ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்திற்குப் பிறகு அவரைப் பார்த்து ஆசி கூற அகஸ்திய மாமுனிவர் அயோத்திக்கு வருகை புரிந்தார். அகஸ்தியர் சபையில் அமர்ந்ததும், ராவண வதம் பற்றி விவாதிக்கலாயினர் அனைவரும். அப்பொழுது அகஸ்தியர் சபையினரை பார்த்து ராவண, கும்பகர்ண வதத்தை விட லக்ஷ்மணன் ராவணன் மகன் மேகநாதனை
வதைத்ததே மாபெரும் வீரச் செயல் என்றார். அதை கேட்டு அனைவரும் ஆச்சரியமாக அகஸ்தியரை பார்க்க, ஸ்ரீராமர் ஏதும் அறியாதவர் போல ஸ்வாமி எதை வைத்து அப்படி கூறினீர்கள்? மேகநாதன் அவ்வளவு சக்தியுள்ளவனா என்று கேட்டார். அகஸ்தியர், ராமா எல்லாம் அறிந்தவன் நீ. ஆனால் ஏதும் அறியாதவன் போல லக்ஷ்மணனின்
பெருமையை என் வாயால் கூறவேண்டும் என்று இப்படி அறியாதவன் போல் கேட்கிறாய், சரி நானே சொல்கிறேன் என்று தொடர்ந்தார். சபையோர்களே ராவணன் மகன் மேகநாதன் தேவலோக அரசன் இந்திரனுடன் போர்புரிந்து அவனை வென்று சிறையில் அடைத்து வைத்தது யாவரும் அறிந்ததே. நான்முகக் கடவுளான பிரம்மா இந்திரனை
விடுவிக்க மேகநாதனிடம் கோரிக்கை வைக்க, மேகநாதன் இந்திரனை விடுவிக்க வேண்டுமென்றால் தாங்கள் எனக்கு ஓர் வரத்தைத் தர வேண்டும் என நிபந்தனை வைத்தான். அவை
1.பதினான்கு ஆண்டுகள் உணவு உண்ணாமல்
2.அதே பதினான்கு ஆண்டுகள் ஒரு நொடி கூட உறங்காமல்
3.அதே பதினான்கு ஆண்டுகள் எந்த ஒரு பெண் முகத்தையும
ஏறெடுத்து பார்க்காது இருப்பவன் எவனோ அவனால் மட்டுமே எனக்கு மரணம் நிகழவேண்டும் என்று பிரம்மாவிடம் வரத்தைப் பெற்று இந்திரனை விடுவித்தான். அதனால் மேகநாதனை யாவரும் இந்திரஜித் என்று அழைத்தனர். இப்படி பட்ட மேகநாதனை வதம் செய்த பெருமை லக்ஷ்மணனையே சேரும் என்று கூறினார். ராமர், ஸ்வாமி
லக்ஷ்மணன் என்னுடன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் இருந்த போது அவன் எந்த ஒரு பெண்ணையும் ஏறெடுத்து பார்த்ததில்லை என்பதை நான் அறிவேன். ஆனால் உணவும் உறக்கமும் இல்லாமல் எப்படி இருந்திருப்பான் என்று கேள்வி எழுப்ப அகஸ்தியர் அனைத்தும் அறிந்து வைத்து கொண்டே கேட்கிறாயே சரி சற்று பொறு உன்
கேள்விக்கான விடையை லக்ஷ்மணனிடமே கேட்டு தெரிந்து கொள்வோம் என்று கூறி லக்ஷ்மணனை அழைத்து வர ஏற்பாடு செய்தார். பிறகு ராமர் இவ்வாறு கேட்கிறார் என்று அவர் கேட்ட கேள்வியை அவனிடம் கேட்டார். லக்ஷ்மணர், அண்ணா உங்களுக்கு நினைவு இருக்கலாம் ரிஷிமுக பர்வதத்தில் மாதா சீதையை தேடி அலைந்த போது
மாதாவால் வீசப்பட்ட அணிகலன்களை சுக்ரீவன் நம்மிடம் காட்டும்போது அன்னையின் பாத அணிகலன்களை தவிர வேறு எதுவும் என்னால் அடையாளம் காண முடியவில்லை காரணம் அன்னையின் பாதத்தை மட்டுமே பார்த்து நான் தினமும் வணங்குவேன். அதனால் பாத அணிகலன்களை மட்டுமே என்னால் அடையாளம் காணமுடிந்தது.
அடுத்து
வனவாசத்தின் போது நீங்களும் மாதாவும் இரவில் உறங்கும்போது நான் காவல் புரியும் நேரம் நித்ராதேவி என்னை ஆட்கொள்ள வரும் நேரம் நான் நித்ராதேவியிடம் ஒரு வரம் கேட்டேன். அம்மா என் அண்ணன் ராமரையும் என் அண்ணியான மாதா சீதா தேவியையும் பாதுகாக்கவே நானும் அண்ணனோடு வனவாசம் வந்துள்ளேன். அதனால்
எங்கள் வனவாசம் முடியும் வரை என்னை நீ ஆட்கொள்ளவே கூடாது. இந்த வனவாசம் முடியும் வரை எனக்கு உறக்கமே வரக்கூடாது என வேண்டிக்கொண்டேன் நித்ராதேவியும் என் வேண்டுதலுக்கு செவி சாய்த்து என்னை பதினான்கு ஆண்டுகள் ஆட்கொள்ள மாட்டேன் என வரமளித்தாள். அதனால் எனக்கு வனவாசத்தின் போது உறக்கம் என்பதே
இல்லாமல் இருந்தது. மூன்றாவது நம் குருநாதராகிய விஸ்வாமித்திரர் நம் உடல் சோர்வு அடையாமல் இருக்கவும் பசியே எடுக்காமல் இருக்கவும் 'பலா அதிபலா' என்னும் மிகவும் சக்தி வாய்ந்த காயத்திரி மந்திரத்தை நம் இருவருக்கும் அவரது யாகம் வெற்றி பெற காவல் புரிந்ததற்காக உபதேசித்தார். அந்த பலா அதிபலா
மந்திரத்தை தினமும் உச்சரித்தே எனக்கு பசி ஏற்படாமலும் உடல் சோர்வு அடையாமலும் பார்த்துக் கொண்டேன் என்று கூற சபையினர் எல்லோருமே லக்ஷ்மணனை ஆச்சிரியமாக பார்க்க ஆஞ்சநேயர் அயர்ந்தே போனார்.
லக்ஷ்மணின் ராம பக்தியை நினைத்து ராமர் அரியணையை விட்டு இறங்கி வந்து லக்ஷ்மணனை கண்ணீருடன் ஆரத்தழுவ
கொண்டார். ஜெகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதை என்பது ராமன் மட்டும் அல்ல, லக்ஷ்மணன் மற்றும் அதில் இருக்கும் அனைத்து மக்களாலும் தான் புண்ணிய கதை ஆயிற்று. இராமாயணம் நாம் படித்தாலே, கேட்டாலே, வாயால் பாடினாலே, புண்ணியம் என்பது இத்தனை நல்லோர் செய்த நற்செயல்களை நினைவுகூர்வதால் தான்.
ஸ்ரீ ராம ஜெயம். ஸ்ரீ லக்ஷ்மண ஜெயமும் கூடத் தான்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Feb 24
#திருப்பரங்குன்றம் #ஸ்ரீசுப்பிரமணியசுவாமி திருக்கோயில்.
முருகனின்ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடு இது, அவற்றில் மிகப் பெரியதும் ஆகும். இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சித் தருகிறார். முருகப்பெருமான் அவதாரம் செய்ததன் ImageImage
நோக்கமே சூரபத்மனையும் அவன் சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அவ்வண்ணமே முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார். இதனால் தேவர்கள் துன்பம் நீங்கி மகிழ்ச்சியடைந்தார்கள். Image
அதனால் நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி முருகன் தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது. திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி Image
Read 20 tweets
Feb 24
Experiences with #MahaPeriyava:
It was during the days when SriMatham functioned with Kumbakonam as its head quarters. There was a large cattle shed behind the Matham. One day a cow that did now belong to SriMatham was found in the shed feeding on the hay and drinking at the Image
water-trough. No one knew whose cow it was. The news was passed around in the neighbourhood, but no one came to claim it. Four or five days passed. The Manager asked Sri Maha Periyava, ‘Shall we drive away the cow?’
"If the cow must be driven out because it does not belong to
SriMatham, then several people in our Matham should also be sent out". There were indeed many people living in the Matham, eating and sleeping there, doing no particular work. "The cow cannot speak for itself. We do not know who its master is. Let it stay on in our cattle-shed.
Read 9 tweets
Feb 23
மிகப் பெரும் செல்வந்தர், அவருக்கு மனைவி குழந்தைகள் என்று யாரும் இல்லை, பரோபகாரி. ஒரு தீபாவளி பண்டிகையையொட்டி தன்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்குச் சிறந்த விருந்து ஏற்பாடு செய்து அவரே முன்னின்று அனைவரையும் உபசரித்தார். விருந்து முடிந்தவுடன், ஒவ்வொருவருடைய இருக்கைக்கு முன் Image
இரண்டு பெரிய வண்ண கவர்களை வைக்கப்பட்டன. ஒன்றில் பணம் என்றும் மற்றொன்றில் ஶ்ரீராமாயண புத்தகம் என்றும் எழுதி வைக்கபட்டு இருந்தது. அவர்களிடம் அவர், நீங்கள் எனக்காக உண்மையாக உழைக்கிறீர்கள். உங்கள் வேலைக்கேற்ற அல்லது அதற்கும் அதிகமாகவே உங்களுக்கு சம்பளமும் கொடுத்து வந்துள்ளேன். என் ImageImage
இந்த செல்வம் இறைவனால் அருளப்பட்டது. என் செல்வத்தை எவ்வாறு செலவழித்தேன் என்று இறைவனுக்கு பதில் சொல்ல கடமைபட்டுள்ளேன். உங்கள் முன் இரண்டு கவர்கள் உள்ளன. ஒன்றில் பணம், மற்றொன்றில் ராமாயணப் புத்தகம். இதில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம் என்றார். முதலாமவர் தயங்கியவாறே, முதலாளி Image
Read 10 tweets
Feb 23
#தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் சேலம் மாவட்டத்தில் உள்ளது. தாயார் பெயர் கற்பகாம்பாள். சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் இங்கு திருமணம் நடந்து, திருமால் தன் அன்புத் தங்கை பார்வதியை சிவபெருமானுக்கு தாரை வார்த்துக் கொடுத்ததால் 'தாரமங்கலம்' எனும் திருப்பெயர் இத்தலத்துக்கு வந்ததென்று Image
கூறுவர். 10 ஆம் நூற்றாண்டிலேயே இதன் சில பகுதிகள் இருந்தன. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கெட்டி முதலி அரச பரம்பரையினர் இந்தக் கோயிலை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர். பிற்காலத்தில் மும்முடிச் சோழனும், சீயாழி மன்னனும் இந்தக் கோயிலைப் புதுப்பித்து திருவிழாக்களைக் கொண்டாடி வந்துள்ளனர். Image
வணங்காமுடி மன்னர் காலத்தில்தான், இந்தக் கோயில் முழுமையாகக் கட்டி முடிக்கப் பட்டுள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி 306 து164 அடி அளவுக்கு மிகப்பெரிய கல்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆலயத்தின் முன்கோபுரம் 90 அடி உயரத்தில் ஐந்து அடுக்குகளைக் கொண்டது. Image
Read 9 tweets
Feb 23
#ஸ்ரீரங்கம் கோவிலின் சிறப்பு சொல்லில் அடங்காது. இக்கோவிலின் ஒரு விசேஷம் 7 என்ற எண்ணிக்கையில் பல அதிசயங்களை கொண்டுள்ளது இத்திருத்தலம்.
ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களைக் கொண்டது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். (1) பெரிய கோவில் (2) பெரிய பெருமாள் (3) பெரிய பிராட்டியார்
(4) பெரிய கருடன் (5) பெரியவசரம் (6) பெரிய திருமதில் (7) பெரிய கோபுரம்

ஸ்ரீரங்கம் ரங்கனாதருக்கு 7 நாச்சிமார்கள் (1) ஸ்ரீதேவி (2) பூதேவி (3) துலுக்க நாச்சியார் (4) சேரகுலவல்லி நாச்சியார் (5) கமலவல்லி நாச்சியார் (6) கோதை நாச்சியார் (7) ரெங்கநாச்சியார் ஆகியோர்.

ஸ்ரீரங்கம் கோவிலில
வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். (1) விருப்பன் திருநாள் (2) வசந்த உத்சவம் (3) விஜயதசமி (4) வேடுபரி (5) பூபதி திருநாள் (6) பாரிவேட்டை (7) ஆதி பிரம்மோத்சவம்.

இங்கு வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார்.
Read 17 tweets
Feb 23
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு ஊரில் விஷ்ணுபக்தர் ராகவன் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் தினமும் தன் தோட்டத்தில் உள்ள துளசியை மாலையாகவும் பூக்களை வைத்து அர்ச்சனை செய்வதும் வழக்கம். சில பூக்களே தோட்டத்தில் இருந்தாலும் சரி அவற்றைப் பறித்து அர்ச்சனை செய்துவிடுவார் ராகவன். ஒரு நாள் புயலுடன
கூடிய பலத்த மழை ஏற்பட்டது. அர்ச்சனை செய்ய பூக்களை பறிக்க தோட்டத்துக்குப் போனால் புயலின் காரணமாக அனைத்து பூக்களும் நாசமடைந்திருந்தன. சரி துளசியை கொண்டாவது அர்ச்சிக்கலாம் என்று எண்ணி துளசி பறிக்க சென்றார் ராகவன். அதில் உள்ள இலைகளும் சில உதிர்ந்திருந்தன. அதில் உள்ள துளசி இலைகளை
வைத்து மாலை மட்டுமே கட்ட இயலும். அர்ச்சனை செய்ய என்ன செய்வதென புரியாமல் மிகவும் வேதனைப் பட்டார். ராகவன் வீடோ தனித்திருந்தால் உதவி கேட்க கூட சிறிது தூரம் செல்ல வேண்டி இருக்கும். மழையும் புயலும் நிற்காமல் பெய்து கொண்டே இருந்ததால் அதற்கும் வழியின்றி தவித்து கொண்டிருந்தவர் அருகில்
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(