நெல்லை சைவ வெள்ளாளர்களின் #இலை_ஒழுக்கம் சிறப்பு வாய்ந்தது.

1) இலையில் உணவு ஒரு குறிப்பிட்ட வரிசையில் பரிமாறப்படும்.

2) அனைத்தும் பரிமாறப்பட்ட பின் வீட்டில் பெரியவர் 'சாப்பிடலாமே' என்று இசைவளிக்கும் வரை இனிப்புகளைத் தொடுவதோ அப்பளத்தைக் கொறிப்பதோ அநாகரிகம்.
3) இலையின் நுனிப்பகுதி இடது ஓரமாக இருக்குமாறு விருந்தினருக்கு பரப்பப்ப்பட்டு இருக்கும்.
பரப்பப்படும் இலை, ஒரு மிகப்பெரிய இலையின் ஒரு பகுதியாக இருப்பினும் இந்த ஒழுங்கு கவனமாகப் பேணப்படும்.

4) முதலில் பருப்பு நெய் சேர்த்து சோறு உண்பர்.
பின்னர் குழம்புச் சோறு.
அடுத்து
புளியிட்டகறிச்சோறு. அடுத்து மோர்க்குழம்புச்சோறு. பின்னர் இரசஞ்சோறு. அடுத்து பாயசம். பாயசத்துடன் சர்க்கரை, வாழைப்பழம், பூந்தி என வைக்கப்படும். (அப்பளத்தை அதில் நொறுக்கிப்போட்டு உண்ண மாட்டார்கள்.)
கடைசியாக மோர்ச்சோறு. ஏதேனும் ஒரு சோறு போதுமென உண்பவர் உணர்ந்தால் அதை இலையின்
இடது ஓரமாக ஒதுக்கி வைப்பர். அடுத்த வகையுடன் சேர்த்துப்பிசைந்து உண்ண மாட்டார்கள்.

5) காய்கறி வகை தேவைப்படுவோர் கேட்குமுன்னரே விருந்தோம்புநரால் கேட்டு வைக்கப்படும்.

6) இலையில் பரிமாறப்பட்டாலுமே கூட உணவினை நக்கி உறிஞ்சி ஒலி எழுப்பி உண்ணுதல் வெள்ளாளர் செய்யாத அநாகரிகச் செயல்.
7) மங்கல நிகழ்வாய் இருப்பின், உணவு உண்டபின் இலையினை வெளியில் இருந்து தம்மை நோக்கியும்,
அமங்கல நிகழ்வாய் இருப்பின் தம்மில் இருந்து வெளிப்புறம் நோக்கியும் இலையினை இலையின் நடுப்பகுதியினை ஒட்டி மடக்கிக் காத்திருப்பர்.

8) அனைவரும் உண்டு முடித்த பின்னர் விருந்தினரில் பெரியவர் ஒருவர்
'சரி எழலாமா?' என்று கேட்டுக்கொள்ளும்போது மட்டுமே எழுந்து கைகழுவ வரிசையாகச் செல்வர்.

விருந்து நடைபெறும்போது விருந்துண்போருக்குப் பின் சென்று காத்துக்கொண்டு நின்றிருத்தல் மிகவும் இழிவாகப் பார்க்கப்படும்.
ஒரு பக்கம் விருந்தினர் உணவு உண்டு முடித்துச் சென்ற பின்னர், அடுத்து உண்ணாதிருக்கும் விருந்தினரை விருந்தோம்பும் அன்பர் சென்று அழைத்தால் மட்டுமே அடுத்த விருந்தில் வெள்ளாளர்கள் உணவுண்ண இசைவர்.
அழையாது இருப்பின் விருந்தில் கலந்துகொள்ள மறுப்பர்.
9) சோற்றினை தேவையான அளவு தமக்கு வலப்புறமாக பிசைந்து வைத்துக்கொண்டு உண்ணல் மட்டுமே வழக்கம்.

10) குழம்பு வகைகளை மட்டுமே சோற்றில் பிசைந்து உண்பர். காய்கறிகளை சோற்றில் பிசைந்து சாப்பிடமாட்டார்கள்.

இந்த ஒழுக்கங்களில் எவரிடமாவது மாறுபாடு தென்பட்டால் அவர்களை நீங்கள்
பிறகு சாப்பிடலாம் என்று கூறி அழைத்துச்சென்று வெளியேற்றி விடுவார்களாம்.(எமது தந்தையார் சொன்னது.)

வேறு குடிகளின் நிகழ்ச்சிகள் எவற்றிலும் சைவ வெள்ளாளர்கள் கலந்து கொள்வரே அன்றி கை நனைக்க மாட்டர். விருந்துகளில் கலந்துகொள்ளவும் மாட்டார்கள்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பிள்ளை

பிள்ளை Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Its_Pillai

5 Nov 20
ஒரு மறைமுகப் போராளியின், வீரப் பாதங்களின் சுவடு.!
விடுதலைப்புலிகள் என்றால் யார்? அந்த வீரர்களின் மனத்துணிவு எத்தகையது? அவர்கள் தமது தேசத்தையும், மக்களையும், தமது சக போராளிகளை யும் (நண்பர்கள்) எவ்வளவு தூரம் 1/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
நேசித்தார்கள்?
இந்த கேள்விகளுக்கான விடையை, நீங்கள் ஒரு உண்மை சம்பவத்தின் ஊடாக அறிய முடியும் என்பதே எனது நம்பிக்கை.!

இது போல பல தியாகங்களுக்கு கட்டியம் கூறி நிக்கும், பல நூறு சம்பவங்கள் எமது போராட்ட வரலாற்றில் உள்ளன. 2/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
அதில் ஒன்றை இந்த கேள்விகளுக்கான விடையாகப் பதிவு செய்கின்றேன்.
நான் இதை பதிவு செய்வதற்கு காரணம், புலிகள் ஏதோ ஒரு ஆயுத குழுவோ, அல்லது கொடும் கோலர்களோ அல்ல. மாறாக தமது தேசத்தையும், மக்களையும் உளமார நேசித்து அதற்காகவே 3/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
Read 48 tweets
31 May 20
நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை.

திருட்டு ரெயில் ஏறினேன் வேறு யாரும் அந்த ரயிலை திருடிவிட்டு போகக்கூடாது என்பதற்காக தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தேன் எங்கள் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறி விடக்கூடாது
என்பதற்காக விலைமகளிடம் காசு பிடுங்கினேன் இனியாரும் திராவிட நாட்டில எங்களைத் தவிர விலை வைத்து எதையும் விற்க கூடாது என்பதற்காக

உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள் நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம்
கலந்திருக்கிறது தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமல விடமாட்டான் என்பது போல

என்னைக் கட்டுமரம் கட்டுமரம் என்கிறார்களே இந்த கட்டுமரம் எத்தனை கரையில் ஒதுங்கி இருக்கிறது என்பதை நான் க்டந்து வந்த வீடுகளை கேட்டால் தெரியும் மந்திரிகுமாரி படத்துக்கு வசனம் எழுதிய நான் விசயகுமாரி வீட்டில்
Read 9 tweets
26 Mar 20
எங்கள் இனத்தின் மீது கை வைத்த இத்தாலிக்காரியின் நாடு 'சர்வ நாசம்' and counting.
😡😡😡
பேராசிரியர் அருளினியன்
எது தமிழருக்கான அரசியல்?

பெரும்பான்மையான தமிழ்த்தேசியவாதிகள் தடுமாறுகின்ற இடம் இதுவாகத்தான் இருக்க முடியும். 'யாருக்கான அரசியலை பேசுவது? யாருக்கான அரசியலை நாம் பேச வந்தோம்?' என்பதை எல்லாம் மறந்துவிட்டு அடிக்கடி, ''திருவள்ளுவர் என்ன சொன்னார் தெரியுமா?
இதுவா தமிழரின் மாண்பு? இதுவா பிரபாகரன் பிள்ளையின் புரிதல்?'' இதுவா.. இதுவா... என்று இழுப்பது.

அட இரு.. இரு.. தம்கட்டாத.. மூச்சை விடு...

திருவள்ளுவர் காலத்தில் மலையாளி, கன்னடர், தெலுங்கர் என்ற இனமே இல்லை. திருவள்ளுவர் காலத்தில் ஒருவேளை வேற்று இனத்தைச் சார்ந்தவர்கள் தமிழர்களை
Read 21 tweets
11 Nov 19
#பகிர்வு
அரசு அலுவலக வரைவுகளில் நம்மில் சிலர் தமிழ்ச் சொற்களைத் தவறாகப் பயன்படுத்துவதைப் பரவலாகக் காண்கிறோம். அவ்வாறான சில வரைவுகளில் எவை தவறு, எவை சரி என்பன குறித்து நான் அறிந்தவற்றையும், தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் தெரிந்துணர்ந்த சிலவற்றையும் இங்கு குறிப்பிட 1/10
விரும்புகிறேன்.

1.செயல்முறை ஆணைகள் வரையும் போது பதவிப் பெயருக்குப் பின்னால் *"அவர்களின்"* என்கிற சொல் தவிர்க்கப்படவேண்டும்.

உதாரணமாக.. கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) அவர்களின் செயல்முறைகள் என்பது தவறு. 2/10
கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், வட்டார வளர்ச்சி அலுவலரின் (வ.ஊ) செயல்முறைகள் என்பது சரி.

இதற்குப் பின்னர், *முன்னிலை* என்பது தவறு. *பிறப்பிப்பவர் திருமதி. இரா. வடிவுக்கரசி* என்று எழுதவேண்டும்.

2. இதோடு நாம் அன்றாட அலுவல் வரைவுகளில் தவறாகப் பயன்படுத்தும் சில சொற்களையும்/ 3/10
Read 11 tweets
3 Nov 19
‘கண்ணிரண்டும் விற்று….’

முனைவர் சொ. சாந்தலிங்கம்.

மதுரை

அண்மையில் இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள ஆறுபேருக்கு பத்ம விருதுளை வழங்கிச் சிறப்புச் செய்துள்ளது. குறிப்பாக இசைஞானி இளையராசாவுக்கு பத்ம விபூசண் விருது வழங்கி அரசு தன் கௌரவத்தை உயர்த்திக் கொண்டுள்ளது. 1/100
அடுத்து முன்னாள் தொல்லியல் துறை இயக்குநர் திருவாளர் இரா. நாகசாமி அவர்களுக்குப் பத்ம பூசண் விருது வழங்கப்பட்டுள்ளது. எனது ஆசிரியர்களில் ஒருவர் என்ற முறையிலும், தொல்லியலைத் தமிழகத்தில் பட்டி தொட்டியெல்லாம் கொண்டு சென்றவர் என்ற வகையிலும் எனது மகிழ்ச்சியையும், 2/100
வாழ்த்துக்களையும் முதலில் அவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் இந்த விருதை வாங்குவதற்குத் திருவாளர் நாகசாமி அவர்கள் கொடுத்த விலை என்ன என்பது தான் தமிழ்நாட்டில் உள்ள பல நடுநிலை ஆய்வாளர்கள் மத்தியில் உலவி வரும் கேள்வியாகும். இவ்விருது இவருக்கு வழங்கப்பட்டது 3/100
Read 100 tweets
12 Oct 19
=================================
முக்கால் கிணறு தாண்டுகிறது முரசொலி!
=================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா *பெ. மணியரசன்* சிறப்புக் கட்டுரை!
=================================

தி.மு.க.வின் “முரசொலி” நாளேட்டில் “கீழடி அகழாய்வு: அறிக்கைகள் 1/27
வெளியிடப்படுமா? ஆய்வு தொடருமா?” என்று நேற்று (10.10.2019) ஆசிரியவுரை வந்துள்ளது. அதில் இறுதிப்பகுதியின் இரண்டு மூன்று பத்திகளை மட்டும் தவிர்த்திருந்தால், தமிழர்கள் அனைவருக்குமான சிறந்த ஆசிரிய உரையாக அமைந்திருக்கும்.

முரசொலி ஆசிரியவுரையின் சாரம்
கீழடி நாகரிகம் தமிழர் 2/27
நாகரிகம் என்பதால் இனப்பாகுபாட்டு அணுகுமுறையுடன் இந்திய அரசு அதைத் தொடராமல் ஏற்கெனவே மூடிவிட்டது. கீழடி ஆய்வில் உண்மையான ஆர்வத்துடன் பணியாற்றிய இந்திய அரசின் தொல்லியல் துறைக் கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருட்டிணனை அசாமுக்கு இடமாற்றம் செய்து விட்டது.

சிந்து சமவெளிப் 3/27
Read 27 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(