#அறிவோம்_வரலாறு உலகம் போர் சூழலை எதிர்நோக்கும் நிலையில் இந்தியா பெரும் நிம்மதி கொள்கிறது. அதற்குக் காரணம் #மோடி எனும் மிகச்சிறந்த தலைவன் செய்திருக்கும் முன்னேற்பாடு. எப்பொழுதெல்லாம் அமெரிக்காவும் ரஷ்யாவும் முறுக்குமோ அப்பொழுதெல்லாம் அணிசேரா கொள்கை கொண்ட இந்தியாவினை போட்டு
சாத்துவது சீன வழக்கம். இந்தியா யார் அணியிலும் சேராத நாடு என நேரு அறிவித்திருந்தார். அதனால் யார் அடித்தாலும் கேட்க ஆளில்லா நாடு எனும் அபாயம் இருந்ததை அவர் கவனிக்கவில்லை அதுதான் நேரு. இதனால் தான் கென்னடியும் மாவோவும் கியூபாவில் 1962ல் உரசியபொழுது அடித்தால் யாரும் கேட்க வராத ஆளில்லா
இந்தியாவினை அணிசேரா இந்தியாவினை போட்டு சாத்தியது சீனா. அப்படியே 1965 யுத்தத்தில் பாகிஸ்தானை முடக்கி இந்தியா வெற்றிபெற்றாலும் காஷ்மீர் சிக்கலை தீர்க்காமல் சாஸ்திரியினை முடக்கியது சீன ரஷ்ய கூட்டணி. 1971லும் இதுவேதான் நடந்தது. இந்திராவும் காஷ்மீரைத் தொட அஞ்சினார். அதுவும் பாகிஸ்தான்
முழங்கால் போட்டு அதன் இன்னொரு கால் உடைந்த நிலையிலும் அஞ்சினார். உலக நிலைப்பாட்டின்படி ஒரு வளரும் நாட்டுக்கு ஒரு முகாம் அவசியம், அது நேட்டோ என ஐரோப்பாவில் உண்டு, அரபு கூட்டணி என அங்கே உண்டு ஆப்ரிக்காவுக்கு கூட சில அமைப்பு உண்டு. ஆனால் நேருவின் குழப்பமான கொள்கையால் இந்தியா தனியே
அடிவாங்கியது, இந்தியா அடிவாங்குவதை விட நேரு கொள்கையினை மாற்றுவது நல்லதல்ல அதனால் வாங்கட்டும் என காங்கிரஸ் தலைமைகளும் அப்படியே வைத்திருந்தன‌. ரஷ்யாவும் சீனாவினைக் காட்டி இந்தியாவுக்கு ஆயுதம் விற்கும் அதே ஆயுதத்தை சீனாவுக்கும் கொடுத்து ரசிக்கும். ஒரு வியாபார சந்தையாக இந்தியாவினை
ரஷ்யா கட்டுப்படுத்திற்று அதைத் தாண்டி இந்தியாவுக்கு எந்த நல்லதையும் அந்நாடு செய்ததில்லை. குறிப்பாக சீனாவுக்கு ஆதரவாக அதன் நிலைப்பாடு இருந்தது இருக்கின்றது. இந்நிலையில்தான் மோடி இந்தியாவினை துணிந்து அமெரிக்க முகாமுக்கு மாற்றினார் அதுவும் தந்திரமாக‌ சீனாவினை எதிர்க்கும் அணியில்
இந்தியா ஒரு நாடு என சேர்ந்து கொண்டார். இப்‍பொழுது குவாட் அமைப்பு, பிரான்ஸுடன் கூட்டணி என சீனாவினை நோக்கி வலுவாக நிற்கின்றது இந்தியா. இப்பொழுது சீனாவோடு யுத்தம் வந்தால் அது 1962 போல தனிமையில் இந்தியாவினை தள்ளாது, உலகம் இந்தியா பக்கம் திரளும். உண்மையில் இப்பொழுது கடும் வருத்தத்தில்
இருப்பவர் சீன ஜனாதிபதி ஜின்பெங் என்பவர்தான். நிச்சயம் இந்தியாவின் மேல் தாக்குதல் தொடுக்க இதுதான் உகந்த நேரம், இந்தியாவினை சீண்டாமல் இருந்திருந்தால் இந்நேரம் இந்தியா தனித்தே இருந்திருக்கும் இப்பொழுது சீனாவுக்கு நிலை சாதகமாயிருக்கும். ஆனால் பழைய காங்கிரஸ் அரசுகளைப் போல நினைத்துக்
கொண்டு மோடியினை சீண்டினார், மோடி அரசு கல்வான் பாங்காக் சோ என திருப்பி அடித்து இந்தியா அமெரிக்க அணி என அறிவித்து கடும் பதிலடி காட்டியது. சீனா இதனை எதிர்பார்க்கவில்லை.
ரஷ்ய ஆயுதத்தைக் குறைத்து அமெரிக்கா பிரான்ஸ் இஸ்ரேல் என பலத்தை இவ்வழியில் பெருக்கிற்று இது ரஷ்யாவுக்கும் அதிர்ச்சி.
ஆக 2020ல் சீனா செய்த அவசர காரியத்தால் இந்தியா வலுவான பாதுகாப்பு நிலைக்கு சென்றாயிற்று. இப்பொழுது சீனா பல்லைக்கடித்துக் கொண்டு இருக்கின்றது, இந்தியாமேல் கைவைக்க இது தோதான நேரம் இனி இப்படி ஒரு வாய்ப்பு வராது என அவர்கள் கை அரிப்பெடுத்தாலும் அவசரப்பட்டு இந்தியாவினை பலமாக்கி விட்டோமே,
மோடி என்பவர் இப்படி அடிப்பார் என நினைக்கவில்லையே என வாயில் துண்டு வைத்து அழுது கொண்டிருக்கின்றது அந்நாடு. மோடி காலம் தந்த தலைவன், அந்த தலைவன் மிக சரியான நேரத்தில் சரியான ஏற்பாடுகளை செய்து தேசத்தை வலுவான இடத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கின்றார்
நம்புகிறீர்களோ இல்லையோ இன்று மோடி
என்பவர் அல்லாமல் காங்கிரஸ் அரசோ இல்லை குழப்பமான "சமூக நீதி அரசு "மதச்சார்பற்ற அரசு" இருந்திருந்தால் இந்நேரம் சீன ஏவுகனைகள் டெல்லியினை மிரட்டியிருக்கும் சீனராணுவம் அருணாசலப்பிரதேசம் முழுக்க புகுந்திருக்கும், அணிசேரா இந்தியா அடிவாங்க ஆரம்பித்திருக்கும். மோடி எவ்வளவு பெரும்
ஆபத்திலிருந்து தேசத்தைக் காத்தார் என்பதை இத்தருணத்தில்தான் புரிந்து கொள்ளமுடியும்!
#ஜெய்ஹிந்த் #வாழ்கபாரதம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Feb 27
எந்த ஒரு பிரச்சினை இருக்கும் பொழுது நம் ஜென்ம நட்சத்திரத்திற்கு உண்டான காயத்திரி மந்திரத்தை ஜபிக்க சிறிதளவு பரிகார பலனை கொடுக்கும். எந்த பிரச்சினைனையும் தீர்க்கும் நட்சத்திர காயத்ரி மந்திரம். உங்கள் ஜாதகப்படி நீங்கள் என்ன நட்சத்திரமோ அந்த நட்சத்திரத்திற்குரிய நட்சத்திர காயத்திரி Image
மந்திரத்தை 1 மண்டலம் (48 நாட்கள்) தினமும் அதிகாலை தொடர்ந்து சொல்லிவர கைமேல் பலன் கிடைக்கும். தினமும் குறைந்தது 9 முறையாவது நம் நட்சத்திர காயத்திரி மந்திரத்தை மனப்பாடம் செய்து சொல்வது நல்லது. இன்பங்கள் நிறைய பெற்று, வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றத்தைக் காணலாம்.
1) அஸ்வினி
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அஸ்வநௌ ப்ரசோதயாத்

2) பரணி
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத்

3) கிருத்திகை
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

4) ரோஹிணி
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
Read 11 tweets
Feb 26
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் பன்னிரு ஆழ்வார்களாலும் பாடப்பெற்ற ஒரே திவ்யதேசமான ஸ்ரீரங்கம் கோவில் பூலோக வைகுண்டம்! 7 உலகங்களையும் உள்ளடக்கியதாக, 7 பிரகாரங்கள் அமைந்த முழுமையான அமைப்பு கொண்டது இக்கோயில். 156 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது இக்கோயில். ஸ்ரீரங்கம் ஊரே கோயிலுக்குள்தான் ImageImage
உள்ளது என்றால் அது மிகையாகாது. சப்த பிரகாரங்களில் 5 பிரகாரங்கள் கோயிலுக்குள் வந்து விடுகின்றன. 6வது பிரகாரமான உத்திரவீதியில் ஒரு பகுதியில் மட்டும் குடியிருப்புகள் உள்ளன. 7வது பிரகாரமான சித்திரை வீதியிலும், 7 பிரகாரங்களையும் உள்ளடக்கிய அடையவளைந்தான் சுற்றிலும் இருபுறமும் ImageImage
குடியிருப்புகள் உள்ளன. இந்த 8 பிரகாரங்களுக்கு இடையிலும் பிரமாண்டமான மதில்சுவர்கள் உள்ளன. ஒவ்வொரு மதில் சுவரும் 12 அடி முதல் 15 அடி வரை உயரமும், 5 முதல் 10 அடி வரை அகலமும் கொண்டதாக அமைந்துள்ளது. இந்த மதில் சுவர்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில், பல்வேறு மன்னர்களால் கட்டப்பட்டதாக ImageImage
Read 9 tweets
Feb 25
#ஶ்ரீஆதிசங்கரர் துதி
ஸ்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் |
நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம் | |
திருவள்ளூர் அருகே #திருப்பாச்சூர் என்ற இடத்திலுள்ளது அருள்மிகு #தங்காதலி_வாசீஸ்வரர் என்ற மிகப் பழமையான கோவில். இந்த கோவிலின் வரலாறு ஆச்சர்யங்கள் நிறைந்தவை. இக்கோவிலில் Image
ஆதிசங்கரர் கையால் கல்லில் வரைந்த ஸ்ரீ சக்கரம் உள்ளது. இச்சக்கரத்தை வரைந்த பின்னரே இக்கோவில் அடிக்கல் நாட்டப்பட்டதாக வரலாறு. தட்சனின் மகளாய் பிறந்த பார்வதி தேவி, சிவபெருமானின் உத்தரவை மீறி, தன் தந்தை தட்சன் நடத்திய யாகத்திற்குச் சென்றாள். இதனால் அவளை, பூலோகத்தில் சாதாரணப் பெண்ணாக Image
பிறக்கும்படி செய்தார் சிவன். பூலோகத்தில் சிவபெருமானை திருமணம் முடிக்க எண்ணி, வேண்டி தவம் செய்த இடமே திருப்பாச்சூர். தன் காதலியே நான் வந்துவிட்டேன் என சிவன் கூறியதால் இக்கோவிலில் அம்மன் தங்காதலி என அழைக்கப் படுகிறார். இந்த அன்னையை வழிபடும் தம்பதியரிடையே ஒற்றுமை கூடி அன்னியோன்யம் Image
Read 17 tweets
Feb 25
#மதமாற்றம் #மிஷினரிகள் இந்துக்கள் அனைவரும் மதம் மாறினால் தான் இந்து மதம் அழியும் என்றில்லை இந்து தர்மத்தின் அடையாளங்களையும் வரலாறுகளையும் சடங்குகளையும் திரித்து கூறினாலே போதும் அதற்கு பங்கம் ஏற்படும். அந்த அடையாளங்களை அழிக்கும் வேலைகளை தான் செய்து வருகின்றன கிறிஸ்தவ மிஷினரிகள்.
1. திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் கிறித்தவர் என்றும் பைபிளில் வரும் தாமஸ் என்பவர் பரங்கி மலையில் அமர்ந்து சொல்ல சொல்ல திருவள்ளுவர் திருக்குறளே எழுதியதாக இதற்காக பல போலியான ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டு உள்ளார்கள். முதலில் செயிண்ட் தாமஸ் இந்தியா வரவேயில்லை. முழு பூசணிக்கயை
சோற்றில் மறைத்தாயிற்று. திமுக போன்ற கட்சிகளும் இதற்கு ஆதரவு. சொல்லிக் கொண்டே இருந்தால் பொய்யையும் உண்மை என்று நம்பும் மக்கள் கூட்டமும் இங்குள்ளது. இன்னும் சில ஆண்டுகள் கழித்து அவை தான் உண்மை என வரலாறு மாற்றி எழுதப்பட போகிறது நாமும் எது எப்படி போனால் என்ன என்று விரல் சூப்பி சென்று
Read 14 tweets
Feb 24
#திருப்பரங்குன்றம் #ஸ்ரீசுப்பிரமணியசுவாமி திருக்கோயில்.
முருகனின்ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடு இது, அவற்றில் மிகப் பெரியதும் ஆகும். இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சித் தருகிறார். முருகப்பெருமான் அவதாரம் செய்ததன்
நோக்கமே சூரபத்மனையும் அவன் சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அவ்வண்ணமே முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார். இதனால் தேவர்கள் துன்பம் நீங்கி மகிழ்ச்சியடைந்தார்கள்.
அதனால் நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி முருகன் தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது. திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி
Read 20 tweets
Feb 24
Experiences with #MahaPeriyava:
It was during the days when SriMatham functioned with Kumbakonam as its head quarters. There was a large cattle shed behind the Matham. One day a cow that did now belong to SriMatham was found in the shed feeding on the hay and drinking at the
water-trough. No one knew whose cow it was. The news was passed around in the neighbourhood, but no one came to claim it. Four or five days passed. The Manager asked Sri Maha Periyava, ‘Shall we drive away the cow?’
"If the cow must be driven out because it does not belong to
SriMatham, then several people in our Matham should also be sent out". There were indeed many people living in the Matham, eating and sleeping there, doing no particular work. "The cow cannot speak for itself. We do not know who its master is. Let it stay on in our cattle-shed.
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(