#Maanaadu
"Listen.. Watch #Maanaadu in theatre" என நண்பன் செய்தி அனுப்பி இருந்தான். அவன் பேச்சை நான் கேட்பேன் என்பதால் சத்யம்லே பார்த்தேன்.
1. முதல்வரை கொன்னுட்டு இன்னொருத்தர் முதலமைச்சராக ஆக சதி செய்யும் அரதப் பழசான கதை.
2. வெடிகுண்டு, சதி என்றாலே கலவரம், முஸ்லீம் ஆங்கிள்
கொடுக்கும் அதைவிட அரதப் பழசான கண்ணோட்டம்.
3. இதைச் சொல்ல தேர்த்தெடுத்த புத்தம் புதிய திரைக்கதை அசத்தல்.
4. இதைப் பயன்படுத்தி நெடுநாட்களாக இஸ்லாமியர் மீது இருந்த தவறான பார்வையை சமன் செய்யும் அந்த அக்கறை அதை விட அசத்தல்.
5. ஹீரோ வில்லன் ரேஞ்சுலும், வில்லன் ஹீரோ ரேஞ்சுலும்
நடித்து கதைக்கு நியாயம் செய்துள்ளனர். எஸ்.ஜே சூர்யா இந்தப் படத்தின் வெற்றியால் தொடர்ந்து இதே போன்ற ரோலில் சிக்கி சின்னாபின்னமாகி விடாமல் இருக்க விரும்புகிறேன்.
6. இயக்குநர் வெங்கட் பிரபு இனியாவது தனது நிலைய வித்வான்களை சிறிது தவிர்த்து விட்டு புதிய நடிகர்களைப் பயன்படுத்தணும்.
சென்னை 28 செட்லே யாரை திரையில் பார்த்தாலும் படத்தின் ஃப்ரெஷ்னெஸ் குறைந்து பழைய நெல் குடோன் நெடி அடிக்கிறது.
7. 100/100 இது இயக்குநரின் படம். அதை உணர்ந்து அனைவரும் அடக்கி வாசித்தது (முக்கியமா ஹீரோவின் தந்தை) படத்தின் பெரிய வெற்றிக்குக் காரணம்.
8. சத்யம்லே அதே பாப்கார்ன் தொடர்ந்து
கிடைக்கும்படி செய்த பிவிஆர் முதலாளிகளுக்கு நன்றி.
9. இப்படத்தை ஏன் தியேட்டரில் பார்க்க சொன்ன காரணம் முதல் சில நிமிடங்களிலேயே புரிந்தது. Evergreen யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையை இந்த மாநாட்டில் இருந்து கழிச்சுட்டா இது வெறும் பொதுக்கூட்டம்தான்.
Team #Maanaadu க்கு 💐💐👏👏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SKP KARUNA

SKP KARUNA Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @skpkaruna

19 Dec
வதந்திகளின் வீரியம் :
உண்மை நடந்து போனால் வதந்தி விமானத்தில் போகும் என்பார்கள். அப்படியொரு சம்பவம் நேற்று நடந்துள்ளது.
பூந்தமல்லி அருகில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கேண்டீன் தந்த தரமற்ற உணவு உண்டதினால் பலருக்கு வாந்தி, மயக்கம். ஒரே நேரத்தில் பல பெண்கள் உடல்நலம் குன்றியதாலும்
அந்த உணவுத் தரத்தின் மீது தொடர் கோபம் இருந்த காரணத்தாலும் தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண்கள் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் தொடங்கினர். உடனடியாக அரசு அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் போதே, மருத்துவமனைக்கு சென்ற பெண்கள் இறந்து விட்டதாக வதந்தி
செய்திகள் மொபைல் போனில் பரவத் தொடங்கின. கலெக்டர் நேரில் வந்து அதை மறுக்கிறார். அப்போது மேலும் அதிக வதந்திகள் உக்கிரமான வேகத்துடன் வருகிறது. கலெக்டரிடம் அதை போராட்டக்காரர்கள் காட்டி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அந்த வதந்திகள் யாரோ பெயர் அற்றவர்கள் பரப்பியது என்றால் எளிதில் அதை
Read 10 tweets
19 Dec
1. அனைத்துப் பள்ளிகளிலுமே இந்த life style management வகுப்பு தொடங்கி இவைகளைக் கற்றுத் தரணும். 5 ஆம் வகுப்புக்குள் ஒரு பிள்ளை தங்கள் வீடுகளில் டாய்லெட் கழுவும் பணியை விரும்பிச் செய்யும்படி அதன் அவசியம், செயல்முறை, பயன்படுத்தும் முறைகளை பயிற்றுவிக்கணும்.
2. வேலைக்காரம்மா தாங்கள்
பயன்படுத்தும் டாய்லெட்டை சுத்தம் செய்ய பிறந்தவர் எனும் பொதுபுத்தியை மாற்றணும்.
3. பொது இடங்களில் Uni Sex Toilet களில் பெண்களும் பயன்படுத்தும் வகையில் அதை சுத்தமாக பயன்படுத்த வேண்டும் எனும் அறிவை ஆண்பிள்ளைகளுக்கு கற்றுத் தர வேண்டும்.
4. தனது வகுப்பறை, தங்கள் கழிவறைகளை சுத்தமாக
வைத்திருப்பது தங்களது பொறுப்பு என்பதை உணர்த்தும் வகையில் வாரம் ஒருமுறையேனும் தகுந்த உபகரணங்களுடன் ஆசிரியர்களுடன் இணைந்து மாணவர்களும் அவைகளை சுத்தம் community cleaning session செய்தல் வேண்டும்.
5. இன்னமும் சாதிய அடிப்படையில் சுகாதாரப் பணியாளர்கள் பணி புரியும் இந்தச் சமூகத்தில்
Read 4 tweets
8 Nov
தமிழ்நாட்டிலும் நுழைந்த சங்கிகளின் வதந்தி அரசியல் :
நேற்று ஒரே நாளில் டிவிட்டர், பேஸ்புக் வழியே நடந்த பல வதந்திப் பரவல்களை கவனித்திருப்பீர்கள். அது ஒரு organized attack. அவைகளுக்கிடையே இருந்த pattern வடமாநில மக்களுக்கு பழக்கமானது. தமிழ்நாட்டுக்குப் புதியது. ஒவ்வொன்றாக பார்ப்போம்.
முதலில் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து சென்னையை மூழ்கடித்ததாக காலையில் ஒரு ட்வீட் வருகிறது. அதுவரை ஏரி திறக்கப்படவில்லை. மதியம் விநாடிக்கு 500 கன அடி வீதம் திறக்கப் போவதாக முந்தைய நாளே அரசு அறிவிக்கும் காணொளிகள் டிவியில் வந்தது. ஆனாலும் தெரிந்தே இந்தப் பச்சைப் புளுகு வெளியானது.
அடுத்து சென்னை மாநகரமே நீரில் மூழ்கித் தத்தளிப்பதாக
அதே நாளில் இன்னொரு ட்வீட் படத்துடன் வருகிறது. அது குஜராத்தில் எடுக்கப்பட்ட பழைய படம். சென்னை பாதுகாப்பாகவே உள்ளது என @angry_birdu ஆதாரத்துடன் மறுப்பு வெளியிட்டும், பலர் சுட்டிக்காட்டியும் இதுவரை அந்த ட்வீட் நீக்கப்படவில்லை.
Read 15 tweets
17 Oct
இது இப்படித்தான் முடியும்.
முதல் நுழைவாயில் : தமிழர்கள் மட்டும் உள்ளே வாங்க. திராவிடர் என சொல்பவர்களுக்கு அனுமதி இல்லை.
இரண்டாம் நுழைவாயில்: வெளிநாட்டு மதங்களைச் சார்ந்தோர் தாய் மதத்தில் சேர்ந்தால் மட்டுமே உள்ளே வரலாம். சைவம், வைணவ சமயங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி.
மூன்றாவது நுழைவாயில்: சைவம் தான் தமிழ்ச் சமயம். வைணவம் வந்தேறி. எனவே சிவனை வழிபடுபவர்கள் மட்டும் உள்ளே வாங்க.
நான்காவது நுழைவாயில் : ஆண்ட சாதிகளுக்கு முன்னுரிமை தருவதுதான் வழக்கம். அவங்க மட்டும் உள்ளே வரலாம்.
ஐந்தாம் நுழைவாயில்: முப்பாட்டன் ராஜராஜன் காலத்திலேயே பிராமணர்கள்
சொல்படிதான் கேட்டு நடந்திருக்காங்க. அவங்க மட்டும் நாற்காலியில் உட்காரட்டும். நாமெல்லாம் வசதியா தரையிலேயே உட்கார்ந்துக்கலாம் என்பார்கள்.
இது இப்படித்தான் முடியும். ஆயிரமாண்டுகள் ஒவ்வோர் அடியாக முன்னெடுத்துதான் அதிகாரத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறோம். இனி ஓர் அடி கூட பின்னோக்கி
Read 4 tweets
11 Aug
#Thread முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு, வழக்கு, கைதுகள் பழி வாங்கும் நடவடிக்கையா? இதிலே பார்ப்போம்.
1996ல் இதை முதலில் தொடங்கி வைத்தது திமுக. அதற்கும் முன்னரும் பல குற்றச்சாட்டுகள் எம்ஜிஆர், கலைஞர் மோதலில் வந்தாலும் அவைகள் விசாரணைக் கமிஷன் என்ற அளவில் போயிடும். கைது வரை சென்றது
96ல் தான். 91-96 ஜெ ஆட்சியில் நடந்த அராஜகங்கள் அப்படி! மக்கள் கொந்தளிச்சுப் போயிருந்தனர். சிட்டிங் சி.எம்மை தோற்கடித்தது அப்போதுதான். அதிமுக கோட்டையான பர்கூரில் ஜெ தோற்கடிக்கப்பட்டார். அப்போது ஜெ & சசி டீம் அடிச்ச கொள்ளை, நடத்திய அராஜகச் செயல்கள் (ஐ.ஏ.எஸ் அதிகாரி மீதே ஆசிட்)
தாளாமல் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தந்த அழுத்தத்தினாலும் ஜெ & கோ மீது ரெய்டு நடத்தப்பட்டது. அங்கே கிடைத்த நகைகள், வைரக்குவியல்கள், சொத்துப் பத்திரங்கள் அவரை சிறைச்சாலைக்கும் அழைத்துச் சென்றது. அப்போதும் இதை அதிமுக பழிவாங்கும் நடவடிக்கை என விமர்சித்தனர்.
அந்த ரெய்டின் விளைவாக
Read 18 tweets
4 Jul
#திமுகஇளைஞரணி
தாய்க் கழகத்துக்குப் பிறகு திமுகவின் மிக முக்கிய அணியாக இளைஞர் அணி இருப்பதின் காரணம் யாவரும் அறிந்ததுதான்! அந்த அணியைத் துவக்கி, 30 ஆண்டுகள் திறம்பட நடத்தி வந்தது திமுகவின் தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின். இதனாலேயே இயல்பாக கூடுதல் கவனம் பெற்ற இளைஞர் அணி உருவாக்கிய
தலைவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். பெரும் வெற்றிகளின் போதும், தொடர் தோல்விகளின் போதும் கட்சிக்கு அச்சாணியாக இருந்து செயல்பட்டது திமுக இளைஞர் அணிதான். அந்த இடத்தை இட்டு நிரப்ப மூன்றாண்டுகளுக்கு முன்னர் @Udhaystalin தேர்வு செய்யப்பட்ட போது அவர் எதிர்கொண்ட கடுமையான விமர்சனமும், இங்கே
நடந்த தொடர் விவாதங்களும் திமுக இளைஞர் அணிச் செயலாளர் பதவியை தமிழ்நாட்டு முதலமைச்சர் பதவியைப் போல பூதாகரமாக்கியது. அதனாலேயே, இளைஞர் அணிச் செயலாளரின் தேர்வு அனைவராலும் உற்று நோக்கப்பட்டது.
நான் கவனித்தவரை இளைஞர் அணியின் இந்த மூன்றாண்டு செயல்பாடுகளை தொகுத்து எழுதினால் அது ஒரு
Read 18 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(