#Some_Thoughts

ஒரு நட்சத்திர ஹோட்டலில் இரவு முழுக்கக் குடித்து, கும்மாளமிட்டு நிலைதடுமாறி இரண்டு பேர் துணையுடன் தவழ்ந்து காரில் ஏறிப்போகிற மனிதர், மறுநாள் காலை டாஸ்மாக் வாசலில் கால் இரண்டையும் பரப்பிக்கொண்டு தலைதொங்கி, போதையில் கிடக்கும் ஒருவரைப் பார்த்து

#KarthiWrites
'நாஸ்ட்டி பீப்பிள்’ என்கிறார். நேற்றுஇரவு அவரும் 'நாஸ்ட்டி பீப்பிள்’ ஆகத்தான் இருந்தார்!

சவாரிக்காக அல்லாடி நிற்கும் ஆட்டோ மீது சர்ரென்று லத்தியை வீசி, 'எடு வண்டியை’ என்றுஅதட்டும் போலீஸ்காரர், சிக்னல் முனை ஷாப்பிங் மால் வாசலில் காரை நிறுத்திவிட்டுப் போனவரிடம், 'ஏன் சார் இப்படிப்
பண்றீங்க?’ என்று குசலம் விசாரித்து, சலாம் அடித்து அனுப்பிவைக்கிறார். லத்தியால் ஆட்டோவில் அடித்ததைப் போல கார் டிக்கியில் அடிக்க அவருக்கு மனம் வருவது இல்லை.

'போன மாசம் வரை 550 ரூபாய்தான் டிக்கெட். இப்போ 750 ரூபாய் ஆக்கிட்டானுவலே!’ என்ற அங்கலாய்ப்புடன் ஏ.சி. பேருந்தில் ஏறுகிறவர்கள்
கோயம்பேட்டில் இறங்கும்போது, 'அண்ணே மொத சவாரிண்ணே.. 150ரூபாய் குடுங்க போதும்’ என்று இறைஞ்சும் ஆட்டோக்காரரிடம், 'ஏம்ப்பா.. இப்படிக் கொள்ளையடிக்கிறீங்க..’ என்று கரித்துக் கொட்டுவார்கள்.

இந்தவருடம் 5,000ரூபாயாவது சம்பள உயர்வு இருக்கும் என்ற நம்பிக்கை பொய்த்து, '4,000ரூபாய்தான்
அதிகமாக்கியுள்ளோம்’ என்று மேலதிகாரி சொல்லும்போது இடிந்துபோகும் நமக்கு, வேலைக்கார அம்மா 200ரூபாய் சம்பளத்தை ஏற்றிக் கேட்டால் கோபம் உள்ளுக்குள் உலை கலனாகக் கொதிக்கிறது!

சர்வீஸ் சென்டரில் காரை டெலிவரி எடுக்கும் போது, ஒருஅடி நீளத்துக்கு அவர்கள் தரும் பில்லில், ஒன்றிரண்டு விளக்கங்கள்
கேட்டுப் பணம் செலுத்தும் நாம், தெருமுனை மெக்கானிக்கிடம் 'அநியாயம் பண்றப்பா!’ என்று அலுத்துக்கொள்கிறோம்.

இல்லாதவர்களிடமும் இயலாதவர்களிடமும், அதிகாரத்தையும் புத்திசாலித்தனத்தையும் காட்டுகிற மனநிலை ஒரு சுய திருப்தியாகவும், பல்லைக் கடித்துக்கொண்டு நாம் பொறுத்துக்கொண்ட பல
விஷயங்களுக்கான வடிகாலாகவும் நமக்கு அமைந்துவிடுகிறது.

'அதிகாரத்தில் இருப்பவனிடம் அடங்கிப் போக வேண்டும்... இல்லாதவனை அதிகாரம் செய்ய வேண்டும்’ என்பதை எனக்கு, உங்களுக்கு, நமக்கு யார் சொல்லிக்கொடுத்தது?

மேலதிகாரியின் மகனிடம் 'சொல்லுங்க தம்பி...’ என்று மரியாதை பேசும் நாம், இஸ்திரி
வண்டிக்காரர், ஆட்டோக்காரர், துணிக் கடை விற்பனையாளர், ஹோட்டல் சிப்பந்திகளை வயது வித்தியாசம் இல்லாமல் ஒருமையில் விளிக்கிறோம்.

மேலிருந்து கீழ்நோக்கி நகரும் அதிகாரம் ஒரு நாகரிக சமுதாயத்தின் அடையாளம்இல்லை. 'இல்லாதவர்கள் அப்படியே இருக்கட்டும்.. அதுதான் நமக்கு நல்லது’ என்ற யதேச்சதிகார,
ஆதிக்க மனப்பான்மை நம்மையறியாமல் நமக்குள் புரையோடிக்கிடக்கிறது.

எதிர்க்கும் சக்தி இல்லாத மனிதர்களிடம் அதிகாரத்தையும் புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்துவதன் மூலம் நாம் சுய அளவில் தாழ்ந்துபோகிறோம் என்ற படிப்பினை நமக்குச் சொல்லித்தரப்படாமலே போய்விட்டது.

கடையிலோ, வீட்டிலோ ஒரு
பொருள் காணாமல் போனால் முதலில் நம் கண்கள் தேடுவது கடைநிலை ஊழியரைத்தான். இன்ஷூரன்ஸ் பாலிசி விஷயமாகப் பேச வருபவரை நடுவீட்டில் அமரவைத்துப் பேசும் நாம், தண்ணீர் கேன் கொண்டு வரும் பையனின் பின்னாலேயே போகிறோம். வசதியற்றவனுக்கும் சுயமரியாதை, கொள்கைகள், நற்குணங்கள் உண்டு என்பதை ஏன் இந்த
மிடில்கிளாஸ் மனசு ஏற்க மறுக்கிறது?

அதிகாரம் படைத்தவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் கெட்டவர்களாக இருந்தாலும் அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்கிற அல்லது பொறுத்துக்கொள்கிற நம் மனம், இல்லாதவனின் ஏழ்மையை மட்டும் சந்தேகக் கண்ணுடனேயே உற்று நோக்குகிறது!

'என்னது உன் புள்ள மெட்ரிகுலேசன்
ஸ்கூல்ல படிக்கிறானா?’ என்று வீட்டைக் கூட்டிப் பெருக்க வரும் அம்மாவிடம் கேட்கும் கேள்விக்குப் பின்னால், 'இவருக்கு ஏது இவ்வளவு காசு?’ என்ற குரூரம் ஒளிந்திருக்கிறது.

நலிந்த மனிதர்கள் மீது நம்பிக்கைவைக்கத் தயங்குகிற சமூகம், கோழைத்தனமான சமூகம்.
'வலிமையில்லாதவன் அவனுக்கான வரம்புக்குள
தான் கனவு காண வேண்டும்’ என்று உலகில் எந்தச் சட்டமும் விதிக்கப்படவில்லை.

இல்லாதவன் எப்போதும் இயலாதவனாகவே இருந்தால், நமக்கு அது சௌகர்யம் என்று எண்ணுகிறோம். அதனால்தான் எளியவர்களின் கனவுகளைச் சீண்டுகிறோம். அதை முளையிலேயே கிள்ளி எறிய முனைகிறோம்.

பலம் படைத்தவர் களை ஒருவிதமாகவும்,
பலமற்றவர்களை வேறுவிதமாகவும் நடத்து வது அடிப்படை ஜனநாயக முறைக்குப் புறம்பானதாயிற்றே!

அன்றாட வாழ்க்கையில் அப்படிச் செயல் படும் நமக்கு அரசியல்வாதிகளைக் கேள்வி கேட்க என்ன உரிமை இருக்கிறது..???

சூப்பர் மார்கெட்டில் பாலீத்தீன் உறையில் அழகாக பேக் செய்யப்பட்ட வெண்டைக் காய்களை
வாங்குவதற்கு முன்னால், நுனி உடைத்துப் பார்க்க உரிமை இல்லை. அங்கே வாய் பேசாமல் வாங்கிக்கொண்டு வருகிறோம்.

ஆனால், வாங்கும் பொருள் நன்றாக இருக்கிறதா என்று பரிசோதித்து வாங்க அனுமதிக்கிற வண்டிக்கார அம்மாவிடம் ஊர், உலக நியாயம் எல்லாம் பேசுகிறோம். அடக்க விலைக்கே கட்டாத நம் பேரத்தால் ஒர
கட்டத்தில் வெறுத்துப்போய், 'வேணும்னா வாங்கிக்க... வேணாட்டி போ’ என்று சொல்லும்போது, அந்த வண்டிக்காரம்மா திமிர் பிடித்தவர் ஆகிறார்.

ஒரு உண்மையை உணர்ந்திருக்கிறீர்களா..???

எளியவர்கள் பெரும்பாலும் நம் குரலுக்கு மரியாதை கொடுக்கிறார்கள். பதிலுக்கு அவர்களின் குரலுக்கு மனசைக் கொடுக்க
கொடுக்க வேண்டியது மானுடத்தின் கடமை.

அதிகாரம் எப்போதும் மேலிருந்து கீழாகப் பாய்கிறது. அந்தப் பாய்ச்சல் ஒவ்வொரு மனிதனையும் துன்புறுத்துகிறது.

அதிகாரக் கட்டமைப்பின் கடை நிலையில் இருக்கும் எளியவன், தனக்கு மேலிருக்கும் அனைவரின் அடிகளையும் தாங்கிக்கொண்டு காயங்களோடு அழுகிறான்.
'நம்மிடம் சேரும் காசு, பணம், செல்வாக்கு எல்லாம் எளியவர்களை அதிகாரம் செய்வதற்கான வாய்ப்புகள் அல்ல...’ என்பதை நாம் எப்போது உணர்வோம்?

சமூகத்தில் நம்மைச் சுற்றி நிகழ்பவை எல்லாம், 'இயலாத மனிதர்கள்தான் அதிகாரம் செய்யத் தோதானவர்கள்’ என்ற தோற்றத்தை முன்வைக்கின்றன.

லட்சக்கணக்கில் ஊழல்
மோசடி புரிந்தவனுக்கு ஏ.சி. அறையில் விசாரணை நடக்கிறது. பிக்பாக்கெட் அடித்தவனைக் குத்த வைத்துக் கும்முகிறார்கள்.

பீரோவைத் திறந்து அப்பா பணத்தில் 5,000 ரூபாயைத் திருடுகிறவனை, 'பணக்கார வீட்டுப் புள்ள அப்படி இப்படித்தான் இருப்பான்’ என்று சாதாரணமாகச் சொல்லும் சமூகம், இஸ்திரி துணியைக்
கொடுக்கவந்த சிறுவன் கரடி பொம்மையைக் கையில் எடுத்து ஆசையாகப் பார்த்தால், முன்னெச்சரிக்கையுடன் அந்த பொம்மையை எடுத்து உள்ளேவைக்கிறது.

இந்த உலகத்தில் எல்லா மனிதர்களும் கெட்டவர்கள் என்று சித்தரிப்பதைப் போல இந்தக் கட்டுரை சிலருக்குப் படலாம். ஆனால் நான், நீங்கள் என நம் எல்லோருக்குள்ளும
ஊறிப் போயிருக்கும் நாம் கவனிக்காத மனஉணர்வின் விவரணைகள்தான் இவை.

நியாயப்படி, அதிகாரம் என்பது இல்லாதவர்களின் ஏக்கங்களைத் தீர்க்கவும், அவர்களின் சுயமரியாதைக்கு எதிராக அநீதி நடக்கும்போது அதைத்தட்டிக் கேட்கவும் பயன்படவேண்டும்.

இருக்கிறவன், இல்லாதவன் என அனைவரின் மனமும் கனவுகளாலும்,
உணர்வுகளாலும் நிரம்பியிருக்கிறது என்று நாம் ஒவ்வொருவரும் உண்மையாக உணரும்வரை அது சாத்தியமில்லை.

இங்கு எல்லா மனிதரும் ஒன்றுதான். மூச்சுக்கு முந்நூறு தடவை ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தை பேசுகிற அதிகாரம் படைத்த அதிகாரி பேசுவது சரி என்றால், டீக்கடை முக்கில் தமிழில் கெட்ட வார்த்தை
பேசுகிற மனிதரின் பேச்சும் சரிதான்.

'3,500 ரூபாய்க்கு வாங்கின செருப்பைத் தைக்க 30 ரூபாய் கூலி கேட்கிறியே... இது அடுக்குமா’ என்ற கேள்விக்குப் பின், '3,500 ரூபாய் கொடுத்து செருப்பு வாங்குன நீங்க, அதைத் தைக்க 30 ரூபாய் கொடுத்தா குறைஞ்சா போயிடுவீங்க’ என்ற பதிலும் இருக்கிறது
நண்பர்களே!

படித்ததில் பிடித்தது..!!

நேற்று வந்த வாட்ஸ்அப் பதிவு..😌🥸

நன்றி.!🌿

@Dpanism @drmaniortho @Fan_Of_RDJ @Tonystark_in @Ganae_Ramesh @cinemapaithyam @Karthicktamil86 @karthick_45 @laxmanudt @chithradevi_91 @imkayalsai @peru_vaikkala @MKT_Bhagavathar @Mr_Bai007

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சமூகவாதி

சமூகவாதி Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Karthi_Genelia

15 Sep
#காசுஇருக்குன்னுவீடுகட்டாதிங்க_டா

ஒரு மாசமா போகியத்துக்கு வீடு தேடிட்டு இருக்கேன். இது வரை ஒரு 15+வீடு பாத்திருப்பேன். கிட்டத்தட்ட ஒரு 10வீடு இப்போ recentஆ காட்டினது. இதுல பாத்த எல்லா வீடுமே ஏதோஒரு காரணத்துக்காக காசு இருக்கு கட்டுவோம்ன்னு கட்டிவிட்டிருக்காங்க போல

#KarthiWrites
எந்த ஒரு பிளானும் இல்லாம. வசதி, காசு இருக்கு, கட்டி விட்டா எவனாவது முட்டாப்பய வாடகைக்கு வருவான் இல்லனா, போகியத்துக்கு வருவானுங்கன்னு நினைச்சே கட்டுவாங்க போல. இது நம்ம இடம் நம்ம வீடு எப்படிருந்தாலும் பாத்து நல்லா கட்டணும் ஒரு பிளான் போட்டு கட்டனும்னு யோசிக்கவே மாட்டாங்க போல.
மொத்தமா பட்ஜெட் பேசி ஒரு காண்ட்ராக்டர் கைல தூக்கி குடுதுட்றாங்க. இல்லையா, கட்ட ஆரம்பிச்சா வாசகால் நடவும் அடுத்து, பால்காச்சவும் மட்டும் தான் வீட்டு பக்கம் போவாங்க போல..

268அடி சின்ன தா இருந்தாலும் சரியா பிளான் பண்ணா கண்டிப்பா ரெண்டு புளோர்ல கிச்சன்,பெட்ரூம்,ஹால்,டாய்லெட் வச்சி
Read 19 tweets
15 Sep
பொதுவா அரசாங்கத்திற்கு ஒரு வேண்டுகோள்,.

கண்ண மூடிக்கிட்டு கூட்டுறவு வங்கியில நகை வச்சிருக்கிறவங்க எல்லாருக்கும் நகைக்கடன் தள்ளுபடி பண்ண வேண்டாம். 🙏🏽

நகை அடமானம் வச்சிருக்குற எல்லாருமே ஏழைகளோ, விவசாயிகளே கிடையாது..

இவங்கள மட்டும் தனியா ஃபில்டர் பண்ணி இந்த category ல வர்றவங்கள
மட்டும் தேர்ந்தெடுத்து கடன் தள்ளுபடி பண்ணவும்.

எங்க வீட்டு ஓனருக்கு கூட்டுறவு வங்கியில அக்கவுண்ட் இருக்கு. ஆனா, அவர் விவசாயியோ ஏழையோ கிடையாது.

இதுவரைக்கும் அவர் எதுவும் நகை வைக்கல.. ஆனா, இப்போ வந்த அறிவிப்பை பாத்துட்டு, அவருகிட்ட இருக்குற 10 பவுன் காய்ன் எடுத்துகிட்டு போயி நகை
செஞ்சிட்டு வந்து வச்சா இனிமேல் அக்கவுண்ட் ல வெக்க முடியும்ல அதான் govt வருசா வருசம் தள்ளுபடி பண்றாங்களேன்னு அவங்க வீட்ல பிளான் பண்ணிட்டு இருக்காங்க. Election க்கு முன்னாடி எடப்பாடி அறிவிச்சப்போவே இவரு அடிச்சிகிட்டாரு நாமளும் வச்சிருக்களாம்னு ஆனா, இப்போ பிளான் பண்ணிட்டாரு அப்போ
Read 4 tweets
12 Sep
இதுல என் அனுபவத்த பகிரணும்னா thread போடுற அளவுக்கு என்கிட்ட அனுபவம் இருக்கு.😍😬

நான் சேலம். 9த் 10த் ல பள்ளி வருட முடிவில் லீவ் நாட்கள்ல வெள்ளி பட்டரைக்கு வேலைக்கு போனேன். ஒரு மாசத்துக்கு 1000/- தருவாங்க 2009, 2010 ல.

Then 11th 12th அதுக்கு அப்புறம்

#KarthiWrites📝
டிப்ளோமா காலேஜ் மூனு வருசம் முடிக்கிற வரைக்கும் வீட்டு பக்கம் இருக்குற கூல்ட்ரிங்ஸ்(LoveO) கம்பனில எல்லா லீவ் நாட்களும் வேலைக்கு போவேன். காலேஜ் போனதுக்கு அப்புறம் காலேஜ் இருக்குற நாட்கள்ல கூட வேலைக்கு போவேன்.

காலேஜ் படிக்கும்போது Tuesday Thursday Friday இந்த மூனு நாள் முதல்
Period மேம் கிளாஸ் தான் இருக்கும். அவங்க லேட்டா வந்தாலும் எதுவும் சொல்ல மாட்டாங்க. அதனால இந்த மூனு நாளும் Night ஷிஃப்ட் வேலைக்கு போயிட்டு 5 6 மணிக்கு கிளம்பி வீட்டுக்கு வந்து 8மணி வரை தூங்கிட்டு அப்புறம் கிளம்பி முதல் பீரியட் முடியிறதுக்குள்ள கிளாஸ் க்கு போவேன்.. நிறைய time
Read 12 tweets
24 Aug
#தன்னம்பிக்கை

முந்தாநேத்து விருதுநகர்ல இருந்து நண்பன் கால் பண்ணான். தம்பிங்க ரெண்டு பேரு இன்டர்வியூ அட்டெண்ட் பண்ண சேலம் வராங்கடா, நாளைக்கு மதியம் இன்டர்வியூ, கொஞ்சம் ஹெல்ப் பண்ணு அப்டின்னு சொன்னான். (ஆல்ரெடி ஒன்வீக் முன்னாடி சொல்லிருந்தான்) டேய் என்ஊருக்கு

#KarthiWrites 📝
வறாங்கஇதெல்லாம் சொல்லணுமா பாத்துக்கலாம் விடுன்னு சொல்லிருந்தேன். முந்தா நேத்து நைட்டே ஃபோன் போட்டு காலைல வந்துட்டு கால் பண்ணுங்கன்னு எல்லா detail ah சொல்லிருந்தேன். அவனுங்கள வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு அப்புறம் காலைல சாப்பிடவச்சிட்டு இன்டர்வியூ க்கு கிளம்ப வைக்கலாம்னு பிளான்
பண்ணிருந்தேன். ஆனா, அவனுங்க எனக்கு சிரமம் குடுக்க கூடாதுன்னு நியூ பஸ்டாண்ட் பக்கம் ரூம் எடுத்துகிட்டு, காலைல எதுக்கு டிஸ்டர்ப் பண்ணிகிட்டுன்னு வாட்ஸ்அப்ல மெஸேஜ் போட்டுட்டாங்க. 6மணி ஆச்சே இன்னும் இவனுங்கள காணோம்னு நெட் ஆன் பண்ணி பாத்த மெஸேஜ் இருந்தது. சரி ஓகே அப்புறமா பாக்கலாம்னு
Read 15 tweets
17 Jul
#சேலம்_ஆடிப்பண்டிகை
#சேலம்_ஆடித்திருவிழா
😍♥️🎊💥✨

இந்தவருடம் சேலத்தில் ஆடிப்பண்டிகை ஆரம்பம் ஆகவேண்டியநாள் இன்று.!

சேலத்தில், ஆடி 1 தேங்காய் சுடும் பண்டிகை என்று தொடங்கி அந்த மாதம் முழுவதும் திருவிழா தான்.🙌🏽😃

வாங்க ஒரு சின்ன த்ரெட்ஆ பாப்போம்.. இன்ரெஸ்ட் ஆ.😃

#KarthiWrites
ஆடி1 அன்னைக்கு ஊரே குதூகலமாக இருக்கும். சின்ன வயசுல விடிஞ்சா குச்சியும் தேங்காயும் கையுமா தான் சுத்திக்கிட்டு இருப்போம் அந்த நாள் முழுக்க.

அரிசி, பருப்பு, அவுள்,எள்ளு, பொட்டுக்கடலை, வெல்லம், எல்லாம் கலந்து போட்டு சரியான அளவு தேங்காய் தண்ணீர் நிரப்பி அடுப்பில் சுட்டு சாப்பிடுவோம்
சின்ன வயசுல வீட்டு பக்கம் இருக்குற காலியிடம்/காட்டுல அக்கம், பக்கம் வீடுன்னு எல்லாரும் விறகுகளைகொண்டு நெருப்பு மூட்டி சுடுவோம் ஆனால், இப்போ எல்லாம் வீடாகிட்டு, அதனால் அவங்க அவங்க வீட்டுலேய எல்லாம் முடிஞ்சுடும்.

வெந்து முடியும் தருவாயில் ஒரு மணம் வரும் பாருங்க. அப்போவே நாக்குல
Read 19 tweets
16 Jul
#Vaazhlreview #வாழ் ♥️🎬

இந்த படம் முதலில் எல்லோராலும் ரசிக்க முடியுமா, எல்லோருக்கும் பிடிக்குமா அப்டின்னா இல்ல! அருமையா வந்திருக்க வேண்டிய ஒரு படம் தான்.! சவுண்ட் விஷூவல் அப்டின்னு எல்லாமே அருமையா இருக்கு!

திரைக்கதைல இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி, அரைமணி
#KarthiWrites
நேரம் அதிகமானாலும் பரவால்லன்னு இன்னும் கொஞ்சம் ஸ்டோரி சேர்த்து விஷூவல் add பண்ணி மெருகேற்றி இருந்தால் படம் அருமையா வந்திருக்கும்! ஒருசில இடங்களில் இசை சரியா பொருந்தவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

IT ல ஒர்க் பண்ற ஒருத்தனுக்கு மனம் ரீதியா எவ்வளவு பிரச்சனை இருக்கும் அப்டின்னு
காட்ட முயற்ச்சி பண்ணி, அதுல ஒரு 50% கூட சரியா காட்டல! ஒரு IT dude ஃபேஸ் பண்ற பிரச்சனை எவ்வளவோ இருக்கு!

புராஜக்ட்ல ஒருத்தனுக்கு அன்னன்னைக்கு வர்ற சின்ன சின்ன பிரச்சனைகள சரி பண்ண, ஒரு அரைமணி டீ குடிக்கிற இடைவெளி உதவும். அப்படி இருக்கைல இதுபோல ஒரு பயணம் அவனுக்கு மிகப்பெரிய பூஸ்டர்
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(