#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஜனகபுரி எனும் நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது மன்னன் குலசேகரனின் வழக்கம். அவன் சிறந்த மகாவிஷ்ணு பக்தன். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு சிறந்த பரிசு வழங்கப்படும்
என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள்.
மன்னன் குலசேகரன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒவ்வொரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள்.
ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது. மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர். ஒரு
ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப் பட்டிருந்தது. இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. சற்று உற்று பார்க்கும்போது, நீர்வீழ்ச்சியின் கீழே இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த பறவை ஒன்று கூட்டில் தனது குஞ்சுகளுடன் காணப்பட்டது.
‘இந்த ஓவியத்தை வரைந்தது யார்?’ என்றார் மன்னர் குலசேகரன். உடனே சம்பந்தப்பட்ட ஓவியர் சுப்பிரமணி மன்னரின் எதிரே வந்தார். ‘இந்த ஓவியம் தத்ரூபமாக பார்க்க அழகாகவும் இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி, இடியுடன் கூடிய மழை, கீழே மரத்தில் தனது கூட்டில் ஒரு
பறவை. ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது?’
மன்னா, சப்தமும், பிரச்னையும், போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அல்ல. இவை எல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்து கொண்டு எவ்வளவு கடுமையான சோதனை காலங்களிலும், பரந்தாமனின் நாமமே துணையாகக் கொண்டு வாழும் பக்தனை போல எதற்கும்
கலங்காமல், எதுவும் தன்னை பாதிக்கவிடாமல், பார்த்துக் கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி. அப்படிப் பார்க்கும் போது குஞ்சுகளுடன் இருக்கும் இந்தப் பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது. மேற் கண்ட இந்த விளக்கத்தை மன்னரிடம் ஓவியர் சுப்பிரமணி கூறி முடித்த மாத்திரத்தில்
மன்னரின் முகம் மலர்ந்தது. ‘சபாஷ்! அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம்’ என்று கூறி கை தட்டிய மன்னன் குலசேகரன் அந்த ஓவியத்திற்கே முதல் பரிசு கொடுத்தான். நமக்கு அனைத்து சௌகரியங்களும் அமையப்பெற்று எந்த வித பிரச்னையும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதியல்ல. அது ஒரு வாழ்க்கையும் அல்ல.
ஆயிரம் துன்பத்திற்கு நடுவே, நிச்சயம் ஒரு நாள் விடியும் என்று விடா முயற்சியுடன் தினசரி உழைத்துக் கொண்டு வருகிறார்களே, அவர்களிடம் இருப்பது தான் அமைதி. எத்தனையோ தொல்லைகள் யார் தந்தாலும், எனக்கு நேரும் மான அவமானங்களை விட நான் எட்ட வேண்டிய இலக்கே எனக்கு பெரிது, இவை எல்லாம் இறைவன்
செயல் என்று கூறி எதையும் பொருட்படுத்தாது போய் கொண்டிருக்கிறவர் உள்ளத்தில் உள்ளது தான் உண்மையான அமைதி. அந்த அமைதியை ஸ்ரீமந் நாராயணன் அருளால் நாமும் நமது வாழ்வில் மெல்ல, மெல்லக் கொண்டு வருவோம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

5 Jan
#நடராஜர் ஸ்ரீ நடராஜரின் உருவ அமைப்பை பற்றி பொதுவாக தெரிந்துகொள்வது அவசியம். நடராஜ வடிவம் சிவனின் நடனத்தை குறிக்கிறது, நான்கு கரங்கள் கொண்டது. சிவனின் சடை முடியப்பட்டு அணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, கீழ்பக்க சடை அவிழ்ந்து நடனத்தில் விரிந்து பறந்துகொண்டிருக்கிறது. முடிந்த சடையின் Image
மீது மண்டையோட்டையும், கங்கா தேவியின் உருவத்தையும், சடையைச் சுற்றி ஒரு நாகத்தையும், சடையின் மீது பிறைநிலவையும் காணலாம். தலையில் கொன்றையிலை மகுடம் சூடப்பட்டுள்ளது. வலது காதில் ஆண்கள் அணியும் காதணியும் (மகர குண்டலம்), இடது காதில் பெண்கள் அணியும் காதணியும் (குழை) அணிந்திருக்கிறான்.
கழுத்தில் ஆரமும், கைகளில் வளையங்களும், முழங்கையில் கடக வளையமும், கை விரல்களிலும், கால் விரல்களிலும் மோதிரங்களும் அணிந்திருக்கிறான். இடையில் இறுக்கமாக அணிந்துள்ள புலித்தோலாடை அவன் அணிந்துள்ளவற்றில் முக்கியமான ஒன்றாகும். மேலும் உதரபந்தமும் முப்புரிணூலும் அணிந்துள்ளான். ஒரு வலது
Read 14 tweets
5 Jan
#ஸ்ரீகிருஷ்ணனதைகள் ஸ்ரீமகாவிஷ்ணுவிடம் தன் மனதை பறி கொடுத்த காஞ்சி நகர் ஊழிசேரன் எனும் மன்னர், பெருமாள் பள்ளி கொண்ட வடிவத்தை, விக்ரகமாக செய்வித்து, தினமும் விதவிதமான அலங்காரங்கள், நைவேத்தியங்கள் என வழிபட்டு வந்தார். நாளாக நாளாக, நாம் இறைவனுக்கு எவ்வளவு விலை உயர்ந்த ஆடைகளும், Image
ஆபரணங்களும் சமர்ப்பிக்கிறோம், வாசனையும் அழகும் கலந்த மலர்கள், விதவிதமான பழங்கள், உயர்ந்ததான நைவேத்தியப் பொருட்கள், இம்மாதிரியான வழிபாட்டை யாருமே செய்ய முடியாது என்ற எண்ணம் அவர் மனதில் தோன்ற, ஆணவம் எனும் நச்சு மரம், அவருள் வேர் விட துவங்கியது. ஒரு நாள் மன்னர் ஊழிசேரன் உலாவச்
சென்று அரண்மனை திரும்புகையில், வழியில் மரத்தடியில் ஏழை பக்தர் ஆதிரன் என்பவர் விஷ்ணு பகவானின் சிறிய விக்ரகம் ஒன்றை வைத்து, துளசியால் அர்ச்சனை செய்வதை பார்த்தார். உடனே அவரை கூப்பிட்டு என் பகவானை வெறும் துளசியை சாற்றி அலங்கோலமாக்கி விட்டாயே அரண்மனையில் வந்து பார் என்றார் பெருமையுடன்
Read 9 tweets
4 Jan
#மாமரம் வாழை மரத்தைப் போல மா மரத்தின் இலை, மலர்கள், காய், கனி, வேர்ப் பட்டை மற்றும் பிசின் உள்ளிட்ட அத்தனை பாகங்களும், மனிதர்களின் உடல் நலனுக்கு அரிய தீர்வாகிறது. கோவில்களில் தல விருட்சமாக, பூஜைகளில் கலசங்களின் காப்பாக, தமிழர் பண்டிகைகளில் தோரணங்களாக மாவிலைகள் ஆன்மீகத்திலும்,
சித்த மருத்துவத்திலும் சிறப்பு வாய்ந்தது. மாவிலைகள் சிறந்த கிருமி நாசினி, வியாதி எதிர்ப்பு சக்தி மிக்க மூலிகையாகும். அதனால் தான் இந்து சமய திருவிழாக்கள், திருமணம், பிறந்த நாள் போன்ற மக்கள் கூடும் சிறப்பு நாட்களில் வீட்டு முகப்பில் மாவிலை தோரணம் கட்டப்படுகிறது. கோவில்கள், கோவிலைச்
சுற்றியுள்ள வீதிகளில் வீடுகளில் மாவிலைத் தோரணம் கட்டியே இருப்பது அந்தக் கால வழக்கம். கோமியம் எனும் பசுமாட்டின் சிறுநீர் கலந்த கலவையை மாவிலையைக் கொண்டு வீடுகளில் தெளிக்கும் போது, கிருமிகள் அகற்றப் படுகின்றன. மாவிலையின் மருத்துவ குணம், பயன்பாடு பற்றி தனி பதிவே போடலாம், ஏராளமானவை!
Read 8 tweets
3 Jan
உலகில் மிகக் கொடூரமான தாக்குதல் உண்டாவது நமது நாவால் தான். நம் வார்த்தைகளால் தான். ஆயுதங்களை வைத்து தாக்கினால் ஒன்று நம் எதிரி மரணம் அடைவான் அல்லது காயம் அடைவான். ஆனால் நாம் கடுமையான வார்த்தைகளை பிரயோகித்தால் எதிரி மரணம் அடைய மாட்டான். மாறாக, அவன் மனதிற்குள் பழிவாங்கும் எண்ணம்
என்னும் அரக்கன் விழித்துக் கொள்வான். இதனால் நமக்கு நாமே, பெரிய குழியை பறித்துக் கொள்கிறோம். அதனால் தான் கோபத்தில் கூட நமது நாவின் கட்டுப்பாட்டை நாம் இழந்து விட கூடாது. நாவை எப்படி கட்டுப்பாட்டுக்குள் வைப்பது?
அதற்குத்தான், உடலால் இறைவனை வணங்குவது, மனதால் இறைவனை சிந்திப்பது,
நாவால் இறைவனைப் பாடுவது என்று வைத்தார்கள். ஆண்டாள் நாச்சியார் இதைத் தான் “தூவயாமாய் வந்து நாம் தூமலர் தூவித் நதாழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும்: செப்பு ஏவலார் எம்பாவாய்” என்கிறாள்.
நோன்பு இருப்பவர்கள் மட்டுமல்லாது,
Read 11 tweets
2 Jan
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் இரண்டு அணில்கள் மரத்தில் ஏறி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன.
அதில் ஒரு அணிலுக்கு ஸ்ரீமந் நாராயணன் மீது பக்தி அதிகம். எந்தக் காரியத்தைச் செய்தாலும் ஸ்ரீமந் நாராயணனை சிந்தனை செய்து விட்டு செய்வதும் ஒவ்வொரு நன்மையிலும் கடவுளுக்கு நன்றி செலுத்துவதும் அதன் வழக்கம்.
அதன் தோழனான மற்ற அணிலுக்கோ கடவுள் நம்பிக்கையே கிடையாது.
திட்டமிட்டு செயல் புரியும் புத்திசாலிக்குக் கடவுளே தேவையில்லை என அடிக்கடி சொல்லும். அத்துடன் மற்ற அணில்களையும் கேலி செய்து சிரிக்கும். கடவுள் பக்தியுள்ள அணில் இதையெல்லாம் கண்டு கொள்வதேயில்லை. ஒரு நாள் சுவாரசியமாக விளையாடி
கொண்டிருக்கும் போது, உற்சாகத்துடன் ஓடும் போது பக்திமான் அணில் பிடி வழுக்கி மரத்திலிருந்து கீழே விழுந்து விட்டது. காயம் எதுவும் படவில்லை என்றாலும் கொஞ்சம் வயிற்றில் அடிபட்டு வலித்தது. பெரிய ஆபத்திலிருந்து என்னைக் காப்பாற்றிய கடவுளே ஸ்ரீமந் நாராயணா உங்களுக்கு மிக்க நன்றி என்றது.
Read 9 tweets
2 Jan
இன்று #ஹனுமத்ஜெயந்தி
ஹனுமத் பஞ்சரத்னம், ஐந்து ரத்தினங்கள் தான். ஆதி சங்கர பகவத் பாதாள் இராமாயணத்தைப் படித்து, ஸுந்தர காண்டம் பாராயணம் செய்து ஹனுமாரை நினைத்து புலகாங்கிதமா சொன்ன 5 ஸ்லோகங்கள் இவை.
இந்த பஞ்சரத்னத்திற்கு
சிரமிஹ-நிகி²லாந் போ⁴கா³ந் பு⁴ங்க்த்வா ஶ்ரீராம-ப⁴க்தி-
பா⁴க்³-ப⁴வதி என்று அவர் பலஸ்ருதி சொல்கிறார். இந்த ஸ்லோகங்களை சொல்வதால் இந்த உலகத்தில் போகங்களையெல்லாம் அனுபவித்துவிட்டு, அவன் ராம பக்தி அடைவான் என்கிறார். ஆசார்யாள் ராம பக்தி அடைவான் என்று சொன்னால் அந்த ராமனுக்கு பூஜை செய்கிற பாக்யம் கிடைக்கும், ராமர்கிட்ட பக்தியுடன் இருக்கும்
பாக்கியம் கிடைக்கும், ராமனாவே ஆகிவிடுவான் என்ற கர்ம பக்தி ஞானத்தைப் பற்றி சொல்கிறார். இந்த ஸ்லோகத்தின் நிர்வாகத்தில், அமைப்பில் ஆசார்யாளுக்கே ஹனுமாருடைய தரிசனம் கிடைத்துள்ளது புலனாகிறது. முதலில் நான் ‘அத்³ய பா⁴வயே ஹ்ருʼத்³யம்’ – இன்று மனத்தில் அந்த ஹனுமானை த்யானம் செய்கிறேன்
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(