#Thread முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு, வழக்கு, கைதுகள் பழி வாங்கும் நடவடிக்கையா? இதிலே பார்ப்போம்.
1996ல் இதை முதலில் தொடங்கி வைத்தது திமுக. அதற்கும் முன்னரும் பல குற்றச்சாட்டுகள் எம்ஜிஆர், கலைஞர் மோதலில் வந்தாலும் அவைகள் விசாரணைக் கமிஷன் என்ற அளவில் போயிடும். கைது வரை சென்றது
96ல் தான். 91-96 ஜெ ஆட்சியில் நடந்த அராஜகங்கள் அப்படி! மக்கள் கொந்தளிச்சுப் போயிருந்தனர். சிட்டிங் சி.எம்மை தோற்கடித்தது அப்போதுதான். அதிமுக கோட்டையான பர்கூரில் ஜெ தோற்கடிக்கப்பட்டார். அப்போது ஜெ & சசி டீம் அடிச்ச கொள்ளை, நடத்திய அராஜகச் செயல்கள் (ஐ.ஏ.எஸ் அதிகாரி மீதே ஆசிட்)
தாளாமல் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தந்த அழுத்தத்தினாலும் ஜெ & கோ மீது ரெய்டு நடத்தப்பட்டது. அங்கே கிடைத்த நகைகள், வைரக்குவியல்கள், சொத்துப் பத்திரங்கள் அவரை சிறைச்சாலைக்கும் அழைத்துச் சென்றது. அப்போதும் இதை அதிமுக பழிவாங்கும் நடவடிக்கை என விமர்சித்தனர்.
அந்த ரெய்டின் விளைவாக
திமுக அரசு போட்ட வழக்குகளில்
1. டான்சி வழக்கில் (சுப்ரமணியசாமி கொடுத்த புகார்) இறுதியில் நீதிமன்றத்தால் எச்சரிக்கப்பட்டு, வாங்கிய சொத்தை திரும்ப அரசுக்கே தந்து மன்னிப்புக் கேட்டு தப்பினார்.
2. வெளிநாட்டில் இருந்து டாலர் வாங்கிய வழக்கு:
கையும் களவுமாகப் பிடிபட்ட பிறகு, எனக்கு
பரிசு வாங்குவது தவறு என்று தெரியாது. யாரோ 3 லட்சம் டாலர் அனுப்பினார்கள். அது எனக்கு வந்த பரிசு என கருதி எனது வங்கிக் கணக்கில் போட்டுக் கொண்டேன். இனி அப்படி செய்ய மாட்டேன். கருணை கூர்ந்து என்னை மன்னிக்கவும் என கெஞ்சி நீதிபதியின் கண்டிப்போடு தப்பினார்.
3. சொத்துக் குவிப்பு வழக்கு
இதிலும் வகையாக சிக்கிய ஜெ, அதன் பின் இரண்டு முறை முதலமைச்சர் ஆனபோதும் தப்பிக்க முடியாத அளவு வலுவான வழக்கு என்பதாலும், மைக்கேல் டி குன்ஹா எனும் ஈடு இணையற்ற நேர்மையாளராலும் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட்டார். முதன்முறையாக ஒரு முதலமைச்சர் பதவியில் இருக்கும் போதே சிறைக்குச் சென்ற
சரித்திரம் நடந்தது. வேறு மாநிலத்தில் நமது முதலமைச்சர் சிறையில் அடைபட்டார். அதன் பிறகு உச்சநீதிமன்றம் வரையில் போராடியும் அந்த தீர்ப்பில் இருந்து விடுபட முடியாமல் தண்டிக்கப்பட்ட குற்றவாளி எனும் நிரந்தர அடையாளத்துடன் ஜெ இறந்தார்.
அவருடன் தண்டிக்கப்பட்ட சசி & கோக்கு 4 ஆண்டுகள் சிறை,
அமைச்சர்கள் செல்வகணபதி, பொன்னுசாமி போன்றோருக்கு தண்டனை, பல அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களின் சொத்துகள் பறிமுதல் என அப்போது போடப்பட்ட வழக்குகளில் 90% அரசு தரப்பில் வெற்றியுடன் முடிந்தது.
சரி! இப்போ அதிமுக போட்ட வழக்குகளைப் பார்ப்போம்.
2001 ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெ பழிவாங்கும்
உக்கிரத்துடன் செயல்பட்டார். அடியாளைப் போன்ற ஒருவர் போலீஸ் கமிஷ்னராக கொண்டுவரப்பட்டு நடுநிசியில் எங்கள் தலைவர் கலைஞரை கைது செய்து தூக்கிச் சென்றனர். அவரை உடனடியாக மருத்துமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனும் நிபந்தனையுடன் ரிமாண்டு கொடுத்த நீதிபதி அசோக் குமாரின் உத்தரவை மீறி சிறைக்கு
கொண்டு செல்லப்பட்டார். நாடே கொந்தளித்தது. மத்திய உள்துறை செயலாளர் நேரில் வந்தார். கர்நாடக, ஆந்திராவில் இருந்து மத்திய காவல்படைகள் சென்னைக்கு அழைக்கப்பட்டது. நிலமையின் தீவிரத்தை உணர்ந்த ஜெ, எந்தவொரு நிபந்தனையும் இன்றி கலைஞரை விடுவிக்க முன்வந்தார். கலைஞரோ கோர்ட் உத்தரவின்றி வெளிவர
மறுத்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பெஞ்ச் தமிழக அரசை காறித் துப்பியது. டிஜிபி, கமிஷனரை நேரில் வர உத்தரவிட்டது. கடைசியில் தமிழக அரசு தலைமை நீதிபதியிடம் கலைஞரை கைது செய்த முறை தவறானது என ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்டது. (இவை எல்லாவற்றுக்கும் பதிவுகள் உண்டு).
இறுதியில் எங்கள் தலைவர் கலைஞர் உயர்நீதிமன்றத்தால் சட்டப்படி விடுதலை செய்யப்பட்டு ஒரு சிறைக்காவலரின் தோளைப் பற்றிக் கொண்டு சிறைக்கதவைத் தாண்டி வெளியே வந்த, அந்த கம்பீரத்துக்குப் பேர்தான் ஆளுமை. ஆட்சியும் அதிகாரமும் கையில் இருக்கும் போது ஊடகத்தை விலைக்கு வாங்கி பாராட்டுகளை எழுதி
வாங்கிக் கொள்பவர்கள் எல்லாம் ஆளுமைகள் அல்ல. அந்த கைதே சென்னை மேம்பாலம் கட்டுவதில் ஊழல் எனும் பொய்க் குற்றச்சாட்டின் அடிப்படையில் அப்போதைய மேயர் தளபதி ஸ்டாலின், தலைவர் கலைஞர் மீது போடப்பட்ட எஃப்.ஐ.ஆரின் அடிப்படையில் நடந்தது. கைதுக்குப் பிறகு மக்கள் கொந்தளிப்பை சமாளிக்க டிவி கேமிரா
முன் ஐ.ஐ.டி மேம்பலத்தின் மீது பாலத்தை கடப்பாறையால் தோண்டிப் பார்த்த அவலங்கள் அரங்கேறின. அந்த எஃப்.ஐ.ஆர் போடப்பட்டு இப்போது 20 ஆண்டுகள் ஆகிறது. அதில் 15 ஆண்டுகள் அதிமுக ஆட்சிதான். அந்த வழக்கில் கலைஞரையும், தளபதியையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தண்டனை வாங்கித் தருவது இருக்கட்டும்.
இன்னமும் குற்றப்பத்திரிக்கைக் கூட தாக்கல் செய்ய முடியவில்லை. இப்படியொரு மானங்கெட்ட ஈத்தரைகளை உலகில் வேறெங்குமே காண முடியாது. அடுத்த பீரியடில் தலைவரை விட்டு, வீரப்பாண்டியார், பொன்முடி, நேரு, எ.வ.வேலு போன்ற முதல்கட்ட தலைவர்கள் மீது வழக்குப் போட்டனர்.ஒரு வழக்கில் கூட குற்றத்தை
நிருபிக்க முடியவில்லை. மொத்ததில் அதிமுக போடும் வழக்குகள் பொய் வழக்குகள். எனவே அவர்களே அவைகளை நீதிமன்றம் வரையில் கொண்டு வராமல் நிலுவையிலேயே வைத்திருப்பார்கள். மாறாக, திமுக போடும் வழக்குகளோ உண்மையின் அடிப்படையில் ஆனவை. எனவே வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் அதிமுகவினர் வாய்தா
தேடி ஓடுவார்கள். திமுக வழக்குப் போட்டால் யாரும் தப்பவே முடியாது என்பது வரலாறு.. தாமதம் ஆனாலும் நீதி கிடைத்தே தீரும். கொள்ளையடித்தவர்கள் மீது வழக்குத் தொடர்ந்து தண்டனை பெற்றுத் தருவோம் என மக்களிடம் வாக்குறுதி அளித்துதான் ஆட்சிக்கு வந்துள்ளார் எங்கள் தலைவர். கொடநாடு கொலை வழக்கு வேற
வெறித்தனமா வெயிட்டிங்.
பிறகு அதிமுகவே அமைத்த ஆறுமுகசாமி ஆணையம், டாக்டர் ராமதாஸ் அளித்த ஊழல் புகார்கள், விஜிலென்ஸ்க்கு வந்துள்ள புகார்கள், அரசு உயரதிகாரிகள் தந்துள்ள வாக்குமூலங்கள் என பல வரிசையில் காத்திருக்கிறது. பதறுவோர் கதறட்டும். சட்டம் தன் கடமையைச் செய்யும். நீதி வெல்லும்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SKP KARUNA

SKP KARUNA Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @skpkaruna

4 Jul
#திமுகஇளைஞரணி
தாய்க் கழகத்துக்குப் பிறகு திமுகவின் மிக முக்கிய அணியாக இளைஞர் அணி இருப்பதின் காரணம் யாவரும் அறிந்ததுதான்! அந்த அணியைத் துவக்கி, 30 ஆண்டுகள் திறம்பட நடத்தி வந்தது திமுகவின் தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின். இதனாலேயே இயல்பாக கூடுதல் கவனம் பெற்ற இளைஞர் அணி உருவாக்கிய
தலைவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். பெரும் வெற்றிகளின் போதும், தொடர் தோல்விகளின் போதும் கட்சிக்கு அச்சாணியாக இருந்து செயல்பட்டது திமுக இளைஞர் அணிதான். அந்த இடத்தை இட்டு நிரப்ப மூன்றாண்டுகளுக்கு முன்னர் @Udhaystalin தேர்வு செய்யப்பட்ட போது அவர் எதிர்கொண்ட கடுமையான விமர்சனமும், இங்கே
நடந்த தொடர் விவாதங்களும் திமுக இளைஞர் அணிச் செயலாளர் பதவியை தமிழ்நாட்டு முதலமைச்சர் பதவியைப் போல பூதாகரமாக்கியது. அதனாலேயே, இளைஞர் அணிச் செயலாளரின் தேர்வு அனைவராலும் உற்று நோக்கப்பட்டது.
நான் கவனித்தவரை இளைஞர் அணியின் இந்த மூன்றாண்டு செயல்பாடுகளை தொகுத்து எழுதினால் அது ஒரு
Read 18 tweets
4 Jul
Censorship : இதுவும் பிரிட்டனிடம் இருந்து நாம் கற்ற கட்டுப்பாட்டு முறைதான். முகலாய காலத்தில் கூட அரசர்களையே கேலியும், கிண்டலும் செய்து வந்த பல்வேறு கலைவடிவங்கள் எந்தவிதத் தடையுமின்றி நடந்து வந்த பண்பாட்டுச் சூழல் இது. நாட்டார் பாடல்களில் அதன் எச்சத்தை இன்னமும் நாம் காணலாம்.
பிரிட்டிஷ் அரசுதான் முதன்முறையாக மேடை நாடகங்களுக்குத் தணிக்கை முறையைக் கொண்டு வந்தனர். அதன்படி நாடகம் மேடை ஏறுவதற்கு முன் அதன் முழு ஸ்கிரிப்டை காவல்துறையிடம் தந்து அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது. திரைப்படங்கள் வரத் தொடங்கியபோது அவைகளுக்கு தணிக்கை இல்லாமல் இருந்ததாம்!
பிறகு, அதன் ஆதிக்கத்தைக் கண்டு மிரண்டு போன அரசு திரைப்படங்களுக்கு என தணிக்கைத் துறை உருவாக்கியது. எந்த ஒரு கட்டுப்பாட்டு அமைப்பும் நாளடைவில் தேவைப்படாமல் போவதுதான் சமூகத்தின் வளர்ச்சிக்கான அடையாளம். இங்கிலாந்தில் இப்போது திரைப்படத் தணிக்கைத் துறையின் பணி வெறுமனே, Age Rating
Read 12 tweets
26 Jun
#தேசப்பற்று என்பதை தேசத்தின் எல்லையில் கிடைக்கும் பொருள் அல்ல. அது மக்களின் உணர்வுகளில் கிளர்ந்தெழக் கூடிய உணர்வு. தேசத்தைக் காப்பது என்பது தேசத்தின் எல்லையைக் காப்பது மட்டும் அல்ல. தேசத்தில் வாழும் மக்களின் உரிமைகளைக் காப்பதும்தான். தேச சேவை என்பது எல்லையில் பணிபுரிவது
மட்டும் அல்ல. தேசத்தில் வாழும் அடிதட்டு மக்களை மேலுயர்த்தும் பணியும்தான்.
எப்போதெல்லாம் தங்களின் போலி முகமுடிகள் கிழிந்து தொங்குகிறதோ, அப்போது மட்டும் "எல்லையில் ராணுவ வீரர்கள்" என கூச்சலிட்டு உருவாக்கும் போலி எழுச்சிக்கு ஆயுள் ஓரிரு நிமிடங்கள் கூட இருக்காது. உதாரணமாக, எல்லையில்
ஒரு ரெஜிமெண்டில் பணிபுரியும் 1000 ராணுவ வீரர்களை எடுத்துக் கொள்ளலாம். அவர்களை மாநிலம் வாரியாக பிரிப்போம். பிறகு பொருளாதார வாரியாக, மதம் வாரியாக, சாதி வாரியாக பிரிப்போம். இவர்கள் அனைவருமே தேசத்தின் பாதுகாவலர்கள்தானே! இவர்கள் அனைவருக்குமே தேசத்தின் வளங்கள் சமமாக பிரித்துத்
Read 8 tweets
12 Jun
நீண்ட திரெட் :
நேற்று இந்நேரம் டைம்லைன் இருந்த கொதிநிலையை எண்ணிப் பார்க்கிறேன்.
தடுப்பூசி முகாம்களுக்கு மக்களைக் கொண்டு வரும் பணியைச் செய்ய சென்று கொண்டிருந்த நேரத்தில் டிவிட்டரை திறந்தபோது திருச்சியில் நடந்த சம்பவத்தை அறிந்தேன். இதென்ன! தவறான அணுகுமுறையாக உள்ளதே என நினைத்தபோது
நண்பர் ஒருவர் அழைத்து பாதிக்கப்பட்ட பையனுக்கு உதவ முடியுமா என கேட்டார். அந்தப் பக்கம் நடந்தது எதுவென தெரியலையே என்றேன். அந்த சம்பவத்தின் இணைப்பை அனுப்பி வைத்தார். பார்த்தால் அது நான் ப்ளாக் பண்ணி வைத்திருக்கும் ஐடி. அப்போதே நான் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இங்கே
அதற்கான எதிர்வினையாக உங்களிடம் எழுந்த கோபமும், ஆத்திரமும் என்னையும் உள்ளே இழுத்து விட்டு விட்டது. வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர்களான @IlovemyNOAH2019 , @Surya_BornToWin போன்றோர் கூட சமநிலை இழந்திருந்ததை என்னால் இப்பவும் புரிந்து கொள்ள முடியவில்லை. எப்போதும் நிதானமாக தமது
Read 23 tweets
6 Jun
"மாநில வளர்ச்சி கொள்கைக்குழு" எனப்படும் முன்னாள் மாநிலத் திட்டக்குழுவுக்கு துணைத் தலைவராக பேராசிரியர் ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பொறுப்பு தமிழக அரசின் கேபினெட் அமைச்சர் பதவிக்கு நிகரான அதிகாரங்களும், வசதிகளும் கொண்ட உயர்ந்த பொறுப்பாகும். கடந்த ஐந்து ஆண்டுகளில்
தமிழக அரசின் கொள்கைகள், மக்களுக்கான இலவசத் திட்டங்கள், கல்வி, மருத்துவ அடிப்படைக் கட்டமைப்புக்கு எதிராக வடக்கில் இருந்து சங்கிகள் நடத்திய மிகப் பெரிய பண்பாட்டுப் போரை நாம் எதிர்கொண்டோம். அரசியல் கட்சிகளுக்கு வெளியில் இருந்து நமது சமூகநீதி சார்ந்த வளர்ச்சித் திட்டங்களுக்கு
ஆதரவாக ஆதாரப்பூர்வமாக பேசியும், எழுதியும் இளம் தலைமுறையினருக்கு "நாம் சரியான பாதையில்தான் செல்கிறோம்" என ஆற்றுப்படுத்தி வழி நடத்திய பொருளாதார மேதைக்கு இந்த உயரிய கவுரம் அளித்தது மிகப் பொருத்தமே!
அடுத்ததாக பேரா. ம. விஜயபாஸ்கர். The Dravidian Model புத்தகம் எழுதிய ஆய்வாளர். அதுபோக
Read 7 tweets
5 Jun
இந்திய தபால் துறை :
நான் மிகவும் மதிக்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம் இது. உலகிலேயே மிகச் சிறப்பான கட்டமைப்பும், அர்ப்பணிப்பும் கொண்ட நிறுவனம் இது என்று கூட நான் சொல்வேன். சின்ன வயசிலே நான் பல பரிசோதனைகளை செய்து பார்த்த அனுபவத்தில் இதை சொல்கிறேன்.
நினைவு 1 : அட்லஸ் எடுத்து வடக்கே
ஒரு சின்ன ஊரின் பெயரைத் தேர்ந்தெடுப்பேன். 15 பைசாவுக்கு போஸ்ட் கார்டை வாங்கி அந்த ஊரில் ஒரு கற்பனைக் கேரக்டரை உருவாக்கி, உடைந்த ஆங்கிலத்தில் எங்க ஊர், கோவில் பற்றி, அன்றைக்கு மயில் பார்த்தது, வீட்டுப்பாடம் எழுதியது எல்லாம் டைரி போல எழுதி தபால் பெட்டியில் போடுவேன். நாட்கள் மிக மிக
மெதுவாக நகர்ந்த காலம் அது. பல நாள் கழித்து அந்த தபால் கார்டு மேலே பற்பல முத்திரைகளை வாங்கி குடுகுடுப்பைக்காரனின் ஒட்டுப்போட்ட துணி போல எனக்கே திரும்ப வரும். addressee not found என முத்திரை தாங்கி.. நான் கொடுத்த 15 பைசாவுக்கு மதிப்புத் தந்து அந்த அட்டையை பல ஆயிரம் மைல்கள் பற்பல
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(