🌺எனது சிறு கதையில் ஒன்று... உங்கள் விருப்பம் கண்டால் நன்று...🌺

🌿பாரிஜாதம்🌿 (3)

அன்று வந்த தேவகி மாமி தற்போது, எங்கள் குடும்பத்தில் ஒருத்தி ஆகிவிட்டார். புஷ்கலாவும் தற்போது நான்கு மாதம் கர்ப்பம் தரித்து விட்டாள். குழந்தை நலமாக இருப்பதாக டாக்டரும் சொல்லிவிட்டார்.
இங்கே எங்கள் அகத்தில் இப்போதும் இரண்டு குழந்தைகள்… இரண்டு அப்பாக்கள்… ஆனால் ஒரே அம்மா தான்… பெரிய குழந்தையின்,

"சுஜா" என்னும் குரலுடன், தற்போது "ஙே...ஙே..." என்ற அழுகையும் சேர்ந்து விட்டது…

என்னவருக்கும் குடும்பத்தில் பொறுப்பு மிகவும் அதிகமானது…
அப்பாவை கவனமாகப் பார்த்துக் கொள்வதிலேயே அவர் கவனம் அதிகம் இருந்தது… மாமனார் தோட்ட வேலைக்கு ஆள் போட்டுவிட்டார்.

தற்போதெல்லாம் காலை, மாலை பூஜை நேரம் மற்றும் ஸந்த்யா வந்தனம் பண்ணும் நேரம் தவிர 24 மணி நேரமும்,

”அபிராமி… தாத்தா ட்ரெஸ் போட்டு விடவா?”
”அபிராமி… உம்மாச்சி ஸேவிக்கலாமா?”

”அபிராமி… அப்பா பாரு… அப்பா பாரு… சிரி…”

”அபிராமி… என்னடா கண்ணு, எதுக்கு அழற? தாத்தா தோள்ல தூங்கறியா?”

”அபிராமி… அம்மாவை கூப்படட்டா? ராஜாத்திக்கு பசிக்கறதா? அச்சச்சோ…”

”சுஜாம்மா… குழந்தைக்கு பசிக்கறது… சித்த வந்துட்டுப் போம்மா…
நான் தூங்கப் பண்ணிக்கறேன்…”

”அபிராமிக் குட்டி… என்ன கொலுசுல சத்தம் கம்மியா இருக்கு? தாத்தா புது தண்டை வாங்கிப் போடவா?”

”அபிராமி… தாத்தா கன்னத்துல அடி… அடி… ம்மா சொல்லு… தாத்தா சொல்லு…”

”அபிராமி… என்னடா ராஜாத்தி, ஏன் அழற? தொப்பை வலிக்கறதா??”
”டேய் வெங்கடேஸா…. சுஜாவைக் கூப்பிடுடா இல்லை தேவகி மாமியைக் கூப்பிடு… அபிராமி அழறாடா… வெங்கடேஸா… சுஜா…”

”இதோ அம்மா வந்துட்டாடா… நான் போய் வசம்பு தட்டி தேனோட எடுத்துண்டு வரேன்… அம்மா போனதும் தாத்தா மடியில தூங்கலாம்… வந்துட்டேண்டா ராஜாத்தி…”
”ஜோ… ஜோ… ஜோ… உன் பாட்டி போல எனக்குப் பாட்டுப் பாடத் தெரியலையேடி கண்ணம்மா… இப்படி அபிராமியே வந்து பொறப்பான்னு தெரிஞ்சிருந்தா பாடக் கத்துண்டிருப்பேனேடி தாத்தா என் ராஜாத்திக்காக…”

”அபிராமி குட்டி தூங்கும்மா… தாத்தா ஆட்டறேன்… ஜோ… ஜோ… ஜோ…”

"அபிராமி, அபிராமி…" என்று
குழந்தையுடனேயே போகிறது அவர் காலம்.

அவரது சாப்பாடெல்லாம் இப்போது பெயருக்கு மட்டுமே வயிற்றுக்குள் இறங்குகிறது. இவளும் தாத்தாவின் கைசூடு நன்கு கண்டு கொண்டாள்…. என்னிடம் கூட வருவதில்லை…

இவளுக்கும் தூளி எப்போதும் தாத்தாவின் தோளும், நெஞ்சும், மடியும் தான்….
அவர் குழந்தையைக் கொஞ்சும் அழகையும், அவளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பையும் பார்க்கும் போதெல்லாம் இன்றும் அவர் தன் மனைவி மேல் எத்தனைக் கொள்ளை அன்பு வைத்திருக்கிறார் என்பது என் கண்ணுக்குத் தெரிகிறது…

அவ்வப்போது எனக்கு விழிநீர் முட்டுகையில் எல்லாம்,
"சுஜா, அபிராமி உன் மாமியாரில்லையா? அவ முன்ன அழலாமா? அழாதே… அவளுக்குப் பிடிக்காது…"

என்று கூறி, மாமியார் அபிராமியின் நினைவில், அவர் நீர் சிந்துவார் விழியில்.

** "இந்தப் பாசம், உறவு, சந்தோஷம், ஆத்மத்ருப்தி… எல்லாம்…
கூட்டுக் குடும்பத்தில் விட்டுக் கொடுத்து…
உண்மை அன்புடன் வாழ்ந்தால்… எல்லார் இல்லத்திலும் நிதர்சனம்..." **

குரல் கேட்பது போலப் பட்டதும், சட்டென நிமிர்ந்து பார்த்தேன்… மாமியார் சுவற்றில் படமாய்த் தொங்கிச் சிரித்தபடி என்னிடம் கூறுகிறார்...

🍃அன்பின் அரவணைப்புடன்…🍃

🍁வாஸவி நாராயணன் 🍁
நண்பர்களே... ஒரு சிறு கதை... என்னுடைய 21 வது வயதில் எழுதியது... சிறிது மேம்படுத்தி பதிந்துள்ளேன். தற்போதையது அதிகம்...

இதன் நடை, சாயல் யாருடையதையாவது காட்டுகிறதா, இல்லை வேறு கருத்துக்கள்... குறை, நிறை எதுவாகினும் பதிவிடுங்கள்.

எழுத்தின் தரத்தை மேம்படுத்திக்கொள்ள உதவும்...

🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Vasavi Narayanan

Vasavi Narayanan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VasaviNarayanan

8 Oct
சிவ தாண்டவம்…

(காரைக்கால் அம்மையார் திருவாலங்காட்டில் ஈசன் அம்மையின் திருநடனம் காண வருவார். அங்கு ஈசனைப் பார்த்து கீழ்க்கண்ட பாடல் பாடுவதாக திரைப்படத்தில் வரும்.

அதில் 5 சந்தங்களை ஒன்றினைத்து இசையைமைத்து எழுதியிருப்பர். அதன் அடிப்படையில் எழுதப்பட்டதே எனது இந்த சிவதாண்டவம். Image
திரைப்பாடல்

"தக தக தக ....தக தகவென ஆடவா....
சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா....")

சிவதாண்டவம்

தொகையறா
**************
ஆடுங்கால் கண்டுச் சந்தமெடுத்து உனது
புகழ்க்கவி பாடவந்தேன் ஈஸ்வரனே!

ஆடுங்கால் கண்டுச் சந்தமெடுத்து உனது
புகழ்க்கவி பாடவந்தேன் ஈஸ்வரனே!
பாடும்நா வினிக்க வரிதருவாய் – இறைவா
நிம்சக்தியுடன் தருமாட்டத்துக் கேற்றபடி!

நிம்சக்தியுடன் தருமாட்டத்துக் கேற்றபடி!!

பல்லவி
*********

தக ஜூனு தரி கிட தக திமி தாளமே
நின் அம்மையோடு ஆடுஞ்சதிர் ஆட்டமே!

தக ஜூனு தரி கிட தக திமி தாளமே
நின் அம்மை யோடு ஆடுஞ்சதிர் ஆட்டமே!
Read 13 tweets
7 Oct
Ji... what u say s right. Sound could be represented in any form. But there are also some sound, which can't be written in any form... Ex : We're writing the sound of OM/AUM like this. But the real one is a pure vibration, which creates to feel such sound.
This I will say stubbornly only bcz I experienced it. Our writing of om can't at all come near that.

Next, u know that in the beginning there were only manthras, shlokas and sound vibrations of many types in sanskrit. I told you it is named as Shravya... language of sounds.
It got passed to lakhs of years by teaching only through oral/vocal. There was no scripts. Bcz, some sounds can't be written anyhow...

But Tamizh is named as Dhrushyaa... language of seeing; i.e., which we can speak at the same time learn through writing and seeing that.
Read 15 tweets
6 Oct
🌺எனது சிறு கதையில் ஒன்று... உங்கள் விருப்பம் கண்டால் நன்று...🌺

🌿பாரிஜாதம்🌿 (2)

“அவள் கருப்பை உனக்குப் பொருந்துமாம்… என்னுடையது பெண் வாரிசுங்கறதால, அவளுக்குப் பொருந்துமாம்…

அவளுக்கு இதனால பிற்காலத்துல உறவிலயோ, பிள்ளைப் பேற்றுலயோ ப்ரச்சனையே வராதுன்னு
டாக்டர் திட்டவட்டமாச் சொல்லிட்டார் எங்களாண்ட…”

“அம்மா… அவ படிக்கற குழந்தை… இன்னும் ஒரு செமஸ்டர் தான் இருக்கு அவளுக்கு… இந்த நேரத்துல பாடம் போயிடும்… அவ வாழ்க்கையே போயிடும்மா படிப்பு போனாக்கா… வேணாம்மா ப்ளீஸ்…”

“அடி அசடு… இத்தனை யோசிச்சவ அதை யோசிக்க மாட்டேனா??
அவளோட காலேஜ் சேர்மேனப் பார்த்து, நானே விஷயத்தைச் சொல்லிட்டேன். ’அப்படி இருந்தாக்கா எப்போ வேணா இவளை ஆபரேஷனுக்கு அழைச்சுண்டு போகணும்’னு… அவரும்,

“கவலைப் படாதீங்கோ… யாரும் செய்யத் துணியாததை தைரியாமாச் செய்யறேள்… என் ஸ்டூடண்ட்டும் இதுக்கு முழுசா ஒத்துழைக்கறாங்கறப்போ,
Read 19 tweets
5 Oct
🌺எனது சிறு கதையில் ஒன்று... உங்கள் விருப்பம் கண்டால் நன்று...🌺

🌿பாரிஜாதம்....🌿

மெல்லிய மார்கழிக் குளிர் ஓஸோனை நன்கு கீழே இறக்கி விட்டிருந்தது…. வாசல் பெருக்கிச் சானம் தெளிப்பதற்குள் பனித்துளிகள் படர்ந்து ஆடை அணைத்தன….
"பயித்தமாவும், சிகைக்காய் வாசமும், ஜொலிக்கும் மஞ்சளும் உனையும் ஈர்த்ததோ?"

மெல்லிய உதட்டுப் படரலுடன் அதை எண்ணிக்கொண்டே கோலமிட்டேன். லேசான தொண்டைக் கனைப்புக் கேட்டது. வந்துவிட்டார் என்னவர் தின்னையில், கையில் செய்தித்தாளுடன்...
நமுட்டுச் சிரிப்புடன் விரைந்து கூடம் நுழைந்து, கையலம்பியதும் அடுக்களையில் புகுந்துவிட்டேன். அகல் விளக்கை முதலில் இறையடியில் ஏற்றி, அதிலிருந்து தீபமெடுத்துக் கொடுத்ததும், நன்கு பற்றியது விறகடுப்பு.

நாசி துளைக்கும் காஃபிப் பொடியிட்டு, வெந்நீர் ஊற்றினேன். அவர் கையில் நீட்டும் வரை,
Read 24 tweets
4 Oct
🌺பல நோய்களை தீர்க்கும் துளசி🌺

'துளசி இலை நல்லது அதை சாப்பிட்டா சளிப் போயிடும்' என்பது மட்டும்தான் நமக்கு தெரியும். ஆனால் துளசி, கட்டுப்படுத்தும் நோய்களின் எண்ணிக்கை ஓராயிரம்.

அதனால் தான் இதனை ‘மூலிகைகளின் அரசி’ என்கிறார்கள்.
நோய் வருமுன் காத்து, வந்த நோயை விரட்டி, எதிர்காலத்திலும் நோய் வராத அளவுக்கு எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும் அற்புத ஆற்றல் வாய்ந்தது.

நாம் நினைப்பது போல நோய் நிவாரணி மட்டுமல்ல. சுற்றுச்சூழலிலும் இதன் பங்கு மகத்தானது. காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடை கிரகித்து ஆக்சிஜனாக வெளியேற்றும்
அற்புத பணியை செய்கிறது. இந்த பணியை பெரும்பாலான தாவரங்கள் செய்தாலும், துளசிக்கும் மற்ற தாவரங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

துளசியிலுள்ள மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களால் வளிமண்டலத்திலுள்ள புகைக் கிருமிகள் போன்ற மாசுக்கள் சுத்திகரிக்கப்படுகின்றன.
Read 22 tweets
2 Oct
🌺மெட்ராஸ் பீச்சில் இன்று மாலை தர்ணா....🌺

#நாட்டுமக்களுக்கோர்எச்சரிக்கை...

அஸ்வினி குமாரர்களான நகுலன், சஹதேவன் இருவரும் வானில் பேசிக்கொண்டே உலவுகையில், நகுலன் பூமியில் எதையோ உற்றுப் பார்த்தான். இதைக் கண்ட சஹதேவன் என்னென்று விசாரிக்க, நகுலன்....
“தம்பி... புவியில் ஜம்புத்வீபத்தில், நாம் வாழ்ந்த பரத கண்டத்தின் தெற்குத் திசை இறுதியில் இருக்கும் சிறு பகுதியில் ஓரிடத்தில் பெரிய கூட்டம்... அதைத்தான் பார்க்கிறேன்... வா... நாமும் சென்று என்னவென்று பார்க்கலாம்...” என்றான்.

அது அடையாறு ஏரியா... அங்கே ஒரு வனப்பகுதி...
அதிசயமாக, அதிக மனிதர்களின்றி இருக்கிறது. அங்கே ஆயிரக்கணக்கான நாய்களின் கூட்டம்... அவற்றின் தலைவர் ஒரு பெரிய கல்லில் ஏறி நின்று பேசிக் கொண்டிருக்கிறார்.

அருகில் ஏரியா தலைவர்களும், எதிரில் தொண்டர்களும். சஹதேவனுக்கு அவற்றின் பேச்சை நகுலன் அப்படியே மொழிபெயர்ப்பு செய்கிறான்...
Read 27 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!