அருள்மிகு பிரம்மன் திருக்கோயில், கும்பகோணம்

ஒரு சமயம் பிரம்மாவிற்கு, படைக்கும் தொழில் தன்னிடம் மட்டுமே உள்ளது என்றும், சிவபெருமான் மற்றும் விஷ்ணுவிடம் படைக்கும் சக்தி இல்லை என்பது குறித்தும் கர்வம் ஏற்பட்டது. 🙏🇮🇳1
இதையறிந்த விஷ்ணு, பிரம்மனின் கர்வத்தை நீக்க ஒரு பூதத்தை பிரம்மனிடம் அனுப்பினார். அப்பூதத்தை பார்த்து பயந்துபோன பிரம்மா, விஷ்ணுவிடம் சென்று, தான் படைக்காத பூதம் ஒன்று தன்னை பயமுறுத்துவதாகவும், அதனிடமிருந்து தன்னை காப்பாற்றும்படியும் வேண்டினார். 🙏🇮🇳2
அதற்கு விஷ்ணு, உன்னுடைய கர்வத்தை அடக்குவதற்காகவே நான் இந்த பூதத்தை அனுப்பினேன். உனக்கு ஏற்பட்ட அகங்காரத்தினால் படைக்கும் தொழில் உன்னை விட்டு மறந்து போகும், என்று சாபமிட்டார். அதனால் வருந்திய பிரம்மா, விஷ்ணுவிடம் சாப விமோசனம் வேண்டினார். 🙏🇮🇳3
அதற்கு விஷ்ணு, பூமியில் சென்று தவம் செய்தால் விமோசனம் கிடைக்கும், என்று வழி கூறினார்.

எனவே, பிரம்மனும் பிரளய காலத்திலும் அழியாத தலமான கும்பகோணத்துக்கு வந்து தவம் செய்தார். அவரின் யாகத்திற்கு முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும் சேவை செய்தனர்.

🙏🇮🇳4
அந்த யாகத்தின் பலனாக, யாக குண்டத்தில் இருந்து, மகாலட்சுமி சமேதராக விஷ்ணு தோன்றி, பிரம்மனுக்கு சாபவிமோசனத்தினை கொடுத்து வேதங்களை மீண்டும் பிரம்மனுக்கு சொல்லித்தந்து வேத நாராயணன் என்று பெயர் பெற்றார். தாயார் வேதவல்லி எனப்பட்டாள்.

🙏🇮🇳5
யாகம் முடிந்தவுடன் விஷ்ணு தன் கதாயுதத்தால் பூமியை பிளந்து ஒரு நதியை உருவாக்கி இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் அவபிருத ஸ்நானம் செய்வதற்கு வழிவகுத்தார். இந்த நதி ஹரி சொல்லாறு என்று வழங்கப்பட்டது. இப்பெயர் காலப்போக்கில் மருவி அரசலாறு என அழைக்கப்படுகிறது.

🙏🇮🇳6
சிறப்பம்சங்கள்:

அதிசயத்தின் அடிப்படையில் பிரம்மனுக்கு எதிரே, யோக நரசிம்மர் இரண்டு தாயார்களுடன் உள்ளார். மேலும் பிரம்மா, தன் தேவியர்களான சரஸ்வதி மற்றும் காயத்ரி தேவியருடன் நின்ற கோலத்தில் வேத நாராயணப்பெருமாளிடம் ஆசி பெறும் கோலத்தில் உள்ளார். 🙏🇮🇳7
இதற்கு அடுத்துள்ள மூலஸ்தானத்தில் வேதநாராயணப் பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியருடன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். இவ்வாறாக ஒரே இடத்தில் அடுத்தடுத்த சன்னதிகளில் இம்மூவரையும் தரிசிப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.

#வாழ்க_பாரதம் 🙏🇮🇳
#வளர்க_பாரதம் 🙏🇮🇳🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

8 Oct
நிலக்கரி சுரங்கமே தந்தும் சும்மா இருந்த மின் வாரியம்

சென்னை:மத்திய அரசு ஒடிசாவில் உள்ள சந்திரபிலா நிலக்கரி சுரங்கத்தை வழங்கி, ஐந்து ஆண்டுகளாகியும் நிலக்கரி எடுத்து வராததே, தற்போது தமிழக மின் வாரியம் நிலக்கரி தட்டுப்பாட்டில் சிக்கி இருப்பதற்கு முக்கிய காரணமாகும்.
துாத்துக்குடி, சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில், மின் வாரியத்திற்கு 4,320 மெகா வாட் திறனில் ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன.72 ஆயிரம் டன் தேவைஅவற்றில் தினமும் முழு மின் உற்பத்திக்கு பயன்படுத்த, 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை.
அதில், 60 ஆயிரம் டன், ஒடிசா மாநிலத்தில் உள்ள தால்சர், ஐ.பி., வேலி மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள மத்திய அரசின் சுரங்கங்களில் இருந்து பெறப்படுகிறது.
Read 11 tweets
8 Oct
இது உங்கள் இடம்: உண்மையே உன் விலை என்ன?

அ.கணேசன், பேட்டை, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த ஏப்ரலில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு செலவிட்ட கணக்குகளை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துள்ளன.
விளம்பரங்கள், நட்சத்திரப் பேச்சாளர்களின் பயணச் செலவு மற்றும் வேட்பாளர்களுக்கு கொடுத்தது ஆகியவை அடங்கலாக, தி.மு.க., 114.14 கோடி ரூபாயும், அ.தி.மு.க., 57.33 கோடி ரூபாயும் மட்டுமே செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.,வுக்கு தேர்தல் வியூகம் அமைத்து கொடுத்த பிரசாந்த் கிஷோருக்கே, 380 கோடி ரூபாய் தட்சணை கொடுத்தனர். இதை எந்த கணக்கில் சேர்ந்துள்ளனர் என்பது தெரியவில்லை. 'பொய் சொல்லும் வாய்க்கு, போஜனம் கிடைக்காது' என்று ஒரு சொலவடை உண்டு.
Read 5 tweets
8 Oct
சுருளிமலை அதிசயம்....!

தேனி மாவட்டம் சுருளிமலை அருள்மிகு சுருளிவேலப்பர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலாகும். இங்கு சுருளிவேலப்பர் மூலவராக உள்ளார்.

🇮🇳🙏1
சிவனின் திருமணத்தின் போது அனைவரும் இமயமலைக்குச் சென்று விட வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்ந்தது. இதனால் உலகு சமநிலையை இழக்க சிவன் தென்பொதிகை எனும் இம்மலைக்கு அகத்தியரை அனுப்பி உலகை சமப்படுத்தினார். பின் இங்குள்ள குகையில் அகத்தியருக்கு மணக்கோலத்தில் சிவன் காட்சியளித்தார்.

🇮🇳🙏2
இங்குள்ள அதிசயம் என்னவென்றால் இங்குள்ள விபூதிக்குகையில் மணல் ஈரம் பட்டு காய்ந்த பின்பு விபூதியாக மாறுகிறது. 🇮🇳🙏3
Read 7 tweets
8 Oct
*குலசேகரன்பட்டினம் ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா*

தென்தமிழக ஊர்களில் தனித்துவ சிறப்பானது...!!!

திருச்செந்தூர் : தசரா என்றதுமே, இந்தியர்களுக்கு பெரும்பாலானோருக்கு நினைவுக்கு வருவது, நான்கு இடங்களில் நடைபெறும் தசராக்கள்தான். 

🙏🇮🇳1
1.மைசூரில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு நடைபெறும் பிரமாண்ட பூஜைகள்.

2.யானை அணிவகுப்புகள்.

3.குஜராத்தின் தாண்டியா நடனம்.

4.கொல்கத்தாவின் துர்க்கா பூஜை.

🙏🇮🇳2
ஆனால் தமிழர்களுக்கு அவை எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவின் தென்கோடியில் அனைத்து ஊர்களிலும் கோலாகலமாக கொண்டாடப்படும், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா தான்.

🙏🇮🇳3
Read 38 tweets
7 Oct
நவராத்திரி பற்றி மஹா பெரியவா.

காஞ்சி மஹா பெரியவர், ஒரு நவராத்திரி சமயத்தில் பக்தர்கள் முன்னிலையில் ஆற்றிய அருளுரை

உலகில் தீமை அழிந்து நன்மை பெருகிட நவராத்திரி கொண்டாடப்படுகிறது. ஆண்களுக்கு சிவராத்திரி போன்று, பெண்களுக்கு நவராத்திரி முக்கியம்.
குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகவும், தீர்க்க சுமங்கலியாய் வாழவும் சுமங்கலிகள் இந்த ஒன்பது நாட்களிலும் அம்பிகையை பூஜிக்க வேண்டும்.
முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வழிபட மனதில் தைரியம் வளரும். அடுத்த மூன்று நாட்கள் அம்பிகையை லட்சுமியாக வழிபட செல்வச் செழிப்பு உண்டாகும். அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியாக, தேவியை பூஜிக்க கல்வி வளர்ச்சி மேம்படும். ஞானம் கைகூடும்.
Read 10 tweets
7 Oct
அறிவுரைஒ!..

ஒருமுறை, ராமகிருஷ்ணரின் சீடரான  பிரும்மானந்தர் படகுப் பயணம் மேற்கொண்டார். படகிலிருந்த  ஒருவன், அவரைக் கேலிசெய்தான்.  பிரும்மானந்தர் வருத்தமடைந்தாலும், அவனைத் தட்டிக் கேட்கவில்லை. குருநாதரிடம் சென்று,  நடந்ததைச் சொன்னார்.
ராமகிருஷ்ணர் அவரிடம், நீ ஏன் அவனைக்  கண்டிக்கவில்லை. தவறு செய்பவனைக்  கண்டிப்பாகக் கண்டிக்க வேண்டும், என்றார்.
மற்றொரு முறை, மற்றொரு சீடரான  விவேகானந்தர் படகில் சென்றார். அதே ஆசாமி  படகில் அவருடன் வந்தான். அவன்,  விவேகானந்தரை கேலி செய்ய ஆரம்பித்தான். விவேகானந்தர் மாவீரர் அல்லவா! கை முட்டியை மடக்கி, அவனை ஓங்கிக் குத்தப் போனார். அவன்  அப்படியே ஒடுங்கி விட்டான்.
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(