Newman Profile picture
Jan 26 10 tweets 2 min read
இந்தியாவுக்கு விடுதலை கிடைச்ச ஆகஸ்ட் 15ஐ எளிமையாக கோட்டையில் கொடியேற்றி, பிரதமர் உரையோட முடிச்சிடறோம். ஆனால், குடியரசு தினத்தை அயல்நாட்டு தலைவரை எல்லாம் அழைச்சு விமரிசையாக கொண்டாடுகிறோம். இது ஏன்னு சின்ன வயதில் யோசித்திருக்கிறேன். எதனால் குடியரசு நாளுக்கு அவ்வளவு முக்கியத்துவம்?
நம் கூடவே சுதந்திரம் பெற்ற பாகிஸ்தான், இலங்கையில் ராணுவ ஆட்சி, அதிபர் என்ற பெயரில் தனி மனித ஆட்சி எல்லாம் பார்த்து விட்டோம். ஆனால், 75 ஆண்டுகளாக மக்களாட்சி என்ற பாதையிலிருந்து விலகாமல் நாம் பயணம் செய்து கொண்டிருப்பதற்கு காரணம் நம்முடைய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கிய
குடியரசு என்ற அமைப்பு தான். தமிழ்நாடு என்ற பெயரை மாற்றணும்னு சொன்ன ஆளுநரை 'வாழ்க தமிழ்நாடு' என்று சொல்ல வைத்தது நம்முடைய அரசியலமைப்பு தான். இங்கே எந்த தனி மனிதனும் ஆட்சி அதிகாரத்தை தன் இஷ்டப்படி துஷ்பிரயோகம் செய்து விட முடியாது. நாட்டு நடப்பு தெரியாதான்னு நீங்க கேட்கலாம்
ஆனால், மோடியை விட பல மடங்கு பலம் வாய்ந்த பிரமராக , mini constitution என்று சொல்லப்படும் 42nd Amendment ஐக் கொண்டு வந்த இந்திரா காந்தியையே அடக்கி வைத்த பெருமை இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும், அதன் பாதுகாவலனான உச்ச நீதினன்றத்தையும் சாரும். அரசியலமைப்பு சட்டம் என்பது
மக்களின் பொதுவான விருப்பம். அது, நாடாளுமன்றத்தின் வாயிலாகவே வெளிப்படுகிறது. எனவே முழு பலத்துடன் ஆளும் அரசு நினைத்தால் ஷரத்து 368ன் படி அரசியலமைப்பு சட்டத்தின் எந்த பிரிவை வேண்டுமானாலும் மாற்றலாம். அப்படி என்றால் புதிதாக ஒரு அரசியல் சட்டத்தையே இயற்றலாமா? என்ற கேள்வி வந்தது
ஆனால், அரசியல் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை (basic structure) மாற்ற நாடாளுமன்றத்திற்கு உரிமை இல்லை என்று இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது (கேசவனாந்த பாரதி வழக்கு). ஆங்கில ஆதிக்கத்திலிருந்து பெற்ற விடுதலையை பெரும்பான்மை மக்கள் கையிலெடுத்து சிறுபான்மையாக உள்ளவர்களை
அடக்கி விடாமல் காப்பாற்றும் அரணாக நமது அரசியலமைப்பு சட்டம் திகழ்கிறது. Absolute power corrupts absolutely என ஆக்டன் பிரபு சொன்னதைப் போல நாடாளுமன்றமோ, அதிகாரிகளோ, நீதிமன்றமோ முழு அதிகாரத்தை எந்நாளும் கைப்பற்ற முடியாத ஒரு சமநிலையை (checks and balances) நமது அரசியலமைப்பு சட்டம்
ஏற்படுத்தி உள்ளது. இதில் குறைகளே இல்லையா என்றால் நிறைய இருக்கிறது. முக்கியமாக, ஒன்றிய அரசிடமே அதிகாரங்கள் குவிந்து கிடக்கின்றன. மாநில சுயாட்சி என்பது வெறும் கனவாகவே இருக்கிறது. ஒரு வேளை திராவிட இயக்கம் நமது அரசியலமைப்பு சபை (constituent assembly)யில் இடம் பெற்றிருந்தால் மாநில
சுயாட்சி குறித்து ஒரு பிரிவு இடம் பெற்றிருக்கக் கூடும். அந்த வாய்ப்பை நாம் தவற விட்டு விட்டோம். திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டது முதல் ஒன்றிய அரசில் இடம் பிடிப்பது வரை மாநில நலன்களைப் பாதுகாக்க ஆவன செய்து வருகிறோம். அரசியல் சட்டம் என்பது வாழும் ஆவணம். அதை காலத்துக்கு ஏற்றவாறு
மெருகேற்ற வேண்டியது நமது கடமை. "பழைய சுமைகளை இறக்கி விட்டு, புதிய அரசியல், சமூக கட்டமைப்பை உருவாக்கும் ஒரு ஆயுதமே இந்த அரசியலமைப்பு சட்டம்' என்ற பண்டிதர் நேருவின் கூற்றோடு இழையை நிறைவு செய்கிறேன் #RepublicDay #Thread

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Newman

Newman Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @roadoram

Nov 20, 2022
செல்வி. ப்ரியா இறந்த வழக்கில் டாக்டர்களை கைது செய்வது அவசியமா?
நடந்த மரணத்திற்கு அனைவரும் வருந்துகிறோம். இதற்கு மருத்துவர்கள் தான் காரணம் என்றால் அவர்கள் தண்டிக்கப் பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், மருத்துவர்களைக்
#health #law #thread
கைது செய்வது சட்டப்படி சரி தானா? உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் சில வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது:
1. மருத்துவர் என்பவர் கொலை செய்யும் நோக்கில் மருத்துவம் பார்ப்பதில்லை. உயிரைக் காப்பாற்றும் வேலையில் அறிந்தோ அறியாமலோ தவறு நிகழலாம்.
2. மருத்துவர் அந்த சிகிச்சையை செய்ய
தகுதி படைத்தவர் தானா என பார்க்க வேண்டும்.
3. அந்த சிகிச்சையை ஏற்றுக்கொள்ளப்பட்ட தரத்திற்கு வழங்கினாரா?
4. அப்படி வழங்கவில்லை என்றால் தவறு சிறியதா, பெரியதா? Mistake or a blunder?
5. நிகழ்வை ஒரு சிறப்பு அரசு மருத்துவர் ஆய்வு செய்து நடந்தது மிகப் பெரிய தவறு என்று அறிக்கை தந்தால்
Read 7 tweets
Aug 19, 2022
இலவசங்களால் என்ன பயன் ? தமிழ் மக்கள் வாழ்வு எப்படி மேம்பட்டிருக்கிறது எனப் பிரதமருக்கு முட்டு கொடுத்து சீமான் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
கலைஞர் தந்த இலவச டிவி திட்டத்தின் பலன்கள் பற்றி இந்த இழையில் பார்ப்போம் #thread #freebies
1996ல் கலைஞர் இலவச டிவி அறிவிக்கும் போது 14" டிவியின் சந்தை விலை ₹5000/-. திமுக அரசு 2006-11 நடந்த 5 ஆண்டு ஆட்சியில் 1,62,59,526 குடும்பங்களுக்கு 3687 கோடி ரூபாய் செலவில் டிவி வழங்கியது. அதாவது ஒரு டிவியின் விலை சுமார் ₹2200/-. டெண்டர் முறை மூலம் அரசு வாங்கியதால் மக்களிடம்
இருந்து போயிருக்கக் கூடிய ஆயிரக்கணக்கான கோடிகள் மிச்சமாகி அது புழக்கத்தில் இருந்தது. தமிழ்நாட்டில் டிவி ஊடுருவல் (penetration) 95% ஆனதால் தமிழில் இத்தனை சேனல்கள் வந்தன. மற்ற மாநிலங்களில் HUL, P& G, ITC போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் பிராண்டுகளே கோலோச்சும் போது இங்கே கோல்டுவின்னர்
Read 5 tweets
May 24, 2022
பட்டினப் பிரவேசம் நிகழ்வில் வலதுசாரிகளுக்கு கிடைத்திருப்பது தற்காலிக வெற்றி மட்டுமே. மனிதனை மனிதனே சுமந்து செல்வது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று நீதிமன்றம் சொல்லவே வாய்ப்புகள் அதிகம் என்கிறது இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளிவந்துள்ள கட்டுரை. 1/4
மத சம்பந்தப்பட்ட விவகாரங்களில் "அவசியமற்ற பழக்கங்கள்" (non essential practices) என பலவற்றை நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. உ.தா. சபரிமலையில் பெண்கள் அனுமதி, ஹிஜாப் விவகாரம். 50 ஆண்டுகளுக்கு முன்பே தருமபுரம் ஆதீனம் கைவிட்ட பல்லக்கில் புதிய ஆதீனகர்த்தர் ஏறியதை எந்த விதத்திலும் 2/4
நியாயப்படுத்த முடியாது. ஏற்கனவே தமிழ்நாடு திருக்கோயில் பணியாளர்கள் சங்கம் யாரையும் பல்லக்கில் சுமக்க முடியாது எனத் தீர்மானம் இயற்றி உள்ளது. சம்பிரதாயம் என்னும் பெயரில் மடத்தின் ஊழியர்களை பல்லக்கு தூக்க யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அது மனித உரிமைக்கு எதிரானது 3/4
Read 4 tweets
Nov 23, 2021
"சார், லீஸ்ல போன வீட்டை காலி பண்ணப் போறேன். வாங்கிய காசைத் திருப்பித் தர முடியாதுன்னு சொல்றாங்க. என்ன பண்ணட்டும்?" என காலையில் ஒரு போன். விவரங்களை விசாரிக்கும் போது தான் அவர் நம்மூரில் பல ஆண்டுகளாக நடந்து வரும் மோசடிக்கு பலியாகி இருக்கிறார் எனத் தெரிய வந்தது #fraud #alert
1/4
இரண்டு ஆண்டுகளுக்கு முன் முகப்பேரில் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒர் ஃப்ளாட்டை 12 லட்சத்திற்கு லீஸுக்கு எடுத்திருக்கிறார் நண்பர். போன வருடம் ஒரு வங்கியிலிருந்து வந்து கடன் கட்டாததால் வீட்டை காலி செய்யச் சொல்லி நோட்டீஸ் ஒட்டியிருக்கிறார்கள். அரண்டு போன நண்பர் ஓனருக்கு 2/5
போன் செய்திருக்கிறார். அவர் பிடி கொடுக்காததால் ஓனரைத் தேடிப் பார்த்ததில் அவர் சாலையோரம் இஸ்திரி போடும் நபர். மோசடி செய்து வீட்டு மதிப்பை அதிகமாக காட்டி 100% கடன் பெற்று வீட்டை வாங்கி இருக்கிறார். ஒரு ஈ.எம்.ஐ கூட கட்டாத நிலையில் வீட்டுக்கு possession notice கொடுத்த 3/5
Read 5 tweets
Jun 11, 2021
திமுக வின் பதவி வகித்த திரு. சாதிக் பாட்சாவின் வீட்டுக்கு எதிரில் நாங்கள் வசித்ததால் 1987 எம்ஜியார் மறைவின் போதும், 91 ராஜீவ் காந்தி கொலையின் போதும் அவர் வீட்டின் மேல் பொறுக்கிகள் கல் எறிவதை பார்த்திருக்கிறேன். அவர் மட்டுமல்ல, பல திமுகவினர் வீடுகள், கடைகள் சூறையாடப்பட்டன
ஆனாலும், அவர்கள் கரை வேட்டி கட்டுவதை விடவில்லை. இறுதிப் போரின் போதும், 2ஜி வழக்கு நடந்த போதும் திமுகவினர் மீது வார்த்தைக் கணைகள் வந்து விழுந்தன. ஆனாலும், ஏச்சுக்கும், பேச்சுக்கும் பயந்து விடாமல் கழகத்திற்காக பல உடன்பிறப்புகள் கம்பு சுற்றினார்கள். இதோ, இன்று ஒரு தோழரை
சில பொறுக்கிகள் மிரட்டியவுடன், "திமுக வேஸ்ட், இனிமே நான் திராவிட ஸ்டாக் இல்லை" என சொல்லும் தோழர்களுக்கு :
உங்களுடன் சில நாள் பயணித்ததில் மகிழ்ச்சி. இந்த வண்டியில் பலர் ஏறுவர், சிலர் இறங்குவர். ஆனால், DMK will go on forever 🖤❤
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(