#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் காவிரிக் கரையிலுள்ள மணலில் சிறுவர்கள் கூடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த ஒரு கல்லை எடுத்து நிமிர்த்தி வைத்து, இவர் தான் இனி நம் பெருமாள் என்று சொன்னார்கள். அந்தப் பெருமாளுக்குப் பிரசாதமாக மண் உருண்டைகளையே எடுத்து நிவேதனம் செய்தார்கள். தங்களுடைய
விளையாட்டு, பார்ப்போரின் கண்களுக்குக் கோயிலில் நடைபெறும் நித்திய பூஜையைப் போலவே தெரிய வேண்டும் என்று கருதினார்கள் அச்சிறுவர்கள். அதனால் ஒருவன் அர்ச்சகரைப் போலவும் ஒருவன் மடப்பள்ளி சமையல்காரரைப் போலவும், சிலர் வேதம் ஓதுவாரைப் போலவும், சிலர் ஆழ்வார் பாசுரங்களை ஓதுவார் போலவும்,
சிலர் ஸ்ரீபாதம் தாங்கிகள் போலவும் பலவாறு வேடமிட்டுக் கொண்டார்கள். அச்சிறுவர்களுள் ஒருவன் கோயிலில் முதல் மரியாதைகளைப் பெறும் ராமாநுஜரைப் போல் காவி உடை அணிந்து கொண்டான். கோவிலில் பிரசாத நிவேதனம் ஆனவுடன், அர்ச்சகர், “ஜீயரே வாரும்” என்று ராமாநுஜரை முதல் மரியாதை பெற்றுக் கொள்வதற்காக
அழைப்பது வழக்கம். அது போல் இங்கேயும் அர்ச்சகர் வேடமணிந்திருந்த சிறுவன் ராமாநுஜர் வேடத்திலிருந்த சிறுவனைப் பார்த்து, “ஜீயரே வாரும்” என்று அழைத்தான்.
ஆனால் தற்செயலாக அங்கே வந்த ராமாநுஜர், ஜீயரே வாரும் என்ற குரலைக் கேட்டு, “அடியேன் தாசன்” என்று சொல்லிக் கொண்டு ஓடி வந்தார். “பகவத்
பிரசாதம்” என்று சொல்லி மண் உருண்டையை அந்தச் சிறுவன் ராமாநுஜரிடம் தந்தான். யாம் பெறும் சம்மானம் என்று சொல்லிக் கண்ணில் ஒற்றிக் கொண்டு மண் உருண்டைப் பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டார் ராமாநுஜர். ராமாநுஜரின் சீடர்கள் இக்காட்சியைக் கண்டு திகைத்துப் போனார்கள். என்ன சுவாமி இது? மண்
உருண்டையைப் போய் பிரசாதம் என்று சொல்லி வாங்கிக் கொள்கிறீர்களே என்று ராமாநுஜரிடம் கேட்டார்கள். மண் உருண்டை என்று சொல்லாதீர்கள். இது பெருமாள் அமுது செய்த பிரசாதம். பெருமாளின் வாய்க்குச் செல்வதற்கு முன்னால் வாழைப் பழம், மாதுளம்பழம், திராட்சைப் பழம் எனப் பிரித்துச் சொல்லலாம். ஆனால்
எப்போது அவரிடம் சென்று திரும்பி வந்து விட்டதோ, அதன்பிறகு அனைத்துமே பிரசாதம்தான். அதில் வேறுபாடில்லை. இந்த மண் உருண்டையும் பிரசாதமே என்றார் ராமாநுஜர். சீடர்களோ, சுவாமி! முதலில் அங்கு இருப்பவர் பெருமாளே இல்லை. குழந்தைகள் ஒரு கல்லை வைத்து அதற்கு நிவேதனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்கிரகத்துக்கா நிவேதனம் செய்தார்கள் என்று கேட்டார்கள். அதற்கு ராமாநுஜர், சீடர்களே! உங்களுக்குக் கீதை தெரியாதா? “யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம்” (என் பக்தர்கள் எந்த வடிவில் என்னை வழிபடுகிறார்களோ, அந்த வடிவில் நான் வந்து அவர்களுக்கு
அருள்புரிவேன்) என்று கண்ணன் கூறியுள்ளானே! நம் பொய்கையாழ்வார்,
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமர் உகந்தது எப்பேர் மற்றப்பேர் - தமர் உகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே
அவ்வண்ணம் ஆழியான் ஆம்
என்று பாடியுள்ளாரே!
அடியார்கள் எந்த வடிவில் பெருமாளை வழிபட
விரும்புகிறார்களோ, அந்த வடிவில் அவர்களுக்கு அவர் காட்சி தருகிறார் என்பதைக் கண்ணனும் ஆழ்வார்களும் இவ்வளவு தெளிவாகச் சொல்லியிருக்கும் போது, இந்தச் சிறுவர்கள் தங்கள் பிஞ்சு மனதில் பக்தியோடும், இந்தக் கல்லில் பெருமாள் உள்ளார் என்ற நம்பிக்கையோடும் பூஜை செய்கையில், அந்தக் கல்லில்
பெருமாள் இருப்பாரா மாட்டாரா?” என்று சீடர்களைப் பார்த்துக் கேட்டார். நிச்சயம் இருப்பார் என்று கூறினார்கள் சீடர்கள். அப்படியானால் நீங்களும் சென்று பிரசாதம் பெற்றுக் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொன்னார் ராமாநுஜர். தபஸ் என்றால் சிந்தனை என்று பொருள். தப ஆலோசனே என்கிறது வடமொழி நிகண்டு
அடியார்கள் தம் மனதில் சிந்திக்கும் வடிவம் எதுவோ, அச்சிந்தனையிலுள்ள வடிவையே தன் வடிவாகக் மாற்றிக் கொள்ளும் விதமாக திருமால் விளங்குவதால், ‘ஸுதபா:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 197-வது திருநாமம். “ஸுதபஸே நமஹ” என்று தினமும் நாம் சொல்லி வர விரும்பிய நற்பலன்களை நாம்
விரும்பிய படி திருமால் தந்து அருள்வார்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

25 Oct
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் துரோணர் அரச குடும்பத்து ஆசிரியர், எல்லா விதத்திலும் அரசனுக்கு கட்டுபட்டவர், அவனை மீறி அவர் ஏதும் செய்துவிட முடியாது. சுருக்கமாக சொன்னால் அரச குடும்பத்து அடிமைகளில் ஒருவர் எனலாம். அந்நாளில் எல்லோரும் எல்லாம் பயின்றால் அரசுக்கு எதிரான சக்திகள் தலையெடுக்கும் Image
என்பதால் ராஜவம்சத்துக்கு மட்டுமே, ஷத்ரிய வம்சத்துக்கு மட்டுமே சில பயிற்சிகள் கற்றுக்கொடுக்கபடும்.
அவ்வகையில் பாண்டவரும், கௌரவரும் பயில்கிறார்கள். அவர்கள் அரங்கேற்றம் முடிந்தபின்புதான் ஏகலைவன் என்றொருவன் இருப்பதும் அவன் வில்வித்தையில் அர்ஜூனனையும் மிஞ்சி நிற்பதும் அறியபடுகிறது.
அரசு வாரிசுகளையும் மீறி ஒருவன் வித்தையில் மிஞ்சி நிற்பது அரச குடும்பத்துக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல, அவன் எதிரிகளின் கையில் கிடைத்தால் முடிந்தது கதை. ஏகலைவன் மன்னன் ஜராசந்தன் பகுதியில் வாழ்ந்த வேடுவ தலைவனின் மகன். அர்ஜூனனை மீறி ஜொலித்து நின்றான் ஏகலைவன். ஏகலைவன் குரு என யார் என
Read 16 tweets
24 Oct
Our country is a repository of spirituality blended with humanness. God is celebrated as part of us. There is a temple situated in #Thiruvarppu in Kottayam Kerala which is at least 1500 years old. Lord Krishna here is said to be always hungry. So all the 23.58 hours, 365 days the Image
temple is open. The temple is closed for only 2 minutes, from 11.58 pm to 12.00 am. Unlike other temples the priest here is given an Axe along with the key to reopen the door in the early hours (after closing for minutes). Since Krishna cannot tolerate hunger, if there is any Image
delay in opening the door with the key, the priest is permitted to break open the latch with an axe. It is believed that Lord Krishna's idol in the Temple is very exhausted Krishna after killing Kamsa. So after the Abhishekam is over first the lord's head is dried, the naivedyam Image
Read 8 tweets
24 Oct
#ஶ்ரீகிருஷ்ணன்கதைள் கப்பல் ஒன்று கடலில் வழி தவறி செல்லும்போது புயலில் சிக்கி மூழ்கிவிடுகிறது. அதில் ஒருவன் மட்டும் தப்பி அருகிலுள்ள தீவில் கரையேறுகிறான். இறைவா இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்துவிடு. ஆள் அரவமற்ற இந்த தீவில் எத்தனை நாள் நான் இருப்பது? என் மனைவி மக்களை Image
பார்க்க வேண்டாமா என்று பிரார்த்திக்கிறேன். ஏதாவது ஒரு ரூபத்தில் தனக்கு உதவிக்கரம் நீளும் என்று தினசரி எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்துவிடுகிறான். தன்னை காத்துக்கொள்ள தீவில் கிடைத்த பொருட்கள் மற்றும் கப்பலின் உடைந்த பாகங்கள் இவற்றை கொண்டு ஒரு சிறிய குடிசை ஒன்றை கட்டுகிறான்.
அதில் கரை ஒதுங்கிய கப்பலில் இருந்த தனது பொருட்கள் மற்றும் உடமைகள் சிலவற்றை மட்டும் பத்திரப்படுத்தி தானும் தங்கி வந்தான். இப்படியே நாட்கள் ஓடுகின்றன. இவன் பிரார்த்தனையை மட்டும் விடவில்லை. கடவுள் ஏதாவது ஒரு ரூபத்தில் நமக்கு நிச்சயம் உதவுவார் என்று நம்பினான். ஒரு நாள் இவன் உணவு
Read 9 tweets
24 Oct
திருவாரூரை அடுத்த சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேங்கட சுப்பிரமணியம். வேத விற்பன்னர். மகாபெரியவர் சன்னிதானத்தில் முதல் பக்தர். ஒரு முறை மகாபெரியவர் மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு விஜயம் செய்தார். கற்பகாம்பாள் சன்னிதியில் கொடுக்கப்பட்ட குங்குமப் பிரசாதத்தைப் பார்த்ததும், அந்தக் Image
#குங்குமம் சுத்தமான தயாரிப்பாக இருக்க முடியாது என்று அவருக்குத் தோன்றியது. தூரத்தே கோஷ்டியில் நின்று கொண்டிருந்த வேங்கட சுப்பிரமணியத்தை அருகில் வரும்படி கட்டளையிட்டார்.
உனக்கொரு வேலை கொடுக்கப் போறேன். செய்வியா என்றார். உத்தரவு என்றார் வேங்கட சுப்பிரமணியம். தமிழ்நாட்டில் பல
கோயில்களில் அம்பாள் சன்னிதியில் கொடுக்கப்படும் குங்குமம் அசலான தயாரிப்பாக இல்லை. எனவே பக்தர்களுக்காக நீ சாஸ்திரோக்தமாக குங்குமம் தயாரிக்க வேண்டும் என்று ஆக்ஞையிட்டார் மகாபெரியவர்.
மகாபெரியவர் கட்டளையிட்டவுடன் வேங்கட சுப்புரமண்யம் வேதங்கள், உபநிஷத்துக்கள், அம்பாளின் மகத்துவத்தை
Read 15 tweets
22 Oct
கோமாதாவான பசுவை வழிபடுவது மிகவும் மகத்துவமானது. அனைத்திலும் வெற்றியைத் தரவல்லது. பசுவின் கண்கள் சூரிய சந்திரர்; வால் பகுதி ராகுவும் கேதுவும்; மடிக் காம்புகள் நான்கும் வேதங்கள்; நாசிகளில் முருகனும் விநாயகரும் திகழ்கிறார்கள். பசுவின் நெற்றியில் சிவனும் கழுத்துப் பகுதியில் Image
திருமாலும் பிரம்மனும், கால் பகுதியில் அனுமனும் திகழ, வயிற்றுப் பகுதியில் தேவர்களும் ரிஷிகளும் யாகம் புரிகிறார்கள். பசுவின் பின்புறத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள். அதனால் பசு தெய்வாம்சம் பொருந்தியது. பசுவை மூன்று முறை வலம் வந்து வணங்கினால் அனைத்துத் தெய்வங்களையும் தீர்த்தங்களையும் Image
வலம் வந்த புண்ணியம் கிடைக்கும்.
இறந்த பிறகு ஆத்மாவானது அதிபத்ர வனத்தைக் கடந்து வைத்ரன்ய நதியின் முன் பிறவி மோட்சம் வேண்டி நிற்கும்போது அந்த நிலையை அடைய கோ பூஜை மற்றும் கோ தானம் செய்த புண்ணியமே உதவும் என்கிறது கருடபுராணம். மாட்டின் வயிற்றிலிருந்து கன்று வெளிப்படும்போது முப்பத்து Image
Read 5 tweets
22 Oct
மனநோய் தீர்த்து மன அமைதி தருபவர் குணசீலம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள். திருக்கரத்தில் செங்கோல் ஏந்தியபடி காட்சி தருகிறார் குணசீலம் பெருமாள். இங்கே உள்ள பிரசன்ன வேங்கடாசலபதியை மனதாரத் தொழுதால் மனதில் நல்ல குணத்தை விதைப்பார். ஐஸ்வர்யமும் தந்தருள்வார்.
திருச்சி- சேலம் ரோட்டில் Image
திருச்சியில் இருந்து 24 கி.மீ. தூரத்தில் குணசீலம் என்ற இடத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில். மூலவர் பிரசன்ன வெங்கடாஜலபதி. உற்சவர் ஸ்ரீனிவாசர். திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசித்த குணசீலர் என்ற பக்தர், காவிரிக்கரையில் இருந்த தனது ஆஸ்ரமத்தில் பெருமாள் எழுந்தருள Image
வேண்டுமென விரும்பினார். இதற்காக தவமிருக்கவே, சுவாமி அவருக்கு காட்சி கொடுத்தார். குணசீலரின் வேண்டுதலின்படி இங்கேயே எழுந்தருளினார்.
குணசீலரின் பெயரால் அப்பகுதிக்கு குணசீலம் என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு சமயம் குணசீலரின் குரு தன்னுடன் இருக்கும்படி அவரை அழைத்தார். குணசீலர் தன் சீடன்
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(