கிரேக்க புராணங்களில் வரும் Narcissus ஒரு வேட்டைக்காரன், நதி கடவுள் Cephissus மற்றும் வனதேவதை Liriope ஆகியோரின் மகன். மிகவும் அழகான Narcissus ஐ, பலர் காதலித்தனர். இருப்பினும், Narcissus எல்லோர் மீதும் வெறுப்பையும் அவமதிப்பையும் மட்டுமே காட்டினான்.
ஒரு நாள், Narcissus காடுகளில் வேட்டையாடுகையில், மலைக்காட்டு தேவதை Echo அவனை பார்த்தாள், உடனடியாக Narcissus மீது echo காதலில் விழுந்தாள். Narcissus எங்கு சென்றாலும் echo அவனுக்கு தெரியாமல் பின்தொடர்ந்து சென்றாள்.
யாரோ தன்னை பின்தொடர்வதை Narcissus உணர்ந்த போது எக்கோ தன்னை Narcissus க்கு வெளிப்படுத்தி Narcissus ஐ காதலிப்பதாக சொல்லி அவனை அணைக்க முயன்றாள். ஆனால், அவன் அவளைத் கீழே தள்ளி, அவளை அவமதித்துவிட்டு சென்றான்.
எக்கோ , விரக்தியில், தன் வாழ்நாள் முழுவதும் காடுகளிலும் மலையிலும் சுற்றித் திரிந்தாள், அவளிடம் எஞ்சியிருப்பது அவளது எதிரொலி மட்டுமே .

பழிவாங்கும் தெய்வமான Nemesis நடந்ததை கண்டு கோபமுற்று Narcissus ஐ தண்டிக்க முடிவு செய்தாள். Nemesis அவனை ஒரு குளத்திற்கு அழைத்துச் சென்றாள்;
அங்கே, Narcissus தண்ணீரில் தன் பிரதிபலிப்பைக் கண்டான், தனது பிரதிபலிப்பை பார்த்து அது தான் என்று உணராமல் அதைக் காதலித்தான். ஆரம்பத்தில் அது ஒரு பிரதிபலிப்பு என்பதை உணரவில்லை, அதைப் புரிந்து கொண்டபோது, தனது காதல் கைக்கூடாது என்று அதே தண்ணீரில் விழுந்து தற்கொலை செய்து கொண்டான்.
புராணத்தின் படி, Narcissus இன்னும் பாதாள உலகில் Styx நீரில் தன் உருவத்தை பார்த்து தன்னையே காதலித்து கொண்டு இருக்கிறான்.

Narcissistic personality disorder, என்கிற ஆளுமை கோளாறின் பெயர் காரணம் Narcissus கதை. இந்த மனக்கோளாறு கொண்டவர்கள் narcissist என்று அழைக்கப்படுகிறார்கள்.
இவர்கள் Narcissus ஐ போல தன்னையே காதலிப்பவர்கள். தான் என்ற பெருமை, அகம்பாவம் கொண்டவர்கள், தன்னை சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் தனக்கு சேவகம் செய்யவே அல்லது தனது துதி பாடவே பிறந்தவர்கள் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
நாசீசிஸ்டுகள் தாங்கள் எல்லோரையும் விட சிறந்தவர்கள் என்று நம்புகிறார்கள், மேலும் அதற்கான அங்கீகாரத்தையும் எதிர்பார்க்கிறார்கள். ஒரு சிறிய விமர்சனத்தை கூட அவர்களால் தாங்கி கொள்ள முடியாது. எல்லாவற்றையும் தனிப்பட்ட தாக்குதலாக எடுத்து கொள்வார்கள்.
இத்தகைய narcissist கள் நம்மை சுற்றி நிறைய இருக்கிறார்கள் அவர்களை அடையாளம் கண்டு விலகி இருத்தல் நமது மனநலனுக்கு நன்று.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Swathika

Swathika Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @swathikasarah

31 Jul
thread 3
லிலித் (Lilith):

லிலித் யூத நாட்டுப்புற கதைகளில் வரும் மிகவும் சர்ச்சைக்குரிய பெண். Torah (Jewish bible) வின் படைப்புக் கதையில் லிலித்தின் பெயர் சேர்க்கப்படவில்லை ஆனால் அவள் பல midrashic  நூல்களில் (புனித நூல்களுக்கு அர்த்தங்களும் விளக்கங்களும் குடுக்கும் நூல்கள்) Image
தோன்றுகிறாள். யூத அறிஞர்கள், பெண்ணியவாதிகள் இடையே அவளுடைய அடையாளங்கள், வரலாறு மற்றும் இலக்கியங்கள் விவாதிக்கப்படுகின்றன.

லிலித்துக்கு பல தோற்றக் கதைகள் உள்ளன, ஆனால் மிகவும் பிரபலமானது லிலித் ஆதாமின் முதல் மனைவி என்பது.
கதையின் படி, லிலித் கடவுளால் மண்ணிலிருந்து (ஆதாமை போலவே) உருவாக்கப்படுகிறாள். ஆதாம் லிலித் மேல் ஆதிக்கம் செலுத்த முயன்றதாகவும், அதற்கு லிலித் மறுத்ததாகவும் கதை சொல்கிறது.
Read 16 tweets
30 Jul
முதல் மனிதன் உருவான கதை:
(பைபிள்/குரான்/தோரா)

கடவுள் பூமியிலிருந்து மண்ணை எடுத்து மனிதனை உருவாக்கினார். அவன் மூக்கில் தன் உயிர் மூச்சினை கடவுள் ஊதினார். அதனால் மனிதன் உயிர் பெற்றான்.

இது ஒரு simple concept தான். அந்த காலத்துல மண்ணுல பொம்மை செஞ்சு பார்த்து இருக்காங்க.
மனிதனும் உயிர் இல்லாமல் போனால் வெறும் பொம்மை மாதிரி தான் இருக்கான். உடலும் விரைத்து விடும். இப்போ உயிருள்ள மனிதனுக்கும் உயிரற்ற மனிதனுக்கும் எளிதில் காணக்கூடிய ஒரு வித்தியாசம் என்ன? மூச்சு. உயிருள்ள மனிதன் மூச்சு விடுகிறான். உயிரற்ற மனிதன் மூச்சு விடுவதில்லை.
அப்போ அந்த காற்று தான் உயிர் அப்படின்றது ஒரு எளிய புரிதல். அந்த கால மனித அறிவுக்கு உண்டான புரிதல். அந்த புரிதல்ல விளைந்த கதை தான் இது.

எப்படி இந்த வெள்ள கதையை கொஞ்சம் பட்டிங் டிங்கரிங் பண்ணி உலகம் முழுக்க சொல்றங்களோ அதே போல தான் இந்த மண்ணில் இருந்து மனிதனை உருவாக்கிய கதையும்
Read 16 tweets
29 Jul
40 எழுத்தாளர்களால், 3 வெவ்வேறு மொழிகளில், 3 கண்டங்களில், 1600 ஆண்டுகளாக எழுதப்பட்ட 66 கதைகள் கொண்ட Bible ஐ பற்றி முதல் thread.

முதல் கதை ஆதியாகமம். இது யூதர்களின் புனித புத்தகமான Torah விலும், இஸ்லாமியர்களின் புனித புத்தகமான Qur'an னிலும் இடம்பெற்று இருக்கிறது.
இதை எழுதியவர் மோசஸ் (இறை தூதர்) என்று நம்பப்படுகிறது. ஆனால் எழுதப்பட்டு இருக்கும் மொழி நடை மோசஸ் காலத்திற்கு மிகவும் பின்தங்கியது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். அதாவது பைபிள் இக்காலத்து ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருக்கிறது என்று வைத்து கொண்டால்,
மோசஸ் ஷேக்ஸ்பியர் காலத்தை சேர்ந்தவர்.

கிறிஸ்து பிறந்தது முதலாம் நூற்றாண்டு என்று வைத்து கொண்டும் பைபிளில் ஓவ்வொருவருக்கும் குடுக்கப்பட்டு உள்ள வயதை கொண்டும் கணக்கிட்டால் ஆதியாகமம் புத்தகத்தில் உள்ள சம்பவங்கள் கிமு 4000 ஆண்டில் நடகின்றன.
Read 15 tweets
24 Jul
Disclaimer: மனம் புண்படும் வாய்புள்ளவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம். 🙏🏻

பைபிள் லயே கொஞ்சம் soft ஆனா ஆளுண்ணு பாத்திங்கன்னா அது நம்ம Isaac தான்.

Isaac Rebekah கல்யாணம் முழுக்க முழுக்க பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கல்யாணம் தான்.
ஏன் நம்ம ஈசாக் லவ் பண்ணல அப்படினு ஆராய்ச்சி பண்ணேன்.🤔

ஈசாக் ஒரு நல்ல பையன், கீழ்ப்படிதல் மற்றும் பெற்றோருக்கு அடிபணிந்தவர். எந்த அளவுக்கு அடிபணிந்தவர் அப்படின்னா அப்பா உன்னை பலியிட போறேன் என்று சொல்லி கழுத்து மேல கத்தியை வைக்கும்போது கூட அமைதியா இருக்கிற அளவுக்கு அடிபணிந்தவர்.
இல்ல பயம் அப்படினு கூட இருக்கலாம். ஏன்னா இதே அப்பா தான் அண்ணா இஸ்மாயீல் and அவங்க அம்மா Hager அ கொண்டு போய் நடு பாலைவனத்தில் விட்டுவிட்டு வந்தவர்.😦 அதனால் பயமா கூட இருக்கலாம்.

சில version ல Abraham Isaac அ கொன்று விட்டதாகவும் பின் கடவுள் அவனை உயிர்த்தெழ செய்ததாகவும் சொல்றாங்க.
Read 16 tweets
24 Jul
Thread (Part 3)

Mel Gibson ஒரு தீவிர யூத வெறுப்பாளர். Winona Ryder ஐ ஒருமுறை இவர் oven dodger (இது ஒரு மோசமான  சொல். இரண்டாம் உலகப் போரின் போது நாஜி மரண முகாம்களில் யூத கைதிகள் படுகொலை செய்யப்பட்ட விதத்தை கேலியாக குறிக்கிறது.) என்று அழைத்ததாக புகார் எழும்பியது.
இது மட்டுமல்ல இது போல பல பேர் அவர் மேல் புகார் அளித்து இருக்கின்றனர்.
ஒருமுறை குடிபோதையில் ஒரு காவலரை இது போன்ற வார்த்தைகளில் திட்டியத்திற்கு மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.
அவருடைய The Passion of the Christ படமும் கூட பல விமர்சனங்களை கொண்டது தான்.
யூதர்களை கோரமான, கொக்கி மூக்குடைய பரிசேயர்களாக சித்தரித்து இருக்கிறார் என்றும், யூத எதிர்ப்பு stereotype கள் ஆழமாக வேரூன்றியுள்ளது என்றும் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
Read 11 tweets
24 Jul
Thread (Part 2)

Mel Gibson சிறுவயதில் ஒரு கத்தோலிக்க உயர்நிலைப்பள்ளி மாணவராக இருந்தார், சமையல்காரர் அல்லது ஒரு பத்திரிகையாளராக ஆவதுதான் அவர் சிறுவயது லட்சியங்களாக இருந்தன. Mad Max திரைப்படத்தில் நடிக்கும் முன்னர் நிறைய சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.
சதுரங்க வேட்டை படத்துல "நாம சொல்ற பொய்ல கொஞ்சம் உண்மையும் கலந்து இருக்கணும் அப்போதான் மக்கள் நம்புவாங்க" அப்படினு ஒரு வசனம் வரும். அது போல இந்த கம்பி கட்டுன கதையிலும் சில உண்மைகள் இருக்கு. அவங்க அப்பா Mel Gibson 12 வயதாக இருந்தபோது தனது குடும்பத்தை நியூயார்க்கில் இருந்து
ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு மாற்றினார். Mad Max audition க்கு முந்தைய நாள் இரவு, ஒரு சண்டையில் அவரது முகம் நன்கு அடிபட்டது. பின்னர் அவர் Mad Max audition க்கு காயம்பட்ட, வீங்கிய, முகத்துடன் சென்றார். சிலநாட்களில் பழைய நிலைக்கு அவரது முகம் திரும்பிவிட்டது.
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(