மஹாராஷ்டிர மாநிலத்தில் பைதான் எனும் ஊரில் பாண்டுரங்கனின் பக்தரான ஏகநாதர் பிறந்தார்.அவருக்குத் திருமணமாகி ஒரு மகன் இருந்தான்.அவர் அடக்கம்,பொறுமை,மன்னிக்கும் சுபாவம்,கருணை வடிவுடன், கோபம் என்னும் குணத்தை வென்றிருந்தார்.
ஒருநாள் ஏழைப் பண்டிதன் ஒருவன்,தன் மகளுக்கு திருமணம் செய்யவேண்டி காசுக்காக ஊர்ஊராக அலைந்தான்.அப்போது ஏகநாதர் இருக்கும் ஊருக்கு வந்தான்.அந்த ஊர் பணக்காரனிடம் சென்று பணம் வேண்டினான்.அந்த பணக்காரனுக்கு ஏகநாதர் மீது பொறாமை,ஊரே அவரை புகழ்கிறதே என்று.அதனால் ஒரு திட்டம் தீட்டினான்.
பண்டிதனிடம்,"நீ போய் ஏகநாதனை கோபப்படுத்தி பொறுமையிழக்கச் செய்யவேண்டும்.அப்படிச் செய்தால் உன் மகள் திருமணத்தை நடத்துவதற்கு பணத்தை நானே தருகிறேன்" என்றான்.பணம் வரும் ஆசையில் பண்டிதன்,நேராக ஏகநாதர் வீட்டிற்குச் சென்றான்.அங்கே ஏகநாதர் தன்வீட்டு திண்ணையில் அமர்ந்துகொண்டு,
பாண்டுரங்கன் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தார்.அவன் நேராக இவர் அருகில் சென்று இவரை திட்ட ஆரம்பித்தான்.அவர் அதைப்பொருட்படுத்தாமல் அவனை வரவேற்று,வீட்டிற்குள் கூட்டிச்சென்று ஓர் மனையில் அமரவைத்து,என்ன வேண்டும் எனக்கேட்டார். அவன் விடாமல் அவர்மீது வசவு மழை பொழிந்தான்.
அவரை இழிவாகத் திட்டியபோதும்,அவர் அவனை எதிர்த்தோ, மறுப்பு தெரிவித்தோ, ஒருசொல் கூட சொல்லவேயில்லை. அவனுடைய ஏச்சு பேச்சுகள் தம்மை பாதிக்காதது போலவே இருந்தார்.திட்டும்போது நடுநடுவில்,அவரது கோபத்தைக் கிளற,அவர்மேல் பலமுறை காரி துப்பினான்.
ஒவ்வொரு முறையும் பொறுமையைக் கைவிடாது அவர் கோதாவரிக்குச் சென்று குளித்துத் தூய்மை பெற்றுவந்தார். அவன் பேசிபேசித் தளர்ந்துபோய் நின்றபோது, ஏகநாதர், “அய்யா! நீங்கள் மிகவும் சோர்ந்து போயிருக்கிறீர்கள்.மதிய உணவு நேரமிது. உங்களுக்காக என் மனைவி சுவைமிக்க உணவு சமைத்திருக்கிறாள்.
என்னுடன் அமர்ந்து உண்ணவாருங்கள்!” என்று அவன் கைகால்களை கழுவி சுத்தம்செய்து உண்ண அழைத்துச்சென்றார். அந்த மகானின் எதற்கும் கலங்காத சமநிலையான மனத்தை,அவனால் நம்பவே முடியவில்லை.எவ்வளவு முயன்றும் அவனால் அவர் கோபத்தை கிளற முடியவில்லை.தான் தோற்றுவிட்டோம் என உணர்ந்தான்.
ஏகநாதரின் மனைவி அவருக்கு ஏற்ற குணம் உடையவள். பொறுமை, பக்தி,ஞானம் உடைய குணவதி.அவள் அவனுக்கு உணவு படைக்க வந்தபோது,பண்டிதனுக்கு திடீரென ஒரு யோசனை உதித்தது. அவன் ஏகநாதரிடம் கோபத்தைக் கிளர,இறுதியாக ஒரு முயற்சி செய்து பார்த்தான். இலையில் அன்னமிட அவள் குனிந்து பரிமாறியபோது,
மனைவியின் முதுகின்மேல் எகிறிக் குதித்து, குதிரை ஓட்டுவது போல அமர்ந்தான்.இப்போது கோபத்தில் துள்ளி குதிக்கப் போகிறார் என நினைத்தான் அந்த பண்டிதன். அவள், கணவருக்கேற்ற மனைவியாயிற்றே! அமைதியான புன்னகையோடு அவள் குனிந்தபடியே இருந்தாள். அக்காட்சியைப் பார்த்த ஏகநாதரோ பொறுமையாக
மனைவியிடம்,"நிமிர்ந்து நிற்க முயலாதே.நீ நிமிர்ந்தால் உன் முதுகிலிருக்கும் நம் விருந்தினர் விழுந்துவிடுவார்” என்றார். அவளும் அதற்கு “எனக்குத் தெரியும் பிரபோ! நம் மகன் குழந்தையாக இருந்தபோது,இது போலதான் விளையாடுவான்.நான் மறக்கவில்லை.
நான் எப்பொழுதும் எப்படி அவனை விழாமல் தாங்கிப் பிடித்தேனோ, அதையே இப்போதும் செய்கிறேன்"என்றாள் அமைதியாக. பண்டிதனுக்கு நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் இருந்தது. தன்னுடைய இழிந்த பண்பினை நினைத்து பெரிதும் வெட்கித் தலை குனிந்தான். பணத்திற்காக தான் செய்து விட்டதன் தீச்செயலுக்கு தன்னையே
கடிந்துக்கொண்டான். நெடுஞ்சாண் கிடையாக அந்த மகான் தம்பதியரது கால்களில் வீழ்ந்து,தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். அவர்களோ நீ எங்களுக்கு தவறொன்றும் இழைக்கவில்லை எனக்கூறி, முதலில் சாப்பிட்டுவிட்டு பேசலாம் என்றனர். பிறகு ஏகநாதர் அவனிடம் ஏனப்பா இப்படி மனநிம்மதி இல்லாமல்
இருக்கிறாய் எனக்கேட்டார். அவன் தன் கதையைக் கூறினான்.பின் அவரது அடிகளில் பணிந்து, தன் பாவச் செயலுக்கு மன்னிக்கும்படியும் கேட்டான். தான் அவருக்கு இழைந்த தீங்கிற்கு மிகவும் நொந்து வருந்தினான்.
அப்பொழுது ஏகநாதர் அன்புபொங்க அவனிடம் கூறினார், "இதுதான் விஷயம் என்று முன்னமே என்னிடம் சொல்லியிருந்தால், நீ வந்த உடனேயே நான் கோபப்பட்டிருப்பேனே. நீயும் பணக்காரனிடமிருந்து திருமணத்திற்கு ஏராளமான பணத்தை ஆரம்பத்திலேயே வாங்கிக் கொண்டிருக்கலாமே" எனக் கூறினார்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒருநாள் இரவு நெருங்கும் வேளையில் வயதான பெண்மணி ஒருவர், கார் அருகில் வெகு நேரமாக நிற்பதை ஒருவர் கவனித்தார். ரோட்டில் செல்லும் வாகனங்களை அந்தப் பெண்மணி கைக்காட்டி நிறுத்தப்பார்த்தார். ஆனால் எந்த வாகனமும் நிற்கவில்லை.
அந்த நபர் அருகில் சென்று என்னப் பிரச்சனை என்று அந்த பெண்மணியிடம் கேட்டார்.கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டது என்றார் அந்த பெண்மணி."என் பெயர் தயாளன்.நீங்கள் காரில் உட்காருங்கள், நான் டயர் மாற்றிக் கொடுக்கிறேன் எனக்கூறி, சிறிது நேரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு டயரை மாத்தினார்.
அந்தப் பெண்மணி,"உங்கள் உதவிக்கு நான் ஏதாவது பணம் தர வேண்டும்"என்றார்.அதற்கு தயாளன்,"நான் சிறியதாக ஒரு டீக்கடை நடத்தி வருகிறேன். நீங்கள் பணம் எதுவும் தரவேண்டாம்.நீங்கள் கஷ்டப்படும் நேரத்தில் என்னாலான உதவி செய்தேன் அவ்வளவே. அப்படியே நீங்கள் பண உதவி செய்யவேண்டும் என்று எண்ணினால்,
ஒரு ஏழைச்சிறுவன் வீடுவீடாகச் சென்று,தேவைப்பட்ட பொருள்களை, பலருக்கும் விற்று சிறிது காசு சம்பாதித்தான்.கிடைக்கும் காசை வைத்து தன் பள்ளிக்கூட கட்டணத்தைக் கட்டினான். புத்தகங்களையும் தானே வாங்கினான்.ஒருநாள் விற்றுக்கொண்டிருக்கும்போது, சிறுவனுக்கு அதீத பசி எடுத்தது.ஆனால் அவன் கையிலோ
சிறிது காசே இருந்தது. தான் செல்லவிருக்கும் அடுத்த வீட்டில் அந்த காசைக்கொடுத்து ஏதேனும் வாங்கி உண்ணலாம் என்று முடிவு செய்தான்.ஆனால் அடுத்த வீட்டின் கதவைத் தட்டியபோது வெளியே வந்த அழகிய இளம் பெண்ணைப் பார்த்து அவன் தயங்கினான். தான் கேட்க நினைத்ததைக் கேட்க அவனால் முடியவில்லை.
ஆனால் பசியோ பசி.ஒரு டம்ளர் தண்ணீர் தருமாறு கேட்டான் அவன்.
அந்த இளம்பெண் அவன் முகம் வாடியிருப்பதைப் பார்த்து அவன் அளவற்ற பசியால் துடிக்கிறான் என்பதை உணர்ந்தாள்.ஆகவே தண்ணீருக்கு பதிலாக ஒரு பெரிய டம்ளரில் பாலைக் கொண்டுவந்து கொடுத்தாள்.மெதுவாக அதைக் குடித்த அந்தச் சிறுவன்,
ஒரு இளைஞன் காட்டுவழியே நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்கு பசியெடுத்தது.ஒரு மரத்தின் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான்.மரத்தின் மேல் சரசரவென்று ஏறினான்.மிக கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன.அவற்றை எட்டிப் பறிக்க,கிளையின் மேல் நகர்ந்து சென்றபோது
அவனது பாரம் தாங்காமல் அந்தக் கிளை முறிந்தது. சட்டென்று சுதாரித்த அவன்,கீழே இருந்த ஒரு கிளையை பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான்.குனிந்து பார்த்தான்.தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று
திரும்பத் திரும்ப கத்த ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்கும் நிலை வந்துவிட்டது. தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனை பார்த்தார். அவன்மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார்.
ஒருநாள் ஒரு மரத்தில் குடியிருந்த குரங்குகளெல்லாம் கூடி, வாரம் இருமுறை உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தன. எனவே,தலைவர் குரங்கிடம் போய்,மற்ற குரங்குகள் எல்லாம் விஷயத்தைச் சொன்னவுடன்,தலைவர் குரங்கும் ”சரி அவ்வாறே செய்துவிடுவோம்.
அதற்கு முன்னால் உண்ணாவிரதம் முடிந்தவுடன் உண்ணுவதற்கான பழங்களைச் சேகரித்து வைத்துவிடுங்கள்.ஏனெனில் விரதம் முடியும்பொழுது பசியாக இருக்போம்.எனவே, அப்பொழுது போய் பழங்களைத் தேடிக் கொண்டிருக்க முடியாது” என்று அறிவுரை சொன்னது.
அதை ஆமோதித்த மற்ற குரங்குகளும்,அருகில் இருந்த தோட்டத்தில் இருந்து நிறைய வாழைப்பழங்களைக் கொண்டுவந்து தலைவர் முன் வைத்தன.உடனே தலைவர், ”சரி உண்ணாவிரதத்தை ஆரம்பித்து விடுவோம்” என்றார். அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒரு மூத்த அனுபவமுள்ள குரங்கு, ”தலைவரே! விரதம் துவங்குவதற்கு முன்,
போர் இனி தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. பாண்டவர்களை ஒழித்தால் தான் நிம்மதியாக அரசாள முடியும் என்ற முடிவுக்கு துரியோதனன் வந்தான். போர் ஆயத்தங்கள் முடிகின்ற நிலை."ஹூம்,அவர்களிடம் வெறும் ஏழு அக்ஷௌஹிணி சேனை மட்டும்தான். என்னிடமோ பதினோரு அக்ஷௌஹிணி சேனை.
ஒருவனை ஒருவன் வீழ்த்தினால் கூட மிச்ச்ம் நாலு மிஞ்சும் வெற்றியுடன். குடும்பத்தில் பெரியவரான பீஷ்மர் என் பக்கம். அனைவருக்கும் குருவான துரோணர் என் பக்கம். ஆசார்யர் கிருபர் என் பக்கம்.அருமைத்தம்பிகள்,மாமா சகுனி,ஏராளமான ராஜாக்கள்! அட இது போதாதா என் வெற்றிக்கு” என எண்ணி மகிழ்ந்தான்
துரியோதனன். ஆனால் அவனுக்கு ஒரே ஒரு உறுத்தல்.'அந்த மாயக் கண்ணன் அவர்கள் பக்கம்.அவன் ஏதாவது மாயாஜாலம் செய்து விடுவானோ',துரியோதனனுக்கு இந்த பயம் சற்று இருந்தது. அவனுக்கு பதில் தெரியவேண்டிய கேள்வி ஒன்றே ஒன்றுதான்.
'வெற்றி உறுதி என்ற போதிலும் கூட போர் எப்போது முடியும்,
விருந்தினர்களை உபசரிப்பது என்பது நமது பண்பாடு."விவேக சிந்தாமணி"சொல்லித் தருகிறது,நாம் விருந்தினர்களை எப்படி உபசரிக்க வேண்டும் என்று.
வியத்தல்:
விருந்தினரை ஆவலோடு,ஆச்சரியத்தோடு வியந்து நோக்க வேண்டும்.எங்களையும் ஒரு பொருட்டாக மதித்து வந்தீர்களே.அதுவே பெரிய சந்தோஷம் எனக்கூறுதல்.
நன்மொழி உரைத்தல்:
நல்ல வார்த்தைகளை இனிமையாகச் சொல்லவேண்டும்.
வீட்டில் அனைவரும் நலமா?உங்கள் உடம்பு நலமா?என விசாரித்தல்
திருந்துற நோக்கல்:
நன்மொழி உரைக்கும்பொழுது,கனிவான அன்பான பார்வை அவர்கள் முகத்தின்மேல் இருக்க வேண்டும். விதியே என சொல்லக்கூடாது.
அவர்களை நன்றாகப் பார்க்கவேண்டும்.