நானும் நீயும் 18 வயதில் வீட்டிலிருந்து வெளியே வந்தோம்.

நீ JEE பரிட்சையில் வெற்றி பெற்றாய். நான் ராணுவத்தில் சேர்வதற்கு பரிட்சையில் வெற்றி பெற்றேன்.

நீ Indian Institute of Technology(IIT) யில் படிக்க சென்றாய். நான் National Defence Academy (NDA) வில் பயிற்சிக்கு சென்றேன்.
உனக்கு பொறியியல் வல்லுனன் ஆவதற்கு பட்டம் கிடைத்தது. எனக்கு மிகவும் கடினமான பயிற்சி கிடைத்தது.

உன்னுடைய நாள் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிகிறது. என்னுடைய நாள் காலை 4 மணிக்கு துவங்கும். இரவு 9 மணிக்கு முடியும். பல நாட்கள் இரவிலும் பயிற்சி தொடரும்.
உனக்கு படிப்பு முடிந்தவுடன் பட்டமளிப்பு விழா நடந்தது. எனக்கு பயிற்சி முடிந்தவுடன் தேர்வு பெற்றோர் வழியனுப்பு பரேட் (Passing Out Parade) நடந்தது.

உனக்கு வேலை கிடைத்தது. எனக்கு வாழ்க்கை முறை கிடைத்தது.உனக்கு உன் பெற்றோர்களை பார்க்க அடிக்கடி வாய்ப்பு கிடைத்தது.
எனக்கு பெற்றோர்களை எப்போது பார்ப்போம் என்ற ஏக்கம் கிடைத்தது.

நீ பண்டிகைகளை உறவினர்களோடு வண்ண தீபங்களோடு உல்லாசமாக கொண்டாடினாய். நான் பல பண்டிகைகளை சக வீரர்களுடன் பதுங்கு குழியின் இருட்டில் கொண்டாடினேன்.

நம் இருவருக்கும் திருமணம் நடந்தது.
உன் மனைவி தினமும் உன்னை பார்த்தாள் ஆசையுடன்.

என் மனைவி நான் உயிரோடு இருக்க வேண்டுமே என்று தினம் தினம் ஆசைப்பட்டாள். நீ வேலை நிமித்தமாக பல இடங்களுக்கு அனுப்பப்பட்டாய். நான் நாட்டின் பாதுகாப்புக்காக பல எல்லைக்களுக்கு அனுப்பப்பட்டேன்.

நாம் இருவருமே வீடு திரும்பினோம்.
நம் மனைவிகளால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.

நீ உன் மனைவியின் கண்ணீரை உன்னால் துடைக்க முடிந்தது. என்னால் என் மனைவியின் கண்ணீரை துடைக்க முடியவில்லை.

நீ உன் மனைவியை இறுக அணைத்துக்கொள்ளமுடிந்தது. என்னால் என் மனைவியை அணைத்துக் கொள்ள முடியவில்லை.
காரணம், நான் என் நெஞ்சுர மார்பில் பதக்கங்களை அணிந்து சவப்பெட்டியில் மிடுக்காகப் படுத்திருந்தேன். பாரத தாயின் மூவர்ண கொடியால் போர்த்தப்பட்டு,

நாம் இருவருமே 18 வயதில் வீட்டை விட்டு சென்றோம் தான். என் வாழ்க்கை முடிந்தது.
உன் வாழ்க்கை தொடர, என் குறுகிய வாழ்க்கையில் இந்திய ராணுவம் தந்த கல்வியை உன்னால் வாழ்நாளில் கற்க முடியாமல் போகலாம்.

நான் பயின்ற பாடங்கள், சிங்கம் போல தைரியமாகவும் புறா போல் மென்மையாகவும் இருப்பது எப்படி என்று.
ஒரு சாதுவை போல் அமைதியாகவும் தேசத்தை காக்க பயமறியா வீரனாகவும் இருப்பது எப்படி என்று.

தன்னை கண்ணியத்துடனும் தன்மானத்துடனும் காத்துக் கொள்வது எப்படி என்று.

வாழ்நாள் முழுவதும் அல்லது வீரமரணம் அடைந்து தாய் மண்ணில் சரியும் வரை உண்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பது எப்படி என்று.
இவைகள் தானே ஒவ்வொரு இந்திய ராணுவ வீரனின் சித்தாந்தமும் (Philosophy) நம்பிக்கை கட்டமைப்பும் (Belief System) சரிதானே.

ஆம் என் இனிய இராணுவ நண்பா. உன் வாழ்க்கையையே எங்களுகாக வாழ்ந்தாய். எங்களுக்காகவே இறந்தாய்.ஆனாலும் நண்பா மரித்தாலும் நீ இந்த பாரதத்திருநாட்டில் என்றும்வாழ்வாய்.
அழிவில்லா இந்திய ராணுவ வீரனே உனக்கு என்றென்றும் எங்கள் சல்யூட்.... ஜெய்ஹிந்த் 🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳 💪💪💪 நன்றி அண்ணா @Pvd5888

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கண்ணன்தேவன்

கண்ணன்தேவன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kannanthvan

20 Sep
#தென்னாடுடைய_சிவனே_போற்றி

உலகிலேயே மிகப்பழமையான திருவண்ணாமலை. 260 கோடி வயது.
திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள். அதாவது, இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள். இது உலகிலேயே மிகப்பழமையான மலை என்று, டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். முதல் கணக்கெடுப்பின் படி மலையின் உயரம் 2665 அடி.
ரொம்ப ரொம்ப சிறந்த மாதங்கள்: திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். ஆனால், ஐப்பசி, கார்த்திகை, மார்கழியில் எல்லா நாட்களும் வலம் வரலாம். இவை மிகச்சிறந்த மாதங்கள் என்கிறார்கள் பெரியவர்கள்.
Read 19 tweets
19 Sep
#குணசீலம்_பிரசன்ன
#வெங்கடாஜலபதி_பெருமாள்
#திருக்கோயில்

மனநோய் தீர்த்து, மன அமைதி தரும் குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில்.

திருச்சி- சேலம் ரோட்டில் திருச்சியில் இருந்து 24 கி.மீ தூரத்தில் குணசீலம் என்ற இடத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில். Image
மூலவர் பிரசன்ன வெங்கடாஜலபதி.
உற்சவர் ஸ்ரீனிவாசர்.

#தல_வரலாறு

திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசித்த குணசீலர் என்ற பக்தர், காவிரிக்கரையில் இருந்த தனது ஆஸ்ரமத்தில் பெருமாள் எழுந்தருள வேண்டுமென விரும்பினார். இதற்காக தவமிருக்கவே, சுவாமி அவருக்கு காட்சி கொடுத்தார். Image
குணசீலரின் வேண்டுதலின்படி இங்கேயே எழுந்தருளினார்.
குணசீலரின் பெயரால் அப்பகுதிக்கு குணசீலம் என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு சமயம் குணசீலரின் குரு தன்னுடன் இருக்கும்படி அவரை அழைத்தார். குணசீலர் தன் சீடன் ஒருவனிடம், பெருமாளை ஒப்படைத்து தினமும் பூஜை செய்யும்படி சொல்லிவிட்டு சென்று விட்டார் Image
Read 12 tweets
18 Sep
சனி பிரதோஷம்....(18/09/2021)

சனி பிரதோஷத்தன்று, மாலை வேளை சூரிய அஸ்தமனத்திற்கு முன் 24 நிமிடங்களும், சூரிய அஸ்தமனத்திற்கு பின் 24 நிமிடங்களு ம் உள்ள 48 நிமிடங்கள் பிரதோஷ காலமாகும் இந்த நேரத்தில் வழிபாடு செய்வது
சாலச்சிறந்தது.
விரத முறை :

வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று காலையில் எழுந்து நீராடி, சிவநாம சிந்தனையுடன் சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்க வேண்டும்.
பிரதோஷ நேரத்தில் தேவியும் சந்திரசேகரும் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதை வணங்க வேண்டும். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும்.

முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும்
Read 11 tweets
13 Sep
குறுக்குத்துறை முருகன் கோயில்..

முன்னூறு ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு முறை நீரில் மூழ்கி காணாமல் போகும் அதிசய முருகன் கோயில் பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம்.

தமிழகத்தில் எண்ணிலடங்கா கோயில்களில் சொல்லி தீராத பலப்பல அதிசயங்கள் நிகழ்ந்தவண்ணம்தான் இருக்கின்றன.
அவற்றில் ஒரு கோயில்தான் இந்த முருகன் கோயில். இங்கு ஆண்டுக்கு ஒருமுறை ஏற்படும் வெள்ளத்தை எதிர்த்து பல நூறு ஆண்டுகளாக இந்த கோயில் எந்தவித சேதமும் இன்றி நிலைத்து நிற்பதன் அதிசயத்தை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
நெல்லை மாவட்டம் பாபநாசம் தொடங்கி தூத்துக்குடி பகுதியில் உள்ள துணைக்காயம் எனும் இடம்வரை பயணிக்கிறது தாமிரபரணி ஆறு. இந்த ஆற்றுக்கு நடுவே கட்டப்பட்டுள்ள இந்த முருகன் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Read 10 tweets
12 Sep
தென்னாடுடையசிவனேபோறி
காஞ்சிபுரம்_மாவட்டத்திலுள்ள 108_சிவாலயங்கள்
இந்துக்களுக்கு வட நாட்டு புனித தலங்களில் பிரதானமானது காசி. அதை போலவே தென்னாட்டு புனித தலங்களில் பிரதானமானது காஞ்சிபுரம். சைவர் வைணவர், சமணர் மற்றும் பெளத்தர் போற்றும் ஒரே புனித தலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு 1008 சிவ தலங்களும், 108 வைணவ தலங்களும் இருந்ததாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இவற்றில் சொற்ப அளவிலானவை தான் இன்று உள்ளன என்றாலும், பல தொன்மையான, பாடல் பெற்ற கோயில்கள் இன்றும் உயிரோட்டத்துடன் உள்ளன. இவற்றில் 108 சிவாலயங்களை இங்கே காணலாம்
01. பிரம்மபுரீஸ்வரர்
02. வேதவநேஸ்வரர்
03. புன்னியகொட்டீஸ்வரர்
04. மணிகண்டீஸ்வரர்
05. மார்கண்டேஸ்வரர்
06. பணாமணிஸ்வரர்
07. கணிகண்டீஸ்வரர்
08. பணாமணிஸ்வரர்
09. அத்தீஸ்வரர்
10. குச்சிஸ்வரர்
11. காசிபேஸ்வரர்
12. ஆங்கீரீஸ்வரர்
13. சாந்தாலிஸ்வரர்
14. வசிட்டேஸ்வரர்
15. லட்சுமி ஈஸ்வரர்
Read 10 tweets
11 Sep
#ஓம்_சரவணபவ

ஈரோடு மாவட்டம் பச்சை மலை சுப்பிரமணிய சுவாமி ஆலயம்

மூலவர் : சுப்பிரமணிய சுவாமி
உற்சவர் :
அம்மன்/தாயார் : வள்ளி தெய்வயானை
தல விருட்சம் : கடம்பம்
தீர்த்தம் : சரவணதீர்த்தம்
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் Image
புராண பெயர் : -
ஊர் : பச்சைமலை
மாவட்டம் : ஈரோடு
மாநிலம் : தமிழ்நாடு

திருவிழா

பிரதோஷம் தேய்பிறை அஷ்டமி கிருத்திகை சஷ்டி, விசாகம், அமாவாசை ஆகிய நாட்களில் அந்தந்த தெய்வங்களுக்கு சிறப்பு. அபிஷேக ஆராதனைகள் நடை பெறுகின்றன. Image
இத்தலத்தில் முருகனுக்குகந்த விழாக்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. தை மற்றும் ஆடிக் கிருத்திகை நாட்களில் சத்ரு சம்ஹார ஹோமம், முருகனின் அவதார தினமான வைகாசி விசாகத்தன்று லட்சார்ச்சனை, பவுர்ணமி அன்று கல்யாண சுப்ரமணியசுவாமி தம்தேவியருடன் திருவீதி Image
Read 35 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(