#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் காவல்காரன் முனியாண்டி தினம் தப்பட்டை அடித்துக் கொண்டு நடுநிசியில் #ஜாக்ரதை என்று கத்திக் கொண்டே போவான். ஒருநாள் அவசரமாக முனியாண்டி வேறு ஒரு ஊருக்கு போகவேண்டி இருந்ததால் அவன் வேலையை அவன் பிள்ளை சண்முகம் செய்யவேண்டியதாயிற்று.
அவன் பிள்ளை சண்முகம் முன்
ஜன்மத்தில் ஒரு வேதமறிந்த பண்டிதனாக இருந்தவன். எனவே பூர்வ ஜன்ம வாசனை ஞானம் இருந்தது. இரவில் மகன் சண்முகம் தப்பட்டை அடித்துக்கொண்டு ஜாக்ரதை சொல்லிக்கொண்டு அப்பன் முனியாண்டி வேலையை செய்தான்.
அடுத்த நாள் ராஜாவே அந்த காவல்காரன் வீட்டு வாசலில் அந்தப் பையனைப் பார்க்க வந்தார்.
ஐயோ
ராஜாவே வந்திருக்கிறார், என் பிள்ளை என்ன பெரிய தவறு ஏதாவது செய்து விட்டானோ, இங்கேயே ஏதாவது தண்டனையை கொடுத்து நிறைவேற்றுவாரோ என்று காவல்காரன் முனியாண்டி நடுங்கினான். ஆனால் ராஜா அந்த பையனுக்கு பரிசு கொடுத்து கௌரவிக்க அல்லவோ வந்தார்! எதற்காக? முதல் நாள் இரவு பையன் சண்முகம் ‘ஜாக்ரதை
ஜாக்ரதை' என்று அப்பா முனியாண்டிபோல் சும்மா கத்திக்கொண்டு போகவில்லை. ஸ்லோகமாக சில வார்த்தைகள் சொன்னது தான் ராஜாவை மயக்கியது. அந்த நீதி வாக்யங்களை #ஆதிசங்கரர் அருளியவை. இந்த வைராக்ய ஸ்லோகங்களில் சிலவற்றை மட்டும் இங்கே ருசிப்போமா.
“மாதா நாஸ்தி பிதா நாஸ்தி பந்து ஸஹோதரா
அர்தம் நாஸ்தி
க்ருஹம் நாஸ்தி தஸ்மாத்
ஜாக்ரதா ஜாக்ரதா”

அடே தூங்குமூஞ்சி விழித்துக் கொள். அப்பன் என்னடா, தாயுமென்னடா, அண்ணனென்னடா தம்பியென்னடா, காசும் பொய் வீடும் பொய். சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை. காயமும் பொய் காற்றடைத்த பை, இதையெல்லாம் நம்பி ஏமாறாதே, உடனே விழித்துக் கொள் ஜாக்ரதை ஜாக்ரதை.
“ஜன்மதுக்கம் ஜராதுக்கம் ஜாயாதுக்கம் புந;புந: சம்ஸார ஸாகரதுக்கம் தஸ்மாத் ஜாக்ரதா: ஜாக்ரதா”
பிறப்பே துன்பம், வயோதிகம் பரம துக்கம், கட்டின மனையாளோ நடக்கும் துயரம், வாழ்வே சோகம், மாயம். விழித்துக் கொள் ஜாக்ரதை.

“காம; குரோதச்ச லோபச்ச தேஹே நிஷ்டந்தி தஸ்கரா;
ஞான ரத்நாப ஹாராய தஸ்மாத்
ஜாக்ரத ஜாக்ரதா!”
ஆசையும் பாசமும், கோபமும், பேராசையும் திருடர்களப்பா, உன் உள்ளே இருக்கும் ஞானமெனும் விலை மதிப்பில்லா மாணிக்கத்தை திருடுபவர்கள். விளக்கு எடுத்துக்கொண்டு வெளியே திருடர்களை தேடாதே, உள்ளே, உனக்கு உள்ளே ஒளிந்திருக்கும் அவர்களைத் தேடி துரத்து. விழித்துக் கொள், ஜாக்ரதை
ஜாக்ரதை.

“ஆசாயா பத்யதே ஜந்து : கர்மணா பஹு சிந்தயா: ஆயுக்ஷீணம் ந ஜாநாதி தஸ்மாத் ஜாக்ரதா
ஜாக்ரதா”
ஆசையெல்லாம் தோசை தான் மனித மிருகமே, எதிர்பார்த்து ஏமாறுவதே வழக்கமா? நாம் மனக்கோட்டை மன்னார்சாமிகள். அழிவதை சாஸ்வதம் என்று மனப்பால் குடிப்பவர்கள். விழித்துக் கொள்ள வேண்டாமா? ஜாக்ரதை
ஜாக்ரதை. நம்முடைய சொத்து எல்லாமே கனவில் கட்டிய மாளிகைகள், இளமை வாலிபம் நிரந்தரமல்ல தம்பி, நேற்று மொட்டு, காலை மலர், மாலையில் வாடிபோய் எறிந்தாகி விட்டது. மின்னல் போலாகும் இந்த வாழ்க்கை, இதில் நீ என்ன நான் என்ன, விழித்துக் கொள், ஜாக்ரதை ஜாக்ரதை! சூரியன் வருமுன் ஜொலிக்கும் இலையின்
மேல் உள்ள பனித்துளி நம் வாழ்வு, சாஸ்வதம் என்று மயங்காதே. சொத்து சுதந்திரம், டாம்பிகம், பேர் புகழ் எல்லாமே, கண்மூடி கண் திறக்கும் வரை தான். கொஞ்சம் கூட நெஞ்சில் ஈரமில்லாதவன் அந்த யமன். ஜாக்ரதை ஜாக்ரதை! சாவி கொடுத்தால் அது வேலை செய்யும் வரை தான் இந்த குரங்கு பொம்மை டமாரம் தட்டும்.
தலை ஆட்டும் நடக்கும். கர்மா அளிக்கும் நேரம் வரை தான் வேலையே இங்கு. அப்புறம் வேறென்ன? மேடையில் ஏறியாச்சு, வேஷம் கலையும் வரை, வேளை வரும் வரை ஆடு பாடு. இதை உணர விழித்துக் கொள், ஜாக்ரதை ஜாக்ரதை என்று கூறி சென்றான் பண்டிதன் சண்முகம்.

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jun 22
#மகாபெரியவா
ஒரு வைதிகர், எளிய வாழ்க்கை, போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து அவருக்கு. கோயில் திருப்பணிகளில் மிகவும் ஆர்வம். தன் கிராமத்திலுள்ள பிள்ளையார் கோயில், மாரியம்மன் கோயில், சிவன் கோயில் எல்லாவற்றுக்கும் அரும்பாடுபட்டுத் திருப்பணிகள் செய்வார். பெரிய தொகை நன்கொடை Image
கொடுப்போர் கூட அவரிடமிருந்து ரசீது எதிர்பார்க்க மாட்டார்கள். அவ்வளவு சுத்தம். அவருடைய சேவையை அண்டை கிராமத்தார்களும் பயன்படுத்திக் கொண்டார்கள். ஒரு வயற்காட்டில் ஒரு பெரிய சிவலிங்கம் தன்னந்தனியாக வெயிலில் காய்ந்து, குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார். இந்த வைதிகர் முயற்சியால் அவர்
மழை-காற்றுக்கு உட்படாமல், கல் கருவறையில் குடி புகுந்தார். இப்படி எத்தனையோ கோயில்கள். ஆனால் வைதிகர் எந்தக் குடமுழுக்கிலும் தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டதில்லை. கூட்டத்தில் ஒரு மூலையில் ஒண்டிக் கொண்டு நிற்பார்.
தம்பட்டமே இல்லாத இவரைப் பற்றிப் பெரியவாளுக்கு தெரிந்திருந்தது.
Read 9 tweets
Jun 22
#MahaPeriyava
All those who know Sri Maha Periyava will know SriMatham Balu Mama. Balu Mama, in his long association with SriMatham and Sri Maha Periyava has seen lakhs of devotees, from the poorest to the wealthiest, from the most uneducated to learned scholars, from ordinary Image
people to Presidents, Prime Ministers, Kings and Queens, people from all walks of life. He has been a witness to and a participant in thousands of incidents connected with SriMatham and Sri Maha Periyava.
The following incident was narrated by him. A peasant family which had
been living in wealthy conditions, was pushed into abject poverty. An old woman in the family had passed away. The family did not have the money necessary for the cremation and last rites. The family used to conduct those ceremonies with a lot of fanfare, with drums, flower
Read 7 tweets
Jun 22
#மகாபெரியவா அந்தக் காலத்தில் மெல்லிசை மன்னர் என்றால் எம்.எஸ். விஸ்வநாதன், திரை இசைத் திலகம் என்றால் கே.வி.மகாதேவன். சினிமா உலகில் இசை அமைப்பாளர்களாக இருவரும் கொடிகட்டிப் பறந்தார்கள்.
கர்நாடக இசையில் கரை கண்டவரான கே.வி. மகாதேவன் மகனோ அம்மா தரும் பணத்தில் மேல் நாட்டு ஹிப்பிகளுடன் Image
பழகி ஊர் ஊராய் சுற்றுகிறார். கே.வி.மகாதேவனுக்கு இசையில் இடையறாத பணி இருந்ததால், தன் கவலையை அதில் மறக்க, திருமதி லீலா மகாதேவனோ பிள்ளைப் பாசத்தில் அனலில் இட்ட மெழுகாகிறார். காரணம், இவர்களின் பிள்ளை இவர்களைப் பிரிந்து, ஒரு நாள் ஹிப்பிகளுடன் எங்கோ சென்று விட்டது தான். அப்போது
அவருக்கு ஆறுதலும், தேறுதலுமா நல்லதொரு ஆலோசனை சொன்னார் ஒருவர். (அவர் யாரென்று பின்னால் தெரியும்)
"காஞ்சி மகா பெரியவாளை தரிசனம் செய்தால் நற்பலன் கிடைக்கும். உங்க பிள்ளை கண்டிப்பா மனம் மாறித் திரும்பி வருவான்!" எனச் சொன்னார். அதோடு அவரே, 'காஞ்சிப் பெரியவரை தரிசிக்க உங்களுக்கு #வாலி
Read 15 tweets
Jun 21
#கல்லுக்குழி_ஆஞ்சனேயர் #திருச்சி மூர்த்தி சிறிது ஆனால் அவரின் கீர்த்தியானது சொல்லில் அடங்காதது. இடது திருப்பாதம் வடக்கு நோக்கி, வலது திருப்பாதம் கிழக்கு நோக்கி இடது திருக்கரத்தில் பாரிஜாத மலர், வலது திருக்கரம் அபய ஹஸ்த முத்திரையுடன் அற்புதமாகக் காட்சி தருகிறார். அவர் இங்கு வந்து
அமர்ந்தவிதம் அற்புத அதிசயம். சுமார் 120 வருடங்களுக்கு முன், ஒரு நாள் ரயில் பயணி ஒருவர், திருச்சி ஜங்க்‌ஷனில் தான் கொண்டு வந்திருந்த சாமான்களுடன் இறங்கினார். அதில் ஒரு சாக்கு மூட்டையை தூக்க முடியாதபடி தூக்கிக் கொண்டு நடந்தார். ரயில்வே டிக்கெட் பரிசோதகர், எடை அதிகம் உள்ளதாகக்
கருதி அனைத்துப் பொருட்களையும் எடை போட்டு பயணிகளுக்கு அனுமதிக்கப்படும் அளவை விட அதிகமாக உள்ளதால் அபராதப் பணம் கட்டும்படி கூறி இருக்கிறார். பயணியோ, தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று சொல்லி இருக்கிறார். பணம் கொண்டு வந்து கொடுத்து விட்டு இந்த மூட்டையை வாங்கிச் செல் என்று சொல்லி
Read 21 tweets
Jun 21
#மகாபெரியவா ஒரு ஏழையான கிழவி. அவளுக்கு மகேஸ்வரனைத் தெரியாது. மகாபெரியவாளைத் தான் தெரியும். தினமும் வந்து வந்தனம் செய்வாள். பல செல்வந்தர்கள் பெரியவாளுக்குக் காணிக்கையாக விலையுயர்ந்த பொருள்களைக் கொண்டு வந்து சமர்ப்பணம் செய்வதைப் பார்த்து, தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று
ஏங்கினாள். ஒரு நாள் மனமுருகி பெரியவாளிடம் சொல்லி விட்டாள்.
பெரியவாள் சொன்னார்கள், "அவர்கள் கொண்டு வந்து கொடுக்கிற எந்தப் பொருளையும் நான் தொடுவது கூட இல்லை. நான் ஆசைப்பட்டுக் கேட்டதும் இல்லை. என் மனசுக்குப் பிடிக்குமான்னும் அவா நினைச்சுப் பார்த்ததில்லே! உனக்குப் பிடிச்ச ஒரு வேலை
சொல்றேன், செய்கிறாயா?"
பாட்டி தவிப்போடு காத்து நின்றாள்.
"மாட்டுக் கொட்டிலில் இருந்து பசுஞ்சாணி எடுத்து, வரட்டி தட்டு. காயவைத்துக் கொண்டுவந்து கொடு. மடத்திலே தினமும் ஹோமம் நடக்கிறது. சுத்தமான பசுஞ்சாணி வரட்டி உப்யோகப்படுத்தணும். அந்த நல்ல கார்யத்தை நீ செய்யேன்"
பாட்டியின்
Read 4 tweets
Jun 21
#MahaPeriyava Noted lyricist Kannadasan visited Kanchi Maha Periyava and as usual discussed spiritual matters. Kannadasan was earlier an atheist and wrote articles criticizing Hinduism. Slowly he changed due to the effect of Maha Periyava. But his critical outlook still persisted
He asked Maha Periyava, 'When milk is White then how come Parkadal (Ocean) or the ocean of milk is shown as Megavarnam? (Blue). Has the colour of Mahavishnu dissolved in the ocean of milk?'
Acharyal gave a smile. He just said ‘You will get the reply by noon’.
Kannadasan was
perplexed. He dare not say anything further. Vummidi Bangaru Chetty visited the mutt that afternoon. Both Kannadasan and Vummidiyar greeted each other in their traditional way. Afterwards Vummidiyar placed a Large Green Emerald at the Acharyal’s feet and pleaded with him to
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(