*காசிக்கு சென்ற புண்ணியம் கிடைக்க வழிபட வேண்டிய கோயில்!*

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள கோயில் காசி விஸ்வநாதர் கோயில்.

இந்தக் கோயிலில் காசிவிஸ்வநாதர் மூலவராக காட்சி தருகிறார். தாயார் விசாலாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். 🙏🇮🇳1
ஒவ்வொரு ஆண்டும், வைகாசி பிரம்மோற்சவம், ஆனியில் நடராஜருக்கு திருமஞ்சனம், ஆடியில் விசாலாட்சி அம்பாளுக்கு தபசுத் திருவிழா, ஆவணி மூலத்திருவிழா (பிட்டுத் திருவிழா), புரட்டாசி நவராத்திரி கொலு பூஜை, ஐப்பசியில் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம்,

🙏🇮🇳2
கார்த்திகை திருவிழா, மார்கழியில் திருவாதிரை திருவிழா, தைப்பூச திருவிழா, மாசி சிவராத்திரி விழா மற்றும் பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் இந்தக் கோயிலில் திருவிழா நடைபெறுகிறது.

🙏🇮🇳3
சிவன், காசியிலிருந்து வந்து தங்கிய இடம் என்பதால், சிவன் காசி என்று அழைக்கப்பட்ட இந்த ஊரானது சிவகாசி என்று மாறியது. வடக்கில் காசி, தெற்கில் தென்காசி நடுவில் சிவகாசி என்ற ஊர் உள்ளது.

🙏🇮🇳4
திருப்பதிக்கு எப்படி ஒரே எழுத்தும், இறுதி எழுத்தும் ஒன்றாக இருக்கிறதோ அதே போன்று சிவகாசிக்கும் முதல் எழுத்தும், கடைசி எழுத்தும் ஒன்றாக இருப்பது இத்தலத்திற்கு சிறப்பு சேர்க்கிறது.

🙏🇮🇳5
இத்தலத்தில் மூலவர் விஸ்வநாதர், தாயார் விசாலாட்சி, துர்க்கை, வள்ளி, தெய்வானையுடன் முருகன், விநாயகர், நடராஜர், மீனாட்சி, வீரபத்திரர், பைரவர், சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் போன்ற சனகாதி முனிவர்கள் தட்சிணாமூர்த்தியை வணங்கிய நிலையில் உள்ள சன்னதிகள் உள்ளன.

🙏🇮🇳6
விமானத்தில் அடிக்கடி பயணம் மேற்கொள்ள, தொழில் வளம் சிறக்க இந்தக் கோயிலில் உள்ள காசி விஸ்வநாதரை தரிசனம் செய்கின்றனர். பௌர்ணமி, சங்கடஹரசதுர்த்தி மற்றும் பிரதோஷ காலங்களில் சிவனுக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் செய்து நிவர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

🙏🇮🇳7
பற்று ஆசையை விடுவதற்காக காசிக்கு செல்கின்றனர். எல்லோரும் காசிக்கு செல்வதில்லை. வயதான பெரியவர்களில் காசிக்கு செல்ல முடியாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 🙏🇮🇳8
காசிக்கு செல்ல முடியாதவர்கள் சிவகாசியில் உள்ள காசி விஸ்வநாதரை தரிசனம் செய்தால் காசிக்கு சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். காசி விஸ்வநாதருடன் விசாலாட்சி தாயார் பக்தர்களுக்கு அருள் புரிகிறாள். இவர்களை வணங்கி வழிபட மன அமைதி கிடைக்கும்.

🙏🇮🇳9
சிவகாசியில் கோயில் கட்டிய பராங்குச மன்னன் தனது தவ வலிமையால் ஆகாய மார்க்கமாகச் செல்லும் ஆற்றலைப் பெற்றிருந்தான். அவன் துறவுநிலை மேற்கொண்ட பின் பராசரர் என்று அழைக்கப்பட்டான்.

🙏🇮🇳10
அதன் பிறகு தினந்தோறும் ஆகாய மார்க்கமாக காசிக்கு சென்று கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரை தரிசனம் செய்துவிட்டு சிவகாசியிலும் இறங்கி காசி லிங்கத்தை வழிபட்டு தென்காசி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தான்.

🙏🇮🇳11
எனவே, அடிக்கடி விமானத்தில் பயணம் மேற்கொள்ள விரும்புவர்கள் தொடர்ந்து 11 வாரம் சிவகாசி காசி விஸ்வநாதரை தரிசனம் செய்து வந்தால் பாதுகாப்பான பயணம் அமையும் என்பது நம்பிக்கை.

🙏🇮🇳12
வெளிநாட்டிற்கு வேலை செல்பவர்களும், தொழிலதிபர்களும் சிவகாசி காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.🙏🇮🇳13
பல ஆண்டுகளுக்கு முன்னதாக சிவகாசிக்கு பல ஊர்களைச் சேர்ந்த வணிகர்கள் வியாபாரம் தொடர்பாக வந்து சென்றார்கள். எப்போதெல்லாம், அவர்கள் வருகிறார்களோ அப்போதெல்லாம் சிவகாசி காசி விஸ்வநாதரை தரிசனம் செய்துவிட்டு செல்ல மறக்கவே இல்லையாம்.

🙏🇮🇳14
வருமானம் அதிகரித்து அதிகரித்து ஒரு கட்டத்தில் கிராமமாய் இருந்த சிவகாசி நகரமாகிவிட்டது. தங்களது வளர்ச்சிக்கு காரணம் இந்த காசி விஸ்வநாதரே என்பது வணிகர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

🙏🇮🇳15
காலண்டர், அச்சுத்தொழில், தீப்பெட்டி, பட்டாசு ஆகிய தொழில்களில் உலகப் புகழ் பெற்று குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் அளவிற்கு சிவகாசி வளரக் காரணமாக காசி விஸ்வநாதர் அமைந்துவிட்டார். 🙏🇮🇳16
வணிகர்கள் தங்களது தொழில் வளம் பெருக காசி விஸ்வநாதருக்கு 11 வாரம் சிவ வழிபாடு தொழில்களை செய்து வெற்றி பெறுகின்றனர்.

🙏🇮🇳17
தென்காசியில் அரிகேசரி பராங்குச மன்னன் சிவன் கோயில் ஒன்றை கட்டினான். அங்கு பிரதிஷ்டை செய்வதற்கு காசியிலிருந்து சிவலிங்கம் ஒன்றை கொண்டு வர தனது மனைவியுடன் சென்றான். அங்கு புனித நீரான கங்கையில் நீராடி ஒரு காராம் பசு மீது லிங்கத்தை ஏற்றிக் கொண்டு தென்காசி சென்றான். 🙏🇮🇳18
பல நாள் பயணம் செய்து வரும் வழியில், தற்போது சிவகாசி உள்ள இடத்தில் வந்து தங்கினான். அப்போது சிவகாசி வில்வனக் காடாக இருந்தது.

மறுநாள், அவனுடன் வந்த அரசிக்கு (மனைவி) பயணம் செய்ய முடியாதபடி உடல்நிலையில் கோளாறு ஏற்பட்டது. உடன் வந்த காராம்பசுவும் அவனுடன் வர மறுத்தது. 🙏🇮🇳19
இதனால், சிவலிங்கத்தை தென்காசிக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அந்த வில்வ வனத்தடியிலேயே காசியிலிருந்து கொண்டு வரப்பட்ட சிவலிங்கத்தை மன்னன் பிரதிஷ்டை செய்தான். இதன் காரணமாக காசி விஸ்வநாதரின் பெயரால் சுவாமிக்கு விஸ்வநாதர் என்ற திருநாமம் சூட்டப்பட்டது.

🙏🇮🇳20
அரிகேசரி பராங்குச மன்னனுக்கு பின் ஆட்சிக்கு வந்த பாண்டிய மன்னர்கள், இந்தக் கோயிலில் மண்டபங்கள், பிரகாரம், தீர்த்தம், சுற்றுமதில், ரத வீதிகளை அமைத்தனர். 🙏🇮🇳21
சிவகாசி காசி விஸ்வநாதர் கோயில் பணிகள் 1445ம் ஆண்டில் துவங்கப்பெற்று 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நிறைவு பெற்றதாக தகவல் சொல்லப் படுகிறது.

#வாழ்க_பாரதம் 🙏🇮🇳
#வளர்க_பாரதம் 🙏🇮🇳🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

Feb 1
குமரனின்அறுபடைவீடுகள்

#திருப்பரங்குன்றம் :

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். அசுரனை வென்ற அவர் இந்த தலத்தில் இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். 🙏🇮🇳1 Image
முருகன் அமர்ந்த கோலத்தில் இருப்பது சிறப்பு. இத்தலத்தில் மலை வடிவில் சிவபெருமான் அருள்புரிகிறார். சிவனின் பெயரால் இத்தலம் "திருப்பரங்குன்றம்' எனப்படுகிறது. முருகனின் அருகில் நாரதர் தாடியுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

🙏🇮🇳2
#திருச்செந்தூர் :

முருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர். இது கடலோரத்தில் அலைகள் வீச அமைந்துள்ளதால் அலைவாய் என்ற பெயரும் உண்டு. இந்ததலம் கைலாயத்திற்கு சமமானது. முருகப்பெருமான் சூரர்களை வெல்வதற்கு முன்னும் பின்னும் தங்கிய இடம். 🙏🇮🇳3
Read 14 tweets
Jan 31
*காணாமல் போகும்  உறவுகள்...!*

அவர் இறந்து விட்டார். அடக்கம் செய்யணும்.., சொல்லிக் கொண்டே சென்றார்கள்..!!

மெல்ல எட்டிப் பார்த்தேன் மூச்சு இல்லை – ஆனால் இப்போதுதான் இறந்திருந்தார் என்பதை மட்டும் நம்ப முடியவில்லை..!!
இருபது வருடங்கள் முன்னாடி... அவர் மனைவி இறந்த பிறகு, *சாப்பிட்டாயா..!!* என்று யாரும் கேட்காத நேரத்தில்.. அவர் இறந்திருந்தார், யாருமே கவனிக்கவில்லை...!!
*பொண்டாட்டி போனதுமே போய்த் தொலைய வேண்டியதுதானே..* – என்று காதுபட மருமகள் பேசியபோது அவர் இறந்திருந்தார் அப்போதும் யாருமே கவனிக்க வில்லை...!!

*தாய்க்குப் பின் தாரம்.. தாரத்துக்குப் பின்.. வீட்டின் ஓரம் ...!!!* என்று வாழ்ந்த போது – அவர் இறந்திருந்தார். யாருமே கவனிக்க வில்லை ..!!!
Read 23 tweets
Jan 31
பாவங்கள் போக்கும் தை அமாவாசை*

தை அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து விட்டு ஏழைகள், இயலாதோருக்கு

தானம் கொடுப்பதன் மூலம் நாம் செய்த பாவங்கள், கர்மவினைகள், தீவினைகள் நீங்கும். அன்னதானம், வஸ்திரதானம் செய்ய முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.
இந்தியாவில் பித்ரு ஸ்தலங்கள் 7 உள்ளன.*

காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, ஏழாவதாக திலதர்ப்பணபுரி.
ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள் இராமேஸ்வரம், திருப்புல்லானி மற்றும் கயா அக்ஷயவடம் போன்ற இடங்களில் தில ஹோமம் செய்வது தர்ப்பணம் செய்வது பித்ரு தோஷத்தை போக்கும் என்கிறது சாஸ்திரம்.
Read 10 tweets
Jan 30
*மும்மூர்த்திகளும் அருள் பாலிக்கும் கோவில்.*

சிவன், பிரம்மா, திருமால் என்று மும்மூர்த்திகளுக்கும் ஒரே கோவிலாக ஈரோடு மாவட்டத்தில் அமைந்து இருக்கும் புண்ணியஸ்தலம் கொடுமுடி.

ஈரோட்டில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கொடுமுடி.

🙏🇮🇳1
பிரம்மன் இந்த தலத்துக்கு வந்து வழிபட்டதால் பிரம்மபுரி என்றும், திருமால் பூஜித்ததால் அரிகரபுரம் என்றும், கருடன் பூஜித்து தேவலோகம் சென்று அமுதம் கொண்டு வந்ததால் அமுதபுரி என்றும் இந்த தலத்துக்கு இன்னும் பல பெயர்கள் உள்ளன.

🙏🇮🇳2
திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய 3 பேராலும் பாடப்பட்ட தலம் என்பது மிகவும் சிறக்குரியதாகும்.

மலையின் முடியே இங்கு சிவலிங்கமாக காட்சி அளிப்பதால் கொடுமுடி என்று அழைக்கப்படுகிறது.

🙏🇮🇳3
Read 8 tweets
Jan 29
பஞ்ச பாண்டவர்களின் மனைவி திரௌபதிக்கு பகவான் கண்ணனின் மீது கொண்ட பக்தியில் தன்னை மிஞ்ச உலகில் வேறு ஆளில்லை என்று கர்வம் இருந்தது.
இதை கண்ணுற்ற பார்த்தனின் சாரதியான இந்த பார்த்தசாரதி பாஞ்சலியின் இந்த கர்வத்தை அகற்ற எண்ணம் கொண்டார் பகவான் கண்ணன்.
ஒருநாள் காட்டில் இருந்த திரௌபதியை காணவேண்டி வந்தார்.

கண்ணனை கண்ட திரௌபதைக்கு மிக்க மகிழ்ச்சி. 

அவள் கண்ணனிடம் "அண்ணா, நீங்கள் துவாரகையில் இருந்து எப்படி வந்தீர்கள்?  
தேர் குதிரை பல்லக்கு என எதையும் இக்காட்டில் காணவில்லையே?" என்றாள்.
Read 20 tweets
Jan 29
#ராமேஸ்வரம்*

புராணப்பெயர்

கந்தமாதன பர்வதம், திருவிராமேச்சுரம்

மூலவர்
ராமநாதசுவாமி

தாயார்
பர்வத வர்த்தினி

தல விருட்சம்
புன்னை, சதுரகள்ளி, மகிழம், குருந்த மரம்

🙏🇮🇳1
தீர்த்தம்

கோவிலுக்கு உள்ளே 22 தீர்த்தங்களும், கோவிலுக்கு வெளியே 22 தீர்த்தங்கள்.
பாடல் வகை
தேவாரம்
பாடியவர்கள்
சம்பந்தர், அப்பர்

🙏🇮🇳2
*தலவரலாறு*

இலங்கைப் போரில் ராவணனைக் கொன்ற பிறகு, சீதையை சிறைமீட்டு ராமபிரான் அழைத்துவருகிறார்.

ராமேஸ்வரம் தலம் வந்த பிறகு, ராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் விலக சிவபெருமானை வழிபடத் தீர்மானித்து, அனுமனை சிவலிங்கம் கொண்டு வருமாறு காசிக்கு அனுப்புகிறார்.

🙏🇮🇳3
Read 25 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

:(