#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் தினமும் காலையில் ஒரு அந்தணரின் வீட்டு திண்ணையில் அமர்ந்து ஸ்ரீனிவாசர் என்பவர் கிருஷ்ணனின் பாகவத கதையை உபன்யாசம் செய்து வந்தார். அவ்வூரில் உள்ள அனைவரும் கேட்டு ரசித்து வந்தனர். அவ்வூரின் தலைவரும் அதை விருப்பத்துடன் கேட்டு ரசித்து வந்தார். ஒரு நாள் கிருஷ்ணனும்
பலராமனும் பசுக்களை மேய்த்த கதையை கூறி உபன்யாசம் செய்தார். கிருஷ்ணன் கழுத்தில் உள்ள பொன் நகைகள் பலராமன் கழுத்தில் உள்ள பொன் நகைகள் பற்றியும் அழகாக வர்ணித்து அன்றைய உபன்யாசத்தை முடித்து கிளம்பினார். சிறிது தூரம் நடந்திருப்பார் ஹோய் சற்று நில்லும் என்று குரல் ஒரு மரத்தின் மறைவில்
இருந்து வந்தது. ஸ்ரீனிவாசரும் நின்று அழைத்தது யார் என்று பார்த்தார். கையில் கத்தியுடனும் ஒட்டிய வயிறுடனும் திருடன் ஒருவன் நின்றிருந்தான். ஸ்ரீனிவாசர் அதிர்ச்சியாகி ஓட, திருடன் அவரை பிடித்து மரத்தின் மறைவுக்கு அழைத்து சென்று அவரின் கழுத்தில் கத்தியை வைத்து சத்தம் போடாமல் நான்
கேட்பதற்கு மட்டும் பதில் கூறு, உன்னிடம் பொருள் ஏதும் இல்லை என்று எனக்கு தெரியும். ஆனால் சற்று முன் இரு சிறுவர்கள் பல நகைகள் அணிந்து மாடு மேய்க்க வருவதாக சொன்னியே அவர்கள் எங்கே வருவார்கள் என்று சொல்லு உன்னை விட்டு விடுகிறேன் என்றான். ஸ்ரீனிவாசர் உள்ளுக்குள் சிரித்து கொண்டே பாகவத
கண்ணன் கதையை நிஜம் என்று நம்பிவிட்டான் போல. இப்போது இவனிடம் இருந்து தப்பிக்க கதையை நிஜம் போல் காட்டிக் கொள்ள வேண்டியதுதான் என்று, அப்பா இங்கிருந்து எட்டு மைல் தூரம் நடந்து சென்றால் ஒரு காடு வரும் அங்கே தான் அந்த சிறுவர்கள் வருவார்கள். இப்போது உச்சி வெயில், அவர்கள் வரும் சரியான
நேரம் இதுதான். நீ உடனே கிளம்பி சென்றால் அவர்களிடம் இருந்து நகைகளை எடுத்து கொள்ளலாம் என்றார். திருடன் உடனே, நான் இப்பொழுதே கிளம்புகிறேன். நான் திருடும் நகைகளில் உனக்கு ஏதும் பங்கு வேண்டுமா என்று கேட்டான். அவரோ அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் எல்லாம் நீயே வைத்துக்கொள். இப்போதைக்கு நீ
என்னை விட்டால் போதும் என்றார். திருடனும் அவருக்கு நன்றி கூறி விட்டு அவர் சொன்ன காட்டை நோக்கி விரைந்தான். காட்டை அடைந்து ஒரு மரத்தின் ஓரம் அமர்ந்து சிறுவர்கள் வரவுக்காக காத்திருந்தான். சில நிமிடங்கள் கழிந்ததும் பசு கூட்டங்களை மேய்த்த படி கண்ணனும் பலராமனும் சிரித்து பேசிக் கொண்டு
வந்தனர். அதை பார்த்ததும் திருடனுக்கு மகிழ்ச்சி! உபன்யாசகர் ஏமாற்றவில்லை, அவர் கூறியது போல் சூரியனை போல் மின்னும் நகைகளை அணிந்து வந்திருக்கிறார்களே இந்த சிறுவர்கள். நகைகள் அணிந்திருப்பதால் இப்படி ஒளி வீசுகிறதா அல்லது அவர்களின் உடம்பில் இயற்கையிலே இப்படி ஒளி வீசுமா என்று நினைத்தவன்
சரி, வந்த வேலையை பார்ப்போம் என்று கத்தியுடன் அவர்கள் முன் போய் நின்றான். திருடனை பார்த்து, ஐயோ அண்ணா திருடன் எனக்கு பயமா இருக்கு என்று கண்களை மூடிக்கொண்டான் மாய கண்ணன். பலராமனோ, என்னது திருடனா? ஐயோ நீ சொன்னதை கேட்டதும் எனக்கு உடல் நடுங்குகிறதே என்றான். திருடன், அட இருவரும்
பயந்தாங்கோலிகளாக இருக்கிறார்களே நாம் வந்த வேலை எளிதாக முடியும் என்று நினைத்தவாறு, சிறுவர்களே! எனக்கு தேவை நீங்கள் அணிந்திருக்கும் நகைகள் தான். ஒழுங்காக நகைகளை கழட்டி நான் காட்டும் துணியில் போட்டு விட்டால் நான் வந்த வழியே போய் விடுவேன் இல்லையென்றால் கத்தியால் குத்தி விடுவேன்
என்றான். அவர்கள் பயந்துகொண்டே நாங்கள் நகைகளை தருகிறோம் என்று நகைகள் அனைத்தையும் கழட்டிக் கொடுத்தனர். அவற்றை ஒரு மூட்டையாக கட்டிய திருடன் கிளம்ப ஆயத்தமானான். அப்போது கண்ணன் நண்பனே நில் உன்னை பார்த்தால் வெகு நாட்களாக சரியாக சாப்பிடாதவன் போல் தெரிகிறது. இந்தா நாங்கள் கொண்டுவந்த உணவை
சாப்பிட்டு விட்டு செல் என்றான். திருடனும் பசியோடு இருந்ததால் உணவை வாங்கி வாயில் வைக்க போனான், பின் அப்படியே உணவை வைத்து சாப்பிடாமல் உணவை பார்த்துக்கொண்டே கண்ணீர் விட்டான். அப்போது கண்ணன் மெதுவாக என்ன நண்பா உணவு சூடாக இருக்கிறதா என்றான். திருடன் கண்ணீருடன் இல்லை எனக்கு உங்களை போல
இரு மகன்கள் இருக்கிறார்கள். தினமும் நான் வீட்டை விட்டு கிளம்பும்போது ஒட்டிய வயிற்றுடன் அப்பா பசி தாங்க முடியவில்லை இன்றாவது உணவுடன் வாருங்கள் என்று அழுவார்கள் அவர்கள் ஞாபகம் வந்து விட்டது அதான் என்று அழுதான். கண்ணன் திருடனின் தலையை வருடினான். உடனே அந்த திருடன் உடம்பில் எதோ சக்தி
கிடைத்தது போல் இருந்தது. உடனே எழுந்து சிறுவர்களே நீங்கள் யார் என்று எனக்கு தெரியவில்லை. இதுவரை என் மனதில் இருந்த திருட்டு எண்ணமெல்லாம் மறைந்து போய் போய் விட்டது. இந்தாருங்கள் உங்கள் பொருள் எனக்கு எதுவும் வேண்டாம் நான் இனி உழைத்து என் குடும்பத்தின் வறுமையை போக்கி கொள்கிறேன் என்று
கிளம்பினான். நில் நண்பனே என்று அவனை தடுத்த கண்ணன் உனக்கு நகைகள் வேண்டாம் என்று கூறிவிட்டாய். சரி பாவம் உனக்கு வழி காட்டிய அந்த ஸ்ரீனிவாசர் மிகவும் கஷ்டப்படுகிறாரே அவரிடம் இந்த நகைகளை கொடுத்து விடு என்றார். திருடனும் சரி, சரியான யோசனை தான் ஆனால் அவரது வீடு எங்கு இருக்கிறது என்று
எனக்கு தெரியாதே நான் எப்படி அவரிடம் இதை கொடுப்பது என்றான். கண்ணன், கவலை வேண்டாம் நான் வழி சொல்கிறேன் நீ கொடுத்துவிட்டு வா. ஒரு வேளை அவர் நகைகள் வேண்டாம் என்றால் என்னிடம் அழைத்து வா நான் அவரை சம்மதிக்க வைக்கிறேன் என்றார். திருடனும் ஸ்ரீனிவாசரின் வீடு வந்து அவரிடம் நடந்ததை கூறினான்
அவர் சிரித்து கொண்டே அட போப்பா நான் ஆச்சாரப்படி வாழ்ந்து அனுதினமும் கண்ணனுக்கு பூஜை செய்து அவனது கதைகளை கூறிவருகிறேன், என் கண்ணுக்கே இதுவரை அவன் தென்படவில்லை. நீ அவனை பார்த்தேன் என்கிறாயே. உனக்கு பொருள் கிடைக்காத விரக்தியில் மூளை பிசகிவிட்டது என்றார். அதற்கு அவன், நான் சொல்றத
நம்பலைனா இங்க பாருங்க நீங்க சொன்ன அத்தனை நகைகளும் இதுல இருக்கு. நீங்க சொன்ன சிறுவர்களின் அங்க அடையாளம் சொல்றேன் கேளுங்க என்று கண்ணன் பலராமன் அடையாளங்களை சொல்லி நகைகளையும் காட்டினான். அவன் கூறிய அடையாளங்களை கேட்டும் நகைகள் அனைத்தையும் பார்த்த அவர் திகைத்து எல்லாம் சரியாக
சொல்கிறானே ஒரு வேளை உண்மையில் கண்ணனை பார்த்திருப்பானோ, சரி இவனுடன் போய் பார்த்துவிடுவோம். எதற்கும் துணைக்கு இவ்வூர் தலைவரையும் அழைத்து செல்வோம் என்று அவரையும் அழைத்து காட்டுக்குள் சென்றனர் மூவரும். அங்கே காடு வெறிச்சோடி இருந்தது யாருமே இல்லை. ஊர்த்தலைவர், ஏண்டா எங்கயோ கோயிலில்
நகையை கொள்ளையடித்து விட்டு கண்ணன் கொடுத்தான் என்று கதையா விடுகிறாய், உன்னை சிறையில் அடைத்து சித்திரவதை செய்தால் தான் உண்மை வெளிவரும் என்றார் கோபமாக. திருடன் மண்டியிட்டு, சிறுவர்களே என்னை நண்பா என்று எவ்வளவு உரிமையுடன் அழைத்தீர்கள் அன்பாக உணவு கொடுத்து உபசாரம் செய்திர்கள். இதுவரை
திருட்டுத்தொழிலை குல தொழிலாக செய்து வந்த என் மனதை மாற்றி என்னை அறிய செய்திர்களே, இப்போது எங்கு போனீர்கள் வாருங்கள். என்னை நீங்கள் நண்பன் அழைத்தது உண்மையானால் வாருங்கள் என்று அழைத்தான். அப்போது ஒளி பிழம்பாக கண்ணன் மட்டும் தோன்றினான். திருடனை பார்த்து என்ன நண்பா அழைத்தாயா என்றான்.
திருடன் சந்தோசமாக சிறுவன் கண்ணன் வந்துவிட்டான் பாருங்கள் என்றான். ஆனால் அவர்கள் கண்ணுக்கும் கண்ணன் தெரியவில்லை. ஊர் தலைவரும் ஶ்ரீனிவாசரும், நீ உன் திருட்டை மறைக்க எங்களை பைத்தியம் ஆக்குகிறாயா? இப்போதே உன்னை அழைத்து போய் சிறையில் அடைக்கிறோம் என்று அவனை இழுத்தனர்.
அப்போது,
நில்லுங்கள்! என் நண்பனை அழைத்து சென்று சிறையில் அடைக்க நீங்கள் யார் என்று ஒரு குரல் அசிரியாக கேட்டது. மூவரும் அதிர்ச்சியாகி நிற்க குரல் தொடர்ந்தது. வேதங்களை படித்து ஆச்சாரமாக பூஜை செய்தால் போதுமா, நம்பிக்கை என்கிற உயிரோட்டம் அதில் இருக்க வேண்டாமா? கதை என்று நினைத்து வாழ்வோருக்கு
எல்லாம் கண்ணன் வருவதில்லை. உண்மை என்று நம்பி அழைப்பவருக்கே கண்ணன் வருவான். ஶ்ரீனிவாசரும் ஊர்தலைவரும் தரையில் மண்டியிட்டு கண்ணா எங்கள் தவறை மன்னித்து விடு, உன்னை நம்பிக்கையோட காண எங்களுக்கும் அருள் புரிவாய் அய்யா என்று அழுதனர். கண்ணன் அசீரியாக நம்பிக்கையோடு என் நகைகளை கவர்ந்து
செல்ல வந்த என் நண்பனின் கையை பற்றுங்கள். நான் உங்கள் கண்களுக்கு தெரிவேன் என்றான். இருவரும் அப்படியே செய்ய ஸ்ரீகிருஷ்ணன் அவர்கள் கண்களுக்கு தெரிந்து நகைகள் அனைத்தும் தன் நண்பனுக்கே சொந்தம் என்று கூறி மறைந்தான். நம்பிக்கையோடு நாமும் ஸ்ரீகிருஷ்ணன் கதைகளை தினந்தோறும் கேட்டு,
படித்து, தியானித்து காத்திருப்போம், ஸ்ரீகிருஷ்ணன் நம்மையும் தேடி நிச்சயம் வருவான், அருள் புரிவான்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
@threadreaderapp please compile thanks.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

14 Nov
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் எப்பொழுதும் தன்னந்தனியாக வேட்டையாடுவதை விருப்பமாக கொண்ட அரசன் கஜேந்திரன் வழிதவறி காட்டுக்குள் வெகுதூரம் சென்றுவிட்டான். காட்டில் முனிவர் ஒருவர் குடில் அமைத்து தங்கி இருப்பதை கண்டு அன்று இரவுப் பொழுதை அங்கேயே கழிக்கலாம் என்று முனிவரிடம் தங்க அனுமதி கேட்டான். Image
முனிவரும் தாராளமாக தங்கி கொள்ளுங்கள் அரசே என கூறினார். இருவரும் அந்த சிறிய குடிலில் தூங்க ஆரம்பித்தனர்.
முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த இரவில் குடிலைச் சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன. அரசரால் தூங்கவே முடியவில்லை. அவர் அன்று முழுவதும் வேட்டையாடி களைத்து இருந்தார். மறுநாளும்
அலைச்சல் இருக்கிறது.
அதை நினைக்க நினைக்க அரசருக்குக் கோபம் அதிகமானது. நாய்களோ வெறித்தனமாகக் குரைத்து இரவின் அமைதியைக் கெடுத்தன. இத்தனைக்கும் மத்தியில் முனிவர் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பிய அரசர் கஜேந்திரன், என்ன மனிதர் அய்யா நீங்கள்? இவ்வளவு சத்தத்துக்கு
Read 10 tweets
14 Nov
சீதையும் பூமிக்குள் மறைந்து லக்‌ஷ்மணனும் சரயுவில் இறங்கிய பின் ஜனகரின் மனைவி சுனயனா அந்த துக்கத்தில் இருந்த போது இன்னுமொரு அதிர்ச்சியை தாங்கிய செய்தி அயோத்தியில் இருந்து மிதிலை வந்தடைந்தது. ராமனும் பரதனும், சத்ருக்கனனும் சரயு நதியில் இறங்கி சித்தி அடையப் போகிறார்கள் என்பதே அது.
‘ராமனும், பரதனும், சத்துருக்கனனும் சித்தி அடையும் நாளில் நாமும் அயோத்தியில் இருப்பது நல்லது. கணவரை இழந்து நம் புதல்விகள் உணர்ச்சிவசப்பட்டு அழுவார்கள். நேரில் சென்று ஆறுதல் கூற வேண்டியது நம் கடமை’ என முகத்தில் சாந்தி தவழச் சொன்னார் ஜனகர். தன் கணவர் ஜனகர் எதற்கும் எப்போதும்
பதற்றப்படமாட்டார் என்பதை சுனயனா அறிவாள். அவர்கள் இருவரும் நேரே தேரில் சரயு நதிக்கரைக்குச் சென்றனர். நதியின் கரையில் ராமனும் பரதனும் சத்ருக்கனனும் தங்கள் மாமனார் மாமியாரின் வரவுக்காக காத்திருந்தார்கள். மூவர் முகத்திலும் தாங்கள் சித்தி அடைய முடிவேடுத்துள்ளதைப் பற்றி எந்த சலனமும்
Read 20 tweets
13 Nov
I want to share this beautiful story on what is Dharmam. It really touched me.
இந்த சம்பவம் நடந்து ஏறக்குறைய 80 ஆண்டுகளுக்கு மேலாகிறது. மகா பெரியவா மீது அளவற்ற பக்தி கொண்ட ஒரு முதியவர், இறக்கும் தருவாயில், தன் மகனை அருகே அழைத்துப் பல விவரங்களைச் சொன்னார். கடைசியாகத் தான் ரூ.100
ஒருவரிடம் கடன் பட்டதாகவும், அதை மகன் தான் திருப்பித் தரவேண்டும் என்று சொல்லியபின் உயிர் துறக்கிறார். அப்போது மகனுக்கு 62 வயது. கிராமத்தில் கர்ணம் வேலை பார்த்தவர். அவருக்கு சம்பளம் ₹15 ரூபாய். தனது தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, மூன்று வருடங்கள் சிரமப்பட்டு ₹100
சேர்த்து விட்டார். ஆனால் தந்தைக்குக் கடன் கொடுத்தவர் யாரென்றே தெரியாத நிலை. சேமித்து வைத்த பணத்தை எங்கே கொண்டு போய்த் தருவது? காஞ்சி மகானின் பரம பக்தரான தனது தந்தையின் கடன் விவகாரம், ஒருவேளை மகானுக்குத் தெரிந்திருக்குமோ என்று காஞ்சி வந்த அவர், மகானிடம் விவரத்தைச் சொல்கிறார். ஒரு
Read 9 tweets
13 Nov
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் அழகிய குளம். அந்த குளத்திற்கு அருகில் ஒரு மரப்பொந்து ஒன்று இருந்தது. அந்த மரப்பொந்தில் சுண்டெலி ஒன்று வசித்து வந்தது. அந்த சுண்டெலிக்கு குளத்தில் வசித்த தவளையுடன் நட்பு ஏற்பட்டது. தினமும் அந்த தவளையும் எலியும் சந்திப்பது வழக்கம். ஒரு நாள் எலி, தவளை நீரில்
விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்தது. உடனே எலி தவளையிடம், எனக்கும் நீச்சல் கற்றுத் தர முடியுமா என்று கேட்டது. தவளையும், நாளை உனக்கு நீச்சல் நான் கற்றுத் தருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றது. அடுத்தநாள் சுண்டெலிக்கு நீச்சல் கற்றுத்தருவதாக கூறிய தவளை தன்னுடடைய காலை எலியின் காலுடன்
சேர்த்து ஒரு கைற்றினால் கட்டிக்கொண்டது. அப்போது மேலே பறந்து கொண்டிருந்த கழுகு ஒன்று இவைகளைப் பார்த்து தாக்க வந்தது. உடனே தவளை தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக சுண்டெலியுடன் தண்ணீரில் பாய்ந்தது. தண்ணீரில் மூழ்கிய சுண்டெலி மூச்சு திணறி இறந்து போனது. அதன் உடல் மேலே மிதந்த போதும்
Read 7 tweets
12 Nov
#நரசிம்மர்_குடைவரை_கோவில்
இந்தியாவில் சிறந்து விளங்கும் குடவரைக் கோவில், மும்மூர்த்தி தலம் என்ற சிறப்பினை உடைய இத்திருக்கோவிலில் ஈருயிர் ஓர் உடலாக சங்கர நாராயணனாக, பரந்தாமன் காட்சி தரும் அழகிய திருக்கோலம் சைவ வைணவ பேதம் போக்குகிறது. மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான நரசிம்ம
அவதாரத்தை தரிசிக்க இயலாத மகாலட்சுமி பெருமாளிடத்தில் அவரின் நரசிம்ம அவதாரத்தை தான் தரிசிக்க ஒரு வழி கேட்டார். அதற்கு அவர், ஸ்ரீசைலம் எனும் ஷேத்ரத்தில் கமலாலய குளத்தில் அமர்ந்து அஷ்டக்ஷரமாகிய திருஎட்டெழுத்து மந்திரத்தை உச்சரித்து அதன் பலனாக தன் நரசிம்ம கோலத்தை தரிசிப்பாய் என்றார்.
அதன்படி மகாலட்சுமி கமல மலர்கள் நிறைந்திருந்த கமல வனத்தினில் ‘கமலாலயம்’ என்னும் குளத்தில் நரசிம்ம மூர்த்தியை நினைத்து கடுந்தவம் புரிந்தாள்.
இந்த சமயத்தில் திரேதாயுகத்தில் ராமராவண யுத்தத்தில் மூர்ச்சையான லக்ஷ்மணனின் மயக்கத்தை தெளிய வைப்பதற்காக சஞ்சீவி பர்வதத்தை ஆஞ்சநேயர் எடுத்து
Read 14 tweets
11 Nov
A beautiful story from #SrimadBhagavatam. There was a rich man who was devoted to Krishna. He used to observe the ekadashi vratam every month and the next day he would feed the pious people as It is considered a great punyam to do so. Pleased with his vratam, Krishna appeared
before him one day and said 'Ask me for a boon! You are doing so much wonderful work.' The rich man said, 'If you bless me with more wealth, I will be happy to do this service on a large scale.' Krishna blessed him with abundant wealth. The man was very happy. There was another
devotee, an old lady who used to think about Krishna, meditate on Krishna all the time; she was practically living with Krishna. She was a poor lady and had only a cow as her property. She also used to observe the ekadashi vratam, and the next day she would make a little butter
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(