சாபங்கள் மொத்த‍ம் 13 வகையானவை.
1) பெண் சாபம்
பெண்களை ஏமாற்றுவதாலும் சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது. பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.

2) பிரேத சாபம்
இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும்,
பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.

3) பிரம்ம சாபம்
நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக்
கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது, இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது. பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.

4) சர்ப்ப சாபம்
பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும், சர்ப்ப சாபம் உண்டாகும்.
இதனால் கால-
சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும்.

5) பித்ரு சாபம்
முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும், அவர்களை ஒதுக்கி வைப்பதும் பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். பித்ரு சாபம் பாலாரிஷ்ட
சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்து போவது போன்றவற்றை ஏற்படுத்தும்.
6) கோ சாபம்
பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது, தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ
சாபம் ஏற்படும். இதனால் குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.

7) பூமி சாபம்
ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும். பூமிசாபம் நரகவேதனையைக்
கொடுக்கும்.

8) கங்கா சாபம்
பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும்.
கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.

9) விருட்ச சாபம்
பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை
எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும். விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.

10) தேவ சாபம்
தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால்
உறவினர்கள் பிரிந்துவிடுவர்.

11) ரிஷி சாபம்
இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும்.
ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.

12) முனி சாபம்
எல்லைதெய்வங்கள், மற்றும் சின்னசின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும்
மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும்.முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.

13) குலதெய்வ சாபம்
இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது. குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.

சாபம் என்பது
நல்லவர்களுக்கு வரமாக மாறும். தீயவர்களை அழிக்கும். எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போதும் அழிக்க முடியாது. ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறினால் எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் உரு தெரியாமல் அழித்து
விடும். யாரையும் நிந்திக்காமல், மனம் நோகச் செய்யாமல், நல்ல முறையில் வாழ்க்கையை நடத்தி, எவ்வித சாபத்தையும் பெறாமல் புண்ணிய வாழ்க்கை வாழ்வோம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Mar 17
நமக்கு தெரிஞ்சதெல்லாம் ஒரே ஒரு பிள்ளையார் தான். ஆனால் அவருக்குப் பல பெயர்களும் ரூபங்களும் உள்ளன.
வக்ரதுண்டர்: காசியை துராசுரன் என்ற கொடுங்கோல் மன்னன் ஆண்டு வந்தான். அவனை அழிக்க சக்திதேவியை நோக்கி தேவர்கள் தவமிருந்தனர். அதனால் மனமிரங்கிய சக்தி, வக்ரதுண்ட விநாயகரை Image
தோற்றுவித்தாள். சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய வக்ரதுண்டர் துராசுரனை அழித்து அருள்புரிந்தார்.
சிந்தாமணி கணபதி: அபிஜித் என்ற அசுரனுக்கும் குணவதிக்கும் பிறந்த கணன் என்பவன் கபிலரை துன்புறுத்தி அவரிடம் இருந்த சிந்தாமணியைக் கவர்ந்தான். இதனால் வருந்திய கபிலர் விநாயகரை மனமுருகி வழிபட்டார.
அவருக்கு அருள்புரிய திருவுளம் கொண்ட பிள்ளையார், கணனை அழித்து சிந்தாமணியை மீட்டுக் கொடுத்தார்.
கஜானனர்: பார்வதி பரமேஸ்வரரிடம் அவதாரம் செய்து கஜமுகாசுரனைக் கொன்ற விநாயகரை கஜானனர் எனப் புராணங்கள் போற்றிப் புகழ்கின்றன.
விக்ன விநாயகர்: வரேண்யன் புஷ்பவதி என்ற தம்பதியரிடம் தோன்றி
Read 33 tweets
Mar 17
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் சரித்திரக் காலம் முதல் திருப்பதி பெருமாளுக்கு பல வகையான நைவேத்தியங்கள் படைக்கப்பட்டு வருகின்றன. இரண்டாம் தேவராயர் காலத்தில் நைவேத்தியங்கள் எண்ணிக்கை பலவாகப் பெருகியது. அரசவையில் பணிபுரிந்த சேகர மல்லாண்ணன் எனும் அமைச்சர், பெருமாளின் நைவேத்தியத்துக்காகப் பல ImageImage
தானங்களை வழங்கினாராம்.
அப்போதுதான் `ஸ்ரீவாரி நைவேத்திய சமயம்’ எனும் முறை ஏற்படுத்தப்பட்டது.
அந்தக் காலத்தில் திருமலையில் உணவகங்கள் அவ்வளவாக இல்லை. பிரசாதங்கள்தான் பக்தர்களின் பசியைப் போக்கும் அருமருந்தாக இருந்தன. மேலும், பக்தர்களுக்கு அளிக்கப்படும் பிரசாதம் ‘திருப்பொங்கல்’ என்ற Image
அழைக்கப்பட்டது. பின்னரே அதிரசம், அப்பம், வடை, சுய்யம், மனோகரப்பொடி பிரசாதங்கள் தயார் செய்யப்பட்டன. இவற்றில் வடை தவிர வேறு எதுவும் வெகு நாட்கள் தாங்காது. மற்ற பிரசாதங்கள் கெட்டுப் போய்விடும் நிலையில் அவற்றை பக்தர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்ல இயலாமல் போனது. இதனால் அதிக நாட்கள் Image
Read 13 tweets
Mar 16
ஆதி சங்கரர் மூணு வகை கிரந்தங்கள் எழுதியுள்ளார். ஒன்று #பாஷ்ய_கிரந்தம். உபநிஷத், பிரம்ம சூத்ரம், பகவத் கீதா என்கிற தொகுப்பு பிரஸ்தான த்ரையி எனப்படும். அதற்கு பாஷ்யம் (விளக்கவுரை-commentary) எழுதியுள்ளார். இரண்டாவது, #பிரகரண_கிரந்தம். இது அவரே எழுதியவை, ஆனால் அதன் கரு (crux) Image
வேதாந்தத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. இதற்கு உதாரணம் அவர் இயற்றிய #விவேகசூடாமணி. மூன்றாவது வகை #ஸ்தோத்திர_கிரந்தம். அவர் இயற்றிய சௌந்தர்யா லஹரி, சிவானந்த லஹரி இந்த வகையில் வரும். இவை வேதாந்தம் கிடையாது ஆனால் தெய்வங்களை போற்றி பாடப்பட்டிருக்கும் ஸ்தோத்திரங்கள். அம்பாள் மேல்
சௌந்தர்ய லஹரி சிவன் மேல் சிவானந்த லஹரி, பிள்ளையார் மேல் கணேச பஞ்சரத்னம், சுப்பிரமணியர் மேல் சுப்பிரமணிய புஜங்கம், மகா விஷ்ணுவின் மேல் கோவிந்தாஷ்டகம், கிருஷ்ணாஷ்டகம், லக்ஷ்மியின் மேல் கனகதாரா ஸ்தோத்திரம் என்று பல. இவை பக்தி கிரந்தங்கள். ஆச்சார்யாள் எப்படி பக்தி பண்ணனும் என்று Image
Read 4 tweets
Mar 16
பிராமணன் தன் கடமையாகிய வேத அத்யயனத்தையும், கர்மாநுஷ்டானத்தையும் விட்டான். கடமையை விட்டான். அப்புறம் ஊரை விட்டான். கிராமங்களை விட்டுப் பட்டணத்துக்கு வந்தான். தனக்குரிய ஆசாரங்களை, அதன் வெளி அடையாளங்களை விட்டான். கிராப் வைத்துக் கொண்டான். ஃபுல்ஸுட் போட்டுக் கொண்டான். தனக்கு ஏற்பட்ட
வேதப்படிப்பை விட்டு வெள்ளைக்காரனின் லௌகிகப் படிப்பில்போய் விழுந்தான். அவன் தருகிற உத்தியோகங்களில் போய் விழுந்தான். அதோடு, அவனுடைய நடை உடை பாவனை எல்லாவற்றையும் ‘காபி’ அடித்தான். வழிவழியாக வேத ரிஷிகளிலிருந்து பாட்டன், அப்பன்வரை ரக்ஷித்து வந்த மகோந்நதமான தர்மத்தைக் காற்றிலே
விட்டுவிட்டு, வெறும் பணத்தாசைக்காகவும் இந்திரிய சௌக்கியத்துக்காகவும், புதிய மேல் நாட்டுப் படிப்பு, ஸயன்ஸ், உத்தியோகம், வாழ்க்கை முறை, கேளிக்கை இவற்றில் போய் விழுந்து விட்டான். சாஸ்திரங்கள் இவனுக்குப் பணத்தாசையே கூடாது; இவன் சொத்தே சேர்க்கக் கூடாது என்கின்றன. அதன் பிரகாரமே இவன்
Read 5 tweets
Mar 16
#மகாபெரியவா பந்தநல்லூர் ஸ்ரீ பந்தாடு நாயகி சமேத பசுபதிநாதர் கோவிலில் உள்ள துர்க்கையின் கண்களில் இருந்து கண்ணீர் ஓரமாக கசிந்து கொண்டே இருந்தது. பக்தர்களும் இதை கவனிக்கத் தொடங்கினர். அம்பாளுக்கு அபிஷேக, அலங்காரங்கள் செய்யும் ஶிவஸ்ரீ ஜகதீஶ ஶிவாச்சார்ய குருக்கள் அவளுடைய கண்களை பதமாக
துடைத்து விட்டாலும் அது நின்றபாடில்லை! கண்களின் ஓரத்தில் கண்ணீர் கசிவு தெரிந்தது. அவர் மனசும் மிகவும் வேதனைப் பட்டது. அம்மா! உனக்கே ஏன் இந்த வேதனை என்று வருந்தினார். ஒரு கன்னியாப் பெண்ணை துர்க்கையாக பாவித்து, ஆராதனை செய்து, அவளுக்கு சௌபாக்ய திரவ்யங்களை சமர்ப்பித்தார். பிறகு
நவாக்ஷரி மந்த்ர ஜபம் செய்தார். பிறகு துர்க்கையாக ஆராதனை செய்யப்பட்ட பெண்ணின் முன்னால் அமர்ந்து கொண்டு, "அம்மா! என்ன குறை? ஏன் இந்தக் கண்ணீர்?" தாயிடம் கெஞ்சிக் கேட்டார். அந்தப் பெண்ணும் ஏதோ ஒருவித 'trance'ல் இருந்தாள். இவர் இப்படிக் கேட்டதும், அந்தப் பெண் "பச்சை நிறத்தில் பாவாடை
Read 15 tweets
Mar 15
15/3/2022 பங்குனி செவ்வாய்.
பிலவ வருடத்தின் கடைசி மாதமான பங்குனி மாதம் தொடக்கம் செவ்வாய்க் கிழமையில் அமைந்திருக்கிறது. இந்நாள் குறிப்பாக முருகனை வழிபடுபவர்களுக்கு வேண்டிய வரமெல்லாம் அளிக்கும் நாளாக அமைகிறது. பங்குனி செவ்வாயில் முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வருபவர்களுக்கு
நீண்ட நாள் வேண்டுதல் கூட விரைவாக நிறைவேறி விடும் என்பது நம்பிக்கை. பல வருடங்களாக குழந்தை பேறுக்காக வேண்டி காத்திருப்பவர்கள், எப்படியாவது சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என்று தவம் இருப்பவர்கள், விரும்பிய வேலை கிடைக்க, விரும்பிய தொழிலை செய்ய இப்படி நீங்கள் நீண்ட நாட்களாக
நினைக்கும் விஷயங்கள் கூட இந்நாளில் பிணை செய்தால் நிறைவேறும். அதிகாலையில் எழுந்து நீராடி விபூதி பூசிக் கொண்டு, பூஜை அறையை சுத்தம் செய்து மாக்கோலம் இடுவது போன்ற அலங்காரங்களை செய்து முடித்த பின் முருகன் படம் மற்றும் முருகனுடைய வேல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். முருகனுடைய விக்ரஹம்
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(