🤴Harappan🤴 Profile picture
May 17 31 tweets 7 min read
#திராவிடம் #ஈழம் #பெரியார் #அண்ணா #கலைஞர் #திமுக #Thread

திமுகவும் ஈழப்போராட்டமும்

1951 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சாலமன் பண்டார நாயகா விலகி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தொடங்கினார். தொடக்கத்தில் சிங்களமும் தமிழும் ஆட்சி மொழியாக்கப்படுமென்று அறிவித்தார்.
ஆனால், பின்னர் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்று கொள்கையை மாற்றிக் கொண்டார். இதன் எதிரொலியாக ஐக்கிய தேசியக் கட்சியும் அதுவரை கொண்டிருந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி எனத் தீர்மானித்தது.

1956 இல் நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெற்றி
பெற்றது சாலமன் பண்டார நாயகா பிரதமரானார். 1956 ஜுன் 5 ஆம் நாள் தமிழர்களுக்குக் கொடும் தீங்கினைத் தந்த நாளாகும். அன்றுதான் ‘சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி’ என்ற தீர்மானம் இலங்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது

தமிழ்த் தலைவர்களும், தமிழ் மக்களும் அதனை எதிர்த்து உண்ணாவிரத அறப்போர்
நடத்தினர்.தந்தை செல்வா நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்து போராடினார்.

தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையில் கருத்து மோதலும், கசப்புணர்வும் கடுமையாக வளர்ந்தன. தமிழர்கள் தாக்குதலுக்கும், கொடுமைக்கும் ஆளானார்கள். நிலைமை மோசமாகாமல் தடுக்கக் கருதிய பண்டார நாயகா,
செல்வா ஒப்பந்தம் உருவானது. இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து அய்க்கிய தேசியக் கட்சி போராட்டம் நடத்தியது. கண்டி வரை ஜெயவர்த்தனா எதிர்ப்பு யாத்திரை நடத்தினார். 

1957 ஒப்பந்தத்தில் ஓரளவு தமிழர்களுக்கு நீதி கிடைக்க வழி அமைந்திருந்தது. வடக்கு - கிழக்கு மாகாணங்களைத் தமிழர்களே ஆளும் மாநில
அவைகளுக்கு அளிக்கப்பட்டது.தமிழ் ஆட்சி மொழியாக ஒப்புக்கொள்ளப்பட்டது.ஆனால் புத்தப்பிக்குகளின் எதிர்ப்பால் அந்த ஒப்பந்தத்தை குப்பையில் போட்டார் பண்டார நாயகா.மீண்டும் தமிழர் வாழ்வில் இருள் சூழந்தது.தமிழர்கள் மீண்டும் தாக்கப்பட்டனர்.

1959 புத்தப்பிக்குவால் பண்டார நாயக சுட்டுக்கொலை
அவரது மனைவி ஸ்ரீமாவோ பண்டாரநாயகா பிரதமர் ஆகிறார்.

தமிழர்கள் மீதான ஒடுக்குமுறை அதிகரிக்கிறது.

தந்தை செல்வா மற்றும் அமிர்த லிங்கம் ஆதரவு கோரி தமிழகம் வருகை.

தந்தை பெரியார் - தந்தை செல்வா சந்திப்பு

பெரியார் நாங்களே அடிமையாகத்தான் இருக்கிறோம் எங்களால் குரல் கொடுப்பதை தவிர என்ன
செய்துவிட முடியும்.நீங்கள் எடுக்கும் அத்துனை முயற்ச்சிக்கும் நாங்கள் துணை நிற்போம் என்று வழி அணுப்பி வைக்கிறார்.

ஸ்ரீமாவே ஆட்சி தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையில் உச்சக்கட்டத்தை நெருங்குகிறது.சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்ற சட்டம் அமல் ஆகிறது.இது தமிழர்கள் மத்தியில்
மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது.

14/03/1961 தமிழகத்தில் ஈழப்பிரச்சனையின் முதல் குரல் திமுகவில் இருந்து அறிஞர் அண்ணாவால் எழுப்பப்பட்டது.நம் நாடு இதலில் இந்த போராட்டமும் அண்ணாவின் வீச்சு மிக்க உரையும் செய்தியாக வர தமிழகம் முழுவதும் ஈழப்பிரச்சனை கொண்டு செல்லப்பட்டது
அன்று முதல் தொடர்ந்து ஈழத்துக்கான ஆதரவு திராவிட இயக்கத்திடம் இருந்தும் திமுகவிடம் இருந்தும் சென்றுக்கொண்டிருந்தது.

தமிழ்நாட்டில் ஈழத்துக்கு ஆதரவாக கடையடைப்பு நடத்திய முதல் இயக்கமும் திமுகதான்.

இலங்கையில் உலக நாடுகளின் அழுத்தத்துக்கு பயந்து ஒப்பந்தம் போடுவதும் அதை கிழித்து
எரிவதுமாக சிங்கள அரசு ஒரு பக்கமும் தந்தை செல்வா தலைமையில் அறவழிப்போராட்டம் ஒரு பக்கம் தொடர்ந்த வண்ணம் இருந்தாலும் தீர்வும் கிடைக்கவில்லை தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையும் குறையவில்லை.

இந்த இடைப்பட்ட காலத்தில் தி.கவும் திமுகவும் துண்டுப்பிரச்சுரங்கள், மேடைப்பேச்சுக்கள்
போராட்டங்கள், பந்த் மூலன் ஈழப்பிரச்சனையை உயிர்ப்போடு வைத்திருந்தனர்.

Feb 20 1972 தந்தை செல்வா மீண்டும் தமிழ்நாடு வருகை.

தந்தை பெரியாரோடு சந்திப்பு.

என்ன நடந்தது இந்த சந்திப்பில்.

அன்று பெரியாரும் செல்வாவும் பேசியதே பின்நாளில் Vaddukottai resolution ஆக மாறியது.
என்ன சொன்னார் பெரியார் "நீங்கள் அறவளி போராட்டத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் ஆனால் அது வன்முறை மீது நம்பிக்கை கொண்ட சிங்கள பேரினவாதத்திடம் எடுப்படுமா?தனி நாடுதான் இதற்கு ஒரே தீர்வு உங்களால் உள்நாட்டில் இருந்துக்கொண்டு உரிமைகளை வாங்க முடியாது"

இந்த சந்திப்புக்கு பிறகே தந்தை
செல்வா ஆயுத போராட்டத்துக்கு ஆதரவாக பேசியதும் முதன் முதலில் தனி ஈழம் கோரிக்கை வைத்ததும்.

அன்று தந்தை செல்வா வந்தப்போது அறிஞர் அண்ணா உயிரோடு இல்லை.

ஈழப்போராட்டத்தின் ஞாயத்தை தமிழகம் முழுவதும் சென்றுக்கொண்டதில் அறிஞர் அண்ணாவும் கலைஞரும் பெரும்பங்கு வகித்தனர்.

அதனால் தந்தை
செல்வாவுக்கு இருவர் மீதும் அளவுக்கடந்த மரியாதை இருந்தது.

அறிஞர் அண்ணாவின் வீட்டின் முன்பு தந்தை செல்வா.அந்த வீட்டில் இருந்த ஒவ்வொரு பொருளையும் உணர்வோடு தொட்டுப்பார்த்ததாக தந்தை செல்வாவே பதிவு செய்திருக்கிறார்.

அறிஞர் அண்ணா வீட்டின் முன்பு தந்தை செல்வா
தந்தை செல்வாவுக்கு அறிஞர் அண்ணாவுக்கு பிறகு மிகவும் நெருக்கமான தமிழக தலைவர் கலைஞர்.

இன்றுவரை தந்தை செல்வா குடும்பம் தலைவர் கலைஞர் குடும்பத்தோடு நெருக்கமாக உள்ளது.

ஒரு கட்டத்தில் அறவளி போராட்டம் ஆயுத போராட்டமாக மாறுகிறது

ஈழப்போரின் அடுத்த அத்தியாயம் தொடங்கியது
பல இயக்கங்கள் உருவெடுத்தன TELO, LTTE,EROS,EPRLF,PLOT. இலங்கையில் ஒரு சம்பவத்தை செய்துவிட்டு அவர்கள் தலைமறைவு ஆகும் இடமாக தமிழகம் இருந்தது.அவர்கள் இங்கு வந்து தங்கியது தி.க திமுக உறுப்பினர் வீடுகளில்.இயக்கங்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்து அவர்களுக்கு தங்க இடம் பயிற்ச்சி அளிக்க
நிலம், உணவு, உடுப்பு, உணர்வு கொடுத்து வளர்த்தது திராவிட இயக்கங்களும் கட்சிகளும்தான்.

ஒரு கட்டத்தில் இயக்கங்களுக்கு நடுவில் மோதல் போக்கு உருவானது அது வார்த்தை போராக இல்லாமல் துப்பாக்கி போராக மாறியது.

அது இலங்கையில் அல்லாமல் தமிழகத்திலும் தொடர்ந்தது.

1982 May 19 சென்னை
பாண்டிபஜாரில் PLOT உமாமகேஷ்வரனும் LTTE பிரபாகரனும் சுட்டுக்கொண்டனர்.இருவருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை.மக்கள் சுற்றி வளைக்க இருவரும் தப்பி ஓடினர்.தப்பி ஓடும்போது பிரபாகரன் போலிசிடம் மாட்டிக்கொண்டார்.உமா மகேஷ்வரன் அன்று தப்பித்தாலும் பிறகு அவரும் மாட்டிக்கொண்டார்.பிரபாகரன்
தன் பெயரை கரிகாலன் என்றும் உமா முகுந்தன் என்றும் போலிசிடம் பதிவு செய்தனர்.ஆனால் இருவரும் யார் என்று கண்டுப்பிடித்தது தமிழக போலிஸ்.

இலங்கை இருவரையும் ஒப்படைக்குமாறு இந்திய அரசிடம் கேட்டுக்கொண்டது.அதற்கு இந்திய அரசும் ஒப்புக்கொண்டது.இதன் இடையில் திமுக MPஆன வைகோ பிரபாகரனை
சிறையில் சந்தித்தார்.அப்போது பிரபாகரன் மெரினா கடற்கரையில் என் அருமை தலைவர் கலைஞரை 2 நிமிடம் சந்தித்து பேசினேன் இது என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் ஆகும் என்று வைகோவிடம் கூறினார்.

இலங்கைக்கு அனுப்பினால் பிரபாகரன் கொல்லப்படுவார் என்று அறிந்த பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை
தந்தை செல்வாவின் மகனான சந்திர ஹாசனிடம் தொடர்புக்கொண்டார்.சந்திர ஹாசன் கலைஞரை தொடர்ப்புக்கொண்டார்.எதிர்க்கட்சி தலைவராக எதுவும் செய்யமுடியாத நிலையில் இருந்த கலைஞர் திமுக தலைவராக ஒரு காரியம் செய்தார்.அதுதான் அன்று பிரபாகரனின் உயிரை காப்பாற்றியது.

திமுகவின் நாடாளுமன்ற குழுத்தலைவரான
முரசொலி மாறனை ஒரு கடிதம் எழுதச்சொல்லி அதை பிரதமர் இந்திரா காந்தி,வெளியுறவுத்துறை அமைச்சர் நரசிம்ம ராவ் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.அதில் தமிழ் மக்களின் உணர்வு, விளைவுகள் போன்றவற்றை குறிப்பிட்டு இந்த நடவடிக்கையை கைவிடுமாறு எழுதியிருந்தார்.மத்திய அரசும் கைவிட்டது.பிறகு
திமுக, தி.க போன்ற இயக்கங்களின் அழுத்தத்தால் ஜாமினில் விடுவிக்கப்பட்டார் பிரபாகரன்.

இலங்கை திரும்பிய பிரபாகரன் 1983 ஜூலை 23 ஆம் தேதி சிங்கள இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினார் அதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

இதைப்பயன்படுத்திக்கொண்ட சிங்கள அரசு இறந்த இராணுவ வீரர்களின் உடலை
ஊர்வலமாக சிங்கள மக்களின் மத்தியில் எடுத்துச்சென்றது.

ஆம் இதை பயன்படுத்தி தமிழ் மக்கள் மீது இனக்கலவரத்தை தூண்டுவதற்கான சதித்திட்டத்தில் இறங்கியது சிங்கள அரசு.

Black July 1983

Continuation in next thread.......
சீமான் 10 வருடமாக பார்ப்பனியத்துக்கு செய்தது

1.திராவிடம் தமிழ்தேசியம் இரண்டையும் முரணாக காண்பித்து தமிழர்களை பிரித்தது

2.சாதியை நேரடியாக தமிழக அரசியலில் பேச முடியாததால் குடி அரசியலை விதைத்தது

3.சைவம், மாலியம் என்று தமிழர்களை பிரித்து ஹிந்து மதத்திலேயே
கட்டிப்போடுவது

4.ராஜபக்ஷேவின் மீதான கோவத்தை திசைத்திருப்பி தமிழகத்தில் மொழி சிறுபாண்மை மீது அந்த கோபத்தை திருப்புவது

6.திமுகவின் ஓட்டை பிரித்து ஆட்சிக்கு வருவதை தடுத்து பிஜேபியை வளர்ப்பது


2009ல் தோற்றதற்கு பிரபாகரன் மட்டுமே காரணம்


ஜெயக்காந்தன் புலிகளை பற்றி

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with 🤴Harappan🤴

🤴Harappan🤴 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @haraappan

May 17
#Part3 #திராவிடம் #ஈழம் #பெரியார் #அண்ணா #கலைஞர் #திமுக

சகோதர யுத்தத்தால் தங்களுக்கு தாங்களே ஈழப்போராட்டத்தை பின்னோக்கி இழுத்து சென்றன அனைத்து இயக்கங்களும்.

இந்திய தலைவர்களின் அதிருப்தியால் TESOவை கலைத்தார் கலைஞர்.

கலைஞர் எடுத்த political move சகோதர யுத்தத்தால் நாசமாகின.
இதற்கிடையில் ஜெயவர்தனேவை வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைக்க பணிய வைத்தார் ராஜிவ் காந்தி.இதை விடுதலை புலிகள் கடுமையாக எதிர்த்தனர்.எம்.ஜி.ஆரை அழைத்து புலிகளிடம் பேச வைத்தார்.பலனளிக்கவில்லை எனவே ராஜிவ் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி சில வாக்குறுதிகளை தந்தார்.இதனையடுத்து 1987 ஜூலை 29
ராஜிவ் ஜெயவர்தனே ஒப்பந்தம் நிறைவேறியது.

இதன்படி இந்திய இராணுவம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.புலிகளும் தங்கள் ஆயுதத்தை ஒப்படைத்தனர்.ஆனால் ஒப்பந்தத்தை மீறி இலங்கை செயல்பட இந்தியா அமைதி காத்தது.திலீபன் 12 நாள் உண்ணாவிரதம் இருந்து இறந்தார்.இதே சமயத்தில் ஆயுதம் வைத்திருந்ததாக
Read 25 tweets
May 17
#Part2 #திராவிடம் #ஈழம் #பெரியார் #அண்ணா #கலைஞர் #திமுக #Thread

Black July 1983

பிரபாகரன் செய்தது ஞயாயமானதாக இருந்தாலும் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை அவர் உணராதவராக இருந்தார்.தான் செய்யும் காரியங்களுக்கு விளைவுகளை பற்றி சிந்திக்காதவராக பல இடங்களில் இருந்தார் பிரபாகரன்
தமிழர்களின் 200 வீடுகள் தீக்கரையாக்கப்பட்டன, பல நூறு தமிழர்களின் உயிர் ஈவு இரக்கமின்றி அரசு ஆதரவுடன் சூறையாடப்பட்டது.ஒரு 10 வயது சிறுவனின் கையை வெட்டி அவன் துடிப்பதை நடனம் ஆடி கொண்டாடும் அளவுக்கு மனிதாபிமானமற்ற படுகொலை தமிழர்கள் மீது ஏவப்பட்டது.பல தமிழர்கள் அகதிகளாக வெளியேறினர்.
கலைஞர் ,எம்.ஜி.ஆர், மூப்பனார் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வெளியுறவுத்துறை அமைச்சர் நரசிம்ம ராவ் இலங்கைக்கு அனுப்பி வைத்தார் இந்திரா காந்தி.

இலங்கை செல்லும் முன் தமிழக முதல்வர் எம்.ஜீ.ஆரை சந்திக்காமல் நேராக கொழும்பு புறப்பட்டதுக்கு திமுக கடுமையான விமர்சனம் வைத்தது.
Read 25 tweets
Dec 29, 2021
#SunTV #Sungroup

தமிழ்ல எல்லாம் எவன் satellite TV பார்ப்பான் என்று அவமானப்படுத்தி அனுப்பிய Satellite TV NETWORK-ஐ 30 வருடம் தென் இந்தியாவில் நுழையவிடாமல் பெரிய சாம்ராஜ்ஜியம் கட்டிய எழுப்பிய கலாநிதி மாறன் அவர்கள் சாதித்தது எப்படி.
அமெரிக்காவில் MBA படிக்கும்போது அங்கே Satellite TV நிகழ்ச்சிகள் மக்களிடம் பிரபலம் அடைந்து வருவதை கவனித்த கலாநிதி மாறன் இந்தியாவில் Satellite TV தொடங்க வேண்டும் என்ற கனவை அப்போதே வளர்த்துக்கொண்டார்.படிப்பை முடித்த பிறகு தமிழ்நாட்டில் Sumangali Publications என்ற நிறுவனத்தில்
Circulation clerk ஆக பணியில் சேருகிறார்.சில வருடம் அந்த அனுபவத்தை வைத்து தனது சொந்த செலவில் Poomalai என்ற Video magazine ஆரம்பித்தார்.நிகழ்ச்சிகளை தொகுத்து அதை வீடியோ வடிவில் விற்பனை செய்வதே அதன் concept.அந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் media என்பது அரசு நிறுவனமான Doordharsan
Read 14 tweets
Dec 25, 2021
மதுரை அருகே மாங்குளத்தில் கிடைத்த இந்த கல்வெட்டின் காலம் கி.மு.3ஆம் நூற்றாண்டு. அதாவது முதல் சமஸ்கிருத கல்வெட்டுக்கும் 200 ஆண்டுகள் பழைமையானது, அசோகன் பிராகிரத பிராமி கல்வெட்டுக்கும் 100 ஆண்டுகள் பழைமையானது.இந்திய துணைக்கண்டத்தில் 4 வது பழையான கல்வெடு.முதல் மூன்றும்
தமிழ்மொழியில்தான்.

சரி கல்வெட்டு என்ன சொல்கிறது பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் தனது பணியாளர்களான கடலன் மற்றும் வழுதியிடம் சமண முனிவர்களுக்கு படுக்கை உருவாக்கி கொடுத்தான் என்பதே கல்வெட்டு.

அதாவது கடைச்சங்க காலமான கி.மு.3 ஆம் நூற்றாண்டே முதலே சமணம் தமிழகத்தில் இருந்துள்ளது.
கடைச்சங்க காலத்திற்கு முன் கிடைத்த கி.மு.6 ஆம் நூற்றாண்டு முதல் கி.மு.4 ஆம் நூற்றாண்டு கல்வெட்டும் (மொத்தம் 3 தான் இந்திய துணைக்கண்டத்தில் கிடைத்துள்ளது 3ம் தமிழியில்) எந்த மத சம்பந்தமான கல்வெட்டும் இல்லை.

நமது இலக்கியத்தில் ஐம்பெரும் காப்பியங்களில் 4 சமண பெளத்த நூல்கள்,
Read 7 tweets
Dec 6, 2021
#Ambedkar #Myleader

இந்திய அரசியலமைப்பு சட்ட மசோதாவை நிறைவேற்றி அதன் மீதான விவாதம் நடந்துக்கொண்டிருந்த காலம்.அன்று ஒரு மாலை அம்பேத்கர் தீவிரமாக பல புத்தகங்களை புரட்டிப்பார்த்து குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தார்.அவரின் வீட்டு பணியாளரான ரட்டு என்றும் இல்லாத அளவு இன்று அம்பேத்கர்
மிகவும் கவலையாகவும் படப்படப்புடனும் இருப்பதை பார்க்கிறார்.வேலைநேரம் முடிந்துவிட்டதால் விடைப்பேற வேண்டி அம்பேத்கரிடம் "சாப் என் வேலை முடிந்துவிட்டது நான் கிளம்புகிறேன் உங்களுக்கு வேறு எதாவது உதவி வேண்டுமா" என்கிறார்.அப்போது மாலை 6 மணி.
அன்பேத்கர் "ரட்டு எனக்கு ஒரு கப் சாய் மட்டும் வைத்துவிட்டு போக முடியுமா " என்கிறார்.ரட்டுவும் ஒரு கப் சாய் மேஜையின் மீது வைத்துவிட்டு விடைப்பெறுகிறார்.அடுத்த நாள் காலை 6 மணிக்கு ரட்டு வந்துப்பார்க்கும்போது திடுக்கிட்டு நிற்கிறார்.மேஜை மீது வைக்கப்பட்ட தேநிர் குடிக்கப்படவில்லை
Read 18 tweets
Oct 13, 2021
#Kanniyakumari #Thackaley

கனிம வள கொள்ளை

உண்மை நிலவரம் என்ன ?

நாம் தமிழர் சீமானின் நரித்தன அரசியல் என்ன?

திமுக என்ன செய்தது ?

அதிமுக என்ன செய்தது?

வாருங்கள் பார்ப்போம்
இந்த கனிம வள கொள்ளை எதோ திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடப்பது போலவும் திமுக காரர்கள் தான் கனிம வளங்களை கொள்ளையடிப்பது போலவும் நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பிரகடனம் செய்கின்றனர்.

உண்மையில் இந்த கனிம வள கொள்ளை சீமானின் சித்தப்பா எடப்பாடியாரால் 2019 ஆம் ஆண்டு அனுமதி வாங்கிஅ
ஆரம்பிக்கப்பட்டது.

அப்போது அதை எதிர்த்து போராடியவர்கள் திமுக மற்றும் கம்யூனிஸ்டுகள்.

அந்த பகுதியானது வான்பரப்பளவில் 10 சதுர கி.மீ பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கிறது என்வே அந்த 10 சதுர கி.மீ பரப்பளவில் எந்த கல் குவாரியோ, மரவெட்டுதலோ , தொழிற்சாலைகளை அமைப்பதோ கூடாது
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(