தென் கைலாயம்:-

சிவபெருமானின் இருப்பிடமான கைலாயம் வடக்கே உள்ளது என நம் அனைவருக்கும் தெரியும்.

ஆனால்,

தென் கைலாயம் எங்கு உள்ளது
என நம்மில் நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை,

தெரிந்துகொள்வோம் தொடர்ந்து படியுங்கள்.

#இராஜராஜசோழன்
#ஐப்பசி_சதயம்
#சதயவிழா Image
தஞ்சைப் பெரியகோவிலுக்கு தென் கைலாயம் என்று ஒரு பெயரும் உண்டு.

கைலையாக் காட்சிகளை  பெருவுடையார் கோவில் ஸ்ரீவிமானத்தில் சிற்பமாக எம்பெருமான் இராஜராஜசோழன் மிகவும் நேர்த்தியாக அமைத்துள்ளார்.

இதை தட்சிணமேரு என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகிறது. Image
தஞ்சை பெரியகோவில் 216 அடி உயர ஸ்ரீவிமானத்தில் கீழ்த்திசை சிகரத்தில் கைலாயக் காட்சி அமைந்துள்ளது.

உயர்ந்த மலைபோன்ற அமைப்பில் நான்கு பக்கமும் சற்று பிதுங்கியவாறு கைலாயம்.

கைலாயத்தின் நடுநாயகமாக உமையும்சிவனும். வலப்புறம் கணபதி இடப்புறம் வள்ளி தெய்வானை சகிதமாய் முருகன். Image
சற்றுக்கீழே பிரம்மன் மற்றும் திருமால்.

நந்தி கணங்கள் தேவர்கள் புடைசூழ கைலையாக் காட்சி.

சிற்பமாக உள்ள இதே கைலாயக் காட்சியை செப்புத்திருமேனியாகவும் இராஜராஜர் எடுத்தார்.

இத்திருமேனியை தட்சிணமேரு விடங்கர் என்று கல்வெட்டு பதிவு செய்கிறது.. Image
ஸ்ரீவிமானத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த தென்கைலாய சிற்பத்தொகுதிக்கு..

இராஜராஜர் பிறந்த ஐப்பசி சதயத்திருநாள் அன்று பூ மாலை சாத்தப்பட்டது..

சிவனுக்கு உகந்த வில்வ மாலை...
80 அடி நீளம் மற்றும் முக்கால் அடி அகலம் மற்றும் அரளி,
60 முழம் மல்லிகை.
80 அடி நீளமுள்ள மாலை. ImageImage
படத்தில் பார்க்கும்போது ஏதோ
5 முழம் போல் தோன்றும்

காரணம்,
216 அடி உயர ஸ்ரீவிமானத்தில்,
90 அடி உயரத்தில்,
60 அடி உயரம் கொண்ட கைலாயக்காட்சி இது..

இதுவே
ராஜேராஜேஷ்வரத்தின் மிக பெரிய பிரம்மாண்டம்..

இந்த கைங்கரியத்தைச் செய்தவர்.

திருவாளர்
கோவை ஸ்ரீகுமார்
அவர்கள். 🙏🙏🙏 Image
கோவை ஸ்ரீ குமார் அவர்களுக்கு

#நோக்கம்சிவமயம் டேக் நண்பர்கள் சார்பாகவும் மற்றும்
#திருவிரிஞ்சை #வழித்துணைநாதர்சிவனடியார்_திருகூட்டம் சார்பாக பாதம் பணிந்த நன்றி கலந்த வணக்கங்கள் 🙏🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SSR 🚩

SSR 🚩 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SSR_Sivaraj

18 Nov
கொக்கரை:- (Thread)

நீண்டு நெளிந்த ஒரு மாட்டுக்கொம்புதான் சிவவாத்தியமான கொக்கரை.

பாலை நிலத்துக்கு உரிய கருவி கொக்கரை.

கோயில் இசைக்கருவிகளில் நாதஸ்வரம் முக்கியத்துவம் பெற்ற கருவி என்பது நம் எல்லாரும் அறிந்த ஒன்று இதன் தொடக்க வடிவமே கொக்கரை என்கிறார்கள் இசை வல்லுனர்கள்.

1/1 Image
கொக்கரையை ‘சின்னக்கொம்பு’ என்றும் சொல்வர். திருவாரூர் தியாகராஜர் கோயிலில் இக்கருவி இசைக்கப்படுகிறது.

திருமுறை முழுவதும் கொக்கரை பற்றிய குறிப்புகள் உள்ளன.

திருமுறை 3,4,5,6,7,11 ஆகியவற்றில் கொக்கரை கருவி இடம்பெறுகிறது.

1/2
#நோக்கம்சிவமயம் Image
கந்தபுராணத்தில் பல இடங்களிலும் திருப்புகழில் சில இடங்களிலும் கொக்கரை பற்றிய குறிப்புகள் உள்ளன.

நக்கீரர், காரைக்காலம்மையார், அப்பர், சம்பந்தர், சுந்தரர், சேரமான் பெருமான் ஆகியோர் கொக்கரை பற்றி பாடியுள்ளனர்.

நான்காம் திருமறையில் ஈசனின் வடிவத்தை வர்ணிக்கும் ஒரு பாடலில்,

1/3 Image
Read 10 tweets
12 Nov
தஞ்சை பெரிய கோவில் (Thread)

பெரியகோவிலை கட்ட இராஜராஜசோழன் இடம் தேர்வு செய்த விதமே சற்று வியப்பானது.

மலை குன்றுகள் இல்லாத மணல் பகுதிகள் நிறைந்த சம தளத்தில், கற்கலை கொண்டு கோவில் அமைத்துள்ளார்.

இக்கோவிலை ராஜராஜசோழன் கட்ட தனிப்பட்ட வரலாறு உண்டு.

#ஐப்பசி_சதயம்
#இராஜராஜசோழன்
1/1
அதாவது, காஞ்சிபுரத்தில் ஒரு முறை ராஜராஜசோழன் சென்ற போது, அங்கு ராஜசிம்மனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோவில் ராஜராஜனை மிகவும் கவர்ந்தது.

அதே போல் ஒரு கோவிலை கட்ட விரும்பினார், அதுவும் கோவில் யாரும் காட்டாத அளவுக்கு மிகவும் பிரமாண்டமாக கட்டவேண்டும் என்று நினைத்தார்.

1/2
அப்படி கட்டப்பட்ட கோவில்தான் தஞ்சை பெரியகோவில்.

வீரசோழன் குஞ்சரமல்லன் என்ற பெருந்தச்சன் முன்னிலையில், மதுராந்தகனாகன நித்த வினோத பெருந்தச்சன் உதவியாலும் 6 ஆண்டுகளில் கோவில் கட்டப்பட்டது.

கோவிலை சுற்றி மதிலரண், நீரரண் என இரு அரண்களையும் அகழியையும், அமைத்தார்.

1/3
Read 19 tweets
11 Nov
பெண்களும் நிலஉரிமையும் இராஜராஜ சோழனும்:- (Thread)

சொத்துரிமையில் இருந்து பெண்களை விலக்கி வைக்கப்பட்டதும் தமிழகத்தில் சோழர் ஆட்சிக்குப் பின்னர் நேர்ந்த சீரழிவுகளில் ஒன்று என்பது ஆச்சரியம் தரும் உண்மை.

சோழ அரசில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டது,

#இராஜேந்திரசோழன்

1/1
அரசிகள் சொத்து வைத்திருந்தனர்.

இளவரசிகள் சொத்து வைத்திருந்தனர்.

சாமானிய பெண்களும் சொத்து வைத்திருந்தனர்.

தனது சொத்துக்களைப் பாதுகாக்க அடியாட்களை நியமித்த பெண்களும் சோழர்கள் ஆட்சியிலிருந்தனர்.

இது தான் வரலாறு பென்னுரிமை என்பதெல்லாம் சோழர்களால் துவங்கபட்ட ஒன்று.

1/2
தஞ்சைப் பெரிய கோவில் தமிழ்க் கல்வெட்டுகளின் முதல் வரி,

‘நாம் கொடுத்தனவும்,
நம் அக்கன் கொடுத்தனவும்,
நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்த கல்லிலே வெட்டி அருள்க....’
என்று தொடங்குகின்றது.

இதில் அக்கன் என்றால் அக்கா, பெண்டுகள் என்றால் மனைவிகள்,

1/3
Read 15 tweets
10 Nov
சிவச் சக்கரம்:-

தானவர் சட்டர் சதிரர் இருவர்கள்
ஆன இம்மூவரோடு ஆற்றவர் ஆதிகள்
ஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமும்
சேனையும் மெய்சிவச்சக்கரம் தானே.

#தினம்_ஒரு_திருமந்திரம்
#நோக்கம்சிவமயம்
#வீரசைவம்💪

திருநீறு அபிஷேக தரிசனத்துடன் சொந்தங்களுக்கு சிவ காலை வணக்கம் 🙏
அட்ட திக்குப் பாலகர்கள்:
(1). நிருதி (2). வருணன் (3). வாயு (4). குபேரன் (5). ஈசானன் (6) இந்திரன் (7) அக்கினி (8) இயமன்

சட்டர் :
(1) அசிதாங்க பைரவர் (2) குரு பைரவர் (3). சண்ட பைரவர் (4). குரோத பைரவர் (5). உன்மத்த பைரவர் (6). கபால பைரவர் (7). பீடண பைரவர் (8). சம்மார பைரவர்,
சதிரர் :
(1). நந்தி (2). மகா காளர் (3). பிருங்கி (4). விநாயகர் (5). விருஷபர் (6). ஸ்கந்தர் (7). தேவி (8). சண்டிகேஸ்வரர்

இவர்களை வெளிச் சுற்று வட்டங்களில் அமைக்க வேண்டும். உள் சுற்றுப் பதினாறு கட்டங்களில் உயிர் எழுத்துக்களை ‘அ’ முதல் ‘அ :’ வரையில் அமைக்க வேண்டும்.
Read 4 tweets
9 Nov
கந்த கோட்டம்:-

முருகபெருமானுக்கு தவனம், மருகொழுந்து அலங்கார பந்தல். Image
முருகபெருமானுக்கு அத்தி பழம் அலங்கார பந்தல்.

முருகர் மேல் இருக்கும் பூ மனோரஞ்சிதம், ImageImage
முருகபெருமானுக்கு தாமரை மற்றும் ரோஜா பூ அலங்காரம் பந்தல். Image
Read 6 tweets
29 Oct
மன்னிப்பு:- (Thread)

ரமணா படத்தில் கேப்டன் பேசும் வசனம் மன்னிப்பு தமிழில் பிடிக்காத வாரத்தை என்று,

நேற்று சக்தி நாயனார் குருபூஜை அவரை பற்றி தினமும் இரவு 10.30 மணிக்கு நடக்கும் சைவ சமயம் Spaceல பேசினோம்.

இதை யாராவது கேட்பாங்கனு பார்த்தேன் கேட்கல நல்லதா போச்சு,

1/1
#SSRThreads
அதனால இப்போ இந்த திரேட் மூலமா எல்லாரும் தெரிஞ்சிக்கலாம்

செய்த தப்புக்கு தண்டனை தருவதும் மன்னிப்பதும் சைவ சமயத்தில் எப்படி பார்க்கப்படுகிறது என்பதை பற்றி பார்ப்போம்,

மன்னித்தல் என்பது இறைவனின் அகராதியிலேயே கிடையாது என்ற கசப்பான உண்மையை நாம் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும்.

1/2
"கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்
கசிந்து உருகி நில்லாப்பிழையும்
நினையாப்பிழையும் நின்ஐந்தெழத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப்பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே"

இது பட்டினத்தார் பாடல் இந்த பாடலை நம்மில் பெரும்பாலோர் அடிக்கடி பாடி இருப்போம்

1/3
Read 29 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(