#ஆழ்வார்_அருளிச்செய்தது #நாலாயிர_திவ்யபிரபந்தம் #ஸ்ரீவைஷ்ணவம் #ஸ்ரீராமானுஜர்

#திருமங்கையாழ்வார் காலத்திற்குப் பின் பல காரணங்களால் ஆழ்வார்கள் பாசுரங்களை பாராயணம் செய்வதை மக்கள் கைவிட்டுவிட்டனர். சிதம்பரம் அருகிலுள்ள காட்டுமன்னார்கோயில்/காட்டுமன்னார்குடியில் #ஸ்ரீநாதமுனிகள்
என்னும் வைணவர் அவதரித்தார். அவர் அப்பதியின் ராஜகோபாலன் மீது ஆழ்ந்த பக்தி கொண்டு அப்பெருமாள் கோயில் கைங்கர்யங்களை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்து வந்தார். அவர் ஓரு நாள் திருக்குடந்தை என்னும் கும்பகோணம் சாரங்கபாணிப்பெருமாள் கோவில் சென்று மூலவர் ஆராவமுதப்பெருமாளை சேவித்துக் கொண்டிருந்த
பொழுது, தென் தமிழ்நாட்டிலிருந்து யாத்திரை வந்திருந்த சில வைணவர்கள்
ஆராவமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராயலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே
சீரார்செந்நெல் கவரிவீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார்கோலம் திகழக்கிடந்தாய் கண்டேன் எம்மானே.
எனத்துவங்கி நம்மாழ்வார் திருக்குடந்தை
ஆராவமுதன் மீது அருளிச்செய்த பாசுரங்கள் 11யும் இனிய இசையில் பாடி வழிபட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் பாடிய
உழலை என்பின் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையேச் சரணாக்கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச்சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
மழலை தீரவல்லார் காமர்மானேய்
நோக்கியர்க்கே.
என்னும் 11 ஆம் பாசுரம் நாதமுனிகளின் கவனத்தை ஈர்த்தது. அவர் அவ்வடியார்களிடம் ஓராயிரத்துள் இப்பத்தும் என்றால் இதுபோன்ற இனிய பாசுரங்கள் ஆயிரம் உள்ளனவோ? அவற்றை நீவிர் அறிவீரோ? என வினவினார். அதற்கு அவ்வடியார்கள்
"சுவாமி ! இப்பதினோறு பாசுரங்களே யாம் அறிவோம். இவை
#நம்மாழ்வார் அருளிய பாசுரங்கள். நாங்கள் நம்மாழ்வாரின் சீடரான #மதுரகவியாழ்வார் மரபில் வந்தவர்கள். எங்கள் பரம்பரையில் இப்பதினோறு பாசுரங்கள் மட்டுமே செவிவழியாக போதிக்கப்பட்டு வருகின்றன. இதனை எங்களுக்குக் கற்பித்த #பராங்குசதாசர் என்பவர் தற்போது #திருக்குருகூர் என்னும் ஆழ்வார்
திருநகரியில் வாழ்ந்து வருகிறார். அவரை தாங்கள் அனுகினால் தங்கள் சந்தேகம் தீரவாய்ப்புள்ளது" என்று கூறினார்கள். நாதமுனிகள் 1000 பாசுரங்களையும் அறியும் ஆர்வமுடன் ஆழ்வார் திருநகரி சென்று பராங்குசதாசரைச் சந்தித்தார். அவரைப் பணிவுடன் வணங்கி தம் விருப்பத்தைத் தெரிவித்தார். பராங்குசதாசர்
"அன்பரே ! நம்மாழ்வாரின் 1000 பாடல்களையும் அறியும் உம் ஆர்வத்தை யாம் பாராட்டுகிறோம். ஆனால் எமக்கே 11 பாசுரங்கள் தான் தெரியும். நம்மாழ்வார் ஒருவரே 1000 பாசுரங்களையும் கூற முடியும். அவர் பரமபதம் சென்று பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் ஆகின்றன. என்ன செய்ய? எம் மூதாதையரான மதுரகவியாழ்வார்
தம் குருவான நம்மாழ்வாரையை இறைவனாக பாவித்து கண்ணிநுண் சிறுத்தாம்பு எனத் துவங்கி 11 பாசுரங்கள் அருளிச் செய்துள்ளார். அவற்றை நான் உமக்கு உபதேசிக்கிறேன். அவற்றை நீர் நம்மாழ்வார் வாழ்ந்த புளியமரத்தடியில் அமர்ந்து இசைத்தால் ஒரு வேளை நம்மாழ்வார் பரமபதத்தினின்றும் மீண்டுவந்து உமக்கு
1000 பாசுரங்களையும் உபதேசிக்க வாய்ப்புள்ளது." என்று கூறி #கண்ணிநுண்சிறுத்தாம்பு துவங்கி 11 பாசுரங்களையும் நாதமுனிகளுக்கு உபதேசித்தார். நாதமுனிகள் புளியமரத்தடியில் அமர்ந்து, நம்மாழ்வாரை மனதிலிருத்தி அப்பதினோரு பாசுரங்களை இடைவிடாது மீண்டும் மீண்டும் பாடிக் கொண்டேயிருந்தார்.
10,000 மாவது முறை பாடி முடித்ததும் நம்மாழ்வார் அவர் முன் தோன்றினார். நம்மாழ்வார் குருவாக புளியமரத்தடியில் அமர்ந்து நாதமுனிகளுக்கு #திருவாய்மொழி 1102 பாசுரங்களையும் உபதேசித்தருளினார். நாதமுனிகள் மிக்க மகழ்ச்சி அடைந்து நம்மாழ்வாரை வீழ்ந்து வணங்கி விடைபெற எத்தனித்தார். நம்மாழ்வார்
"ஆயிரம் போதுமோ? மற்ற ஆழ்வார்கள் அருளிச்செய்த மேலும் 3000 பாசுரங்கள் வேண்டாவோ?" என்றார். இன்ப அதிர்ச்சி அடைந்த நாதமுனிகள் அவற்றையும் உபதேசித்தருளுமாறு வேண்டினார். நம்மாழ்வாரும் மேலும் 3000 பாசுரங்களையும் உபதேசித்தருளினார். நாதமுனிகள் பேரானந்தமடைந்தார். நம்மாழ்வார் சந்தேகமிருப்பின்
நாளை வாரும் என்றார். மறுநாள் நாதமுனிகள் மீண்டும் புளியமரத்தடிக்குச்சென்றார். அங்கே முன்னதாகவே நம்மாழ்வார் வந்து வீற்றிருந்தார். " சுவாமி ! பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றுமில்லை
கலியும்கெடும் கண்டுகொண்மின்"
என்று கூறி
உள்ளீர்களே, எப்படி எமனுக்கு வேலை இல்லாமல் போகும் ?" என்று கேட்டார் நாதமுனிகள். உடனே நம்மாழ்வார் தம் பையிலிருந்து ஓர் விக்கிரகத்தை எடுத்து நாதமுனிகளிடம் கொடுத்து, "இவர் பெயர் இராமானுஜர். இவர் பிற்காலத்தில் இவ்வுலகில் அவதரித்து வைணவ சம்பிரதாயத்தை நிலைநாட்டுவார். அப்போது மக்கள்
அனைவரும் இவரைப் பின்பற்றி அறவழி நடப்பார்கள். எனவே எமனுக்கு வேலை இல்லாமல் போகும்" எனக் கூறினார். மேலும் "இவ்விக்கிரகத்திலுள்ள உத்தமரை தேடிக் கண்டு பிடித்து வைணவ ஆச்சார்யராகச் செய்ய வேண்டியது உமது கடமையாகும்" என்றும் கட்டளையிட்டு மறைந்து போனார். நாதமுனிகள் 4000 பாசுரங்களைப் பெற்ற
மகிழ்ச்சியோடும், விக்கிரகத்தைப் பெற்று (நம்மாழ்வார் அளித்த விக்கிரகம். இது தற்போது ஆழ்வார் திருநகரியில் உள்ளது) வைணவத்தைச் சிறப்பிக்கும் கடமை உணர்வோடும் காட்டுமன்னார்கோயில் வந்து சேர்ந்தார். 4000 பாசுரங்களையும் ஓலைச் சுவடியில் பதிவேற்றினார். அவற்றிற்கு நாலாயிர திவ்யப்பிரபந்தம் என
பெயர் சூட்டினார். முதலாமாயிரம், இரண்டாமாயிரம், மூன்றாமாயிரம் மற்றும் நாலாமாயிரம் என நான்கு தொகுதிகளாகப் பிரித்தார்.
முதலாமாயிரம்
1.பெரியாழ்வார் - திருப்பல்லாண்டு : 12 பாசுரங்கள்
2.பெரியாழ்வார் - பெரியாழ்வார் திருமொழி : 461 பாசுரங்கள்
3.ஆண்டாள் - திருப்பாவை : 30 பாசுரங்கள்
4.ஆண்டாள் - நாச்சியார் திருமொழி : 143 பாசுரங்கள்
5.குலசேகராழ்வார் - பெருமாள் திருமொழி : 105 பாசுரங்கள்
6.திருமழிசையாழ்வார் - திருச்சந்த விருத்தம் : 120 பாசுரங்கள்
7.தொண்டரடிப்பொடியாழ்வார் - திருமாலை 45 பாசுரங்கள்
8.தொண்டரடிப்பொடியாழ்வார் - திருப்பள்ளியெழுச்சி : 10 பாசுரங்கள்
9.திருப்பாணாழ்வார் - அமலனாதிபிரான் 10 பாசுரங்கள்
10.மதுரகவியாழ்வார் - கண்ணிநுண் சிறுத்தாம்பு : 11 பாசுரங்கள்
முதலாமாயிரம் மொத்தம் 947 பாசுரங்கள்.
இரண்டாமாயிரம்
1.திருமங்கையாழ்வார் - பெரியதிருமொழி : 1084 பாசுரங்கள்
2.திருமங்கையாழ்வார் - திருக்குறுந்தாண்டகம் : 20 பாசுரங்கள்
3.திருமங்கையாழ்வார் - திருநெடுந்தாண்டகம் : 30 பாசுரங்கள்
இரண்டாமாயிரம் மொத்தம் 1134 பாசுரங்கள்.
மூன்றாமாயிரம்
1.பொய்கையாழ்வார் - முதல் திருவந்தாதி : 100 பாசுரங்கள்
2.பூதத்தாழ்வார் - இரண்டாம் திருவந்தாதி : 100 பாசுரங்கள்
3.பேயாழ்வார் - மூன்றாம் திருவந்தாதி : 100 பாசுரங்கள்
4.திருமழிசையாழ்வார் - நான்முகன் திருவந்தாதி : 96 பாசுரங்கள்
5.நம்மாழ்வார் - திருவிருத்தம் : 100 பாசுரங்கள்
6.நம்மாழ்வார் - திருவாசிரியம் : 7 பாசுரங்கள்
7.நம்மாழ்வார் - பெரிய திருவந்தாதி : 87 பாசுரங்கள்
8.திருமங்கையாழ்வார் - திருவெழுக்கூற்றிருக்கை : 1 பாசுரம்
9.திருமங்கையாழ்வார் - சிறிய திருமடல் : 40 பாசுரங்கள்
10. திருமங்கையாழ்வார் - பெரிய திருமடல் : 78 பாசுரங்கள்
மூன்றாமாயிரம் மொத்தம் 709 பாசுரங்கள்
நாலாமாயிரம்
நம்மாழ்வார் - திருவாய்மொழி : 1102 பாசுரங்கள்
நாலாமாயிரம் மொத்தம் 1102 பாசுரங்கள்
முதலாமாயிரம் : 947 பாசுரங்கள்
இரண்டாமாயிரம் :1134 பாசுரங்கள்
மூன்றாமாயிரம் : 709 பாசுரங்கள்
நாலாமாயிரம் :1102 பாசுரங்கள்
மொத்தம் :3892 பாசுரங்கள் ___
இவ்வாறு நாதமுனிகள் தொகுத்தளித்த நாலாயிர திவ்யப்பிரபந்தமே இப்போது நாம் பாராயணம் செய்யும் நூலாகும்.
தற்போது மூன்றாம்
ஆயிரத்தில் இடம் பெற்றுள்ள #இராமானுச_நூற்றந்தாதி 108 பாசுரங்கள் இராமானுஜர் காலத்திற்குப் பின் சேர்க்கப்பட்டவை. வழக்கத்தில் இல்லாமலிருந்த நாலாயிர திவ்யப்பிரபந்த்தை மீட்டு நமக்களித்த ஸ்ரீமந் நாதமுனிகள் வைணவ குருபரம்பரையின் முதல் ஆச்சார்யராகப் போற்றப் படுகிறார். இவர் நாலாயிர திவ்யப்
பிரபந்தம் உலகெங்கும் பரவவேண்டும் என விரும்பினார். எனவே தம் தமக்கை மகன்களான #கீழையகத்தாண்டான், #மேலையகத்தாண்டான் ஆகிய இருவரையும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை இசையமைத்து பாடி பாமர மக்களிடையே பரப்புமாறு கட்டளை இட்டார். அவர்களிருவரும் சிறந்த இசை வல்லுனர்கள் ஆதலால் நாலாயிர திவ்யப்
பிரபந்தத்தைப் பண்ணோடு பாடும் பணியைச் செவ்வனே செய்தனர். இவர்கள் ஊர்தோறும் சென்று திருமால் கோயில்களில் பண்ணொடு பாசுரங்களைப் பாடிப் பரப்பிய தொண்டு #அரையர்சேவை என்றழைக்கப்பட்டது. இவர்கள் மரபின்வழி வந்தவர்களே இந்நாளில் #அரையர்கள் என்று அழைக்கப் படுகிறார்கள். இப்போதும் திருவரங்கம்,
திருவில்லிப்புத்தூர், திருவானமாமலை, திருக்குறுங்குடி, ஆழ்வார் திருநகரி ஆகிய ஊர்களிலுள்ள பெருமாள் கோயில்களில் அரையர்கள் மார்கழிமாதம் முழுவதும் அரையர்சேவை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். திவ்யப்பிரபந்தத்தை முதன் முதலில் அருளிச்செய்தவர் #பொய்கையாழ்வார் ஆவார். அவர் அருளிய முதல் பாசுரம்
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக செய்ய
சுடாராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடாழி நீங்குகவே என்று.
திவ்யப்பிரபந்தம் முதன் முதலில் தோன்றிய ஊர் #திருக்கோவலுர் ஆகும். ஆனால் ஸ்ரீமந் நாதமுனிகள் திவ்யப்பிரபந்தத்தைத் தொகுக்கும்போது முதன் முதலில் எல்லாம் வல்ல
எம்பெருமானாகிய ஸ்ரீமந் நாராயணனை வாழ்த்தித் துவங்குமாறு திவ்யப்பிரபந்தம் அமைய வேண்டும் என விரும்பினார். எனவே
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வித்திருக்காப்பு
எனத்துவங்கும் ஆழ்வார்கள் வரிசையில் எட்டாவது வைணவ அடியாராக
அவதரித்த #பெரியாழ்வார் அருளிச்செய்த 12 பாசுரங்களை திவ்யப்பிரபந்தத்தின் முகப்புப் பகுதியாக வைத்து, அதற்குத் #திருப்பல்லாண்டு எனவும் பெயர் சூட்டினார். நம்மாழ்வாரிடமிருந்து ஆழ்வார்கள் பாசுரங்கள் 4000த்தையும் பெறுதற்குக் காரணமாக இருந்த மதுரகவியாழ்வார் அருளிச்செய்த 11 பாசுரங்களுக்கும
முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு அவற்றை முதலாமாயிரத்தின் கடைசிப்பகுதியாக அமைத்து அப்பகுதிக்குக் #கண்ணிநுண்_சிறுத்தாம்பு என்றே பெயரிட்டார். இதுவே நாலாயிர திவ்யப்பிரபந்தம் தொகுக்கப்பட்ட வரலாறாகும். ஸ்ரீ வைணவ குருபரம்பரையை நிலைநாட்டிய ஸ்ரீமந் நாதமுனிகளுக்குப் பல சீடர்கள் இருந்தனர
அவர்களுள் #உய்யக்கொண்டான், #குருகைக்காவலப்பன் ஆகியோர் முதன்மையான சீடர்கள் ஆவார்கள். உய்யக்கொண்டான் பக்தி மார்கத்தையும், குருகைக்காவலப்பன் யோக மார்கத்தையும், தம் குருநாதரிடம் கசடறக் கற்றார்கள். பாமரர்களை உய்விக்கச் சிறந்த நெறி பக்தி மார்க்கமே என உணர்ந்த ஸ்ரீமந் நாதமுனிகள், தமக்கு
பின் உய்யககொண்டாரை ஆச்சார்யராக நியமித்து அவரிடம் நம்மாழ்வார் அளித்த பவிதாச்சார்ய விக்கிரகத்தைக் கொடுத்து இராமானுஜரை கண்டறியச்சொன்னார்.
உய்யக்கொண்டாரிடமிருந்த அவ்விக்கிரகம் மணக்கால்நம்பி மூலமாக ஆளவந்தாரை வந்தடைந்தது. #ஆளவந்தார் காஞ்சிபுரம் வரதாஜப்பெருமாள் கோயிலுக்கு யாத்திரை
சென்றார். அங்கு #திருக்கச்சி_நம்பிகள் என்னும் அடியவர் மூலமாக #இளையாழ்வான் என்னும் பெயர்கொண்ட ஒளிபொருந்திய தோற்றத்துடன் கூடிய வைணவ இளைஞன் ஒருவனைக் கண்டார். அவ்விளைஞனே தம்மிடமிருக்கும் விக்கிரகத்திலுள்ள எதிர்கால ஆச்சார்யர் என அடையாளம் கண்டார். தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு
நிறைவேறப்போவதை எண்ணி மிக்க மகிழ்ச்சியடைந்தார். தம் அனுக்கச்சீடரான #பெரியநம்பிகளை, இளையாழ்வானை காஞ்சியிலிருந்து ஸ்ரீரங்கம் அழைத்து வரப் பணித்தார். அவர்கள் ஸ்ரீரங்கம் வருவதற்குள் ஆளவந்தார் பரமபதம் அடைந்தார். பின்னாளில் பெரிய நம்பிகளின் பெருமுயற்சியால் இளையாழ்வான் சந்நியாசம் ஏற்று
இராமானுஜர் என்னும் திருநாமத்துடன் ஸ்ரீரங்கம் ஜுயராகப் பொறுப்பேற்றார். வைணவத்திற்குப் பெருந்தொண்டாற்றினார்.
இவ்வாறாக ஸ்ரீமந் நாதமுனிகள் மறைந்து ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்குப்பிறகு இராமானுஜர் ஆச்சார்யா பீடத்தை அலங்கரித்தார்.
ஆழ்வார் ஆச்சார்யார் எம்பெருமானார் ஜீயர் தேசிகன் திருவடிகளே சரணம்
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Feb 12
#மகத்துவம்_நிறைந்த_மாசிமாதம்
மாசி மாதத்தினை #கும்ப_மாதம் என்றும் அழைப்பார்கள். மாசி மாதத்தில் மாசி மகம், சிவராத்திரி, மாசி அமாவாசை மற்றும் காரடையான் நோன்பு போன்ற புண்ணிய நிகழ்வுகள் பலவும் வருகின்றன. மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் மூன்றாவது அவதாரமான #வராக_அவதாரம் எடுத்து உலகை Image
காப்பாற்றியது இந்த மாசி மாத்தில்தான் என்பது மாசி மாதத்திற்கேயுரிய கூடுதல் சிறப்பாகும்
#மாசி_பௌர்ணமி
இந்த ஆண்டு மாசி 23ஆம் தேதி அதாவது செவ்வாய் கிழமை (07.03.2023) மாசிபௌர்ணமி வருகிறது. இத்தினத்தில் இறைவனை வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும். அண்ணாமலையாரே வள்ளாலன் என்ற தன் பக்தனுக்கு Image
திதி கொடுத்து வழிபாடு செய்தது மாசி மாத பௌர்ணமி தினத்தில்தான். எனவேதான் வழக்கமாக அமாவாசைகளில் செய்யும் சிரார்த்த காரியங்களை இன்று செய்வது விசேஷம் என்று சொல்லப்படுகிறது,
#மாசி_மகம்
மாசி மகம் மாசி மாதத்தில் பௌர்ணமியை ஒட்டி வரும் மகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் Image
Read 12 tweets
Feb 12
#MahaPeriyava
Source: Maha Periyavar by S. Ramani Anna
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
This incident happened several years ago. A Vedic Pundit, Ramanatha Ganapadigal who hailed from Karur was living in Srirangam. His wife’s name was Dharmambal. Image
Their only daughter was Kamakshi. Though the Pundit was a master in Vedas, he did not pursue Vaideegam (performing Vedic rituals) for his livelihood but used to do Upanyasam (spiritual discourses) for a living with whatever remuneration he received for his discourses. The family
members were staunch devotees of Sri Maha Periyava. Their daughter’s marriage was fixed suddenly and the groom was a teacher in a nearby village. His wife Dharmambal asked her husband, “Our daughter’s marriage has been fixed. How much savings have we got?” Ganapadigal replied,
Read 34 tweets
Feb 12
#நவநீதகிருஷ்ணன்_கோவில் திருநெல்வேலி மாவட்டம், சுரண்டை அருகே வீ.கே.புதூர் என்னும் வீரகேரளம்புதூர் கிராமத்தில், சுமார் 1000 ஆண்டுகள் பழமையான இக்கோவில் அமைந்துள்ளது. இங்கு அருளும் இறைவனை ‘தமிழகத்தின் குருவாயூரப்பன்’ என்று போற்றுகிறார்கள்.
மூலவர்: நவநீதகிருஷ்ணன்
உற்சவர்: ஸ்ரீதேவி, Image
பூதேவி சமேத நவநீதகிருஷ்ணன்
இக்கோவிலுக்கும் கருடாழ்வாருக்கும் நிறையதொடர்பு உண்டு. “பறவைகளுள் நான் கருடன்” என்று கீதையில் கிருஷ்ண பகவான் கூறியுள்ளார். கண்ணன் துவாரகைக்கு வெளியே இருந்த போதெல்லாம், துவாரகையை காத்தவர் கருடன். “வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியில் விளங்குவாய்” என்று
கருடனுக்கு திருமால் வரம் அளித்துள்ளார். கருட தரிசனம் உள்ளத்தில் ஊக்கத்தை உண்டாக்கும். ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும், அதன் குரலைக் கேட்பதும் நல்ல சகுனம். எதிரிகளை முறியடிக்கும் அதிர்வலைகளை கருட தரிசனம் அருளும். கருடனைக் கண்டாலே காரிய வெற்றி கிடைக்கும். பாண்டியமன்னர்கள் ஆளுகைக்கு Image
Read 23 tweets
Feb 11
#MahaPeriyava
The value of annadhanam
Author: Sri S. Ramani Anna (in Tamil)
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

It was the time when Maha Swamigal was staying in Kalavai, many years ago. It was a Sunday. A large crowd had gathered for darshan.
One by one the devotees prostrated to the sage, received His blessings and moved away. A middle-aged couple prostrated to Acharyal and stood up with folded palms. Keenly looking at them, Swamigal said, "Adede, who (is this) Palur Gopalan! You had come a year back. That time you
spoke about some problems. Are you fine now?" and laughed.
Palur Gopalan replied, "We are very fine Periyava. As directed by you, from the time we started feeding an athithi at noon time every day, only good things are happening, Periyava! Good harvest in (my) fields. The cows
Read 37 tweets
Feb 10
#ஸ்ரீதிரிநேத்ர_தசபுஜ_வீர_ஆஞ்சநேயர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அனந்த மங்கலம் கிராமத்தில ராஜகோபால சாமி கோவில் என அழைக்கப்படும் திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வடக்கு நோக்கிய சன்னதியில் நாற்கரங்களும் நெற்றிக்கண்ணும் உடைய திரிநேத்ர தசபுஜ வீர
ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார். இந்த ஆஞ்சநேயர் சன்னதிக்கு முன்பு திருக்குளம் உள்ளது. ராஜகோபால சுவாமி கோவிலின் நுழைவு வாயிலில் மொட்டை கோபுரமே உள்ளது. நுழைவு வாயிலை அடுத்து பலிபீடம், கொடிமரம், கருடாழ்வார் சன்னதி ஆகியவை உள்ளன. தென்கிழக்கு மூலையில் அக்னி திசையில் திருமடப்பள்ளி உள்ளது.
தெற்கு பிரகாரத்தில் தாயார் சன்னதி உள்ளது. கருவறையில் செங்கமலவல்லித் தாயார் எழுந்தருளி உள்ளார். கருடாழ்வாரை தரிசித்து மூலவர் பெருமாள் சன்னதிக்கு சென்ற பின் மகா மண்டபத்தில் உள்ள திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயரை வணங்க வேண்டும். வடக்கு பிரகாரத்தில் அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில்
Read 16 tweets
Feb 10
#கண்ணா #கிருஷ்ணா #முகுந்தா #கோவிந்தா
துவாபர யுகத்தில் திரும்பும் இடமெல்லாம் அதர்மம் தலைவிரித்தாடி கொண்டிருந்தது. நதி, மண், ஆகாயம் என திரும்பும் இடமெல்லாம் அக்கிரமம். மிதமிஞ்சி ஆடிய கம்சன் நரகாசுரனில் தொடங்கி துரியோதன கூட்டம் வரை ஆடி தீர்த்தார்கள். சொந்த மருமகனை கொல்ல துணிந்த
கம்சன், பங்காளிகளை ஒழிக்க தேடிய துரியன், பெரும் அதர்மவாதிகள் சிசுபாலன், ஜராசந்தன் என கணக்கில் அடங்கா கெட்டவர்கள் மண்டி கிடந்தனர். இது போக அரக்க கூட்டம், பாம்பு கூட்டம் இன்னும் மானிடரை அறவழி வாழவே விடாத பெரும் அராஜக கும்பல்கள் ஆட்டம் போட்ட காலமாய் இருந்திருக்கின்றது.
யாருக்கும்
தெரியாமல் ஆனால் தெரிய வேண்டியோருக்கு தெரிந்தபடி சவால்விட்டு பிறந்தான் கண்ணன், பிறந்த நொடியில் இருந்து அவனுக்கும் அதர்மத்துக்குமான போர் தொடங்கியது. அவன் வாழ்வினை படித்தால், அந்த குழந்தையினை கொஞ்ச தோன்றும். அந்த வாலிபனை ரசிக்க தோன்றும், அவன் வீரத்தில் உடல் சிலிர்க்கும், அவன்
Read 32 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(