#மதவெறிவேண்டாம்போடா
- பேரறிஞர் அண்ணா
ஒரு மத ஆதிக்கம்,ஒரு மொழி ஆதிக்கம், ஒரு இன ஆதிக்கம் புகுத்த வேண்டும் என்ற கெடுமதி கொண்டவர்கள், தங்கள் திட்டத்துக்கு ஆதரவாக, ஒரு மதம், ஒரு மொழி, என்பதனை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களை, எதிர்த்து நிற்பவர்களை இவர்கள் நாட்டுப்பற்று அற்றவர்கள் 1/n
என்று கூறிப் பழி சுமத்தி ஒழித்துக்கட்ட எண்ணிடுவர்;
மதத்தின் பேரால் நடைபெறும் ஊழல்களை மக்களுக்கு எடுத்துக் கூறினோம் - மதவிரோதிகள் என்று கண்டிக்கப்பட்டோம்.
கடவுள் பேரால் நடக்கும் கபட நாடகங்களை விளக்கினோம் - நாத்திகர் என்று நிந்திக்கப்பட்டோம்.

கோயில்களில் நடைபெறும் கொடுமைகளைக் கூறினோம் - வாயில் வந்தபடி எல்லாம் திட்டப்பட்டோம்.
அரசியலும் மதமும் கலப்பதா என்பதல்ல கேள்வி; மதத்தால் நம்மை அரசியலிலே அடிமைப்படுத்தி இருக்கும் இழி நிலையைப் போக்கிக் கொள்ள, ஆரியர் புகுத்தியிருக்கும் மதத்தை ஒழித்தாக வேண்டாமா என்பதே கேள்வி. விழி சரி யாக இருந்தாலன்றோ வழி தெரிந்து நடக்க முடியும்?
மத-மூட நம்பிக்கைகளைத் தகர்த்தெறியுங்கள். வாழ்ந்த இனம் ஏன் வீழ்ந்தது? எந்தக் காரணத்தால்? எந்தக் கருத்துகளை கையாள நேரிட்டதால் என்றெல்லாம் கேளுங்கள். விடை காணுங்கள்.
ஆராய்ந்து, ஆராய்ந்து அலசிப் பார்த்து அழைத்து வாருங்கள் தமிழன் தாழ்ந்ததற்கான காரணங்களை. தமிழர் வாழ்வில் புகுந்த முரண்பட்ட மத, மூடநம்பிக்கைகளைத் தமிழரிடமிருந்து விரட்டுங்கள்!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Vignesh Anand

Vignesh Anand Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VigneshAnand_Vm

8 Sep
ஏன் வேண்டும் மாநில சுயாட்சி:

மாநில மக்களின் அடிப்படைப் பொருளாதாரத் தேவைகளையும், நல்வாழ்வுத் திட்டங்களையும் சமூக நலப் பணிகளையும் தவறாது நிறைவேற்றும் பெரும் பொறுப்பு மாநில அரசுகளின் மேல் சுமத்தப்பட்டுள்ளன.
1/n
ஆனால், அப்பொறுப்பை நிறைவேற்றத் தேவையான வருவாய் இனங்கள் மட்டும் மாநிலங்களுக் கில்லை; நிதி ஏற்பாடுகளுமில்லை. மாநில மக்களுக்கு செய்து தீர வேண்டிய பல்வேறு பணிகள், திட்டங்களை நிறைவேற்றவும் முடியாமல்,அவற்றிற்குரிய நிதி வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும் இயலாமல் மாநிலங்கள் தத்தளிக்கின்றன.
மத்திய அரசிடம் மண்டியிட்டுப் பெறும் நிதியுதவிகள், கொத்தடிமையாக்கும் மத்தியக் கடன்கள் இந்த இழி நிலையே இன்றைய மாநிலங்களின் நிதி நிலை.
Read 10 tweets
5 Sep
#ஹிந்தி_தெரியாது_போடா

⁃இந்தி எதிர்ப்பு ஏன் ?

இந்தியா ஒன்றாக இருக்க வேண்டுமே! இந்தியாவை ஒன்றுபடுத்த ஒரு மொழி வேண்டாமா? என்று சொல்லுகின்றார்கள். 1/n
இந்தக் காலத்திலே நீ பழைய காலத்தில் மிரட்டியதைப்போல், இந்தியைப் புகுத்தி விடலாம் என்று கருதினால் அது பகற்கனவாக முடியுமே தவிர நிச்சயமாக அது நடைபெறாது.
ஆங்கிலத்தைப் பற்றிப் பேசுகின்ற நேரத்தில் சில தேசீய தோழர்கள் தங்களுடைய தேசீயம் முற்றிவிட்ட காரணத்தினாலே என்று நான் கருதுகிறேன்-சொல்லுகின்றார்கள் - 'ஆங்கிலம் அன்னிய மொழி, ஆகவே ஆங்கிலம் ஆகாது' என்று
Read 6 tweets
2 Sep
#Thread இன்றைய அரசியல் நிகழ்வுகளுக்கு மிக கச்சிதமாக பொருந்தக்கூடிய பேரறிஞர் அண்ணாவின்
“குடியாட்சி கோமான்”

தன்னம்பிக்கை கொள்வது என்பது ஒன்று.
தன்னை மிஞ்சக் கூடியவர்கள் எவரும் இல்லை என்ற எண்ணம் கொள்வது முற்றிலும் வேறு.
1/n
தன்னை மிஞ்சக் கூடியவர்கள் இல்லை என்ற எண்ணம் கொண்டு மெய் மறந்து இருக்கும் நிலை, ஒருவிதமான மதமதப்பை உண்டாக்கிவிடும் .
குடியாட்சிக் கோமான்கள் இதனை நன்கு உணர்ந்து, தமது ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொண்டு விட்டனர்.
குடியாட்சி எனும் முறையை புகுத்திய விட்டால் மட்டும் போதாது, குடியாட்சி கோமான்கள் தோன்றாதபடி தோன்ற முடியாதபடி, 'பாதுகாப்பு' தேடியபடி இருந்தாக வேண்டும.
Read 10 tweets
29 Aug
திமுக ஓர் மருத்துவமனை - பேரறிஞர் அண்ணா
——————
நமக்கு வாழ்வு கிடைக்காததற்குக் காரணம் மூன்றுண்டு, ஒன்று, நம் சக்தி நமக்குத் தெரியவில்லை, இரண்டுநாம், நம் உழைப்பைத் திருடுபவர்கள் யார் என்று கண்டுபிடிக்கவில்லை, மூன்று நம்மைக் கவனிக்கவும் அக்கரைகொண்ட சர்க்கார் நமக்கில்லை, 1/n
- இவை மூன்றும் நாட்டு மக்களால் நன்கு புரிந்து கொள்ளப்பட்டால் வாழமுடியும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் நம்புகிறது.

உயிரோட்டமுடைய லட்சியத்தைக் கொண்ட தி.மு.கழகம் பெற்று வரும் முன்னேற்றத்தை, யாரும், எந்தச்சக்தியும் அழித்துவிட முடியாது.
தி.மு.கழகத்தாரிடம் நாட்டு மக்கள் கொண்டுள்ள பற்றும் பாசமும், மக்களிடம்இத்தனை செல்வாக்கும் ஏற்பட்டுள்ளதற்குக் காரணம், நாங்கள் இதுவரை எடுத்துச் சொல்லிய கருத்துக்களில் உண்மை இருப்பதாகப் பொதுமக்கள் நம்பியிருக்கிறார்கள் என்பதைத்தான் சொல்கிறது.
Read 9 tweets
29 Aug
#Thread
அண்ணாவும் - ஸ்டாலினும் .
———————————

ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும்; அமைச்சரவை ஏற்க வேண்டும் என்பதுதான் கழகத்தின் இறுதி முடிவு என்று யாரும் கருதிவிடக் கூடாது.
அதுதான் இலட்சியம் என்றால்,பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து; கொடுக்கவேண்டியவைகளைக் கொடுத்து,
அழைக்க வேண்டியவர்களை அழைத்து பதவியைப் பெற முடியாது என்பது முடியாத காரியமல்ல.
Read 21 tweets
27 Aug
#Thread

“நீங்கள் பார்க்கும், கேட்கும் மு.க.ஸ்டாலினாகிய நான், புதிதாய் பிறக்கிறேன். இது வேறு ஒரு நான்!“ இந்த குரல் கேட்டு இன்றோடு ஓராண்டு நிறைவடைகின்றது. அது என்ன குரல் ? சாமானியனுக்கான குரல் !
ஒடுக்கப்பட்டவனுக்கான குரல் !
இன மக்களுக்கான குரல் ! 1/n
அண்ணா இல்லாமல் திமுக மூழ்கும் என்று பல இன துரோகிகள் எண்ணிய போது “நான்” இருக்கேன் என்று பல “நாம்”களின் பிரதிநிதியாக தலைவர் கலைஞர் ஐம்பது ஆண்டு காலம் கழகத்தை காப்பாற்றினார்.
அதே போல் கலைஞர் இல்லாத திமுக மூழ்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்த பிண திண்ணிகளுக்கு வாயில் மண்ணை திணித்தார் மக்கள் தலைவர் “மு.க.ஸ்டாலின்” .
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!