மன்னிப்பு:- (Thread)

ரமணா படத்தில் கேப்டன் பேசும் வசனம் மன்னிப்பு தமிழில் பிடிக்காத வாரத்தை என்று,

நேற்று சக்தி நாயனார் குருபூஜை அவரை பற்றி தினமும் இரவு 10.30 மணிக்கு நடக்கும் சைவ சமயம் Spaceல பேசினோம்.

இதை யாராவது கேட்பாங்கனு பார்த்தேன் கேட்கல நல்லதா போச்சு,

1/1
#SSRThreads
அதனால இப்போ இந்த திரேட் மூலமா எல்லாரும் தெரிஞ்சிக்கலாம்

செய்த தப்புக்கு தண்டனை தருவதும் மன்னிப்பதும் சைவ சமயத்தில் எப்படி பார்க்கப்படுகிறது என்பதை பற்றி பார்ப்போம்,

மன்னித்தல் என்பது இறைவனின் அகராதியிலேயே கிடையாது என்ற கசப்பான உண்மையை நாம் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும்.

1/2
"கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்
கசிந்து உருகி நில்லாப்பிழையும்
நினையாப்பிழையும் நின்ஐந்தெழத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப்பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே"

இது பட்டினத்தார் பாடல் இந்த பாடலை நம்மில் பெரும்பாலோர் அடிக்கடி பாடி இருப்போம்

1/3
பாடல் விளக்கம் :-
அதாவது இறைவனின் பெருமைகளை கல்லாத குற்றமும் ,
எண்ணாத குற்றமும்,
நினைந்து கசிந்து உருகி நில்லாத குற்றமும்,
உன்னை நினையாத குற்றமும்,
நமசிவாய என்னும் அஞ்செழுத்து மந்திரத்தை சொல்லாத குற்றமும்,
கை கூப்பி துதிக்காத குற்றமும்,திருவடியை தொழாத குற்றமும் ,

1/4
எல்லா குற்றங்களையும் பொறுத்து மன்னித்து அருள்வாய் இறைவா திருக்காஞ்சியில் எழுந்தருளும் ஏகம்பனாதனே

எம்பெருமான் எதுவும் பண்ணாம சும்மா இருக்குற ஒரு மனிதனின் கல்லா பிழையை எதுக்கு பொருத்துக்கனும்?
மனிதனை எதுக்கு பூமியில் படைச்சது?

தப்பு பண்ணிட்டு கோயிலுக்கு போய் மன்னிப்புகேட்கவா?
1/5
அதாவது உண்மையையும், நீதியையும், ஆன்மாவை பற்றியும் கற்று தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தான் இறைவன் மனிதனை பூமிக்கே அனுப்பினார்,

மனிதன் என்னடான்னா இங்கு வந்தும் ஒழுங்காக குருவை நாடி தீட்சை பெறாமல் கல்வியும் கற்காமல் கோவிலுக்கு வந்து
"கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்"

1/6
பொருத்து அருள்வாய் என்று பிரார்த்தனை செய்கிறான்.

ஒரு உண்மையை தெரிஞ்க்கோங்க,

தானமும், தவமும், பூமியில் மட்டும்தான் செய்யமுடியும் பூமியில் வாழும் காலத்தில் தானம், தர்மம், தவம், செய்யாமல் வாழ்ந்து இறந்த பிறகு சூட்சும தேகத்தில் இருக்கும் போது தானம், தர்மம் செய்யவேண்டும் கடவுளே
1/7
என்று அவரிடம் பிரார்த்தனை செய்தால் என்ன பலன் அதற்கு தானே நமக்கு "ஸ்தூல தேகம்" கொடுத்து பூமிக்கு அனுப்பினார்.

நாம என்னடா னா அங்கு ஒழுங்கா எதையும் கற்காமல், தானமும், தவமும் செய்யாமல் வாழ்ந்துவிட்டு அங்க போய் கேட்டு என்ன பிரயோஜனம் ?

1/8
சரி என்ன பன்றது மறுபடியும் பூமியில் போய் பிறந்து முறையாக குருவை நாடி தீட்சை பெற்றும் கல்வி கற்றும், தானம் தவமும் செய்து வாழ்ந்துவிட்டு வா என்று மறுபிறவி கொடுத்து தான் அனுப்புவார்.

மேல் உலக வாழ்கை என்பது பூலோக வாழ்க்கையின் போது செய்த தானம், தவம், மற்றும் பெற்ற ஞானம்,

1/9
போன்றவற்றிற்கான பலனை அனுபவிக்கிற வாழ்கை ஆகும்.

"பதவி பூர்வ புண்ணியானாம்"

பூமியில் வாழம்போது 100 அஸ்வமேத யாகம் செய்தால் இறந்த பிறகு சொர்க்கத்திற்கு சென்றால் அங்கு இந்திர பதவியே கொடுக்கப்படும் என்பது சாஸ்திரம் ஆகும்.

அதனால் தான் மகாபலி அரசன் 100 அஸ்வமேத யாகம் செய்தான்.

1/10
ஒருவேளை சொர்க்கம் மீது எல்லாம் பற்று இல்லை என்றால் முக்தி அடையவேண்டும் என்பது தான் விருப்பம் என்றால்,

ஒரு குருவை சரண் அடைந்து
"ஸ்தூல தேகம்"
"சூட்சும தேகம்"
"காரண தேகம்"
"மகா காரண தேகம்"
போன்ற உண்மைகளையும், பசு, பதி, பாசம் போதிக்கிற சைவசித்தாந்த கல்வியை கற்கவேண்டும்.

1/11
96 தத்துவங்களயும், தசகாரியம் பற்றியும் கற்கவேண்டும் அப்படி கற்றால் தான் அதன்படி வாழ்ந்து ஸ்தூல தேகம், மனோதேகம் போன்றவற்றில் இருந்து எல்லாம் விடுபட்டு ஜீவன் முக்தி நிலையை அடையமுடியும்.

இந்த சைவசித்தாந்தம் கல்வியை கற்பது என்பது முக்தி விரும்பும் மனிதனுக்கு இன்றியமையாதது,

1/12
சைவசித்தாந்த கல்வியை கற்பதற்காக ஒருவன் பிச்சை எடுத்தாலும் தவறு இல்லை என்று "வெற்றி வேற்கை" என்ற நூல் உலகுக்கு சொல்கிறது

"கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே"

பிச்சை எடுத்தாவது சைவசித்தாந்த கல்வியை படிக்காமல் கல்லாப் பிழையும் பொருத்து அருள்வாய்னா எப்படி?
1/13
அப்படி குருவை நாடி சென்று கல்வி கற்றாலும் அந்த கல்வி அவ்வளவு லேசில் நாம்ம மனதில் தங்கிவிடாது அது உலக மயக்கங்களால் மறைந்து மறந்து போய்விடும்.

அதனால் தான் "சிவ தீட்சை" பெற்று சைவசித்தாந்தம் கற்க வேண்டும், தினமும் கற்ற கல்வியை அசை போடவேண்டும்
அது தான் திருமுறைகளுடன் சிவபூஜை,

1/14
"காலையும் மாலையும் நான்மறை ஓதா அந்தணர் என்போர் அனைவரும் பதரே"

-வெற்றி வேற்கை

சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்,வைத்ததொரு கல்வி மனபழக்கம்.

-ஒளவையார்

கற்ற சைவசித்தாந்தம் உண்மைகளை அவ்வப்போது படித்து வரவேண்டும். அதை நன்றாக மனதிற்கு பழக்கப்படுத்திவிட வேண்டும்.
1/15
அப்போது தான் அதன்படி நடக்க, வாழ, நம் மனம் ஆயத்தம் ஆகும் "ஓதா கல்வி கெடும்"

ஒருமுறை படித்துவிட்டால் மனம் சைவசித்தாந்தம் நெறிப்படி வாழ தயாராகிவிடாது.

மீண்டும் மீண்டும் தொடர்ந்து கற்று அதனுடனேயே பயணித்து அதனுடனேயே கலந்து அதுவாகவே நமது மனம் மாறிவிட வேண்டும்.
1/16
அப்படிபட்ட நிலையை அடைந்த பிறகுதான் ஸ்தூல தேகம், மனோதேகத்தை எல்லாம் விட்டு விலகிசென்று, சத்தான ஆத்மாவை மகா காரண தேகத்தை அடையமுடியும்.

இப்படி இருக்க பட்டினத்தாரின் ஒரு பாடலை பிடித்துக்கொண்டு அடிக்கடி இறைவன் முன் நின்று கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் என்று வேண்டுவது சரியா?

1/17
கல்லாப் பிழையை எல்லாம் எம்பெருமான் பொறுத்துக் கொண்டு திடீர் என்று முக்தி நிலையை கொடுத்தாலும் அது முக்தி என்று நமக்கு தெரியாது அதை உணரவும் முடியாது.

அதனால் முட்டாள் தனமாக இறைவனிடம் முன் நின்று "கல்லா பிழையும் கருதாப் பிழையும் பொறுத்து அருள்வாய்"
என்று வேண்டாதீர்கள்.

1/18
10 வருடம் முன்
"கல்லா பிழையும் கருதாப் பிழையும்"
என்று பிரார்த்தனை செய்துவிட்டு.

மீண்டும் இப்பொழுது
"கல்லா பிழையும் கருதாப் பிழையும்"
என்று பிரார்த்தனை செய்தால் சரியா?

ஒரே பல்லவியையே ஆயுள் முழுவதும் பாடுவது தவறு சைவசித்தாந்தம் உண்மைகளை கற்பதில் கவனம் செலுத்த வேண்டும்

1/19
இந்த ஆண்டு கற்க வில்லையா இறைவனிடம் இந்த பாடலை பாடிவிட்டு அடுத்தமுறை வரும்போது கற்றுகொண்டு வருகிறேன் இறைவா என்று சொன்னால் அது சரியாகும்,

சும்மா ஓப்பி அடிச்சு, இந்த பாடலை பாடியே பஜனை பண்ணிட்டு கடவுள் நமக்கு முக்தி கொடுத்துவிடுவார் என்று என்னுவது முட்டாள்தனம்.

1/20
நிறைய அடியார்கள் இப்படிதான் திரிகிறார்கள்.

ஒன்றை மட்டும் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள் ஏது பிழை செய்தாலும் பொருத்துகொண்டு தீமை செய்யாதவர்கள் அம்மா,அப்பா,குரு
இந்த மூவர் மட்டும் தான் தீமை புரியமாட்டர்கள் மற்றபடி தெய்வங்கள் எல்லாம் நீதி பரிபாலனம் செய்யும் அதிதேவதைகள் ஆகும்.

1/21
அந்த நீதி படி அவரவர்களுக்கு தண்டனையும் நன்மையும் கிடைக்கும் படி நவகிரகங்களுக்கு கட்டளை இட்டு உலகை பரிபாலனம் செய்து வருகிறார்கள் எனவே பிழை செய்தால் தண்டனை கொடுக்காமல் விட்டுவிட முடியாது.

சிவ பக்தனான "ராவணன்" நிறைய பிழைகள் செய்தான் அவனை தண்டிக்காமலா விட்டார் எம்பெருமான்.

1/22
சர்வேஸ்வரனாகிய ஈசன் நீதி தவறாதவன் தன் பக்தனே ஆனாலும் தண்டிப்பார்.

எல்லா பிழையும் பொருத்து அருள்வாய்
என்றும் பிழை செய்யும் மனிதர்களாகவே இருப்போம் நீ தான் பிழையை பொருத்து அருளவேண்டும் என்பது போல பிரார்த்தனை செய்யாதீர்கள்.

தெய்வங்களின் இயல்புகளையும், அவர்களின் கடமைகளையும்
1/23
புரிந்துகொள்ளுங்கள்.

அப்போது தான் சரியான முறையில் நியாயமான முறையில் பிரார்த்தனை செய்வீர்கள்.

எப்போதும் இவ்வாறு பிரார்த்தனை செய்யுங்கள்,

பிழை செய்யாமல் தடுத்தருள்வாய் என்று பிரார்த்தனை செய்யுங்கள்,

பிழைகளை சுட்டி காட்டி திருத்துவாய்
என்று பிரார்த்தனை செய்யுங்கள்.

1/24
ஆன்மீகவாதிகளான நாம் உண்மையான பக்தி கொண்டு இந்த புரிதல் உடன் இருந்தால் தான் வருங்காலத்தில் நாம் பிறருக்கு உபதேசிக்கும் போது சரியான பாதையை காட்ட முடியும்.

எனவே இதனை மனதில் கொண்டு ஆக்கப்பூர்வமாக பிரார்த்தனையை செய்து இறை அருளை பெற முயலவேண்டும்.
(கல்லா பிழை)

1/25
நம்முள்ளே ஆன்மாவான 'சத்து சித்து ஆனந்தமான' "சச்சிதானந்தம்" இருக்கிறது.
அதனை அடிக்கடி கருதவேண்டும், நினைக்கவேண்டும் (கருதா பிழை)

உணவு சாப்பிடும் போதும்
"நமசிவாய வாழ்க நமசிவாய வாழ்க"
என்று சொல்லிவிட்டு சாப்பிடுகிற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

1/26
மற்ற அடியார்களிடம் பேசும்போதும் நமசிவாய என்று சொல்லிவிட்டு பேசுங்கள் (சொல்லா பிழை)

காலையில் எழும் போது பஞ்சாட்சரம் சொல்லுங்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லுங்கள்,
இதனால் தானாக நமது உள்மனது ஆனது துதியை உள்வாங்கிக் கொள்ளும் தன்மையை பெற்றுவிடும் (துதியா பிழை)

1/27
நமது வீட்டு வாசலின் மேல் பகுதியில் எம்பெருமான் புகைப்படத்தை மாட்டி வைங்கள்.

தினமும் வீட்டில் இருந்து வெளியே கிளம்பும் போது வாசலுக்கு மேல் உள்ள படத்தை தொட்டு தலைக்கு மேல் கை வைத்து தொழுதுவிட்டு செல்லுங்கள். இதனை ஒரு பழக்கமாக வைத்து கொள்ளுங்கள். (தொழா பிழை)

1/28
நாம் அனைவரும் இனி
1. கல்லா பிழை
2. கருதா பிழை
3. ஐந்து எழத்தை சொல்லா பிழை
4. துதியா பிழை
5. தொழா பிழை
ஆகிய ஐந்து பிழைகளை செய்யாது வாழ்ந்து சிறந்த பக்தர்களாக திகழ்ந்து இறையருளை பூரணமாக பெற்று வாழ்வோம்.

சிவாயநம 🙏
திருச்சிற்றம்பலம்🙏
நன்றி வணக்கம் 🙏

#நோக்கம்சிவமயம்
#SSRThreads

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SSR 🚩

SSR 🚩 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SSR_Sivaraj

6 Oct
மரியாதை இல்லாம பேசினது யார்டா முதல்ல வெண்ணை பெரிய புடுங்கி இவரு த்தா,

ஒலு விடறதே இந்த திருட்டு பசங்களுக்கு வேலையா போச்சு 100வகை இருக்காம்

அடேய் எலீயோகார்பஸ் மரத்திற்கு 36 உட்பிரிவுகள் மட்டும் இருக்கிறது ஆனால் அந்த 36 மரங்களின் கொட்டைகளையும் ருத்ராட்சமாக பயன்படுத்துவது கிடையாது,
அதிலிருந்து இந்த
(Elaeocarpus serratus)
(Elaeocarpus tuberculatus)
(Elaeocarpus ganitrus)
மூன்று மரங்களின் கொட்டைகளை மட்டுமே ருத்ராட்சமாக பயன்படுகிறது.

இவை ஏப்ரல்,மே மாதங்களில் பூ பூக்கும் ஜீன் மாதங்களில் காய்க்கும்.
ஆகஸ்ட்-அக்டோபரில் பழம் பழுக்கும்
வாரணாசிப் பல்கலைக் கழகத்திலுள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் டாக்டர். கஹாஸ் ராய் தலைமையிலான அறிவியலாளர்கள் அரசுக்கு சமர்பித்த ஆய்வு கட்டுரை பத்தி தெரியுமா?

உயிர் வேதியியல் துறை (Bio-chemistry) மின் தொழில் நுட்பத்தின் மனநோய் மருத்துவத் துறை (Psychiatry) பொது மருத்துவத்துறை, மற்றும்
Read 7 tweets
5 Oct
ருத்ராட்சம்:- (Thread)

ருத்ராட்சம் அணிய வேண்டும் என்ற எண்ணமே வருவதற்க்கு புண்ணியம் செய்திருந்தால் வேண்டும் என கூறப்படுகின்றது.

ருத்ராட்சத்தில் உள்ள கோடுகளை முகம் என கூறுகின்றோம்.

ருத்ராட்சத்தின் கோடுகளை கணக்கிட்டு எத்தனை முக ருத்ராட்சம் என கூறப்படுகின்றது.
தற்ச்சமயம் 1 முதல் 21முக ருத்ராட்சங்கள் வரை கிடைக்கபடுகிறது

ருத்ராட்சத்தை சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை யார் வேண்டுமானாலும் அணியலாம்.

ஆண்,பெண்,சாதி மதம் என்கிற பாகுபாடுகள் இல்லாமல் யார் வேண்டுமானாலும் அணியலாம்.

5 முகம் ருத்ராட்சம் பொதுவானது அனைவரும் தாரளமாக அனியலாம்,
5 முகம் ருத்ராட்சம் தான் அதிகம் விளைகிறது, அனைவருக்குமான ருத்ராட்சம் என்பதே இதன் பொருள்,

ருத்ராட்சத்தின் பயன்களை பற்றி முன்னமே 2 திரேட் எழுதியதால் நேரடியாக 27 நட்சத்திரத்திக்கு ஏற்ப, எந்த எத்தனை முகம் ருத்ராட்சத்தை அணியலாம் என்று பார்ப்போம்,

#நோக்கம்சிவமயம் 🙏
#SSRThreads
Read 17 tweets
5 Oct
#குட்டிதிரேட்:-

தயவு செய்து Online னில் வியாபார நோக்கில் உள்ளவர்களிடம் ருத்ராட்சம் வாங்க வேண்டாம்.

நேற்று 9 முகம் ருத்ராட்சம் சென்னையில் 9100 கொடுத்து வாங்கினேன் ஒர்ஜினலா பாருங்க அப்படியே கட்டிவிடுங்கனு கோயிலுக்கு வந்தார்.

செய்வதறியாமல் சரிபார்த்து எதும் பேசாமல் கட்டிவிட்டேன்,
பொதுவாக சிவ சம்பந்தபட்ட பொருட்களுக்கு பணம் எதும் வாங்காமல் தேவைபடுபவர்களுக்கு கொடுப்பது ஒரு சிவ தொண்டு,

அத்தொண்டை ஏதோ எங்கள் திரு கூட்டத்தின் வாயிலாக முடிந்த வரை செய்து வருகிறோம்

நான் விசாரித்தவரை அந்த விலைக்கு மூன்று ஒன்பது முகம் வாங்கலாம் இப்படி கேவலமாக ஏமாற்றி உள்ளார்கள்.
இலவசமாக தருவதினால் எந்த ஒரு பொருளுக்கும் மதிப்பில்லாமல் போகிறது,

விலை அதிகமாக இருந்தால் தான் ஒர்ஜினல் என்ற மாயையில் இருந்து வெளியே வாங்க

பணம் இருக்கிறது என்று ஏமாற வேண்டாம் நன்றாக விசாரித்து வியாபார நோக்கில் உள்ளவர்களிடம் வாங்காமல் பக்தி நோக்கில் உள்ளவர்களிடம் வாங்கவும்.
Read 5 tweets
7 Sep
எண்ணெய் குளியல்:-(திரேட்)

4,5 மாதமாக முதுகுவலி கார்,பைக் ஓட்டுவதால் தான் என்று நினைத்து இரண்டையும் ஓட்டுவதை குறைத்துக்கொண்டு வருகிறேன்

இன்று இதை படிக்க நேர்ந்தது இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் யாராவது ஒருவர் படித்து பயனடைந்தால் இந்த திரேட்க்கு கிடைத்த வெற்றி
#SSRThreads
ஒரு முறை காஞ்சி மகா பெரியவா தரிசனத்திற்கு முதுகில் தீவிர வலியுடன் ஒரு பக்தர் வந்தார்.

உள்ளே வரும் போதே இப்படியும் அப்படியும் நெளிந்து கொண்டே வந்தார்.

மிகவும் கஷ்டப்பட்டு பெரியவாளுக்கு ஒரு நமஸ்காரம் செய்து விட்டுச் சொன்னார்.

பெரியவா.... முதுகு வலி..
அதை விட முதுகோட நடுத்தண்டுல ரொம்ப நாளா பெரும் வலி.

கொஞ்சம் கூட அசைய முடியலை.
ஏன் இருக்கோம்னு பல நேரம் தோண்றது.

என்றவரின் கண்களில் நீர்த்துளிகள் 😢😢

பெரியவா அவரைத் தீர்க்கமாக பார்த்தார். பதில் வரவில்லை,முதுகுவலிக்காரரே மீண்டும் தொடர்கிறார்,
Read 10 tweets
5 Sep
வாழைத்தண்டு:- (திரேட்)

வாழைத்தண்டின் முக்கியமான பயன்களை பற்றி இங்கு காண்போம்.

குறைவான விலையில், அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த காய்கறிகளுள் வாழைத்தண்டும் ஒன்று. வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், சிறுநீர்ப்பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.

#மூலிகைஅறிவோம் Image
வாழைத்தண்டானது உடலின் தங்கி இருக்கும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் தினசரி வாழைத்தண்டு ஜூஸ் பருகி வந்தால் சிறுநீரக கல் கரைந்து காணாமல் போகும்.

சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரத்திற்கு மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. Image
வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், இரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்கள் இதை அடிக்கடி உணவாக எடுத்துக்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். Image
Read 10 tweets
21 Aug
ஓணம் திருநாள்:- (Thread)

ஏன்டா படுத்திறீங்க...!

இந்த கொத்தடிமைங்களுக்கு ஒரு எழவும் தெரில ஓணம் பண்டிக்கைனா என்ன ?
ஏன் வந்தது ?
ஏன் கொண்டாடுறாங்க ?
எதுக்கு கொண்டறாங்க ?

இது எதுவும் தெரியல வாழ்த்து சொன்ன என்ன மலையாளின்னு சொல்றனுங்க அதான் ஒரு திரேட் போட்டு சொல்லாம்னு வந்தேன்.
ஓணம் பண்டிகை எனும் வாமண அவதார திருநாளை கொண்டாடும் நேரம் அந்த பண்டிகைக்கான காரணத்தையும் அது சொல்லும் நோக்குவதும் இந்துக்களின் பிரதான கடமை,

அந்த ஓணம் பண்டிகையின் காரணம் இப்படித்தான் தொடங்குகின்றது,

ஒரு காலத்தில் ஊருக்கு ஒதுக்குபுறமான‌ சிவன் கோவிலில் ஒரு எலி புகுந்தது.
அங்கும் இங்கும் ஓடிகொண்டிருந்ததது, ஆளில்லா நேரம் அங்குமிங்கும் ஓடுவதும் குதிப்பதுமாக இருந்தது.

அந்த எலி கொஞ்சம் விஷேஷமான எலியாகவும் இருந்தது,

யாருமற்ற நேரத்தில் தீபத்தின் திரி பாதி எரிந்து கருகும் சமயத்துக்கு வந்ததால் அந்த எலி தன் தலையால் திரியினை முன் தள்ளி எரியவைக்கும்,
Read 40 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(