காஞ்சி மகா பெரியவர் பற்றி கவியரசர் கண்ணதான் சொன்னது:
காஞ்சிப் பெரியவரின் அருமை இப்போது தெரியாது. இன்னும் 50 ஆண்டுகள் போனால், இந்து மதம் என்றால் என்ன என்று கேட்டால், 'மஹா பெரியவர்' என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான் என்று கவியரசர் கண்ணதாசன் 1973ம் ஆண்டு 'அர்த்தமுள்ள இந்துமதம்'
கட்டுரையில் கூறியிருந்தார். உண்மையில் மஹா பெரியவர் ஸ்தூல சரீரத்துடன் நடமாடிய போது கொண்டாடப்பட்டதை விட தற்போது தான் அதிகம் ஆராதிக்கப்பட்டு வருகிறார்.
மஹா பெரியவா 1973ம் ஆண்டு, தேசமெங்கும் பாத யாத்திரை கிளம்பினார். அப்போது கவியரசர் கண்ணதாசன் தினமணியில் 'அர்த்தமுள்ள இந்துமதம்'
எழுதிக்கொண்டிருந்தார். அவர் எழுதிய அத்தியாயம் இது- பகவான் கீதையில் சொன்னது போல் வாழ்ந்து கொண்டிருப்பவர் அவர் ஒருவரே! பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம் ஆகிய யோகங்கள் கைவந்த ஒருவர், காஞ்சிப் பெரியவர். அதோ, அவர் எங்கே போகிறேன் என்று சொல்லாமலே போய்க் கொண்டிருக்கிறார். இந்த வயதிலும்
எந்த வாகனத்திலும் ஏறாமல் போய்க் கொண்டிருக்கிறார். கைப்பிடி அவலிலேயே காலமெல்லாம் வாழும் அந்த மகா யோகி, தள்ளாத வயதிலும் வாலிபனைப் போல் புனித யாத்திரை தொடங்கி இருக்கிறார்.
தெய்வ நம்பிக்கை உச்சத்துக்குப் போய் விட்டால், வயது தோன்றாது. பழுத்துப் போன பழம், மரத்தைக் கேளாமலேயே கீழே
விழுகிறது. முதிர்ந்த ஞானிகள் யாரிடமும் எதற்கும் விளக்கம் கேட்பதில்லை; அவர்களே முடிவெடுக்கிறார்கள். அவர்களுக்குத் திடீரென்று ஏதோ ஒன்று தோன்றுகிறது என்றால், ‘தெய்வம் அவர்களோடு பேசுகிறது’ என்று பொருள். சிருஷ்டியை வியப்போடு நோக்கி, ஆழ்ந்த கருத்துக்களைக் கண்டுபிடிப்பது ஞானிகளுக்கு
மட்டுமே சாத்தியம். படிப்பறிவும், கேள்வியறிவும் மட்டுமே அவர்களுக்குத் துணை புரிவதில்லை. உள்ளொளி ஒன்று பரவி விரவி நிற்கிறது. அதோ, அந்த ஒளியோடு அந்த மகா யோகி போய்க் கொண்டிருக்கிறார். அது வெறும் மானிட ஸ்தூலத்தின் யாத்திரையன்று. அது ஆன்ம யாத்திரை. 40 வயதுக்குள்ளாகவே பகவத் பாதாள்
ஸ்ரீ ஆதி சங்கரர், காலடியில் இருந்து புறப்பட்டு, இமயம் முதல் குமரி வரை தன் காலடியை பதித்தார். அந்தக் கால்களிலும் காலணி இல்லை; இந்தக் கால்களிலும் இல்லை. ஆயினும் கற்கள் அந்தக் கால்களை உறுத்தவில்லை. முட்கள் தைத்தாலும் வலிப்பதில்லை. தெய்வத்தின் கருணை இந்தப் பாதங்களைப் பாதுகாக்கிறது.
லோகாயத சுகத்தை முற்றும் துறந்து விட்டுத் தார்மிக வடிவெடுத்து அவர்கள் புறப்படும்போது, தர்மம் நடைபாதை விரிக்கிறது. மகா யோகம் மலர்கள் தூவுகிறது. மகாராஜக்களுக்கு இல்லாத மரியாதை அவர்களுக்குக் கிடைக்கிறது. அந்த ஞானப் பழத்தை தரிசித்த போது நான் பெற்ற உள்ளொளியை விவரிக்க முடியாது. கோடியில்
ஒருவரே எப்போதாவது இப்படி ஆக முடியும். ஞானம், வித்தை, ஒழுக்கம், பண்பாடு, ஆகிய அனைத்தும் சேர்ந்த மகாயோகி எங்கோ எப்போதோ அவதரிக்கிறார். இறைவன் கருணையினால், நமக்குக் கிடைத்துள்ளது அந்த வரம். பசுக்களிலே மலட்டுப் பசுக்களைக் கூட அறுக்கக் கூடாது என்பது இந்துக்களின் வாதம். யோகிகளில் ஒரு
சாதாரண யோகியைக் கூட ஒதுக்கக்கூடாது என்றால் இந்த மகா யோகியைப் பிராமணதல்லாதோர் ஒதுக்குவது எந்த வகையில் நியாயம்? அதோ, அவர் நடந்து போய்க் கொண்டிருக்கிறார். புத்தன் சொன்னதை விட அவர் நமக்கு அதிகமாகச் சொல்லியிருக்கிறார்.
ஏசுவின் தத்துவங்களை விட அதிகமான தத்துவங்களை வாரி இறைத்திருக்கிறார்
அவர் ஜாதி வெறியராகவோ, மத வெறியராகவோ ஒரு நாளும் இருந்ததில்லை. அரசியல் வில்லங்களில் மாட்டிக் கொண்டதில்லை. பகவான் கீதையில் சொன்னது போல் வாழ்ந்து கொண்டிருப்பவர் அவர் ஒருவரே. அதோ, அவர் நடந்து போய்க் கொண்டிருக்கிறார். அந்தக் காலடிச் சுவடுகளைத் தொடர்ந்து செல்லுங்கள். அதுவே உங்கள் யோகமாக
இருக்கட்டும்.

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!
காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!
மஹா பெரியவா சரணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Feb 3
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் முன்னர் அங்கிரசர் என்றொரு ரிஷி, வனத்தில் வசித்து வந்தார். அவர் மிகவும் புகழ் பெற்றவர். அவரிடம் மாணவர்கள் பலர் இருந்தனர். அவருடைய ஞானத்தில் இருந்து கணிசமான அனுகூலத்தை அவர்கள் பெற்றிருந்தனர். அந்த மாணவர்களில் சிலர் பக்தியும், கடமையுணர்வும் கொண்டவர்கள். Image
மற்றவர்களைவிட எளிதில் எதையும் கிரகித்துக் கொள்ளக் கூடியவர்களாக இருந்தனர். அவர்களுடைய நற்பண்புகள் காரணமாக மற்ற மாணவர்களால் மதிக்கப்பட்டனர். ஆனால் அறிவுக் கூர்மையற்ற சிலர் மட்டும் அந்த நல்ல மாணவர்களிடம் பொறாமை கொண்டிருந்தனர். குருவின் உபதேசங்களைக் கிரகித்துக் கொள்ளும் திறன்
தங்களிடம் குறைவாயிருப்பதை அவர்கள் மறந்துவிட்டனர். ஏனோ குருவின் பாரபட்சமற்ற தன்மையில் அவர்களுக்குச் சந்தேகம். அவர் பக்தியுணர்வுடைய மாணவர்களுக்கு மட்டும் ரகசியமாக விசேஷ அறிவைப் புகட்டுவதாக எண்ணிக் கொண்டனர். ஒருநாள் குருதேவர் தனித்திருந்த போது அவரிடம் சென்று, ஐயனே! தாங்கள் பாடம்
Read 15 tweets
Feb 3
ஆதிசங்கரர் அருளிய #மீனாக்‌ஷி_பஞ்சரத்னம்
உத்³யத்³பா⁴நு ஸஹஸ்ரகோடிஸத்³ருʼஶாம் கேயூரஹாரோஜ்ஜ்வலாம்
பி³ம்போ³ஷ்டீ²ம் ஸ்மிதத³ந்தபங்க்திருசிராம் பீதாம்ப³ராலங்க்ருʼதாம் ।
விஷ்ணுப்³ரஹ்மஸுரேந்த்³ரஸேவிதபதா³ம் தத்வஸ்வரூபாம் ஶிவாம்
மீனாக்ஷீம் ப்ரணதோ3ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதி⁴ம் || 1 || Image
எடுத்தவுடனே “உத்³யத்³பா⁴நு ஸஹஸ்ரகோடிஸத்³ருʼஶாம்” என்கிறார். ‘உதிக்கின்ற செங்கதிர்’, என்று ஆரம்பித்தார் அபிராமி பட்டரும். மகான்களுக்கு அம்பாளின் தரிசனம் ஒளிவடிவமாக கிடைக்கிறது. நாம் கோவிலில் தரிசனம் செய்வதற்கும், மஹான்கள் தரிசனம் செய்வதற்கும் அதுதான் வேறுபாஉ. அந்த உள்ளொளி Image
அதிகமாகி அவர்களுக்கு வெளியிலேயும் ஸ்வாமியைப் பார்க்கும்போது, ஒளிவடிவமாக தெரிகிறது. கோடி சூர்யப்ரகாசமாக விளங்கும் மீனாக்ஷி தேவியை, “ப்ரணதோ3ஸ்மி ஸந்ததம் அஹம்”! ‘அஹம்‘ –  நான், ‘ஸந்ததம்‘ – இடையறாது, ‘ப்ரணதோ3ஸ்மி‘ – வணங்குகிறேன் என்று சொல்கிறார். மீனாக்ஷி என்ற பெயருக்கு மீன் போன்ற
Read 11 tweets
Feb 2
Experiences with Maha Periyava: Car festival for three people.
Maha Periyava generally had a custom. He would raise some religious questions towards the audience and seek their answers. When they were in a quandary, he would give the answers himself and immerse everyone in Image
happiness. Perhaps Periyava's object was that by thus asking questions and then answering them, the facts would stay unforgettable for ever in the listeners' minds. On that day too KAnchi SvAmigaL raised a question. That to the Commissioner himself! "Can you say this? For three
people who were born as human beings and attained supreme loftiness of state, the ther thiruvizhaa (தேர் திருவிழா) car festival, is held even today. Who are those three people?" Although asked to the Commissioner, all of us squeezed our brains for an answer. Generally car
Read 6 tweets
Feb 2
#லலிதா_சகஸ்ரநாமம் லலிதா சகஸ்ரநாமத்தில் என்ன விசேஷம் என்றால், ஒருமுறை கூப்பட்ட நாமம் மற்றொருமுறை உபயோகப்படுத்தப் பட்டிருக்காது. லலிதா சகஸ்ரநாமத்தில் மட்டும் தான் தேவி ஸ்வரூபம், தோன்றிய வரலாறு, அவளை வழிபட யந்திரம், மந்திர பரிவார தேவதைகளின் நிலை, வழிபாட்டு முறை, அவள் அருளால் Image
பெறக்கூடிய மேன்மைகள் ஆகியவைகளை வாக்தேவதைகளே கூறுவதால், வேதத்திற்குச் சமமாகக் கூறப்படுகிறது.
ஸ்ரீ மாதா-என்றழைக்கப்படும் ஸ்ரீலலிதையானவள் எப்படித் தோன்றினாள்?
அசுரர்களின் இடையூறுகளையும், இன்னல்களையும் தாங்கமுடியாமல், தேவர்கள் யாகம் வளர்த்து, அம்பாளை வேண்டி நின்றனர். அவளை வரவழைக்க, Image
தங்களின் தேகத்தையே யாகத்தில் அர்ப்பணிக்கத் தயாரானார்கள். அப்பொழுது ஞானமாகிய குண்டத்திலிருந்து ஆதி சக்தியானவள் தோன்றினாள். சக்திகளுக்குள் ஸ்ரீ லலிதா போல் வேறெந்த சக்தியும் இல்லை என்று கூறுவார்கள். மந்திரங்களில், ஸ்ரீ வித்யையைப்போல், நகரங்களில் ஸ்ரீ புரம் போல், ஸ்ரீ வித்யை Image
Read 9 tweets
Feb 2
A different take on #Mahabharata.
The Pandavas are nothing but our five senses-
sight,
smell,
taste,
touch
sound.
The Kauravas are the hundred vices that attack our senses everyday but we can fight them.
How?
When Krishna rides our chariot!Krishna is our inner voice, our soul Image
our guiding light and if we let our life in His hands we have nothing to worry.
Then why are Dronacharya and Bhishma fighting for the Kauravas, if Kauravas are vices? - a valid question.
It just means that as we grow up, our perception of our elders change. The elders who we
thought were perfect in our growing up years are not all that perfect. They have faults. And one day we will have to decide if they are for our good or bad. Then we may also realize that we have to fight them for the good. It is the hardest part of growing up and that is why the
Read 5 tweets
Feb 1
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ‘விஸ்வம்’ என்றால் பெரிய என்று ஒரு பொருள் உண்டு. ‘ரூபம்’ என்றால் உருவம். ஸ்ரீரங்கத்தில் ‘விஸ்வரூபம்’ என்றழைக்கப்படும் காலை முதல் நேர பூஜை மகத்தானது. இது ஸ்ரீரங்கத்திற்கே உரித்தான ஒரு தனி வழிப்பாட்டு முறையாகும். இங்கு உறையும் பெருமாளுக்கே பெரிய பெருமாள் என்று
தான் திருநாமம். பெரிய பெருமாள் காலை உறங்கியெழும் இந்த வேளைக்கு விஸ்வரூபம் என்று பெயர் வைத்தது சரியே! தேசிகர் தமது பாதுகாஸஹஸ்ரம் வைதாளிகப் பத்ததியில் (242 சுலோகம்) இந்த திருப்பள்ளியெழுச்சியின் போது உன் திருவடிகளினால் சுகம் பெற்று கொண்டிருக்கும், சக்ரவர்த்தினியாய் விளங்கும்
பாதுகையை நீ சாற்றிக் கொண்டு எழுந்தருள வேண்டும் என்று பிரார்த்திக்கின்றார். இதனால் தானே என்னவோ ஆகம ரீதியாகவும் காவேரியிலிருந்து யானையின் மேல் புனித நீர் கொண்டு வந்தவுடன், அந்த நீர் கொண்டு அர்ச்சகர்களால் முதலில் பாதுகைக்குத் திருமஞ்சனம் செய்விக்கப் படுகின்றது. இதற்கு ‘திருவடி
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

:(