#Thread

அர்ச்சகர்:- என்ன ஜோசியரே கோவிலுக்கு முன்போல் ஆளுகள் வருவதே இல்லையே! குடும்ப நிர்வாகம் வெகு கஷ்டமாகவல்லவா இருக்கிறது.

ஜோசியர்: - என்ன காரணம் ?

அர்ச்சகர்;- இந்த எழவு எடுத்த சுயமரியாதைதான்.

ஜோசியர்:- சுயமரியாதை காரணம் என்றால் சுயமரியாதைக்காரர்கள் சாமி இல்லை,

(1/n)
பூதம் இல்லை என்று சொல்லி மக்களைக் கோவிலுக்குள் போகக்கூடாது என்று பிரசாரம் செய்கின்றார்களே அதனாலா?

அர்ச்சகர் :- இல்லை - இல்லை அதற்கெல்லாம் நமக்கு பயமில்லை. இன்னமும் ஆயிரந்தடவை வேண்டுமானாலும் சாமியில்லை, பூதம் இல்லை என்று சொல்லட்டும்,

(2/n)
கோவிலை வேண்டுமானாலும் இடிக்க வேண்டுமென்று சொல்லட்டும்.அதனால் நமக்கு ஒன்றும் கெட்டுப் போகாது.

ஜோசியர்:-மற்றென்ன காரணம் என்று சொல்லுகிறீர்கள்?

அர்ச்சகர்;-கோவில்களுக்குத் தேவதாசிகள் வருகின்றதான முக்கிய கைங்கரியத்தைப் பற்றி கண்டபடி பேசி,அதை நிறுத்தி விட்டார்களல்லவா அதனால்தான்
(3/n)
ஜோசியர்:- இதற்கும் பக்திக்கும் சம்மந்தமென்ன? இதனால் எல்லாம் மக்களுக்குக் கடவுள் பக்தி குறைந்து விடுமா?

அர்ச்சகர்:- கடவுள் பக்தி என்றால் என்ன என்கிறீர்? கடவுள்தான் எங்கும் நிரைந்தவராயிற்றே. இதற்காக ஒரு மனிதன் கோவிலுக்கு வர வேண்டுமா?

ஜோசியர்;- மற்றெதற்காக வருகின்றார்கள்?

(4/n)
அர்ச்சகர்:- இரண்டு காரியத்திற்காகத்தானே கோவிலுக்கு வருகின்றார்கள்.

1. தன்னை பக்திவான் என்று பிறர் மதிக்க வேண்டும்.
அங்கு வரும் நல்ல பெண்களை ஆண்கள் பார்க்கவும் , ஆண் களைப் பெண்கள் பார்க்கவுமான காரியங்களுக்கு என்றாலும்,

(5/n)
இரண்டாவது விஷயத்திற்குத்தான் அதிகம் பேர் வாலிபர்கள் சற்று ஷோக் பேர்வளிகள் சிறிது வயதானவர்களாயிருந்தாலும், சபலமுடையவர்கள் ஆகியவர்கள் வருவது. இப்படிப்பட்ட ஆண்கள் தாராளமாய் வராவிட்டால் குடும்பப் பெண்களும் வருவதில்லை.

(6/n)
ஆக இப்படிப்பட்ட இரண்டு கூட்டம் வந்தால் தானே காணிக்கை, கட்டளை, இணைப்புத் தரகு ஆகியவைகள் கிடைக்கும். ஆகவே நமக்குக் கோவிலில் மணியடிப்பதில் என்ன பிரயோஜனம்? கோவில் சம்பளமாகிய மாதம் 1-12-0 ரூ. சம்பளமா நமக்குக் கட்டும்?

(7/n)
ஜோசியர்:- அப்படியா சங்கதி. அவர்கள் இப்படிச் செய்தால் நமக்கு வேறு வழி கிடைக்காதோ?

அர்ச்சகர்:- என்ன வழி?

ஜோசியர்:- நம்ம ஆளுகளே ஒன்று சேர்ந்து நாம் ஆளுக்கு இரண்டு மூன்று வீதம் பெண்டாட்டிகள் கட்டி, நன்றாய் அலங்கரித்து, தினம் காலை, மாலையில் கோவிலுக்கு வரும்படி செய்தால் என்ன?

(8/n)
அர்ச்சகர்:- அப்படிச் செய்வது சாத்தியமாகுமா? அவர்களுக்கு நகை, புடவை, மினுக்கு, கண்ட கண்ட இடங்களுக்கு எல்லாம் சென்று அறிமுகம் செய்து கொள்ளுவது முதலாகிய இதெல்லாம் செய்ய வேண்டாமா? பிறகு நமது வீடுகளிலும் போதிய சௌகரியம், வீடு,வாசல், கட்டில்,

(9/n)
படுக்கை முதலிய சௌகரியம் ஆகியவைகள் வேண்டாமா இவற்றிற்கெல்லாம் பணத்திற்கு எங்கே போவது?

நாம் ஏதோ தாசிகள் செல்வாக்கினால் கோவிலுக்கு வருகின்றவர்களில் ஒன்று இரண்டு ஆள்களைப் பிடித்து சரி பண்ணி அதுவும் இரகசியம் என்றும், அவசரமென்றும் பயப்படுத்தி 10,5

(10/n)
பெற்றுக்கொண்டு கஷ்ட மில்லாமல், நஷ்டமில்லாமல் சம்பாதிப்பது நலமா?

அப்படிக்கின்றி நம்ம பெண்களையே தாசிபோல் நடக்க ஏற்பாடு செய்து கொள்ள முடியுமா?

ஜோசியர்:- என்னமோ கஷ்ட காலம் உங்களுக்கு மாத்திரமல்ல நமக்கும் கூடத்தான் வந்து விட்டது.

(11/n)
அர்ச்சகர்:- உங்களுக்கு என்ன வந்தது ?

ஜோசியர்:- இப்போது எந்தத் ‘****’ மகன் நம்மிடம் ஜோசியம் பார்க்க வருகிறான்? பிள்ளைக்கும், பெண்ணுக்கும் பொருத்தம் பார்க்கின்ற வேலையே மிகவும் குறைந்து போய்விட்டது.

அர்ச்சகர் : - ஏன்?

(12/n)
ஜோசியர்:- ஏன் என்ன அததுகளே பெண்ணும் - மாப்பிள்ளையுமே பொருத்தம் பார்த்துக் கொள்ளுகின்றன.

அர்ச்சகர்:- இருந்தாலும் கிரகதோஷம் பார்க்கவாவது வருவார்களே?

ஜோசியர்; - அதாவது வந்தாலும் பரவாயில்லை. அதற்குதான் எங்கு வருகின்றார்கள்.

(13/n)
‘திருட்டுத் **** பிள்ளைகள்’ காயலா வந்தால் - தலைவலி வந்தால் உடனே டாக்டர்கள் இடம் போய் விடுகின்றார்கள். நம்மிடம் வருவதேயில்லை. நம்மைக் கண்டால் சிரிக்கின்றார்கள். என்னடா என்று கேட்டால் சுயமரியாதையடா என்கின்றார்கள்.

(14/n)
அர்ச்சகர்:- சரி, இவ்வளவு ஆனதற்கப்புரம் எனக்கு ஒன்று தோன்றுகிறது.

ஜோசியர்:- என்ன?

அர்ச்சகர்:- நாமும் சுயமரியாதை பிரசாரம் செய்வதாகச் சொல்லி ஏமாற்றி மெள்ளமெள்ள உள்ளே இருந்தே அதை ஒழித்து விடுவது எப்படி என்றால் இப்பொழுது எத்தனையோ தமிழ் பண்டிதர்கள் அப்படித்தான் அதாவது

(15/n)
“நானும் சுயமரியாதைக்காரன்” என்று சொல்லிக் கொண்டு அதற்குள் பிரவேசித்து அதை ஒழிக்கப் பார்க்கின்றார்களே அதுபோல.

ஜோசியர்:- அது நல்லவழிதான். நம்முடைய பெரியவாள் பௌத்தர்கள் காலத்திலும் இப்படித்தான் செய்தார்கள். ஆனால்,

(16/n)
இந்த சு-ம. பயல்கள் (சுயமரியாதைக்காரர்கள்) இது தெரிந்துதான் பு-ம. பயல்களை (புராண மரியாதைக்காரர்களை) அதாவது பிராமணர்களைச் சேர்ப்பதில்லை என்று தீர்மானித்து விட்டார்களே.

(17/n)
அர்ச்சகர்:- அதுவும் அப்படியா. அப்படியானால் இந்தப்படி ஏழைகளை வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளும் இந்த சு-ம. காரன்கள் நாசமாய் நிர்மூலமாய்ப் போகட்டும். நாம் போய் இனி காங்கிரசில் சேர்ந்து கொள்ளுவோம்.

('சித்திரபுத்திரன்', குடி அரசு - உரையாடல் - 10.05.1931)

End ♥️

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Dr. Nagajothi 👩🏼‍⚕️

Dr. Nagajothi 👩🏼‍⚕️ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @DrNagajothi11

30 Nov
#Threads

#தமிழ்ப்புத்தாண்டு

சித்திரை முதல் நாள் தமிழ் வருட பிறப்பா????  

சித்திரை முதல் நாளை நாம் தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடி வந்த காலத்தை எடுத்துப்பார்த்தால், அது சுழற்சி முறையில் இருக்கும்.

(1/n) Image
அதாவது அறுபது ஆண்டுகள் என்ற கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும். அந்த ஆண்டுகள்
‘பரபவ’ முதல் ‘அட்சய’ என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன.

இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(2/n)
இந்த அறுபது ஆண்டுகளின் சுழற்சி முறை என்பது வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவரால் கி.பி 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது. சிலர் இது  கனிஷ்கன் என்ற வடநாட்டு அரசனால ஏற்படுத்தப்பட்டது என்றும் கூறுவர்.

(3/n)
Read 20 tweets
29 Nov
ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஏவப்படும் ஒடுக்குமுறைகளை அரசியலமைப்புச் சட்டம் கொண்டு எப்படிக் களைவது என, "அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்" புத்தகம் பேசுகிறது.
இணையுங்கள் தோழர்களே இன்று மாலை 6.00 மணிக்கு.

@The_69_Percent
@Greatgo1
@esemarr3

twitter.com/i/spaces/1mnGe…
Read 4 tweets
25 Nov
#Thread

#books

தோழர், அருந்ததிராய் அவர்களின் பெருங்கட்டுரை "இந்திய இழிவு" புத்தகம். தமிழில் "நலங்கிள்ளி" அவர்கள் மொழி பெயர்த்துள்ளார்.

உங்களுக்கு மலாலா அவர்களை தெரியும், சுரேகா போட்மங்கே பற்றி தெரியாது எனில், நிச்சயம் அம்பேத்கரை படியுங்கள் என துவங்குகிறது புத்தகம்.

(1/n)
தலித் மக்கள் மீது நடத்தப்படும் வன்முறை வெறியாட்டத்தின் ஒரு உதாரணத்தை எடுத்துரைத்து, தரவுகளின் அடிப்படையில் விளக்கியுள்ளார். இந்தியாவில் சாதிய கட்டமைப்புகள் குறித்த அம்பேத்கரின் பார்வையை மிகத்துல்லியமாக மேற்கோள்காட்டி எழுதியுள்ளார்.

(2/n)
குறிப்பிட்ட மக்களை தீண்டத்தகாதோர் என ஒதுக்கி வைத்து அவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்த சாதி அடக்குமுறை, அவர்களின் பெண்கள் மீது தன்னை உயர்ந்த சாதி எனக் கருதிக் கொள்பவனுக்கு அதீத உரிமை இருப்பதாக எண்ணுவதன் விளைவு தலித் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்புணர்வு என்கிறார்.

(3/n)
Read 9 tweets
1 Nov
காலம் நான்கு கால் பாய்ச்சலில் குதித்து செல்லும்போது, விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மானுட வாழ்வில் எண்ணற்ற மாற்றங்களை செய்யும்போது மொழி மட்டும் எந்த மாற்றமும் பெறாமல் இருந்துவிட முடியுமா?
@The_69_Percent @esemarr3
@Greatgo1

Set a reminder for upcoming Space! twitter.com/i/spaces/1eaKb…
Read 4 tweets
1 Nov
#Thread

#Diwali

கதை.1

ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.

தேவர்களின் முறையீட்டின் படி மகாவிஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து கடலுக்குள் புகுந்து, அவனைக் கொன்று உலகத்தை மீட்டு மீண்டும் வந்து விரித்தார்.

(1/n)
விரித்த உலகம் அப் பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.

ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.

அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று, பவுமன் என்ற பிள்ளையைப் பெற்றது.

(2/n)
அவன் தனக்கு யாராலும் மரணம் நேர கூடாதென்று பிரம்மனை நோக்கி தவம் புரிந்தான்.

அவன் முன் வந்த பிரம்மனிடம் வரத்தை கேட்க, இவ்வுலகில் பிறக்கும் உயிர்கள்யாவும் ஒரு நாள் இறந்தே தீரும் என்றார் பிரம்மன்.

பின் அவன் என் தாயால் மட்டுமே மரணம் நேர வேண்டும் என்று வரம் வாங்கினான்.

(3/n)
Read 11 tweets
31 Oct
#Thread

*வனப்பாதுகாப்பு சட்ட திருத்தம்*

சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான ஒன்றிய அரசின் அமைச்சகம், 1980- ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்தியாவின் வனப்பாதுகாப்பு சட்டத்தை திருத்த முன்மொழிவுகள் உள்ள ஆவணத்தை அக்டோபர் 2 ஆம் தேதி வெளியிட்டுள்ளது.

(1/n)
காடு எனும் வரையறைக்குள் வரும் பகுதிகளில், காடு சாராத திட்டமான நெடுஞ்சாலை, சுரங்கங்கள் அமைப்பது, அணைகள் கட்டுவது போன்ற நடவடிக்கைகளில், தேவைக்கு அதிகமாகவோ, தேவையில்லாமலோ காடுகள் அழிக்கப்படுவதை தடுக்க உருவாக்கப்பட்டது தான் வனப்பாதுக்காப்பு சட்டம்.

(2/n)
இந்த சட்டத்தில் சில திருத்தங்கள் செய்ய ஒன்றிய அரசு முயற்சிக்கிறது, அதில் 14 திருத்தங்களை/ சட்ட விலக்குகள் குறித்த முழுமையல்லாத ஒரு ஆவணத்தை தற்போது வெளியிட்டு, அதன்மீது கருத்துக்களை கோரியுள்ளது.

(3/n)
Read 34 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(