*வழிகாட்டி சீனி*

கபாலி.... இங்க வா , இந்த கவர கொண்டு போய் , டி.நகர்ல இருக்க நம்ம ஆடிட்டர் குருஜி ராஜுகிட்ட குடுத்திட்டு வா"

சரிப்பா...

"அவரு வீடு தெரியும்ல ?"

அட்ரஸ் குடுப்பா போயிடுவேன்

"நான் ஒரு வாட்டி சொல்றேன் கேட்டுக்க "
கபாலிக்கு பகீருன்னு ஆகிப் போச்சு , ஏன்னா? நம்ப சீனி அட்ரஸ் டீடைல் சொல்றத பத்தி உங்களுக்கு தெரியாது, ஆஹா.கொஞ்சம் அவரு வழி எப்படி சொல்றாருனு கேளுங்க. உங்களுக்கே புரியும்

நேரா ஐஸ் ஹவுஸ் பஸ்டாண்டு போ. அங்க டி நகர் பஸ் இருக்கான்னு பாரு , இல்லை கிண்டி, வடபழனி பஸ் இருக்கா பாரு

"சரி "
" வழி தேனாம்பேட்டை அப்படின்னு போட்டு இருக்கும்............

"இம் .............."

அதுல ஏறிராத, வழி பாண்டி பஜார்னு போட்ருக்கும் , அதுல ஏறு

(ஆஹா இதுதான் சோதனையின் ஆரம்பமா ) சீனி அண்ணாத்தே... எனக்கு தெரியும்ப்பா "

"அதுக்கில்லைடா , நீபாட்டுக்கு மாத்தி போயிட்டா?
பாண்டி பசாருக்கு போறதுக்கு முன்னாடி ஆலையம்மன் கோவில் ஸ்டாப்ல பஸ்ட்டு பஸ் நிக்கும்.... இறங்கிராத, அடுத்து ஹோலி ஏஞ்சல்ஸ் ஸ்கூல் ஸ்டாப்ல நிக்கும்.... அதுலயும் இறங்கிராத , அடுத்தது நாயர் ரோடு ஜன்ங்ஷன்ல சிக்னலுக்காக பஸ் நிக்கும்.... அதிலையும் இறங்கிராத "
அவ்வ்வ்வ்வ்வ்...................என்ங்டா..... அடிச்சு கூட கேப்பாக , அப்பவும் சொல்லிராதிக கதையா இருக்கே?

நேரா பாண்டி பசார் பஸ்டாண்டுல போய் இறங்கு

பாண்டி பஜார்னா ஊருக்கே தெர்யுமேபா... பாண்டி பஜார் பஸ் ஸ்டாண்டுல போய் இறங்குன்னு முதல்லே சொல்லிருக்கலாம்ல?
பஸ்டாண்டுல எறங்கி ரோடை க்ராஸ் பண்ணி... பஸ் வந்த திசைலேயே நடந்தா உடனே லெப்ட்ல பாத்தா ஒரு சந்து போகும்ல?

ஆமா

அதுல போயிராத

உஸ்...........முடியல; வோணாம்........ அழுதிடுவேன்!!!

அதுக்கு அடுத்த சந்துல போனேன்னா, வலது கை பக்கம் முதல்ல ஒரு தெரு வரும்... அதுல போகாதே....
ரெண்டாவது தெரு.... அது பேரு... வெங்கட்ராமன் தெரு.... கபாலி... எங்கே சொல்லு பாக்கலாம்...

ஏம்ப்பா... ரோதனை பண்ற.... நானு கரீட்டா போயிடுவேம்பா... நீ மேல சொல்லுபா

அந்த வெங்கட்ராமன் தெருல திரும்பினேன்னா. பராக்கு பாத்துண்டு போகாதே கபாலி நெறைய வண்டிங்க rashஆ வந்து போயிண்டு இருக்கும்.
நேரா போயிண்டே இருந்தேன்னா ரைட் சைடில் சுஸ்வாத்னு ஒரு ஸ்வீட் ஸ்டால் வரும். அந்த பில்டிங்லயும் நுழையாதே சரியா. ஏன்னா... அந்த பில்டிங்ல ஆடிட்டர் வீடு இல்லை. சரியா?

கபாலி மைன்ட் வாய்ஸ்: சீனி அண்ணாத்தே ருக்கு அண்ணி.. பாவம்பா என்னையே இந்த டகுல் வாங்குறே நெஜங்காட்டியும் அண்ணி பாவம்பா..
என்ன கபாலி.... ஒண்ணும் பேச மாட்டேங்கறே... தலையும் ஆட்ட மாட்டேங்கறே... என்ன ஆச்சு?

ஒண்ணுமில்லபா.... சொன்னா கேக்கவா போறே.... யூ கன்டினியூ...

சரி.... அந்த சுஸ்வாத் எதிரே இருக்கற பில்டிங்ல தான் ஆடிட்டர் இருக்கார்.

(அப்பாடி.... நல்ல வேளை முடிச்சார்.... ) சரிபா..
அந்த பில்டிங்ல நுழஞ்சேனா.... அங்கே நெறைய apartments இருக்கும்... முதல்ல ஒரு மாடிப்படி வரும்.... அதுல போயிடாதே.....

ஐயையோ.... மறுபடியும் மொதல்லேந்தா???? கடவுளே.... காப்பாத்துபா....

"இம் .................(எவ்ளோ நேரந்தான் வலிக்காதது மாதிரியே நடிக்கிறது)"
அந்த வராண்டால நடந்து போனா இன்னொரு மாடிப்படி வரும். அதுல கிடுகிடுன்னு ஏறினா ரெண்டாவது மாடிக்கு போயிடுவே. அது இல்ல ஆடிட்டர் வீடு.

ஏம்பா... அங்கதானே நம்ப ராயப்பேட்ட குமார் அண்ணாத்தே கீறாரு.

அவரு இப்ப அங்க இல்ல கபாலி!!! அவரு இப்போ நம்ப பெங்களூர்ல தான் இருக்காரு.

சரிபா!!!
நீ நிதானமா படி ஏறினா.... முதல் மாடில ஏறின ஒடனே ஒரு அபார்ட்மெண்ட் கதவு வரும். அதுதான் நம்ப குருக்ஜி ஆடிட்டர் ராஜசேகரனோட வீடு!!!

அப்பாடி.... அவரூட்ல இந்த லெட்டரை தரணும்... அப்படித்தானே????

ஏன் கபாலி அவசரப் படறே??? எந்த ரயில புடிக்க போறே????
அதான் ஆடிட்டர் வூட்டாண்ட வந்தாச்ச பா!! பொறவு இன்னாத்துகுபா இப்டி சொல்ற. இந்த லெட்டர அவராண்ட கொட்துட்டு வந்துற்றேன் பா!!!

நான் இன்னும் முடிக்கலை கபாலி!!!!

என்னபா.... இன்னுங்கீதா????
ஆமாம் கபாலி!!! ஆடிட்டர் வீட்டு வாசல்ல left sideல தேடாதே!!! Right sideல தான் calling bell switch இருக்கும். சரியா??? அதை ஒருவாட்டி தான் அழுத்தணும். நல்லா புரிஞ்சதா??? ரெண்டு மூணுவாட்டிலாம் அடிக்கூடாது

ஏம்பா.... இதெல்லாம் சொல்லணுமா... எனக்கே தெரியுமே பா!!!!
அந்த வீட்டுல காலிங்பெல் அடிச்சேன்னா தலையல்லாம் சுருள் முடியோட நம்ப வைஷாலி வயசுல ஒரு பையன் பெர்மூடா போட்டுண்டு வந்து கதவ திறப்பான்

அவராண்ட குடுத்துடவா?

அட அவரு ஆடிட்டர் இல்லைப்பா. அவரு அப்பாதான் தான் ஆடிட்டர். அவரு அப்பா கிட்ட குடுக்க சொல்லி இந்த கவர அவர் கிட்ட குடுத்திட்டு வா
"ஹா, ஹா, ஹா...............ஹா, ஹா, ஹா ...............

கபாலி ஏன்டா சிரிக்கிற?

"இல்ல ருக்கு அண்ணியோ இல்லாட்டா வைஷாலி பொண்ணோ ....எங்காவது போணும்னா வழிய ஏன் ஒன்னாண்ட கேக்கறதில்லேனு இப்போதாம்பா தெரியுது... அத்த நெனச்ச தொட்டு சிரிப்பு வந்துட்சுபா...... ஹா, ஹா, ஹா.......ஹா, ஹா, ஹா....
இத்தொட்டு அல்லாத்துக்கும் சொல்லிங்குது இன்னான்னா.... எங்கீயாவது போறதுன்னா... கூகுள் மேப்ல பாருங்கபா.... எத்தொட்டும்... நம்ப சீனி அண்ணாத்தைய கேக்காதீங்கபா....

அப்டி கேட்டீங்கனா.... இது மாதிரிதான் விலாவாரியா சொல்வாரு....
ஒங்களுக்கு பொறுமை கீதா இல்லியானு டெஸ்ட் பண்ணிக்கணும்னா.... நம்ப சீனி அண்ணாத்தய அணுகவும்!!! அப்றம் ஒங்க இஸ்டம்!!!😢😢😢

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Srinivasa Iyer ஶ்ரீநிவாஸ ஐயர்

Srinivasa Iyer ஶ்ரீநிவாஸ ஐயர் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @srinivasan19041

13 Oct
வம்பில் சிக்கிய சேகர்பாபு !

தமிழக கோவில் வருமானம் 10 லட்சம் கோடி கொள்ளை என H.ராஜா சில மாதங்களுக்கு முன்னர் பேசினார். தற்போது அது உண்மை என நிரூபிக்கும் அளவிற்கு தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்த தகவல்கள் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தமிழகத்தில் கோவில் நகைகளை உருக்குதல், கோவிலை வெள்ளி சனி ஞாயிறு பக்தர்களுக்கு தடை விதித்து மூடி வைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் இல்லை என்றால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என பாஜக மூத்த தலைவர் H.ராஜா எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தமிழக அரசு தெரிவித்துள்ள தகவல்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, தமிழகத்தில் கோவில் நகைகள் 1977ம் ஆண்டு முதலே உருக்கி தங்க கட்டிக்களாக மாற்றப் பட்டுள்ளன எனவும்
Read 13 tweets
13 Oct
The British Prime
Minister was very
worried about a
plague of pigeons
in the City Centre
of London.

He could not remove the pigeons from the city.

All of London was full of pigeon poop, the people of London could not walk on
the pavements or drive on the roads.
It was costing a fortune to keep the streets and pavements clean. Plus the copious droppings posed a
public health hazard

One day a man came to the Parliament House and offered the Prime Minister a proposal :
I can rid your beautiful capital city of its plague of pigeons without
any cost to the city. But,u must promise not to ask me any questions. Or, you
can pay me one million pounds to ask one question.

The Prime Minister considered d offer
briefly & accepted the free proposition
Read 8 tweets
6 Oct
அவசர நவராத்திரி விதிமுறைகள் அரசு அறிவிப்பு: (இப்படியும் இருக்குமோ?) 😂🤣😂🤣😂🤣

1. கொலுவில் பொம்மைகளுக்கிடையே இடைவெளி இருக்க வேண்டும்.

2. ஒரு படிக்கு பத்து பொம்மைகளுக்கு மேல் அனுமதியில்லை.

3. ஏழு படிகளுக்குமேல் அனுமதி இல்லை.
4. சிறப்பு அனுமதியாக தசாவதாரம் செட்டுக்கு தனிப்படி(!) அனுமதி உண்டு. பத்து பேரும் ஒருவரே என்பதால் சமூக இடைவெளி தேவையில்லை.

5. பள்ளிகள், கல்லூரிகள் திறக்க அனுமதி அளித்திருப்பதால் கீதோபதேசம் செட் வைக்க அனுமதி வழங்கப்படுகிறது.
ஆனால் உபதேசம் செய்பவர், பெறுபவர் ஆகிய இருவரும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். கீதோபதேசக் காட்சி தமிழில் இருக்கவேண்டும்.

6. மொத்த பொம்மைகள் அதிக பட்சம் ஐம்பது மட்டுமே இருக்கலாம்.

7. சுண்டல் வழங்கப்படலாம். ஆனால் அவை சானிடைசரால் அலம்பப்பட்டிருக்க வேண்டும்.
Read 7 tweets
5 Oct
''வீட்டுக்கு போகலாம் வா அம்மா''



''அது என்ன புராண பெயர் அஸ்வத்தாமன் என்று, உங்களுக்கு? '' கல்யாணம் ஆனவுடன் மனைவி ஹேமா கேட்ட முதல் கேள்வி.

''இனிமே உங்க பேர் அஸ்வின்'' ஆளையே உச்சந்தலை முதல் உள்ளம் வரை மாற்றிவிட்டாள்
''அஸ்வினி நக்ஷத்ரமாம் எனக்கு, சிரஞ்சீவியா இருக்க நக்ஷத்ரத்திலே பாதி இருக்கிற பேரா அம்மா தேடி இருக்கா, அஸ்வத்தாமன் கிடைச்சான். இதோ இருக்கான் ''

அம்மா ராஜேஸ்வரி மீது கொள்ளை கொள்ளையா அஸ்வாவுக்கு ஆசை, பாசம்.
எல்லாம் 08.02.2000 காலை முஹூர்த்தம் வரையில். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி இருந்த அம்மா தூரமாக நகர்ந்து இப்போது நூறு கி.மீ.தள்ளியொரு முதியோர் இல்லத்தில்.

''என்னை ஏண்டா இங்கே சேர்க்கறே. நான் பாட்டுக்கு சிவனேன்னு ஆத்திலேயே ஒரு மூலையில் கிருஷ்ணா ராமான்னு கிடப்பேனே ''
Read 20 tweets
3 Oct
ஶ்ரீனியின் #கதையளப்பு_களஞ்சியம் வழங்கும்

#கதை_சொல்வது_எழுதுவது_எப்படி???? வரிசையில் இன்று...

#ருசிகர_ருக்மணி

தெரியாத்தனமாக நான் ட்விட்டரில் இருப்பதையும் நானே எதிர்பார்க்காத அளவுக்குக் குறுகிய காலத்திலேயே....
என்னையும் சகபதிவாளர்கள் ஆட்டத்துலே சேர்த்துக்கிட்டாங்கங்கிறதையும் நான் என் பாரியாள்ட்ட சொல்லிட்டேன்.

அவுங்க பேரு ருக்மணி! எங்க குடும்பத்தில் அவங்களை எல்லாரும் #ருசிகர_ருக்மணி ன்னு தான் கூப்பிடுவாங்க
சீனி உன்னோட பதிவுகள் எல்லாம் ஓஹோன்னு இல்லைன்னாலும் ஓகே ரகம்தான் என்று சொல்லிவிட்டு ரொம்ப யோசனையில் இருந்தாள்....
Read 31 tweets
3 Oct
எச்சரிக்கை... விழிப்புணர்வு பதிவு
(Forwarded as received)

#மூன்றாவது_அலை_வரக்கூடாது

இவர்கள் நினைப்பது நடக்கக்கூடாது

ஒரு சாதாரண Surgical Trader கூட 3 வது அலையை எதிர்பார்த்து கிட்டத்தட்ட 50 இலட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை மதிப்பிலான பொருட்களை வாங்கி Godownல் குவித்துள்ளான்
செப்டம்பரில் 3 வது அலை வரும் என்று கணித்தார்கள்.

#ஆனால்_அது_வரவில்லை

இதில் கொடுமை என்னவெனில் 2 ஆம் அலை முடிந்ததும் பல உற்பத்தியாளர்களும் ஜூலை மாதத்தில், தங்களிடம் உள்ள பொருட்களை Clearance Sale, Great Deal என்ற அடைமொழி வைத்து...
தங்களிடம் இருந்த Mask, Sanitizer, Gloves, Pulse Oxymeter என்று அனைத்து Surgical & Pharma Traders தலையில் கட்டிவிட்டார்கள்.

ஜூன் மாதம் 560/- ரூபாய் வரை விற்ற Latex Examination Gloves Box, தற்போது 270 ரூபாய்களுக்கே கிடைக்கிறது. ( 2019 ல் இதன் விலை வெறும் ரூபாய் 130/- மட்டுமே).
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(