@SivaRoobini555
@VasaviNarayanan



போய் வா மகளே போய் வா

ஒரு மாதத்திற்கும் மேலாக @SivaRoobini555 @VasaviNarayanan இருவரால் அற்புத தமிழ் விருந்து அளிக்கப்பட்டு, கோதையின் கீதை என்று அவள் திருப்பாவையை ரசித்து எழுதினார்கள்.
கடந்த 30 நாட்களாக அற்புதமான அந்தப் பெண் ஆண்டாள் எனும் கோதையோடு பழகி அவள் தேன் தமிழ் திருப்பாவை பாசுரங்களை ரசித்தோம்.

அவள் காத்யாயனி விரதம் இருந்தாள் . அரங்கனையே மணாளனாக அடைய விரும்பினாள் . அவளுக்கு அவனைப் பிடித்தது போல் அவனுக்கும் அவளை ரொம்ப பிடித்தது .
அவனோடு மணம் ஆகும் வைபவத்தை கனா கண்டாள். கனவு நிஜமானது. ஸ்ரீரங்கம் ரங்கநாதனை சென்றடைந்தாள் அந்த சிறுமி.

அவள் கண்ட கனவு எவ்வளவு திவ்யமானது என்று அவள் விவரிக்கும் நாச்சியார் திருமொழியில் சுவைத்து ரசிக்கலாம்.
நம்மில் சிலருக்கு கனவில் எப்போதும் திருடன் வீட்டுக்குள் வருவது போல், யாரோ துரத்துவதால் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடுவது போல், போலீஸ்காரனிடம் ஹெல்மெட் இல்லாமல் பிடி படுவதுபோல், பஸ்ஸிலிருந்து விழுவது போல் காட்சிகள் வரும். தூக்கத்தில் வாய் உளறும் .
ஆண்டாள் அப்படி இல்லை. நாளெல்லாம் வாயினிக்க அந்த கண்ணனைப் போற்றிப் பாடினாலும் இரவில் தூக்கத்திலும் அந்த அழகிய சிறுமிக்கு இடைவிடாத கனவில் கண்ணனே அவளை கல்யாணம் பண்ணிக்கொள்ள வந்தான். கனவை தோழிகளிடம் சொன்னாள்.

'' உனக்கு நிஜமாக எப்போ டீ அந்த கிருஷ்ணனோடு கல்யாணம்?''
ஆண்டாள் கனவு கண்டாளே அது நிறைவேறியதா? கனவு நிறைவேறுமா?. ஓ ஆகுமே!

மாசம் பூரா விரத மிருந்து ஆண்டாள் வேண்டிக்கொண்டது நிறைவேறியது.

கனவு காட்சியாகியது. போகியன்று சில இடங்களில், தை முதல் நாள் அன்று என்றெல்லாம் ஆண்டாள் திருக்கல்யாணம் ஊரெல்லாம் காலா காலமாக நடைபெறுகிறதே .
கோதை ஆண்டாளாகி ரங்கனோடு கல்யாணமும் ஆகி விட்டது. இனி அவள் கணவனோடு கடவுளாக என்றும் வாழ்கிறாள். எல்லா பெருமாள் கோயிலிலும் நமக்கருள்கிறாள். பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண்ணாக திவ்ய ப்ரபந்தமாக அன்றாடம் நம்மால் பாடி வணங்கப்படுகிறாள். கொஞ்சம் பின்னோக்கி பார்ப்போம்.
திருப்பாவையின் சாராம்சம் என்ன?

வில்லிபுத்தூரில் ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்ததா? எங்கு? யாருக்கு? தெரியாது. அப்படியென்றால் எங்காவது இருந்ததா? எங்கு? எப்போது?

இந்த எல்லா கேள்விகளுக்கும் ஒரே விடை :

ஆமாம்
ஒரு தெய்வீக குழந்தை அப்போதே பிறந்ததாக தெய்வமே தன்னை காட்டிக் கொண்டிருக்கலாம், அல்லது விஷ்ணு சித்தர் வீட்டில் துளசி நந்தவனத்தில் கிடைத்தது போல் காட்டிக் கொண்டிருக்கலாம்.

எப்போது ? ஏழாம் நூற்றாண்டில்.

என்றைக்கு? ஆடிப்பூரம் அன்று.

என்ன குழந்தை?
அழகிய ''மகாலக்ஷ்மி '
அந்த குழந்தையை கண்டெடுத்த விஷ்ணு சித்தர் ''கோதை'' எனப் பெயர் சூட்டி பெண்ணாக வளர்த்தார். தன்னைப்போலவே அவளையும் ஒரு வைணவ சிகாமணியாக்கினார்,

இருவருமே ஆழ்வார்கள். அவளால் அவர் பெரியாழ்வார். அவள் பாசுரங்கள் எழுதி திருப்பாவை , நாச்சியார் திருமொழி, எல்லாமே உலக பிரசித்தமாகிவிட்டது.
சிறுவயதிலேயே மணம் முடிக்கும் அக்காலத்தில் ஆண்டாளுக்கு திருமணமானது, ரெண்டே பேர் இதுவரை சில வருஷங்கள் தனியாக வாழ்ந்து மகிழ்ந்திருந்து இப்போது அவள் மணமாகி ''புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே'' ஆகிவிட்டதால் விஷ்ணு சித்தர் தனியாகி விட்டார்.
ஸ்ரீரங்கத்தில் அவள் ரங்கனோடு கலந்த பின் வில்லிப்புத்தூருக்கு தனியாக நடந்து வந்தார். தனது துளசி நந்தவன ஆஸ்ரமத்தில் நிற்கும்போது எங்கும் வெறுமை தெரிகிறது, பிரிவு புரிகிறது.

ஒரு ''அப்பா'' வின் மனநிலையை அறிவோமா?

ஆண்டாள் கொடுத்து வைத்தவள்.
மனதிற்கிசைந்த கணவனை அடைந்து திருவரங்கனோடு ஒன்றி விட்டாள் . வேண்டியதை அடைந்துவிட்டாள் .

சிலை போல எவ்வளவு நேரமாக விஷ்ணு சித்தர் நிற்கிறார்?

அவர் மனம் ஸ்ரீரங்க திருமண வைபவம் திவ்யமாக நிறைவேறியதில் நிலைத்திருந்தது.

மனம் அவள் பிரிந்ததை ஏற்றுக்கொள்கிறதா?
''எங்கே என்கோதையைக் காணோம்? வீடு வெறிச்சென்று அமைதியாக இருக்கிறதே. அமைதி கொல்கிறதே. நந்தவனத்தை சுற்றி முற்றிலும் பார்த்தார்.

ஒருவேளை அங்கே ஏதாவது பூச்செடியோடு கோதை பேசிக் கொண்டிருப்பாளோ?

ஸ்ரீரங்கத்தில் விட்டுவிட்டு வந்த அவளை மனம் வில்லிபுத்தூரில் தேடியது.
வெறிச்சோடி இருந்த வில்லிபுத்தூர் ஆஸ்ரமத்தின் மௌனம், தனிமை அவரைத் தின்றது. தனக்குத்தானே என்ன பேசுகிறார்: கேட்போமா?

''எனக்கு அன்னம் ஆகாரம் எல்லாம் மறந்து விட்டதா வெறுத்து விட்டதா?

அவளில்லையே! இனி அன்னம் எதற்கு, நீர் எதற்கு , வீடு வாசல் இந்த நந்தவனம் ஏன், என் உடலே எதற்கு?
எல்லாம் அவளாகவே இருந்து, திடீரென்று அவளே இல்லாமல் போன பின் நானே எதற்கு?. என் கண்களில் வழியும் நீர் ஆனந்தக் கண்ணீரா? இல்லை அளக்க முடியாத சோகக் கண்ணீரா? தெரியவில்லையே. மனம் பித்துப் பிடித்து விட்டதே!!.
இதோ! இந்த துளசி வனத்தில் தானே, ஒரு ஆடிப் பூரம் அன்று, விடியற் காலை என் ரங்கனைப் பாடிக் கொண்டே புஷ்பம் பறிக்க வந்தபோது அந்தச் சின்ன ''குவா குவா'' குரல் கேட்டேன்.

ஆச்சர்யமாக, அவளை ஒரு தெய்வ பிம்பமாக, தாயாரின் சிறு வடிவாக, பார்த்து இதோ இந்த கூடத்தில் இட்டு பால் வார்த்தேன்.
இங்கு தானே ரங்கன் முன்னால் அமர்ந்து அவளை மடியில் போட்டுக் கொண்டு அனைவர் மத்தியிலும் அவளுக்கு இரவெல்லாம் யோசித்து பொருத்தமாக தேர்ந்தெடுத்த “கோதை ”(பூமியில் கிடைத்தவள்) என்ற பெயரிட்டேன்.

இங்கு தானே அவள் எப்போதும் என்னோடு அமர்ந்து பேசுவாள்.
ரங்கன் கதையெல்லாம் திரும்ப திரும்ப கேட்பாள். வாய் ஓயாமல் நானும் சொல்லி சொல்லி மகிழ்வேனே.

எப்போதும் இந்த பூக்கூடையை பார்த்து “மாலை ரெடியா?” எனறு கேட்பாளே.

ஏன் எதற்கு என்று ரொம்ப காலம் புரியாமலே இருந்து விட்டேனே!.
தினமும் நான் கட்டி வைத்த மாலையைத் தன் தோளில் சூட்டிக்கொண்டு பின்னால் இருக்கும் கிணற்றில் நீரில் தன் அழகை பார்த்து அழகா, ரங்கா, நான் உனக்கு ஏற்றவளா? உனக்கு பிடிக்கிறதா என்னை என்று கேட்பாளாமே!.

இறைவனின் மனதில் இடம் பிடித்த அவளை ஒன்றும் அறியாதவனான நான் கோபித்ததே மாபெரும் தவறு.
அவள் '#சூடிக்_கொடுத்த மாலை தான் வேண்டும் என்று ரங்கனே அல்லவா உணர்த்தினான் எனக்கு.

அவள் அவனுக்காகவே பிறந்தவள். என்னிடம் வளர்வதற்காகவே வந்தவள். நான் பாக்யவானே.

அப்பறம் தானே இதெல்லாம் அந்த அழகிய மணவாளனே எனக்கு புரிய வைத்தான்!

ஆஹா, என்ன தேனினும் இனிய திவ்யமான குரல் அவளுக்கு.
எவ்வளவு சூடிகையான பெண் என் கோதை. எவ்வளவு அறிவு.

என்னமாய் தமிழ் பாசுரங்கள் எழுதலானாள்.

என் பெண் சாதாரண பிறவி அல்ல என்று வாய்க்கு வாய் சொல்வேனே. அவள் பாசுரங்ளை நானே எத்தனையோ முறை பாடிப் பாடி மகிழ்ந்தேனே. எல்லாமே அவள் என்னை விட்டு பிரிவதற்காகவேவா?

“ச்சே” என்ன எண்ணம் இது?
அவள் எங்கு என்னை விட்டு பிரிந்தாள்?.

நான் அல்லவோ மேள தாளத்தோடு அரசன் அனுப்பிய பல்லக்கிலே சகல மாலை மரியாதைகளோடு மகாலக்ஷ்மியாக அவளை சீவிச் சிங்காரித்து சீர் வரிசையோடு மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பினேன். கூடவே போனவனும் கூட.!

ஆஹா, என்ன அழகி என் மகள். எத்தனை மகிழ்ச்சி முகத்தில்.
“இன்னும் எத்தனை தூரம் இருக்கி றது, , எவ்வளவு நேரம் ஆகும் ஸ்ரீ ரங்கம் போக '' என்று கேட்டு கொண்டே வந்தாளே.

ஸ்ரீரங்கம் போனோம். அரங்கன் ஆலயம் எதிரே தெரிந்தது.

“என்ன ஆச்சர்யம், என்ன அதிசயம்! என்னைக் கிள்ளி பார்த்துக் கொண்டும் கூட என்னால் நம்ப முடியவில்லையே”.
'இதோ, வந்து விட்டது, என் ரங்கன் எனக்காக காத்திருக்கும் இடம்! இதோ வந்துவிட்டேன் ரங்கா, ........ ரங்கா, எனக்காக உன்னைக் காக்க வைத்து விட்டேனே!. சீக்கிரம், பல்லக்கை இறக்குங்கள்”

அவசர அவசரமாக பல்லக்கை இறக்கச் சொல்லித் தாவிக் குதித்து ரங்கனின் சந்நிதிக்குள் ஓடினாள்.
எல்லாரும் ''ரங்கா ரங்கா'' என்று உணர்ச்சி பொங்க கூவினோம்.

என் கோதை, எனை ''ஆண்டாள்'', எங்களையெல்லாம் திரும்பிப் பார்க்கக் கூட நேரமில்லாமல் உள்ளே ஓடிச் சென்றாள். அரங்கனை ஆரத் தழுவினாள்.

பிறகு? பிறகு .....?

ரங்கனோடு கலந்தாள் ..... எங்கே அவள் மறைந்தாள்!!!
இறைவனோடு எங்கள் ''இறைவி'' ஒன்றாக கலந்தது துக்கமா?? நிச்சயம் இல்லைதான்!

ஆனால், ஆனால்,.... அவளை இனி என் கோதையாக பார்க்க முடியவில்லையே!” என் செய்வேன்?????

மிகச் சோகமாக தனிமரமாக நிற்கும் விஷ்ணு சித்தரின், ஒரு ஆசைத் தகப்பனின் பாசக் குமுறல் தான் இது!
இனி நாம் ஆண்டாளை பெருமாள் கோவில்களில் ஆண்டவனோடு சேர்த்து, பார்த்து வணங்குவோம்.

மீண்டும் கோதையை அடுத்த மார்கழியில் சந்திப்போம்.
நன்றி @SivaRoobini555 & @VasaviNarayanan.

அதுவரையில்.... பல்வேறு தமிழ் பக்தி இலக்கியங்களை உங்கள் எழுத்து நடையில் எதிர் நோக்குகிறோம்

வாழ்க வளமுடன்
எல்லா நலமுடன்

@HariSri213 @SivaRoobini555 @BUSHINDIA @BKannigaa @bullettuupandi @drmathimaths @Radigua_V @rprabhu @aarjeekaykannan

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Srinivasa Iyer ஶ்ரீநிவாஸ ஐயர்

Srinivasa Iyer ஶ்ரீநிவாஸ ஐயர் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @srinivasan19041

14 Jan
#ஒரு_ஓய்வின்_ராகம்



முன்னெச்சரிக்கை: இந்த பதிவு #தன்மை_நிலையில் (First person singular - Grammar) எழுதப்பட்டுள்ளது.

முழுவதும் கற்பனை... யார் மனதையும் புண்படுத்த இல்லை
குறிப்பாக... இது @rgkannan & @makkolam அவர்கள் விரைவில் குணமடையவும் அவர்கள் மன அமைதியோடு நிறைய ஓய்வு எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன்.... இதோ ஒரு இசைப் பதிவு ( #கொஞ்சம்_நகைச்சுவையும் கலந்து தான்)
தற்போது கொரோனா பாதிப்பால் நான் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு இருக்கும் போது இங்கே ட்விட்டரில் விரைவில் நலம்பெற வாழ்த்திய அத்துணை அன்பு நெஞ்சங்களுக்கும் என் நன்றியும் அன்பும்...
Read 23 tweets
13 Jan
#கதையளப்பு_களஞ்சியம்

இந்த தலைப்பிற்கும் நம்ப @bullettuupandi அவர்கள் பதிவு செய்த கீழேயுள்ள வீடியோவில் கதை சொல்லும் #பேராசிரியர்_ஜெயந்தி ஶ்ரீ அவர்களுக்கும் ஒரு reference உண்டு.

இதுவும் எனது அனுபவமே

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அக்டோபர் மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமை. பெங்களூரில் எனது அண்ணி PhD பட்டம் பெற்றதை கொண்டாடும் வகையில் என் அக்கா வீட்டில் எங்கள் குடும்பம் சார்ந்த ஒரு விழா நடந்தது.
அந்த குடும்ப விழாவிற்கு Prof.Jayanthi அவர்கள் என் அண்ணிக்கு professional educational coordinator என்ற முறையில் அவரையும் வரச்சொன்னதால் அவரும் வந்திருந்தார்.

எல்லோரும் ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது சிலர் Prof.Jayanthi அவர்களை பேசச் சொல்லி கேட்டார்கள்.
Read 21 tweets
28 Dec 21
#விழித்திடு_இல்லையேல்_நிரந்தரமாக_தூங்க_வைக்கப்படுவாய்

கடவுளே ... வருவாயா!!!!

முதலில் அவர்கள் #பார்ப்பானை_விரட்டியடி என்றார்கள்.

*நான் பாடல் கேட்டுக் கொண்டிருந்தேன்.*

#நான்_பார்ப்பானாக_இருந்தாலும்_secular_ஆச்சே!!!!
பின்னர் அவர்கள் #நீ_உயர்வகுப்பை_சார்ந்தவன் உனக்கு #இட_ஒதுக்கீடு_இல்லை ஓடிப்போ என்றார்கள்.

*நான் சாப்பிட்டுக்கொண்டு அமைதியாய் இருந்தேன்.*

#நான்_உயர்வகுப்பினனாக_இருந்தாலும்_forward_looking_ஆச்சே!!!!
பின்னர் #நீ_வந்தேறி என்றார்கள்.

வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

#நான்தான்_தமிழனாயிற்றே; #வந்தேறி_கிடையாதே.

#இந்தியை_கண்ட_இடத்திலெல்லாம்_அழித்தார்கள்.

*நான் சிரித்துக் கொண்டிருந்தேன். #நான்தான்_இந்திக்காரன்_இல்லையே.*
Read 11 tweets
26 Dec 21
#சாப்பாட்டு_ஆன்மீகம்

நமது தமிழ்நாட்டுத் தினசரி சைவ உணவு மூன்று வரிசை முறைகளைக் கொண்டதாக இருக்கிறது.

முதலில் #சாம்பார்_சாதம், அடுத்து #ரசம்_சாதம், கடைசியில் #மோர்_சாதம் என்று.
கல்யாணம் மற்றும் பிற விசேஷங்களில் இடப்படும் #மோர்க்குழம்பு பற்பல #பாயசங்கள் ... அதெல்லாம் நினைத்தாலே இனிக்கும் என்பது வேறு விஷயம்

இவை மனிதனின் #மூன்று_குணங்களின் குறியீடு

#சாம்பார் என்பது பருப்பு சேர்ந்த #குழம்பு*
பருப்பு இல்லாமல் செய்தால் அதுவே #காரக்குழம்பு, #புளிக்குழம்பு, #வற்றல்_குழம்பு என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இதோடு சேர்த்து #வெந்தயக்_குழம்பு, #மிளகு_குழம்பு... இதெல்லாம் #தேவாமிர்தம்

#குழம்பு என்றால், #குழம்பியிருப்பது ... குழம்பில் காய் சேர்க்கப் படுகிறது;
Read 8 tweets
26 Dec 21
இது #கிளுகிளுப்பு_கதை இல்லை

#காதல்_என்பது_எதுவரை?

"ஏய், ருக்கு, ருக்குமணி, இங்க வாடி. ஒரே ஒரு ஆட்டம்!!!

"சீனி..... ஒனக்கு வேற வேலையே இல்லை. #பிள்ளையில்லாத_வீட்டில்_கிழவன்_துள்ளி_விளையாடினானாம். "
"யாருடி கிழவன்? கையை மடக்கிக் காட்டறேன் பாரு, எப்படிக் கிண்ணுனு இருக்குன்னு. இரும்பு உடம்புடி, தெரியுமா?"

"ஆமாம் உன் உடம்பைப் பத்தி எனக்குத் தெரியாம யாருக்குத் தெரியுமாம்? இப்போ கொஞ்சம் தொந்தரவு பண்ணாம இரு. எனக்குத் தூக்கம் வருது."

"எனக்கு வரல்லையே. வாடி. #ஒரே_ஒரு_தடவை மட்டும்
ஏன்யா, சொன்னாக் கேக்க மாட்டியா. எனக்கு லேசாத் தலையை வலிக்குது. சொல்ல வேணான்னு பாத்தேன்.

தலைவலியா? இதோ நான் தைலம் தேச்சு விடறேன். அப்படியே படுத்துக்கோ

வேண்டாம், தன்னாலே சரியாயிடும்

ஒண்ணும் பேசாம கண்ணை மூடி படுத்துக்கோ. இப்படி நல்லாத்தேச்சு அமுக்கி விட்டாத் தலவலி பறந்து போயிரும்
Read 8 tweets
26 Dec 21
இன்று டிசம்பர் 26. 2021ன் கடைசி ஞாயிற்றுக்கிழமை.

கடந்த மூன்று வருஷங்களாக கடைசி ஞாயிறன்று நான் ஸ்பெஷல் பிரார்த்தனை செய்து வருகிறேன். (ஒவ்வொரு ஞாயிறன்று காலையில் எனக்கு தெரிந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்து வருகிறேன் என்று இங்கு பலருக்கு தெரியும்).
வருஷத்தின் கடைசி ஞாயிறன்று (வீட்டில் தனியான பிரார்த்தனை செய்து விட்டு) வீட்டுக்கு அருகில் இருக்கும் ஏதாவதொரு கோவிலுக்கு சென்று... அன்று காலையில் யாருக்காக எல்லாம் பிரார்த்தனை செய்தேனோ அவர்களுக்காகவும் அவர்கள் குடும்ப, நட்புக்களுக்காகவும் அபிஷேகம் செய்து விட்டு
எல்லோர் சார்பாகவும் ப்ரசாதம் & அன்னதானம் செய்து வருகிறேன்.

அதன்படி இன்று எல்லாம் இனிதே நடைபெற்று வருகிறது. 11 மணியளவில் எல்லோர்க்குமான போஜனம் வழங்கப்பட இருக்கிறது.

இதை ஏன் செய்ய வேண்டும்???? இதற்கு காரணம்.....

எல்லோர்க்கும் தெரிந்த கதையை சொல்கிறேன். கேளுங்க
Read 18 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(