ஸ்.ஓரமெல்லாம் ஜீரணம் ஆகி,மெருகு குலைந்திருந்தது.   பர்ஸைத் திறந்தார்.சில கசங்கிய நோட்டுகளும்,சில்லறைகளும் இருந்தன.அத்துடன் ஸ்ரீகிருஷ்ணரின் படம் ஒன்றும் இருந்தது.
பர்ஸைத் தலைக்கு மேலே பிடித்துக் காட்டிய பரிசோதகர்,இது யாருடையது?என்று குரலை உயர்த்திக்கேட்டார்.ஒரு முதியவர்,அது  என்னுடையது என்றார்.பர்ஸின் நிலையையும்,முதியவரின் வயதையும் கண்டு,ஜோடிப் பொருத்தம் பார்த்தே பர்ஸை தந்திருக்கலாம்.ஆனாலும் பரிசோதகர்,உம்முடையதுதான்  என்பதற்கு என்ன ஆதாரம்?
எனக் கேட்டார்.அதில் கிருஷ்ணர் படம் இருக்கும் என்றார் பெரியவர்."இதெல்லாம் ஒரு ஆதாரமா?யார் வேண்டுமானாலும் கிருஷ்ணர் படம் வைத்திருக்கலாமே". "ஐயா" என்று செருமியவாறு முதியவர் ஏதோ கதை சொல்வது போல் சொல்ல ஆரம்பித்தார். வண்டி வேகமெடுத்ததால் காற்று பெட்டியினுள் பரவ, இறுக்கம் விலகியது.
Read 12 tweets
16 Feb
காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகக்குலத்தை சேர்த்த செல்வந்தன் ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்துவந்தார்.தம்பதிகள் அறிவிலும் அறத்திலும் சிறந்தவர்களாக விளங்கினர்.காலப்போக்கில் வணிகன் ஒரு பெண் குழந்தையைப் பெற்றான். அக்குழந்தை சீராட்டி வளர்க்கப்பட்டு,உரிய காலத்தில் மணப்பருவத்தை அடைந்தது.
வணிகன் மதுரையில் வாழ்ந்து வந்த,ஏற்கனவே திருமணமான தன் மருமகனுக்கே பெண்ணை கொடுக்கப் போவதாக உறவினர்களிடம் கூறிக்கொண்டிருந்தான்.சில நாட்கள் சென்றதும் வணிகனும், அவனது மனைவியும் இறந்துவிட்டனர்.இறந்தவருக்குச் செய்யவேண்டிய இறுதிக் கடன்களை செய்து முடித்த சுற்றத்தார்,
மதுரையில் உள்ள மருமகனுக்கு அச்செய்தியை ஓலை மூலம் தெரிவித்தனர்.அவ்வோலையில், “உன் மாமனும்,மாமியும் இறந்து விட்டனர்.உன் மாமனுக்கு நிறைய சொத்தும் ஒரு பெண்ணும் உண்டு.ஆதலால் நீ வந்து உன் மாமன் பெண்ணைத் திருமணம் செய்து செல்வாயாக"என்று எழுதியிருந்தனர்.
Read 25 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!