சொத்து பத்திரங்கள் (தாய் பத்திரம் ) தொலைந்துவிட்டால், அதை எப்படி பெற வேண்டும் தெரியுமா?
ஆன்லைனிலேயே சொத்து பத்திரங்களின் நகல்களை எப்படி பெறுவது தெரியுமா?
"எங்கிருந்தும் எந்நேரத்திலும்" திட்டம் பற்றி தெரியுமா?
/1
#Online #Land #Documents #Tamilnadu
நில உரிமையாளர்கள் பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்களை பொது சேவை மையங்கள் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பித்து, அவை ஆன்லைனில் பரிசீலிக்கப்பட்டு, அதற்கு பிறகு பட்டா மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது.
/2
பொதுமக்கள் பட்டா விண்ணப்பம் செய்வதற்கு கால விரயம் ஏற்படுவதாக சொல்லப்பட்டது.
தமிழக அரசு சில மாதங்களுக்கு முன்பு இணையவழி சேவையின் மூலமாக பொதுமக்கள் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதியை கொண்டுவரப்பட்டது.
/3
எந்நேரத்திலும் எந்த இடத்திலிருந்தும் பட்டா மாறுதல் கோரி /citizen/ என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த ஆன்லைன் முறையில் பட்டா மாறுதல் வசதி செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இ-சேவை மையத்திற்கும்,
தாலுகா அலுவலகத்திற்கும் தேவையில்லாமல் அலைய தேவையில்லை... நேரம் மிச்சமாகும்.
ஆன்லைன் வசதி: அதேபோல, தொலைந்த பத்திரத்தையும் ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம்.. முன்பெல்லாம் பத்திரம் தொலைந்து போய்விட்டால், அதை மீட்பது மிகவும் சிரமம்.
/5
தொலைந்து போன அல்லது பழைய சொத்து பத்திரம் நகல் எடுக்க வேண்டுமானால், தாலுகா அலுவலகத்துக்குதான் நேரில் செல்ல வேண்டும்.
அங்கே அவர்கள் கேட்கும் மொத்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு பலநாள் அலைந்து திரிந்துதான், உரிமையாளர்கள் தங்களது சொத்து பத்திர நகலை பெறுவார்கள்.
/6
ஆனால், இப்போது அப்படியெல்லாம் கிடையாது. பொதுமக்களின் வசதிக்காக எல்லாமே ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது.. வீட்டுக்குள்ளிருந்தே தொலைந்து போன பத்திரத்தின் நகலை பெற முடியும்.
/7
வழிமுறைகள் என்னென்ன?
✅ முதலில் என்ற வெப்சைட்டிற்குள் செல்ல வேண்டும். உள்ளே நுழைய உங்களது user id & password கொடுக்க வேண்டும்.
✅ "உள்நுழைவு" என்ற இடத்தில், உங்களுடைய பெயர், password & கொடுக்கப்பட்டுள்ள Captcha பிழையில்லாமல் தந்து உள்ளே நுழைய வேண்டும்./8tnreginet.gov.in/portal/
✅ ஒருவேளை இந்த இணையதளத்துக்குள் இப்போதுதான் முதல்முறையாக நுழைகிறீர்கள் என்றால், signup என்பதை கிளிக் செய்து உள்ளே நுழைய வேண்டும்.
✅ கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, Account உருவாக்க வேண்டும்.இப்போது உங்கள் செல்போன் நம்பருக்கு ஒரு OTP வரும். பிறகு account உருவாகும்./9
✅ "மின்னணு சேவை" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
இப்போது ஸ்கிரீனில் நிறைய ஆப்ஷன்கள் தென்படும். இதில் "சான்றிக்கப்பட்ட நகல்" என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
/10
✅ "தேடல் மற்றும் சான்றளிக்கப்பட்ட நகல் விண்ணப்பிக்க" என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், புதிய ஸ்கிரீன் தோன்றும்
✅ இந்த பக்கத்தில் "ஆவணத்தின் வகைப்பாடு" என்ற இடத்தில் "சொத்து சம்பந்தப்பட்ட ஆவணம்" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
/11
✅ பிறகு, "ஆவண எண்" என்பதில், உங்களுடைய வில்லங்க சான்றிதழில் உள்ள ஆவண நம்பரை பதிவிட வேண்டும்.
✅ "சார் பதிவாளர் அலுவலகம்" என்ற இடத்தில், தாங்கள் எந்த அலுவலகத்தில் பத்திரம் பதவு செய்தீர்களோ, அந்த அலுவலகத்தினை தேர்வு செய்ய வேண்டும்.
/12
✅ "ஆண்டு" என்ற இடத்தில், எந்த ஆண்டு பத்திரம் பதிவு செய்யப்பட்டதா,அந்த ஆண்டினை தேர்வு செய்ய வேண்டும்.
✅ இப்போது, அங்கு தென்படும் captcha code அவற்றில் உள்ளது போல் டைப் செய்து,"தேடுக" என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால்,இப்போது தாங்கள் பதிவு செய்த ஆவணங்களின் விவரங்கள் பதிவாகிவிடும்./13
✅ பிறகு "இணையவழி விண்ணப்பிக்க" என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, "தனிப்பட்ட விவரங்கள்" என்ற ஆப்ஷனில் உங்களது தனிப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து, "சரி" என்ற button கிளிக் செய்ய வேண்டும்.
✅ "கட்டண விவரங்கள்" என்ற பக்கம் open ஆகிவிடும்.
/14
இதில் செலுத்த வேண்டிய கட்டணங்கள் தரப்பட்டிருக்கும். அதில் "ஆன்லைன் மூலம்" என்ற ஆப்ஷனை தேர்வு செய்து, "செலுத்துக" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
✅ ஆன்லைனில் பணம் கட்டியபிறகு, ACKNOWLEDGE RECEIPT கிடைத்துவிடும்.
/15
✅ பிறகு வெப்சைட்டின் முகப்பு சென்று "மின்னணு சேவை" என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, "சான்றளிக்கப்பட்ட நகல்" என்ற ஆப்ஷனையும், பிறகு "கோரிக்கை பட்டியல்" என்ற ஆப்ஷனையும் கிளிக் செய்ய வேண்டும்.
✅ இப்போது, உங்களுடைய விண்ணப்பத்தின் எண், பதிவு எண், ஆவணத்தின் வகைப்பாடு, விண்ணப்ப நாள்,
/16
தொகை செலுத்தப்பட்ட நிலைப்பாடு, கையொப்பட்ட ஆவணம் போன்ற விவரங்கள் அதில் இருக்கும்.
பத்திர நகல்கள் : இப்போது 2 நாள் கழித்து, இந்த இணையதளத்தை செக் செய்து, "மின்னணு சேவை" என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, "சான்றளிக்கப்பட்ட" என்ற ஆப்ஷனையும் பிறகு,
/17
"கோரிக்கை பட்டியல்" என்ற ஆப்ஷனையும் கிளிக் செய்தால், கீழ் பகுதியில் கையொப்பமிட்ட இடத்தில் டவுன்லோடு ஆப்ஷன் இருக்கும்.
அதை கிளிக் செய்தால், உங்களுக்கு தேவையான பத்திர நகல்களை ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
Source : one India and others.
/18
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சாவு வீட்டில் சாவைத் தவிர பணத்திற்காக ஒருத்தரும் அழக்கூடாது...
தவறாக எண்ண வேண்டாம்:
கௌரவ குறைவாக நினைக்க வேண்டாம்.
குடும்ப உறுப்பினர் ஒருவர் திடீரென இறந்து போகையில் கையில் காசு இல்லாமல் திணரும் அந்த குடும்பத்தின் முக்கிய நபரை கவனித்தது உண்டா...?
1/13
உண்மையில் பிச்சை எடுக்காத குறையாக அந்த நாள் மாறி விடும்.
எளிமையாக பார்த்தாலும்::
ப்ரீசர் பாக்ஸ், ஆம்புலன்ஸ், ரெண்டு மாலை, போட்டு சுடுகாட்டு செலவு செய்தாலே இன்றைய தேதிக்கு 30,40 ஆயிரம் இல்லாமல் முடியாது. அப்படி இருக்க உறவொன்று இறந்ததை நினைத்து அழுவதா????.
அங்க காப்பீடு திட்ட கார்டு கேட்டு வாங்கணும் . ஒரு அப்ளிகேஷன் தருவாங்க. வாங்கி பூர்த்தி செய்து அதை VAO கிட்ட போய் கொடுத்து பரிந்துறை எழுதி வாங்கிக்கோங்க... (குடும்பத்துல இருக்குற எல்லோரோட ஆதார் நகல் எடுத்து செல்லவும்.) 2/6
பின் VAO எழுதி சீல் போட்டு தரும் அப்ளிகேஷன் ஐ எடுத்து கொண்டு கலெக்டர் அலுவலகம் செல்லவும்.
அங்கே முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அறை என்று ஒன்று இருக்கும் அதை கேட்டு அங்கு செல்லுங்கள்.ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் கார்டு அப்ளை செய்து இலவசமாக கொடுத்து விடுவார்கள். 3/6