#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு நாள் யசோதை குழந்தை கண்ணனைப் படுக்கையில் கிடத்தி விட்டு, வீட்டு வேலைகள் செய்து கொண்டிருந்தாள். அப்போது கம்ஸனால் அனுப்பப்பட்ட த்ருணாவர்த்தன் என்ற அசுரன் காற்று ரூபத்தில், புழுதி பறக்க, பெரும் சத்தத்துடன் வந்து குழந்தையை எடுத்துச் சென்றான். கோகுலம் முழுவதும்
புழுதியால் இருண்டது. எதையும், பார்க்க முடியாத அந்த இருளில், யசோதை குழந்தையைக் காணாமல் கதறி அழுதாள். யசோதையின் அழுகையைக் கேட்ட இடையர்கள், நந்தகோபனின் வீட்டிற்கு வந்தனர். குழந்தையைக் காணாமல் அனைவரும் அழுதனர். அதே சமயம், த்ருணாவர்த்தன் கண்ணனைத் தோளில் சுமந்து கொண்டு வானில் உயரப்
பறந்தான். அப்போது கண்ணன், தன்னுடைய எடையை மிகவும் அதிகமாக்கிக் கொண்டான். அவனுடைய பாரம் தாங்க முடியாமல், த்ருணாவர்த்தன் வேகம் குறைந்தவனானான். அவனுக்குக் கண்ணன் மலையைப் போல் கனத்தான். புழுதியும், சத்தமும் ஓய்ந்தது. இப்போது அசுரன் குழந்தையை விட்டுவிட நினைத்தான். ஆனால் கண்ணன் அவனை
விடவில்லை. அவனுடைய கழுத்தை இறுகப் பிடித்தான். அசுரன் உயிரிழந்து பூமியில் விழுந்தான். அவனுடைய உடல் ஒரு பாறை மீது விழுந்தது. அழுதுகொண்டு வந்த அனைவரும் அசுரனுடைய உடல் மேல் சிரித்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக் கண்டனர். அசுரன் கல்லின்மீது விழுந்து உயிரிழந்து கிடந்தான்.
குழந்தை கண்ணனோ, தன்னுடைய தாமரைக் கைகளினால் அவனை அடித்து விளையாடிக் கொண்டிருந்தான். இவ்வாறு, சூறாவளிக் காற்றாய் வந்த அசுரனையும் அழித்தான். மலை மேல் இருக்கும் ஒரு நீலமணியைப் போல் இருந்த குழந்தையைத் தூக்கி எடுத்து வந்தார்கள். நந்தகோபனும், மற்றவர்களும் சந்தோஷமடைந்தனர். அனைவரும்
குழந்தையை அணைத்து முத்தமிட்டனர். தன்னைத் தூக்க வேண்டும் என்ற கோபியர்களின் எண்ணத்தை அறிந்து, கண்ணன் தானாகவே தாவிச் சென்று அவர்களுடைய கைகளில் விளையாடினான். யசோதையும், நந்தனும், மற்றவர்களும், ஸ்ரீ ஹரியே! எங்கள் குழந்தையை எல்லா ஆபத்துகளில் இருந்தும் காப்பாற்று என்று வேண்டிக்
கொண்டார்கள். மேலும், நாம் பூர்வ ஜன்மத்தில் நிறைய புண்ணியங்கள் செய்திருக்கிறோம், அதனால்தான் அந்த பகவான் நம் குழந்தையை ஆபத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறார் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர். அந்த ஸ்ரீ ஹரியே அவர்கள் கைகளில் தான் இருக்கிறான் என்பதை அறியவில்லை. குழந்தையை அசுரன்
எடுத்துச் சென்றும், எந்த ஆபத்துமில்லாமல் தங்களுக்குக் கிடைத்ததை எண்ணி, குழந்தையை உச்சி மோர்ந்து புளகாங்கிதம் அடைந்தனர்.
நாமும் ஸ்ரீ ஹரி நமாத்தை உச்சரிப்போம், அனைத்துத் துன்பங்களில் இருந்தும் விடுதலை பெறுவோம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Aug 22
Translated the tweet thread of @CommonSwadeshi into Tamil.
ஒரு திராவிட சித்தாந்தவாதியின் UC பெர்க்லி PhD பட்டத்தை கண்டுபிடிக்கும் முயற்சி:
இந்த ட்வீட் என் பார்வையில் பட்டது. UC பெர்க்லி சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்று. அங்கிருந்து பெறப் பெற்ற Dr பட்டம் என் ஆர்வத்தைத் தூண்டியது. Image
ஒரு சின்ன ஆர்வத்தினால் KRS எப்போது டாக்டர் பட்டம் பெற்றார் என்பதை அறிய முற்பட்டேன். அமெரிக்கப் பல்கலையிலுள்ள எந்தவொரு மாணவருக்கும் நிறைய டிஜிட்டல் தடயங்கள் இருக்கும். மேலும் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறுபவருக்கு இது அதிகமாகவே இருக்கும் என்பதால் அங்கு தேட ஆரம்பித்தேன். Image
UC பெர்க்லியில் ஒப்பீட்டு இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றதாக KRS கூறுகிறார் (கீழே உள்ள படம்). எனவே இந்த வலைப்பக்கங்களில் ஏதேனும் ஒன்றில் அவர் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்.
1) complit.berkeley.edu/graduate/alumn…
2) complit.berkeley.edu/people/graduat…
இதில் KRS பெயரை எங்கும் காண முடியவில்லை. Image
Read 12 tweets
Aug 22
#ஶ்ரீவராஹர்_ஸ்லோகம்
ஸுத்தஸ்படிக ஸங்காஸம் பூர்ண சந்த்ர நிபானநம்
கடிந்யஸ்த கரத்வந்த்வம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்
தயாநிதிம் தயாஹீநம் ஜீவாநாமார்த்திஹம் விபும்
தைத்யாந்தகம் கதாபாணிம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம் !

பொருள் : சுத்த ஸ்படிகம் போல் நிர்மலமானவரே, பூர்ண சந்திரனை போல ஒளிபடைத்தவரே, Image
வராஹ மூர்த்தியே நமஸ்காரம். திருக்கரங்களில் சக்கரம், கதை ஏந்தி அருள்பவரே, கருணையே வடிவானவரே, ஜீவன்களைக் காப்பவரே, ஸ்ரீமுஷ்ணத்தில் திருவருட்பாலிப்பவரே, வராஹ மூர்த்தியே உங்களை வணங்குகின்றேன்.

பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை - இது ஒரு தெய்வீக
விடுகதை. இதற்கு பதில் தெரியுமா? குலசேகரன் என்றால் குலத்தை ரட்சிப்பவன் என்று பொருள். ஸ்ரீ என்றால் செல்வம், அந்த செல்வத்தின் அதிபதி லட்சுமியை மணக்க பெருமாளுக்குப் பணம் கொடுத்தவர் குபேரன். பெருமாளின் குலம் பெருக ரட்சித்த குபேரன் தான் பெருமாளின் குலசேகரன். குபேரன் கடனை கட்ட
Read 7 tweets
Aug 22
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் மாந்தாதா என்ற சூரிய வம்சத்து ராஜா பிறந்த போது பால் கொடுப்பதற்கு அன்னை இல்லாததால் அழுது கொண்டு இருந்தார். இதனை கண்ட இந்திரன் மனமிரங்கி, நான் கொடுக்கிறேன் மாந்தாதா என்று சொல்லி குழந்தையின் கை கட்ட விரலை எடுத்து வாயினுள் வைத்தார். மனித சரீரத்தில் ஒவ்வொரு Image
அங்கத்திலும் ஒரு தேவதை வசிக்கிறது. அதில் கைக்குரிய தேவதை இந்திரன். தான் சாப்பிடும் அமிர்தத்தை கையின் கட்டை விரலின் மூலம் குழந்தையின் வாய்க்கு போகும்படி இந்திரன் அனுக்கிரஹம் செய்தார். அதனால்தான் அநேக குழந்தைகள் பசியின் போது வாயில் விரல் இட்டுக் கொள்கிறது. ஆனால் இங்கு ஸ்ரீகிருஷ்ணர்
வாயில் போட்டுக் கொண்டிருப்பது கை கட்டை விரல் அல்ல. கால் கட்டை விரலை! அவரது சரீரம் முழுவதும் அமிர்த மயமாக இருப்பதால், விஷ்ணு ஸஹஸ்ர நாமம் அவரை #அமிர்த_வபு என்கிறது.
இந்திராதி தேவர்கள் கையினால் செய்வதை, தாம் காலால் செய்ய முடியும் என்று காட்டுவதைப்போல கால் விரலை வாயில் போட்டு கொண்டு
Read 7 tweets
Aug 21
தானத்தை பற்றி #கருடபுராணம் கூறுபவை:
1 அன்னதானம் செய்தால் விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் பருக்கைகளின் படி சுகித்திருப்பார்கள்.

2 கோ தானம் செய்தல் கோலோகத்தில் கிருஷ்ணருடன் வாழ்வர்.

3 பசு கன்றீனும் சமயம் ஸத் ப்ராம்மணருக்கு அல்லது கோவிலுக்கு தானம் கொடுத்தவருக்கு கட்டாயம்
வைகுண்ட வாசம் உண்டு.

4 குடை தானம் செய்தவர் 1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்

5 தாமிரம், நெய், கட்டில், மெத்தை, ஜமுக்காளம், பாய், தலையனை இதில் எதை தானம் செய்தாலும் சந்திலலோகத்து சுகங்களை அனுபவிப்பார்.

6 வஸ்திர தானம் கொடுத்தவர் 10000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்.
வஸ்திர தானம் கடவுளுக்கு சாற்றினால் எந்த கடவுளுக்கு சாற்றுகிறாரோ அவர் உலகத்தில் 10000 ஆண்டுகள் வாழ்வார்.

7 இரத்தம், கண், உடல் தானம் கொடுத்தவர் அக்னிலோகத்தில் ஆனந்தமாயிருப்பார்.

8 விஷ்ணு சிவ ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவர் இந்திரனுக்கு சமமான ஆசனத்தில் அமர்வர்.

9 குதிரையும்,
Read 13 tweets
Aug 21
#MahaPeriyava
My brother-in-law's daughter Jaana and I often used to go to Kanchi and have darshan of Periyava. We would submit different offerings each time we went there. On one occasion, it occurred to us to string a beautiful arugampul garland and offer it to him. With arali
flowers forming the border, we prepared a large arugampul garland and went on the next morning to offer it. By the time we reached Kanchi, it was eight in the morning. Periyava was sitting, conversing with everyone around him. We kept the garland pack and a packet of sugar lumps
in front of him. He took it and kept it aside in a corner. He did not even open the pack to see what it contained. We were having darshan of him. A woman came around ten o' clock. She had in her hand an intricately designed silver Kavacham for Ganesha. As instructed by the sage,
Read 8 tweets
Aug 20
ஓம் தாமோதராய வித்மஹே
ருக்மணி வல்லபாய தீமஹீ
தந்நோ ஸ்ரீகிருஷ்ண ப்ரசோதயாத்.
#கோகுலாஷ்டமி #ஸ்பெஷல்
#HappyJanmashtami #HappyKrishnaJanmastami2022
ஸ்ரீமத் பாகவதம் படித்தவர்களுக்கு
கண்ணனின் மீது அதீத பிரேமை இருக்கும். இதில் சொல்லப்பட்டிருக்கும் அவர் லீலைகள் நம்மை பக்தி கடலில் ஆழ்த்தும்
ஒரு முறை பழம் வியாபாரம் செய்யும் வயது முதிர்ந்த பெண் ஒருத்தி, நந்தகோபரின் இல்லத்திற்கு முன்பாக நின்று கொண்டு, பழம் வேண்டுமா? பழம் வாங்குறீங்களா என்று கூவிக் கொண்டு இருந்தாள். அந்த சத்தத்தைக் கேட்ட கண்ணன் வீட்டில் இருந்து தன் சின்னஞ் சிறிய கைக்குள் அடங்கும் அளவிலான தானியத்தை
எடுத்துக் கொண்டு பழக்காரியை நோக்கி தளிர் ஓட்டம் ஓடினார். தன் தாயார் யசோதா, தெருவில் வியாபாரம் செய்ய வருபவர்களிடம் இதேபோல் தானியங்களை கொடுத்து விட்டு, தனக்கு தேவையான பொருட்களை வாங்குவதை பல முறை கண்ணன் பார்த்திருக்கிறார். அதனால் தான் தானும் கொஞ்சம் தானியத்தை எடுத்துக் கொண்டு அந்த
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(