SOMASUNDARAPRABHU Profile picture
Jun 13, 2021 24 tweets 12 min read Read on X
அண்ணா அண்ணா அண்ணா...
அன்பின் அடையாளம் #அண்ணா

இந்த நிலத்தில் அண்ணா போல் வாழ்ந்த, சாமானியர்களின் ஒப்பற்ற தலைவன் எவருமில்லை என்று அவரது மரணத்தில் கூடிய மக்கள் கூட்டமே சான்றிளித்தது, மண்ணாங்கட்டிகளின் சான்று யாருக்கு வேண்டும்!?
வதந்திகள் அன்றே தவிடுபொடி ஆனது மக்கள் தீர்ப்பின் முன்.
திராவிட இயக்கத்தின் தீரர், அஞ்சா நெஞ்சன் அழகிரி உடல்நலம் குன்றியிருந்த பொழுது, அவருக்கு 100ரூபாய் பண அஞ்சல் அனுப்பிய சிட்டையைக் காட்டினால் தான் யாராக இருந்தாலும் சந்திப்பேன் என்றவர் அண்ணா.
1949ல் ஈட்டுத்தொகைக்காக உடன்பிறப்புகள் அனுப்பிய பணத்தை, திருப்பி அனுப்பி வைத்தவர் அண்ணா.
அஞ்சா நெஞ்சன் அழகிரியை இழந்த அவரது குடும்பதிற்கு, 1949ல் நாடகம் நடத்தி 5000ரூபாய் வழங்கியவர் அண்ணா.
#திராவிடநாடு பத்திரிகைக்கு நிதியளிக்கும்படி தோழர்களுக்குப் #பெரியார் விடுதலையில் அழைப்புவிடுக்க, தேவையான நிதி குவிந்திட, நிதி போதும் என்று பத்திரிகையில் தலையங்கம் எழுதியவர் #அண்ணா.
நாடகம் நடத்தி, காஞ்சி பச்சையப்பன் கல்லூரிக்கு 21000ரூ 1951ல் நிதி
புயல் நிவாரண நிதி 27000ரூ 53ல்
தியாகராயர் கல்லூரிக்கு நாடகம் நடத்தி நிதி
எதிர்க்கட்சியினர் தாக்குதலில் உயிரிழந்த தொண்டர் ஆறுமுகம் குடும்பத்திற்கு 1ஏக்கர் நிலம்
மேலும் இரு தொண்டர் குடும்பத்திற்கு வீடு மற்றும் நிலம்
குவிகின்ற நிதியைப் போதுமென அறிவித்த பெருந்தகை.
தான் எழுதிய கதைகளை, நாடகமாக்கி நிதி திரட்டி, பிறர் துயர் துடைக்க வழங்கியவர்.
இவர் அறிவிற்கு, உயர் பணிகளில் அமர்ந்து, ஒய்யார வாழ்வு வாழும் வாய்ப்பிருந்தும் பொதுப்பணியைத் தேர்ந்தெடுத்து வாழ்கிறார் என்று பெரியாரால் புகழப்பட்டவர் #அண்ணா
வழக்கு யாது!? பாரதிதாசன் அறிஞர் அண்ணாவை இழிவாகப் பேசியது. கட்டுரை இடம்பெற்ற தமிழ் இந்துவில் பாரதிதாசனின் சாதிய நோக்கை இழித்துப் பேசும் கட்டுறையில், போகிற போக்கில் அண்ணா மீதும் சேற்றை வாரி இறைத்திருக்கிறானுக. அது தான் பாரதிதாசன் முரணின் மொத்த உருவமாகக் காட்டியாயிற்றே, பிறகென்ன!?
பாரதிதாசனை அன்றே ஊகித்த பெரியார், "ரெண்டு பாட்டு எழுதீட்டா, இவனெல்லாம் புலவனா?, இந்த அண்ணாதுரைக்கு என்ன ஆச்சு?" என்றார். சோமசுந்தர பாரதியார் தலைமையில், கி.ஆ.பெ., மா.பொ.சி., எல்லோர் முன்னிலையில் அறிஞர் அண்ணா பாரதிதாசனுக்குப் பொற்கிழி வழங்கிய அந்த நிகழ்வில் கலந்துக்கல பெரியார்.
பாரதிதாசன் எது முதல் பிணக்கு கொண்டார்!? திமுகவின் புகழொளியில் 1954ல் புதுவை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்ற பின், திமுக 1957 பொதுத்தேர்தலில் போட்டியிட்டு 15தொகுதிகளில் வென்று 1958ல்மாநில கட்சி உரிமை பெற்ற பின்னர் தான் இந்த பொறாமைவேந்தனின் நா தடுமாறித் தடம்மாறத் தொடங்கியது.
கோவணத்தில் நாலு காசு கண்டது முதல், பெரியாரைச் சுற்றியிருந்த தளபதிகள் ஒவ்வொருவரிடமும் தூபம் போட்டுப் பெரியாரிடம் இருந்து, அவர்களைப் பிரிப்பைதையே நோக்கமாகக் கொண்டிருந்தவர் தான் இந்தப் பாவேந்தன். போட்டியும் பொறாமையும் குடிகொண்டு விட்டால், தன் வேட்டி அவிழ்வது கூடத் தெரியாது.
எப்பொழுது முதல் சிண்டு முடியும் வேலையைச் செய்து வந்தார் இந்த பா.தாசன், 1946ல் 25,000ரூ பொற்கிழி காசு கையில் கிடைத்தது முதல், பெரியாருடன் இருந்த அனைவரிடமும், குறிப்பாக அண்ணாவிடம், கா.அப்பாதுரையாரிடமும், "இந்தப் பணத்தைக் கொண்டு புதிய இயக்கம் துவங்கலாம் என்று தூபம் போட்டார் பா.தாசன்
கா.அப்பாதுரையார் பண்டிதமணி என்றழைக்கப்பட்ட பன்மொழி வித்தகர், தாழ்த்தப்பட்டோரும் இந்துக்கள் என்ற காந்தியின் பூனா ஒப்பந்தத்தை எதிர்த்து கடிதங்கள் எழுதியவர், 'தமிழன்' இதழிலும் தாழ்த்தப்பட்டோர் இந்துக்கள் என என்னுடன் பொது மேடையில் விவாதிக்கத் தயாரா என்று எழுதிய புரட்சியாளர்.
அண்ணா காலம் வரை அண்ணாவுடனும், பெரியார் காலம் வரை பெரியாருடனும் கொள்கைகளில் ஒன்றுபட்டு, அதன் பின்னரும் உறுதியாக இருந்த கா.அப்பாதுரையாரே தமிழ்தேசியமும் திராவிடமும் வெவ்வேறு அல்ல என்பதற்குச் சான்று. அவருக்கு உரிமை கொண்டாடும் நாம்தமிழர் தும்பிகளுக்கு இந்த வரலாறு எல்லாம் தெரியாது!!!
சரி, பொன்னப்பாவுக்கு #அண்ணா தம் தமக்கையின் மகளைக் கூட்டிக் கொடுத்தார் என்று நா கூசாமல் சொல்கிறானே இந்தப் பாவேந்தன், அந்தப் பொன்னப்பா தான் அண்ணாவின் அக்கா நாகம்மாவின் மகள் சுந்தரவள்ளியை மணந்து கொண்ட கணவர். பொன்னப்பாவும் திராவிட இயக்க சிந்தனையால் அண்ணாவுடன் இணைந்தவர் தான்.
இந்தப் பொன்னப்பாவின் இடத்தில் தான் திராவிடநாடு பத்திரிகை, பொன்னுசாமி முதலியாரிடம் ரூ500 கடனாகப் பெற்றுத் துவங்கப்பட்டது. வாய்க்கு வந்தபடி ஏசும் பேய்க்குப் பெயர் பாவேந்தன். தொத்தாவையும் விட்டுவைக்கவில்லை அவன். தொத்தா அண்ணாவின் சிற்றன்னை, அண்ணா அன்பின் வடிவானது அவர்களால் தான்.
தன் நகைகளை ஒவ்வொன்றாக விற்று அண்ணாவைப் படிக்க வைத்தவர் தொத்தா. அதனால் தான் தன் கடமையில் கண்ணாய் இருந்து படித்துக் கண்ணியம் காத்துக் கட்டுப்பாடோடு தன் கல்வியைக் கற்றார் அண்ணா. தொத்தாவின் அன்பும் பண்பும், திராவிட இயக்கத் தீரர்கள் அனைவரும் அறிந்தது, நாய்களின் சான்று தேவையில்லை.
அண்ணாவின் பண்பு, அண்ணா ஈவெகி சம்பத் நட்பில் விளங்கும், இருவரது நட்பும் துரியோதனன் கர்ணன் நட்பு போன்றது. ஆம், சுலோச்சனா அம்மையாரை அண்ணா தங்கையெனப் பாசமாக அழைத்ததும், இராணி அம்மையாரை சம்பத் அக்கா என்று அழைப்பதையும் அனைவரும் அறிவர். அண்ணாவைப் பார்க்காது சம்பத்தால் இருக்கவே முடியாது
அடிக்கடி ஈரோட்டிலிருந்து ஓடோடி வந்து விடுவார் சம்பத், அண்ணாவைக் காண. படிப்பை விடுத்து நாடகம் கூத்து எனத் திரிகிறானே அண்ணாதுரையோடு சேர்ந்து என்று பெரியாருக்குக் கோவம். இரண்டொரு நாட்களில் மீண்டும் ஈரோட்டிற்கே அனுப்பி வைத்து விடுவார் பெரியார். அதனையும் மீறி இருவரது நட்பும் மலர்ந்தது
சந்திரமோகன் (சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்) நாடகத்தில் சிவாஜியாக சம்பத்தை நடிக்க வைத்து அழகு பார்த்தவர் அண்ணா. சம்பத்தும் அருமையாக நடித்து அசத்துவார், பெரியார் தலைமையில் நாடகம் நடக்க, சம்பத்துக்குப் பதிலாக சிவாஜி பாத்திரம் ஏற்று நடித்தவர் தான் நடிகர் திலகம், காகபட்டராக அண்ணா.👇
திராவிட இயக்க உறவு என்பது தலைமுறைகள் கடந்தது இம்மண்ணில். இதனை அறியாதோர்க்கு அதன் வரலாறு தெரியாது, மண்ணாங்கட்டி உருட்டி வரலாறு என்பர். எனது தாய்க்கும் தாய்மாமனுக்கும் தமிழரசி(1949), வள்ளுவன்(1952) எனப் பெயர் சூட்டியவர் அண்ணா. மருமகளே மருமகனே என்று அன்போடு அழைத்தவர் அண்ணா.
1956 மாநில மாநாட்டில், தேர்தலில் போட்டியிடுவதென வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்த பொழுது, என் தாத்தாவை எம்.ஜி.ஆர். கட்டியணைத்து முத்தமிட்டார். 57,62,67 தேர்தல்களில் அண்ணாவின் இல்லத்திலேயே தங்கி தேர்தல் பணி செய்தார்கள் என் தாத்தாவும் பாட்டியும். அப்பொழுதே குடும்பக் கட்சி தான் திமுக
இராணி அம்மையாரை, அண்ணாவிற்கே தெரியாது முதன்முதலில் திமுக பொதுக்கூட்டத்திற்கு அழைத்துச் சென்றவர் எனது பாட்டி. சுயதம்பட்டத்திற்காக இதனைச் சொல்லவில்லை, அண்ணாவின் மாண்பை அருகிலிருந்து கண்டு உணர்ந்தவர்கள் என்பதனை தெளிவிக்கவே இவற்றைச் சொல்கிறேன். மூன்று தலைமுறைகளாக 1934முதல் ஒரே கொள்கை
தன்னுடைய வளர்ச்சியை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்பட்ட பாரதிதாசன், தன் நிலைப்பாட்டிலிருந்து மாறிக் கொண்டே இருந்தார். கவிஞர்கள் அப்படித்தான், நாம் அவர்கள் வசவுகளை சட்டை செய்யத் தேவையில்லை என்றார் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று சொன்ன கண்ணியம் மிகுந்த மாண்பின் மாண்பு #அண்ணா.
கொள்கைகளில் வலுவில்லாதார், சுயவளர்ச்சி வேட்கை கொண்டோர் செயற்பாட்டிற்கு, உளறல்களுக்கு பாவேந்தன் ஒரு உதாரணம். இவற்றை அண்ணாவும் அறிவார், வாழ்க வசவாளர்கள் என்றார்.
கலைஞர் பாவேந்தனின் பாடல்களை 90ல் நாட்டுடைமை ஆக்கினார், அவரது மகன் மன்னர்மன்னனுக்கு 99ல் திரு.வி.க. விருதளித்தார்.
அண்ணாவின் மருமகளின் கணவர் தான் பொன்னப்பா!
டி.என். இராமன் இசைவேளாளர், அண்ணா (நெசவாளர்) கைக்கோளர், பிறகெப்படி மேளமும் மேளமும் என்றான் பாவேந்தன்!?
அனைத்தும் கட்டுக்கதை
"வாழ்க வசவாளர்கள்"
வரலாறு அறிந்தோர் தன் குரல்வளையில் குத்திவிடுவர் என்றுணர்ந்து வாழட்டும் விசம் கக்கும் வசவாளர்கள்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SOMASUNDARAPRABHU

SOMASUNDARAPRABHU Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @praboo_mass

Mar 11, 2023
ஒத்த வீடியோ,
மொத்த ஆரிய திராவிடப் போரையும் பேசுது...

அது எப்படித் தமிழ்நாட்டுக்கும் இந்திய ஒன்றியத்திற்கும் நடந்த சண்டையா மாறியதுன்னு பேசுது...

கலகக்காரர்களான #பெரியார் #அண்ணா #கலைஞர் 🔥 போன்ற கழகக்காரர்கள் எப்படி சண்ட செஞ்சாங்கன்னு பேசுது...👇

(ஐடியா இல்லாத ஐ.டி.விங்🤦‍♂️)
1/7
தாடிக்காரன ஏன் தண்டல்காரனப் பார்க்கிற மாதிரிப் பார்க்கிறாங்க இந்தத் தமிழ்நாட்டு மக்கள்!?
#GoBackModi
எப்படி இவ்வளவு தெளிவாக, பிரிவினைக்கு எதிராக இருக்கிறார்கள், இந்தத் தமிழ்நாட்டு மக்கள்!?👇
2/7
ஆங்கிலேயனுக்கு ஆரம்பத்தில் துணையிருந்த ஆரியம் அனைத்து அதிகாரங்களையும் கைப்பற்றி, மண்ணின் மைந்தர்களை எப்படி எப்படியெல்லாம் ஒடுக்கினர்!!!

அயோத்திதாசர்🔥 எனும் முதல் கலகக்காரர் துவக்கி வைத்த போர்!!!
ஆலய நுழைவுப் போராட்டம்!!!👇

நீதிக்கட்சியின் துவக்கம்🔥
3/7
Read 7 tweets
Mar 10, 2023
தனக்கு வாக்களிக்க வருகிறவர்களையே வடிகட்டும் அரசியல் செய்யும் #சீமான், பெரும்பாலும் சிறுபான்மையினருக்கு எதிராகவும், சமயத்தில் பெரும்பான்மையினருக்கே எதிராகவும் செயல்படும் வரை டெபாசிட்டுக்கே முக்கிக்கிட்டு தான் இருக்கணும்.
இவனை எதிரியாகக் கருதுவதும், தலைவனாகக் கொள்வதும் பெரும் மடைமை
தமிழ்நாட்டில் வலிமையாக இருந்த காங்கிரசை, ஒன்றிணைக்கும் திராவிட அரசியலைக் கொண்டே வீழ்த்த இயன்றது.
இந்திய அளவில் காங்கிரசு வலிமை இழந்து பல காலம் கழித்தே, பாஜகவின் பிரிவினைவாத அரசியலை வேரூன்ற வைக்க இயன்றது.

நேரு முன்வைத்த அரசியலை, காங்கிரசு கடைப்பிடித்தாலே பாஜக காணாமல் போகும்.
ஒன்றிணைக்கும் அரசியலின் வலிமை, பிரிவினைவாத அரசியலுக்குக் கிடையாது, உலகளவில் எங்குமே அது நிலைத்தது கிடையாது.

திராவிடம் எனும் பொதுவுடைமைத் தத்துவத்தை எவ்வளவு நீர்த்துப் போக விடுகிறோமோ, அவ்வளவு வாய்ப்பை நாம் பிரிவினைவாத அரசியலுக்கு அளிக்கிறோம் என்பதை நினைவில் கொள்க @CMOTamilnadu
👇
Read 4 tweets
Feb 28, 2023
#புலிகள்_கொலை_பாதகர்கள்
ஈவு இரக்கமற்ற கூட்டம் விடுதலைப் புலிகள், சக போராளிகள், சக புலிகள், சக தமிழ் இசுலாமியர்கள், சக உயிர்கள் எதையுமே உயிர்களாக மதிக்காத வெறி பிடித்த கூட்டம் விடுதலைப் புலிகள்.
*கொடுமையான காணொளிகள், அப்பாவிகள் பலியாகாமல் உணரும் பொருட்டு பகிரப்படுகிறது🔞💣🔴
#புலிகள்_கொலை_பாதகர்கள்
வறுமையில் வாடும் குடும்பங்களிலிருந்து பிள்ளைகளை வாங்கிக் கொத்தடிமைகளாக வதைத்தெடுத்தனர்.
இதற்கு அனுமதிக்காத வடக்குக் கிழக்கு மக்கள் மிரட்டப்பட்டு வலுக்கட்டாயமாக பிள்ளைகளைக் கொடுக்க வைத்தனர்.
நீங்க உங்க பிள்ளைய கொடுப்பீங்களாடா போலித் தமிழ்தேசியத் தும்பிகளா?
#புலிகள்_கொலை_பாதகர்கள்
தமிழ் மக்களின் வீட்டு விலங்குகளைக் கூட விட்டு வைக்கவில்லை, ஆடு மாடு நாய் என எண்ணற்ற உயிர்களைப் பயிற்சி என்ற பெயரில் கொன்று குவித்தனர்.
இவர்களின் அதிகார போதைக்கு, சக போராளிகள், சக மக்கள், சக உயிர்கள் என்று அனைத்தையும் காவு வாங்கினர்.
உண்மை சுடும், சுட்டது!
Read 9 tweets
Oct 24, 2022
யார் அசுரர்கள்!?
அப்படி யாரும் இல்லை எனினும், புனையப்பட்ட கதையில் கூட வஞ்சிக்கப்பட்டவர்களே அசுரர்கள்.
பாற்கடலில் அமுது கடைய, ஐந்து தலை நாகத்தின் தலைப்பக்கம், விசுணு வஞ்சகத்தோடு அசுரர்களை நிறுத்த, நாகமோ விடம் கக்க, சிவன் அசுரர்களைக் காக்க விடம் உண்டானாம்.
சைவ வைணவச் சண்டை இது👊👇
ஆரிய சூத்திரச் சண்டை இதுன்னு மேம்போக்காப் படிச்சாக் கூட புரிந்து கொள்ளலாம். அதனால தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளா படிக்க விடல.
அசுரர்கள் சிவன்/ பிரம்மாவைத் தொழுதவர்களாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள், விசுணுவை அல்ல என்பதே சமய அரசியல் குப்பைகள் இவை என்பதற்குச் சான்றாகும்👇
மாறிக்கொண்டே இருக்கும் மனிதனின் குணங்களையும் முகங்களையும் நியாயப்படுத்தவும், ஒருவரை ஒருவர் ஏய்த்துப் பிழைக்கவும் உருவாக்கப்பட்டுக் கடைப்பிடிக்கப்பட்டுக் காக்கப்பட்டு வருவனவே சனாதனக் குப்பைகளும், அது கொண்டு வந்து திணித்த பண்டிகைகளும். இதற்கு ஆரிய சூத்திர வேறுபாடே கிடையாது👇
Read 5 tweets
Apr 30, 2021
திமுகவின் வெற்றி நாள் எது!?
மே2/21ஆ!?
அல்ல, அது வெற்றிக்கான நுழைவாயில் திறக்கப்படும் நாள், அவ்வளவு தான்.
உண்மையான வெற்றி நாள், கலைஞர் விட்டுச் சென்ற இடத்தில் துவங்கி, கலைஞரே தொட முடியாத சமூகநீதியின் உச்சத்தைத் தொடும் நாள் தான் அது.
அதிலே முதன்மையானது, சாதி ஒழிப்பாக இருக்கனும்👇
சாதியை ஒழிப்பது அவ்வளவு எளிதானதா!?
வேர் அறிந்து தூர் வாரினால் சாத்தியமாகும், எப்படி!?
சாதியைப் புகுத்த, புகுத்தியவன் பயன்படுத்திய இடத்திலிருந்து, புகுத்தியவனைக் கொஞ்சம் கொஞ்சமாக அப்புறப்படுத்த வேண்டும்.
அந்த இடம் தான் கோயில் கருவறை, அங்கே நுழைந்து தான் இங்கே சாதியை நுழைத்தான்👇
அங்கே (கருவறைக்குள்) அவன் நுழைந்ததால் தான் கடவுளின் தூதனாகத் தன்னைக் காட்டிக்கொள்ள முடிந்தது, நாம் அதற்குள் நுழைந்துவிடக் கூடாது என்று வர்ணம் பிரிக்க முடிந்தது, சாதி எனும் வன்மம் விதைக்க முடிந்தது.
அங்கிருந்து மொத்தமாக விரட்டியடித்தால் தான் சாதி மடியும், இந்தச் சதி உடையும்👇
Read 20 tweets
Nov 23, 2019
#சிறுநீரகக்_கல்
#பித்தப்பைக்_கல்
#சிறுநீர்க்குழாய்த்_தொற்று

இவற்றிலிருந்து
#ஒரே_நாளில்
#ஒரே_மருந்தில் தீர்வு

இந்தக் கற்கள் குறிப்பிட்ட உணவுமுறையால் வருகின்றது என்பதை விட, சரியான சிறுநீர்க் கழிவு வெளியேற்றம் இல்லாததால் ஏற்படுகிறது என்பதை நாம் உணர வேண்டும்.
என்ன செய்யனும்!?👇
சரியாக சிறுநீர்க் கழிவை நாம் வெளியேற்றாத போது, சிறுநீரில் இருக்கும் தாது உப்புக்கள் உள்ளேயே படிவதாலும், சிறுநீரின் அளவு குறுகி அமிலத்தன்மை அதிகமாவதாலும், கற்கள் உருவாகின்றன. முறையாக அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்களுக்கு, இந்த கற்களும் வராது, சிறுநீரகத் தொற்றுக் கிருமிகளும் வராது👇
அனைத்துக் கிருமிகளையும், கொன்று வெளியேற்றுவதில்லை நம் உடல்.
ஆம், சிறுநீரகத் தொற்றுக்குக் காரணம், வெளியே இருந்து பரவும் கிருமிகள் அல்ல. நமக்குள் நம்மால் அடக்கி வைக்கப்பட்ட சிறுநீரில் இருக்கும் கிருமிகள் உயிர்த்தெழுந்து இனப்பெருக்கம் செய்வதால் ஏற்படுவது என்பதை யாரும் உணர்வதில்லை👇
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(