''வீட்டுக்கு போகலாம் வா அம்மா''



''அது என்ன புராண பெயர் அஸ்வத்தாமன் என்று, உங்களுக்கு? '' கல்யாணம் ஆனவுடன் மனைவி ஹேமா கேட்ட முதல் கேள்வி.

''இனிமே உங்க பேர் அஸ்வின்'' ஆளையே உச்சந்தலை முதல் உள்ளம் வரை மாற்றிவிட்டாள்
''அஸ்வினி நக்ஷத்ரமாம் எனக்கு, சிரஞ்சீவியா இருக்க நக்ஷத்ரத்திலே பாதி இருக்கிற பேரா அம்மா தேடி இருக்கா, அஸ்வத்தாமன் கிடைச்சான். இதோ இருக்கான் ''

அம்மா ராஜேஸ்வரி மீது கொள்ளை கொள்ளையா அஸ்வாவுக்கு ஆசை, பாசம்.
எல்லாம் 08.02.2000 காலை முஹூர்த்தம் வரையில். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி இருந்த அம்மா தூரமாக நகர்ந்து இப்போது நூறு கி.மீ.தள்ளியொரு முதியோர் இல்லத்தில்.

''என்னை ஏண்டா இங்கே சேர்க்கறே. நான் பாட்டுக்கு சிவனேன்னு ஆத்திலேயே ஒரு மூலையில் கிருஷ்ணா ராமான்னு கிடப்பேனே ''
''அம்மா நீ நன்னா புரிஞ்சுக்கணும். உனக்கு வயசாயிடுத்து, சரியா காது கேக்கலே, கண்ணு தெரியலே. எங்காவது இந்த சலவைக்கல் தரையிலே வழுக்கி விழுந்துட்டா அவ்வளவு தான்.
அப்புறம் ஹேமாக்கு கொஞ்சம் கூட நேரமே இல்லை. எனக்கு காப்பி போட்டுக் கொடுக்கக்கூட நேரமில்லாம நான் தானே எனக்கும் உனக்கும் காப்பி போடறேன்.

அப்புறம், அடிக்கடி என்னை ஆபிஸ்லே வெளியூர் அனுப்பிடறா. எப்போ போவேன் வருவேன்னு எனக்கே தெரியாது. ஒரு நல்ல இடமா பாத்துண்டு இருந்தேன்.
டாக்டர், சாப்பாடு, சங்கீதம், லெக்ச்சர், ஈவினிங் வாக், ஆரோக்யமான அறை அடிக்கடி வந்து பார்த்து வேணும்கிறதை கவனிக்க ஆளு டக்குனு கூப்பிட்ட குரலுக்கு வந்து நிப்பான். நீ படுத்துண்டே கட்டிலில் இருக்கிற பெல் பட்டனை அமுக்க வேண்டியது தான்.
ஆசை வார்த்தைகள் எவ்வளவு காட்டி பேசினாலும் பிள்ளையை பிரிந்து போக தாய் தவித்தாள். போனாள்.



ஆயிற்று வருஷம் நாலு. நடு நடுவே காரை எடுத்துக் கொண்டு அவன் மட்டும் சென்று தாயை பார்த்து சில நிமிஷங்கள் விசாரித்துவிட்டு வருவான்.
தாயின் முகத்தில் அப்போது தோன்றும் சந்தோஷம் சோகக்கோடுகளில் அப்புறம் மறைந்து விடும். சுவற்றைப் பார்த்துக் கொண்டே படுத்துக் கொண்டு பழசை அசை போடுவாள்.

அஸ்வா சொன்னது பொய் என்று அவனுக்கே தெரியும். ஹேமாவுக்கு வீட்டில் கிழவி இருப்பது கண்ணில் முள் குத்தியது.
அது தான் கதை. அதை மறைத்து அஸ்வா அம்மாவிடம் சொன்ன தெல்லாம் டிஸ்டெம்பர் பூச்சு.

காலையில் தினசரி காலண்டர் ஷீட் கிழித்தான்.

#உலக_ஆசிரியர்கள்_தினம் (எந்த நாட்டவனாக இருந்தாலும்... ஒருவனுக்கு அவன் அம்மா தானே முதன்மை ஆசிரியர்????)

அதோடு அம்மாவின் பிறந்தநாள் வேறு.
முன்பெல்லாம் அம்மா பிறந்தநாளுக்கு காலம்பற எழுந்துவிடுவாள் அருகே கோவிலுக்கு செல்வாள் அர்ச்சனை தேங்கா மூடி பழத்தோடு வருவாள் அவனை எழுப்பி விபூதி இட்டு விடுவாள்

ஒரு பாயசம் வடையோடு சாப்பாடு இருக்கும். பள்ளிக்கூடத்தில் எல்லோருக்கும் கேசரி கொடுக்க சொல்லி ஒரு டப்பா நிறைய தருவாள்.
வீட்டுப் பிள்ளையாருக்கு வெல்லக் கொழுக்கட்டை நைவேத்யம் பண்ணி முதலில் அவனுக்கு தருவாள்

பல வருஷங்கள் இப்படியே போய்விட்டது

இன்று அம்மா பிறந்தநாளுக்கு அவனால் அம்மாவை காரில் போய் பார்க்க முடியும். ஆனால் ஹேமாவுக்கு அவளது மாதர் சங்க நிகழ்ச்சிக்கு காலையிலேயே அவளோடு போக வேண்டுமே.
அதல்லவோ முக்கியம்.

சரி அம்மாவுக்கு ஒரு பூச்செண்டு அனுப்புவோம்.

பூச்செண்டு கடைக்கு சென்றான்.

வாசலில் ஒரு சிறு பெண் அழுது கொண்டு நின்றாள்.
லக்ஷியம் பண்ணாமல் நேராக உள்ளே சென்று அம்மாவின் முதியோர் இல்லம் அட்ரஸ் கொடுத்து உடனே 200 ரூபாய்க்கு ஒரு பூச்செண்டு வாழ்த்து அட்டையோடு அனுப்ப பணம் கட்டினான்.

சாயந்திரம் மூன்று-நாலு மணிக்குள் சென்றுவிடுமாம். வெளியே வந்தான்.
வாசலில் அந்த ஏழு எட்டு வயது பெண் குழந்தை இன்னும் அழுது கொண்டே நின்றது.

'ஏம்மா குழந்தே அழறே, உடம்பு சரியில்லையா?''''

*அம்மாவுக்கு ரோஜாப்பூ வாங்கணும். கையிலே காசில்லே'*

அடேடே அவ்வளவு தானே, வா நான் உனக்கு வாங்கித்தரேன்

அந்த குழந்தை முகத்தில் மலர்ச்சி. பூவோடு வாசலில் நின்றாள்'
'எங்கே போகணும்னு சொல்லு நான் போறவழியிலே கார்லேயே கொண்டு விடறேன்''

சந்தோஷமாக தலையாட்டிய குழந்தை வழி சொன்னாள்.

எங்கெங்கோ வளைந்து நெளிந்து சென்ற பாதைகள் கடைசியில் ஒரு குறுகலான சந்தில் ஒரு மூலையில் இருந்த மயான பூமியை காட்டி நிறுத்தத் சொன்னாள்.
அஸ்வா பார்த்துக்கொண்டே இருந்தான்.

உள்ளே ஓடினாள்.

ஓஹோ அவள் தாய் இங்கே தான் வேலை செய்கிறாளோ? என்று காரை விட்டு இறங்கி உள்ளே சென்று கவனித்தான்.

குழந்தை உள்ளே ஓடி ஒரு பக்கமாக புதிதாக மண்ணால் மூடப்பட்ட ஒரு மேட்டின் முன் நின்று விழுந்து அதைக் கட்டிக் கொண்டு படுத்தது. அழுதது.
அம்மாவுக்கு தான் வாங்கி வந்த பூவை வைத்தது. கண்ணை துடைத்துக் கொண்டு நின்றது.

அஸ்வா அந்த குழந்தையின் செய்கையால் உறைந்து போனான்.

அவன் தலையில் மடேர் மடேர் என்று யார் சம்மட்டியால் இப்படி அடிக்கிறார்கள்?
நேராக காரைத் திருப்பிக் கொண்டு பூக்கடைக்கு சென்றான். தான் கொடுத்த ஆர்டர் படி பூங்கொத்தை வாங்கிக் கொண்டான்.

''டெலிவரி வேண்டாம். நானே டெலிவர் பண்ணி விடுகிறேன்''

மூன்று மணிநேரத்திற்கு பின் ஒரு அமைதியான முதியோர் இல்ல வாசலில் அவன் கார் நின்றது.
உள்ளே அம்மாவை கட்டிக்கொண்டு ஆயிரம் முத்தங்கள் கொடுத்தவன் அவள் சாமான்களை எல்லாம் வாரி எடுத்துக் கொண்டு அம்மாவோடு வீடு திரும்பினான்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Srinivasa Iyer ஶ்ரீநிவாஸ ஐயர்

Srinivasa Iyer ஶ்ரீநிவாஸ ஐயர் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @srinivasan19041

6 Oct
அவசர நவராத்திரி விதிமுறைகள் அரசு அறிவிப்பு: (இப்படியும் இருக்குமோ?) 😂🤣😂🤣😂🤣

1. கொலுவில் பொம்மைகளுக்கிடையே இடைவெளி இருக்க வேண்டும்.

2. ஒரு படிக்கு பத்து பொம்மைகளுக்கு மேல் அனுமதியில்லை.

3. ஏழு படிகளுக்குமேல் அனுமதி இல்லை.
4. சிறப்பு அனுமதியாக தசாவதாரம் செட்டுக்கு தனிப்படி(!) அனுமதி உண்டு. பத்து பேரும் ஒருவரே என்பதால் சமூக இடைவெளி தேவையில்லை.

5. பள்ளிகள், கல்லூரிகள் திறக்க அனுமதி அளித்திருப்பதால் கீதோபதேசம் செட் வைக்க அனுமதி வழங்கப்படுகிறது.
ஆனால் உபதேசம் செய்பவர், பெறுபவர் ஆகிய இருவரும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். கீதோபதேசக் காட்சி தமிழில் இருக்கவேண்டும்.

6. மொத்த பொம்மைகள் அதிக பட்சம் ஐம்பது மட்டுமே இருக்கலாம்.

7. சுண்டல் வழங்கப்படலாம். ஆனால் அவை சானிடைசரால் அலம்பப்பட்டிருக்க வேண்டும்.
Read 7 tweets
3 Oct
ஶ்ரீனியின் #கதையளப்பு_களஞ்சியம் வழங்கும்

#கதை_சொல்வது_எழுதுவது_எப்படி???? வரிசையில் இன்று...

#ருசிகர_ருக்மணி

தெரியாத்தனமாக நான் ட்விட்டரில் இருப்பதையும் நானே எதிர்பார்க்காத அளவுக்குக் குறுகிய காலத்திலேயே....
என்னையும் சகபதிவாளர்கள் ஆட்டத்துலே சேர்த்துக்கிட்டாங்கங்கிறதையும் நான் என் பாரியாள்ட்ட சொல்லிட்டேன்.

அவுங்க பேரு ருக்மணி! எங்க குடும்பத்தில் அவங்களை எல்லாரும் #ருசிகர_ருக்மணி ன்னு தான் கூப்பிடுவாங்க
சீனி உன்னோட பதிவுகள் எல்லாம் ஓஹோன்னு இல்லைன்னாலும் ஓகே ரகம்தான் என்று சொல்லிவிட்டு ரொம்ப யோசனையில் இருந்தாள்....
Read 31 tweets
3 Oct
எச்சரிக்கை... விழிப்புணர்வு பதிவு
(Forwarded as received)

#மூன்றாவது_அலை_வரக்கூடாது

இவர்கள் நினைப்பது நடக்கக்கூடாது

ஒரு சாதாரண Surgical Trader கூட 3 வது அலையை எதிர்பார்த்து கிட்டத்தட்ட 50 இலட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை மதிப்பிலான பொருட்களை வாங்கி Godownல் குவித்துள்ளான்
செப்டம்பரில் 3 வது அலை வரும் என்று கணித்தார்கள்.

#ஆனால்_அது_வரவில்லை

இதில் கொடுமை என்னவெனில் 2 ஆம் அலை முடிந்ததும் பல உற்பத்தியாளர்களும் ஜூலை மாதத்தில், தங்களிடம் உள்ள பொருட்களை Clearance Sale, Great Deal என்ற அடைமொழி வைத்து...
தங்களிடம் இருந்த Mask, Sanitizer, Gloves, Pulse Oxymeter என்று அனைத்து Surgical & Pharma Traders தலையில் கட்டிவிட்டார்கள்.

ஜூன் மாதம் 560/- ரூபாய் வரை விற்ற Latex Examination Gloves Box, தற்போது 270 ரூபாய்களுக்கே கிடைக்கிறது. ( 2019 ல் இதன் விலை வெறும் ரூபாய் 130/- மட்டுமே).
Read 10 tweets
2 Oct
#ரவா_லாடு #சாப்பிடுவது_எப்படி?

என் சிறுவயதில் பாட்டி சொல்லிக் கொடுத்ததை கொஞ்சம் ரசிச்சு ருசிச்சு எழுதி இருக்கேன்.

ரவா லாடு/ரவா லட்டு ஒரு சாந்த சொரூபமான இனிப்புப் பண்டம்

ஃபிலிம் காமிக்கற ஸ்வீட்டுகளுக்கு மத்தியில், அமைதியாக அப்பிராணியாக உட்கார்ந்து கொண்டிருக்கும் நம்ப ரவா லாடு
இலுப்பச்சட்டியில் கம்பிப் பதம் வந்து கரண்டியில் புரண்டு நெய் கக்கி டால்டா முழுங்கி பொளுக் பொளுக் என்று கொப்பளம் வந்து டிரேயில் விரிந்து வில்லை வில்லையாகும் பல ஸ்வீட்களைப் போல் இல்லாமல்....

ரவா லட்டு செய்வது மிக மிக சுலபம்.
வெறும் சர்க்கரைப்பொடியும் அதிர்ஷ்டவசமாக அகப்படும் முந்திரிப்பருப்பின் சுவை மட்டும் மேலோங்கி, நாக்கில் இன்ஸ்டண்டாக கரையும் *ரவாலாடு*

அரை பத்தி கூடத் தாண்டாத இந்த ப்ரிபரேஷனை பத்தி தெரியாதவாளுக்கு ருக்குவிடம் கேட்டு பிறகு பதிவு செய்கிறேன். படித்து செய்து பார்க்கவும்.
Read 15 tweets
2 Oct
#ஓரு_ஊர்ல_ஒரு_ராஜா...

*Once upon a time there lived a king*

இப்படி ஆரம்பித்து சொன்ன கதைகள் எல்லாம் என்னாயிற்று?

கனவுகளாக... கற்பனைகளாக... காற்றோடு கரைந்து போயிற்றா?

விளையாட்டுச் சாமான்கள் அலமாரிக்குள் ஓய்வெடுக்க

#நீள்செவ்வக_சிறைபேசிக்குள்_விரலும்_மனமும்_தேயத்தேய
*மண் தொடாத பிஞ்சுப்பாதங்கள் மறந்தே விட்டது வீதிக் கொண்டாட்டங்களை!!!*

பம்பரக்கட்டைகளுக்காய் உயிர்விட்ட மரங்களின் சாபமோ என்னவோ😢😢😢...

சுழலுவதேயில்லை இவை இப்பொழுதெல்லாம்?!?!

ஒருவேளை சாட்டைக்கயிற்றில் தற்கொலை செய்து கொண்டதோ???
ஒழுகும் வேர்வையை சட்டையில் துடைத்தபடி குதூகலமாய் ஏறிக்கொள்ளும்

பஞ்சுமிட்டாய் கண்ணம்மாக்களின் தாமதமாகும் வருகையை நினைத்தபடி...

ராட்டினங்கள் ஏங்கித் தான் போகின்றன...😢😢😢

விடிந்ததும் ஆழியோர வளைவிலிருந்து இரைதேட வரும் நண்டுகள்.....
Read 10 tweets
2 Oct
#Lal_Bahadur_Shastri

#Shastri ji: The man who took a charkha as dowry

#Shastri ji: The man who after loosing his father at the age of 2, walked miles barefoot to school and college.
#Shastri ji: The man who used to tie his books on his head and swim across the river twice to reach school.

#Shastri ji: The man who resigned as Railway Minister, when many people lost their lives in a rail accident, as he held himself responsible
#Shastri ji: The man who walked home everyday, so that he could save the hutments of poor people , which were coming in the way of road widening work.

#Shastri ji: The man who first stood up to Pakistan and came up with Jai Jawan Jai Kisan term.
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(