#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் #புரட்டாசிஸ்பெஷல் ஏழுமலை எம்பெருமானை தனியாக வழிபடுவதைவிட தாயாருடன் சேர்த்து வழிபடும் போது பெருமாளின் அனுக்கரகம் நம் மேல் அருவி போல் கொட்டுகிறது. இதை நம்மாழ்வார் 'அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறையும் மார்பா' என்று தாயாரை முன்னிட்டு சரணாகதி
செய்கிறார். இப்படி எம்பெருமான் மார்பிலே அமர்ந்தது தன் சுகத்திற்க்காகவா என்றால் இல்லை. நாம் சுகப்பட வேண்டும் என்பதற்காகத்தான். பொதுவாக ஆழ்வார்கள் திவ்விய தேசத்திலும் பெருமாளை சேவிக்கும் போது பக்தி மேம்பட்டு கொஞ்சி மகிழ்வார்கள். ஆனால் திருமலை வந்தால் மட்டும் கதறி அழுது சரணாகதி
செய்து விடுகின்றனர். உதாரணமாக நம்மாழ்வார் மலையப்பனிடம்,
திருவேங்கடத்தானே
புகல் ஒன்றில்லா அடியேன்
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே
என கதறி சரணாகதி செய்கிறார். இந்த மலையப்பனிடம் ஆழ்வார்கள் என்ன விசேஷத்தை பார்த்தார்கள்? பொதுவாக மற்ற திவ்ய தேசங்களில் பெருமாள் ஒரு சன்னதியிலும்,
தாயார் ஒரு சன்னதியிலும் இருப்பர். சில திவ்ய தேசங்களில் இருவரும் ஒரே சன்னிதியில் அருகருகே இருப்பர். தன் பிள்ளை தவறே செய்தாலும் அதை பொருட்படுத்தாது தாயுள்ளம். தந்தை அப்படியில்லை. பெருமாள் ஒரு தகப்பன் ஸ்தானத்தில், நீதிபதி ஸ்தானத்தில் நம்மை பார்ப்பார். இதற்கு பக்த ராமதாஸ் உதாரணம்.
12 வருடம் சிறையில் தள்ளப்பட்டு தினம் சவுக்கடி அனுபவித்தார். உடலில் ரத்தம் பெருக ராமர் மீது கீர்த்தனைகள் இயற்றினார். ராமரோ ஒரு நீதிபதியாய் தவறுக்கு தண்டனை அனுபவிக்கிறார் என பேசாமல் இருந்தார். கடைசியில் அவருக்கு சீதையின் நினைவு வர 'சீதாம்மா இந்த பக்தனை காப்பாற்ற வருமாறு நீயாவது
உன்னருகில் இருக்கும் ராமனிடம் சொல்லேம்மா' எனக் கதற, உடனே சீதை ராமரிடம், இனி க்ஷணம் தாமதிக்காமல் காப்பாற்றுங்கள்' என்று சொல்ல உடனே ராமரும் ஒரு மனித உருவில் வரியை கட்டி அவரை விடுதலை செய்தார். நமக்காக சிபாரிசு செய்ய தாயார் கூட இல்லாததால். எம்பெருமான் நாம் தனியாக சேவிக்கும் போது
நம் தகுதி, நேர்மையை பார்ப்பாராம். ஸ்ரீராம அவதாரத்தில் வனவாசத்திற்கு கூட வந்த லக்ஷ்மணனை பொழுது விடிந்ததும் வேண்டுமானால் அயோத்தி திரும்பி போய்விடுகிறாயா எனக் கேட்டதும் செய்வதறியாது அவன் அவர் கால்களில் விழுந்தான். பின் ஸ்ரீராமரின் சம்மதத்தை பெற அவரிடம் கேட்டால் நடக்காது என அறிந்து,
தலையைத் தூக்கி அருகிலிருந்த சீதையை பரிதவிப்புடன் பார்த்து சிபாரிசு செய்ய விண்ணப்பித்தார். சீதை உடனே ராமரைப் பார்த்து லஷ்மணன் குளத்து மீன். உங்களை பிரிந்த அவனால் வாழ இயலாது என சொல்ல ராமர் மறு பேச்சின்றி அழைத்துக் கொண்டார். தாயாருக்கு அத்தனை மதிப்பு கொடுப்பார் பெருமாள். மலையப்பனை
காண நாம் மலை ஏறும்போது பெருமாள் பார்க்கும்முன், அவன் மார்பில் இருக்கும் தாயார் நம்மை பார்த்து விடுகிறாள். அவள் பார்த்ததினாலே பெருமாள் நம் தகுதி பாராமல் உடனே அனுக்கிரகம் குறைவில்லாமல் செய்து விடுகிறார். திருமலையப்பனுக்கு உள்ள இந்த தனித்துவம் மற்ற திவ்ய தேச பெருமாளிடம் காணமுடியாது
அதனால்தான் ஸ்ரீ விஷ்ணுவை ராதே கிருஷ்ண, சீதாராமா, லட்சுமிநாராயணா, லட்சுமி வெங்கடேசா, லக்ஷ்மி நரசிம்மர் என தாயாருடன் இணைந்தே அழைக்கிறோம். ஆணும் பெண்ணும் சமம் என என்றோ பரந்தாமன் பற்பல அவதாரங்களில் வாழ்ந்து காட்டியுள்ளார்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

26 Sep
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஸ்ரீ வேதநாராயண கோயில் அல்லது மத்ஸ்ய நாராயணகோயில் என்பது இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் நாகலபுரம் நகரில் அமைந்துள்ளது. இங்கு மகாவிஷ்ணு மச்ச (மீன்) அவதாரத்தை குறிக்கும் வகையில் மீன் உருவில் உள்ளார். இந்தப் பெருமாளை சூரியன் வழிபடுவது ஒரு Image
சிறப்பு. இது ஒரு வானியல் அற்புதமாகக் கருதப்படுகிறது. வருடத்தில் நின்று நாட்கள் ஒளிரும் சூரிய கதிர்கள் கர்பக்கிரகத்தில் உள்ள வேதநாராயணர் மீது நேரடியாக விழுகின்றது. காலையில் கோயில் கோபுரத்தில் தொடங்கி மாலையில் கர்பக்கிரகத்தின் மீது 360 அடி தூரம் பயணிக்கிறது. முதல் நாளில் மாலை Image
6 மணி முதல் 6.15 வரை கதிர்கள் பெருமாளின் பாதங்களிலும் இரண்டாவது நாள் வயிற்றுப் பகுதியிலும், மூன்றாம் நாள் அதே நேரத்தில் கிரீடத்திலும் விழுகிறது. கர்பக்கிரகத்தில் பெருமாள் பாதி மனித உருவில் இடுப்புக்குக் கீழே மீன் உருவில் தரிசனம் தருகிறார். தாயார் பெயர் வேதவல்லி தாயார். இக்கோயிலை Image
Read 4 tweets
26 Sep
திருமாலின் பத்து சயன தலங்கள்:
1. ஜல சயனம்- 107-வது திவ்ய தேசமான ஸ்ரீவைகுண்டம் எனும் திருப்பாற்கடலில் அமைந்துள்ளது. திருமாலின் சயனக்கோலங்களில் மக்கள் தம் பூத உடலுடன் சென்று தரிசிக்க முடியாத இடம் ஜல சயனம்.
2. தல சயனம்- 63 வது திவ்ய தேசமான மாமல்லபுரத்தில் அமைந்துள்ளது. இங்கு ImageImage
திருமால் வலதுகரத்தை உபதேச முத்திரையுடன் மார்பின் மீது வைத்து தரையில் ஆதிசேஷன் மீது சயனித்து காட்சி தருகிறார்.
3. புஜங்க சயனம் (சேஷசயனம்)- முதலாம் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் என்னும் விண்ணகரத்தில் அமைந்துள்ளது. இங்கு திருமால் புஜங்க சயனத்தில் ஆதிசேஷன் மீது சயனித்து காட்சி தருகிறார். Image
4. உத்தியோக சயனம்- 12வது திவ்ய தேசமான திருக்குடந்தை என்னும் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. வேறு எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு சாரங்கபாணிப் பெருமாள் திருமழிசை ஆழ்வாருக்காக, சயனத்தில் இருந்து சற்றே எழுந்து பேசுவது போலான உத்தியோக சயனத்தில் காட்சி தருகிறார்.
5. வீர சயனம்- 59வது திவ்ய Image
Read 8 tweets
24 Sep
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு ஒரிஸ்ஸா மாநிலத்தை உத்யோத் கேசரி என்னும் மன்னன் ஆண்டு வந்தான். ஒரிஸ்ஸாவில் பாயும் புனித நதி ரிஷிகுல்யா. அதன் கரையோரம் சஹாபூர் என்கிற அழகிய கிராமம் ஒன்று உண்டு அங்கு பக்த மனோகர் தாஸ் என்னும் அடியவர் வாழ்ந்து வந்தார். பூரியில் உள்ள Image
ஜகந்நாதரை தரிசிக்கவேண்டி ஒரு நாள் கால்நடையாக சஹாபூரிலிருந்து புறப்பட்ட மனோகர் தாஸ், பல நாட்கள் இரவு பகல் மழை வெயில் பாராமல் பூரி நோக்கி நடந்தவண்ணமிருந்தார். இவ்வாறு நடந்து வந்த மனோகர் தாஸ் ஒரு நாள் வழியில் சாலையோரத்தில் அழகிய குளத்தை பார்த்தார். அதில் மிகவும் அபூர்வமான நூறிதழ்
தாமரை மலர்கள் பூத்து மிதந்து கொண்டிருந்தை பார்த்தார். இத்தனை அழகான தாமரை மலர்களை இதுவரை பார்த்ததில்லையே. இதை ஜகந்நாதனுக்கு சூட்டினால் எப்படியிருக்கும் என்று கருதியவர், தாம் பூரி சென்று சேரும் வரை பூவானாது வாடாமல் இருக்குமா என்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் குளத்தில் இறங்கி Image
Read 14 tweets
24 Sep
#ஶ்ரீஆஞ்சநேயர்கோயில் #நாமக்கல் #ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மர்திருக்கோவில்
கொடிய அரக்கன் இரணியன் தன் மகனை யானையின் காலடியில் கிடத்தியும், மலை மீதிலிருந்து உருட்டியும் கொல்ல முயன்றும், ஒவ்வொரு முறையும் பிரகலாதனை ஶ்ரீஹரி காப்பாற்றினார். ஶ்ரீஹரியை நம்பியவர்கள் என்றும் கைவிடப்பட மாட்டார்கள் Image
என்பதை வெளிப்படுத்தும் திருவவதாரம் ஶ்ரீநரஸிம்மர் என்னும் உக்ர ரூப அவதாரம். மற்ற அவதாரங்கள் யோசித்து, திட்டமிட்டு எடுக்கப்பட்ட அவதாரங்கள். ஆனால் நரஸிம்மாவதாரம் ஒரு நொடியில் எடுக்கப்பட்டது. ஶ்ரீமஹாலக்ஷ்மிக்கு கூட தெரிவிக்கும் முன் எடுக்கப்பட்ட அவதாரம். ஶ்ரீநரஸிம்மரின் உக்ரத்தை
கண்டோர் நடுங்கினர். அவரை சாந்தபடுத்த வேண்டும் இல்லையேல் உலகுக்கு என்ன நஷ்டம் வரும் என்று சொல்ல முடியாது என்பதால் எல்லோரும் குழந்தை பிரகலாதனை வேண்டினர். அவனும் ஶ்ரீஹரியிடம் உலக நலனுக்காக சாந்தமடைய பிராத்தனை செய்தான். அதே சமயம் ஶ்ரீஹரியின் இந்த ரூபத்தை பார்த்த தேவர்கள் ஶ்ரீஹரியை
Read 19 tweets
23 Sep
மஹாபெரியவாளிடம் இருந்து சந்தனத்தால் உருவாக்கப்பட்ட காமாட்சி, ஒரு தேங்காய், அவரது பாதுகை ஆகியவற்றைப் பெற்று இருக்கிறார் ஒரு பரம பக்தர். அவர் பெயர் சீனிவாசன். தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ளது உத்தமதானபுரம். அங்கே வசித்தவர் கார்வார் வெங்கட்ராமன். 1901-ஆம் வருடத்திலிருந்து அவர்
காஞ்சி மடத்தின் ஊழியராகப் பணி புரிந்தவர். அவர் மடத்தில் சேர்ந்த பல வருடங்கள் கழித்து தான் மஹா பெரியவா பீடாதிபதி பட்டமேற்றார். அவருக்கு முன்பு பீடாதிபதிகளாக இருந்தவர்கள் எப்படி இருந்தார்கள், ஆசார நியமங்களை எந்த விதத்தில் செய்வார்கள் என்றெல்லாம் வெங்கட்ராமனிடம் மஹா பெரியவா விவரமாக
கேட்டுத் தெரிந்து கொள்வார்களாம். காரணம், பெரியவாளுக்கு முன்பு இருந்த பீடாதிபதிகள் காலத்தில் இவர் பணியாற்றி இருக்கிறார் என்பதே. அந்த கார்வார் வெங்கட்ராமனின் பிள்ளை தான் சீனிவாசன். இவருக்கு படிப்பு அதிகமில்லை. நாற்பத்தியாறு வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் இவரது வாழ்க்கையின்
Read 15 tweets
23 Sep
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் பிரகலாதன் தெய்வத்தன்மை வாய்ந்த மிகச் சிறந்த விஷ்ணு பக்தன். இவன் இரணியன் என்னும் கொடிய அரக்கனின் புதல்வன். விஷ்ணு உண்மையான் கடவுள் அல்ல அவர் தங்கள் குல விரோதி என்று இரணியன் நயமாகவும் மிரட்டியும் சித்திரவதைப் படுத்திப் பார்த்தும் அவனால் பிரகலாதன் மனதை மாற்ற
முடியவில்லை. எத்துணை துன்பப்பட்டாலும் விஷ்ணுதான் மூல முதற்கடவுள் என்ற தனது எண்ணத்திலிருந்து பிரகலாதன் பிறழாது உறுதியாக நின்றான். விஷ்ணு பக்தர்கள் கேட்டதை உடனே கொடுப்பவன். நாளை என்பதே இல்லை நரசிம்மனுக்கு. அதனால் தான் ப்ரகலாதன் அழைத்த உடனே தூணைப் பிளந்து கொண்டு வந்தான். நீயே கதி என
சரணடைந்த அடியார்களுக்கு உடனே கஷ்டங்களிலிருந்து விமோசனம் கொடுப்பவன். ஆகட்டும் அப்புறம் பார்க்கலாம் என்று சொன்னதே
இல்லை. அப்படிப்பட்ட கருணாமூர்த்தி அவன். அதனால் தான் விஷ்ணு சகஸ்ரநாமத்தில் நாரஸிம்ஹவபு ஶ்ரீமான் கேசவ புருஷோத்தம: என்று நரசிம்மன் பெருமையை புகழ்ந்து சொன்னார் பீஷ்மர்.
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(