அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில் என்று ஏன் பெயர் வந்தது என்பதை தெரிந்துகொள்ள முதலில் நந்தீஸ்வரருக்கும், நந்திகேசருக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ள வேண்டும். நந்தீஸ்வரர் சிவபெருமானின் முன் காளை வடிவில் இருப்பார்.
🇮🇳🙏1
நந்திகேசர் திருக்கைலாய பரம்பரையை உருவாக்கியவர். தருமபுரம் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம் ஆகியவை திருக்கைலாய பரம்பரையை சேர்ந்தவை ஆகும். சிலாது மகரிஷி என்பவரின் மகனாக அவதரித்தவர் நந்திகேசர் ஆவார்.
🇮🇳🙏2
பிறக்கும் போது இந்த குழந்தைக்கு நான்கு கைகள் இருந்தன. அவர் ஒரு பெட்டியில் இந்த குழந்தையை வைத்துவிட்டு மூடி திறந்தார்.
அப்போது குழந்தையின் இரண்டு கைகள் நீங்கி அழகான குழந்தையாக விளங்கியது. குழந்தையை திருவையாறு தலத்தில் விட்டு சென்றார். 🇮🇳🙏3
பரமேஸ்வரன் அந்த குழந்தைக்கு ஐந்து விதமான அபிஷேகம் செய்தார். அம்பிகையின் பால், நந்தி வாய் நுரை நீர், அமிர்தம், சைவ தீர்த்தம், சூரிய புஷ்கரணி தீர்த்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தார். இந்த காரணத்தால் இறைவன் ஐயாறப்பர் எனப்பட்டார்.
🇮🇳🙏4
சிறப்பம்சங்கள்:
அதிசயத்தின் அடிப்படையில் இக்கோயிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
🇮🇳🙏5
விஞ்ஞானம் அடிப்படையில் கோயிலின் வெளிப்பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று கொண்டு ஐயாறப்பா என உரக்க கொடுத்தால் ஏழு முறை திருப்பிக் கேட்கிறது.
நிலக்கரி சுரங்கமே தந்தும் சும்மா இருந்த மின் வாரியம்
சென்னை:மத்திய அரசு ஒடிசாவில் உள்ள சந்திரபிலா நிலக்கரி சுரங்கத்தை வழங்கி, ஐந்து ஆண்டுகளாகியும் நிலக்கரி எடுத்து வராததே, தற்போது தமிழக மின் வாரியம் நிலக்கரி தட்டுப்பாட்டில் சிக்கி இருப்பதற்கு முக்கிய காரணமாகும்.
துாத்துக்குடி, சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில், மின் வாரியத்திற்கு 4,320 மெகா வாட் திறனில் ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன.72 ஆயிரம் டன் தேவைஅவற்றில் தினமும் முழு மின் உற்பத்திக்கு பயன்படுத்த, 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை.
அதில், 60 ஆயிரம் டன், ஒடிசா மாநிலத்தில் உள்ள தால்சர், ஐ.பி., வேலி மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள மத்திய அரசின் சுரங்கங்களில் இருந்து பெறப்படுகிறது.
அ.கணேசன், பேட்டை, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த ஏப்ரலில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு செலவிட்ட கணக்குகளை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துள்ளன.
விளம்பரங்கள், நட்சத்திரப் பேச்சாளர்களின் பயணச் செலவு மற்றும் வேட்பாளர்களுக்கு கொடுத்தது ஆகியவை அடங்கலாக, தி.மு.க., 114.14 கோடி ரூபாயும், அ.தி.மு.க., 57.33 கோடி ரூபாயும் மட்டுமே செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.,வுக்கு தேர்தல் வியூகம் அமைத்து கொடுத்த பிரசாந்த் கிஷோருக்கே, 380 கோடி ரூபாய் தட்சணை கொடுத்தனர். இதை எந்த கணக்கில் சேர்ந்துள்ளனர் என்பது தெரியவில்லை. 'பொய் சொல்லும் வாய்க்கு, போஜனம் கிடைக்காது' என்று ஒரு சொலவடை உண்டு.
தேனி மாவட்டம் சுருளிமலை அருள்மிகு சுருளிவேலப்பர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலாகும். இங்கு சுருளிவேலப்பர் மூலவராக உள்ளார்.
🇮🇳🙏1
சிவனின் திருமணத்தின் போது அனைவரும் இமயமலைக்குச் சென்று விட வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்ந்தது. இதனால் உலகு சமநிலையை இழக்க சிவன் தென்பொதிகை எனும் இம்மலைக்கு அகத்தியரை அனுப்பி உலகை சமப்படுத்தினார். பின் இங்குள்ள குகையில் அகத்தியருக்கு மணக்கோலத்தில் சிவன் காட்சியளித்தார்.
🇮🇳🙏2
இங்குள்ள அதிசயம் என்னவென்றால் இங்குள்ள விபூதிக்குகையில் மணல் ஈரம் பட்டு காய்ந்த பின்பு விபூதியாக மாறுகிறது. 🇮🇳🙏3
*குலசேகரன்பட்டினம் ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா*
தென்தமிழக ஊர்களில் தனித்துவ சிறப்பானது...!!!
திருச்செந்தூர் : தசரா என்றதுமே, இந்தியர்களுக்கு பெரும்பாலானோருக்கு நினைவுக்கு வருவது, நான்கு இடங்களில் நடைபெறும் தசராக்கள்தான்.
🙏🇮🇳1
1.மைசூரில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு நடைபெறும் பிரமாண்ட பூஜைகள்.
2.யானை அணிவகுப்புகள்.
3.குஜராத்தின் தாண்டியா நடனம்.
4.கொல்கத்தாவின் துர்க்கா பூஜை.
🙏🇮🇳2
ஆனால் தமிழர்களுக்கு அவை எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவின் தென்கோடியில் அனைத்து ஊர்களிலும் கோலாகலமாக கொண்டாடப்படும், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா தான்.
காஞ்சி மஹா பெரியவர், ஒரு நவராத்திரி சமயத்தில் பக்தர்கள் முன்னிலையில் ஆற்றிய அருளுரை
உலகில் தீமை அழிந்து நன்மை பெருகிட நவராத்திரி கொண்டாடப்படுகிறது. ஆண்களுக்கு சிவராத்திரி போன்று, பெண்களுக்கு நவராத்திரி முக்கியம்.
குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகவும், தீர்க்க சுமங்கலியாய் வாழவும் சுமங்கலிகள் இந்த ஒன்பது நாட்களிலும் அம்பிகையை பூஜிக்க வேண்டும்.
முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வழிபட மனதில் தைரியம் வளரும். அடுத்த மூன்று நாட்கள் அம்பிகையை லட்சுமியாக வழிபட செல்வச் செழிப்பு உண்டாகும். அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியாக, தேவியை பூஜிக்க கல்வி வளர்ச்சி மேம்படும். ஞானம் கைகூடும்.
ஒருமுறை, ராமகிருஷ்ணரின் சீடரான பிரும்மானந்தர் படகுப் பயணம் மேற்கொண்டார். படகிலிருந்த ஒருவன், அவரைக் கேலிசெய்தான். பிரும்மானந்தர் வருத்தமடைந்தாலும், அவனைத் தட்டிக் கேட்கவில்லை. குருநாதரிடம் சென்று, நடந்ததைச் சொன்னார்.
ராமகிருஷ்ணர் அவரிடம், நீ ஏன் அவனைக் கண்டிக்கவில்லை. தவறு செய்பவனைக் கண்டிப்பாகக் கண்டிக்க வேண்டும், என்றார்.
மற்றொரு முறை, மற்றொரு சீடரான விவேகானந்தர் படகில் சென்றார். அதே ஆசாமி படகில் அவருடன் வந்தான். அவன், விவேகானந்தரை கேலி செய்ய ஆரம்பித்தான். விவேகானந்தர் மாவீரர் அல்லவா! கை முட்டியை மடக்கி, அவனை ஓங்கிக் குத்தப் போனார். அவன் அப்படியே ஒடுங்கி விட்டான்.