Sriram V Profile picture
27 Oct, 20 tweets, 4 min read
மநுதர்ம சாஸ்திரம் பற்றியும் பெண் அடிமைத்தனம் பற்றியும் வாய்கிழியப் பேசும் திராவிட/தனித்தமிழ்நாடு டுமீல் இயக்கங்களின் யோக்கியதையைச் சற்றுச் சிந்திப்போம்.
1/
ஈவெரா, தன் மனைவி நாகம்மையார் கோவிலுக்குச் செல்வதைத் தடுப்பது எப்படி என்று பகுத்தறிவு கொண்டு சிந்தித்துச் சில குண்டர்களை அழைத்தான். "நம் ஊருக்கு ஒரு புது தேவரடியாள் வந்திருக்கிறாள்" என்று தன் மனைவியை அவர்களிடம் கைகாட்டினான். அவர்கள் கோவிலுக்குப் போய்க் கொண்டிருந்த அம்மையாரைக்
2/
கடுமையாகக் கிண்டல் செய்தனர். அம்மையார் கூனிக்குறுகி ஓடிவிட்டார்.

ஈவெரா பெண்களை மதித்த லட்சணம் இதுதான்.

அவன் கண்ணகியைத் "தேவிடியா" என்று ஏசியவன்.

அதாவது, இவர்களே கண்ணகியைப் பழிப்பர்; இவர்களே "பூம்புகார்" படம் எடுப்பர்; 'சிலம்பொலி' என்று அடைமொழியும் போட்டுக்கொள்வர்.
3/
"திரு நேரு - திருமதி பண்டாரநாயகே சந்திப்பில் அவர்கள் என்ன பேசிக் கொண்டிருப்பார்கள்?" - உடன்பிறப்பின் கேள்வி.

'அறிஞர்' அண்ணாதுரை பதில்:

"அவரோ மனைவியை இழந்தவர்; இவரோ கணவரை இழந்தவர். இருவரும் என்ன பேசியிருப்பார்கள்?!"

அறிஞர்! அண்ணா!
4/
சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ திருமதி அனந்தநாயகி, "திராவிட நாடு எங்கே?" என்றதும், முதல்வர் கருணாநிதி சொன்ன சிலிர்க்கவைக்கும் பதில்:

"நாடாவை அவிழ்த்து, பாவாடையைத் தூக்கிப் பார்த்தால் திராவிட நாடு தெரியும்."

இவர் முத்தமிழ் அறிஞர்! கலைஞர்! பெண்மானக் காவலர்!
5/
மதுரை விமான நிலையத்தில் திருமதி இந்திரா காந்தி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திவிட்டு, "மாதவிடாய்" என்று, வழியும் இரத்தத்தைக் கேலி செய்தவர் - அவர் 'தமிழினத் தலைவர்'!
6/
"வனவாசம்" நூலில் கண்ணதாசன், திராவிட இயக்கத் தலைவர்களின் ஒழுக்கக் கேடு பற்றிப் பேசுகிறார்.

அவரும், ஒரு 'தலைவரும்' ஒரு குடிசை வீட்டுக்குச் சென்று தப்பான செயல் புரிந்தனராம். அந்தத் தலைவர் அந்தப் பெண்ணிடமிருந்தே பணம் பறித்து வந்தாராம்.

யார் 'முக'ம் நினைவுக்கு வருகிறது??
7/
திமுக தலைவர்கள் உரையாற்ற வரும்வரை தொண்டர்களைக் குதூகலமாக வைக்கவேண்டும் என்று குத்தாட்டம் நடத்துவர்.

அந்த ஆட்டம் பெண்ணினத்திற்குப் பெருமதிப்பு, இல்லையா?!
8/
மேடையில் வெற்றிகொண்டானும் தீப்பொறி ஆறுமுகமும் பேசும் பேச்சு அருவருப்பு!

இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வதற்காக:

தீ.ஆறுமுகம்: "அந்த அம்மா ஒன்றுக்கு இருக்கும் போது..."
(சோடா குடித்து)

"ஆங், எங்கே விட்டேன்??"

"ஒன்றுக்கு இருக்கும் இடத்துல"

எவ்வளவு கேவலமானவர்கள்!!
9/
"தந்தை, தந்தை" என்று போலிப்புகழ்ச்சி செய்து, ஈவெரா மறைந்ததும் ஈவெராவின் மனைவி மணியம்மையுடன் சேர்ந்து கட்சியையும் சொத்தையும் அபகரித்தான் கி.வீரமணி @AsiriyarKV என்று ஈவெராவின் அணுக்கத் தொண்டர் வே.ஆனைமுத்து மனம் வெதும்பிக் கடிதம் எழுதினாரே.

'தாய்'க்கு மதிப்பு இதுதானா?
10/
அம்பாசமுத்திரத்தில் வைகோ, "ஏ பேதைப் பெண்ணே, எங்கே ஓடிவிடுவாய் நீ?" என்று ஜெயலலிதாவைப் பார்த்துப் பேசியதும்,

சட்டசபையில் திமுகவினர் ஜெயலலிதாவின் சேலையை இழுத்ததும்

திராவிட இயக்கம் பெண்களை மதிக்கும் அழகுக்குச் சிறந்த உதாரணங்கள்.
11/
திருமதி தமிழிசை சௌந்தரராஜன், திருமதி நிர்மலா சீதாராமன், @gayathriraguram ஆகிய பெண்மணிகளை அவர்களது நிறம் மற்றும் சாதியைப் பேசிக் கேவலப்படுத்தியது திராவிடச் சித்தாந்தம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் காயத்ரியைச் சீண்டியது பெண்களின் மாட்சியா? அதைத் தட்டிக் கேட்டானா திருமா?
12/
சரக்கிருக்கு மிடுக்கிருக்கு என்று பேசத் தெரிந்த @thirumaofficial க்குப் பெண்களை மதிக்க மட்டும் தெரியவில்லை.

நேற்று, பஞ்சாயத்துப் பெண்தலைவரைத் தரையில் உட்காரவைத்த போது பொங்கத் தெரியவில்லை.

ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்தோன்றிய மநுதர்மம் உறுத்துகிறது!!

13/
திருமதி குஷ்பு பாஜகவில் சேர்ந்ததும் @KS_Alagiri யும் கோபண்ணாவும் "அவரை நடிகையாகத் தான் பார்த்தோம். கவர்ச்சிக்காகத் தான் கட்சியில் வைத்திருந்தோம்" என்று வாய்கூசாமல் பேசினர்.

இதுவா பெண்களை மதிக்கும் அழகு? இவர்களா காமராஜர் ஆட்சியைத் தரக்கூடியவர்கள்?

14/
சரி, இப்படிப்பட்ட "சரக்கு மிடுக்கு" சாக்கடையில் உழலும் @thirumaofficial ஐ "அரிமா" என்று ஏத்தும் வைரமுத்துவின் யோக்கியதை என்ன?
15/
விடிகாலை விண் அழகு; விடியும் வரை பெண் அழகு.

சோனா சோனா உன் அங்கம் தங்கம் தானா

அங்கம் சொந்தமானால் தங்கம் தேவையில்லை

உன் போலச் சிவப்பு இல்லை; கணுக்கால் கூடக் கருப்பு இல்லை

மச்சினியே மச்ச மச்சினியே

என்றெல்லாம் பெண்மையைப் 'போற்றியவர்' தானே @Vairamuthu ?

16/
ஆண்டாள் தாயார் பற்றிய இவனது கட்டுரை சொல்லும் இவனது தராதரத்தை.

17/
"ஜெயின் டைரி" என்ற பெயரில் ஜெயலலிதா பற்றி இல்லாததும் பொல்லாததும் எழுதிய "நக்கீரன்" பத்திரிக்கை,

"மிஸ்டர் மியாவ்" என்ற பகுதியில் நடிகைகளின் ஆபாசப் படத்தைப் போட்ட ஜூனியர் விகடன் @JuniorVikatan பத்திரிக்கை,

அதன் முதலாளி ஆனந்த விகடன் @AnandaVikatan குழுமம்..

இவர்கள் எல்லாம்..
18/
..திருமாவை ஆதரித்து நீட்டி முழக்குவார்கள். பெண்களின் கண்ணியம் காப்பது பற்றி இந்த அயோக்கியர்கள் அனைவரும் பேசுவது எல்லாம் நகைமுரண்.

பெண்ணைத் தாயாகப் பார்ப்பது எல்லாம் இருக்கட்டும்.. அவளைச் சகமனிதராகக் கூடப் பார்க்க முடியாத வீணர்கள் - வெறும் வாய்ச்சொல் வீரர்கள் இவர்கள்.
19/
இவர்களை எல்லாம், பாரதி சொன்னது போல்,

மோதி மிதித்துவிடு பாப்பா - அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.

பொம்பளைய மதிக்க வேணும் முறைப்படி..
நீ போகாத இடம் போனா செருப்படி.

20/

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sriram V

Sriram V Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @_VSriram

17 Mar
நமது பாராளுமன்ற மாநிலங்களவைக்கு முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு. ரஞ்ஜன் கோகோய் (ஜனாதிபதி திரு. ராம்நாத் கோவிந்த் அவர்களால்) நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த சர்ச்சை சரியானதா?+
முதலில், மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் முறைகளைப் பார்ப்போம்.

மாநிலங்களவையின் மொத்த இடங்கள்: 245

இதில், மாநில, யூனியன் பிரதேச சட்டமன்றங்கள் தேர்ந்தெடுத்து அனுப்புவது: 233

ஜனாதிபதி நியமிப்பது: 12
+
சரி, ஜனாதிபதி நியமன உறுப்பினர்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர்?

கலை, இலக்கியம், சமூக சேவை, நிர்வாகம், விஞ்ஞானம், விளையாட்டு, பொருளாதாரம், சட்டம் - இவை போன்ற துறைகளில் சாதனை செய்தவர்கள், பெரும் அனுபவம் பெற்றவர்கள் ஆகியோர். +
Read 9 tweets
10 Feb
#செவ்வேள்
#தமிழ்க்கடவுள்
#முருகன்

"முருகப்பெருமான் ஆரிய ஆகமங்களுக்கு உட்படாத அழகு; தமிழர்களின் முருகன் கருப்பு நிறம்" என்றெல்லாம் சிலர் பிதற்றுகிறார்களே;

உண்மையில், சமஸ்கிருத, தமிழ் இலக்கியங்களில் முருகப்பெருமானின் நிறம் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது எது?+
முருகன் "செவ்வேள்" என்று தமிழ் இலக்கியங்களில் குறிக்கப்படுகிறார்.

செவ்வேள் = செம்மை நிறம் பொருந்தியவர்!

சங்க இலக்கியமான பரிபாடல்,

"மூவிரு கயந்தலை, முந்நான்கு முழவுத்தோள், ஞாயிற்று ஏர் நிறத் தகை.. செவ்வேள்"

என்று பாடுகிறது

அதாவது,உதிக்கின்ற செங்கதிர் நிறம் கொண்ட செவ்வேள்!+
கந்தபுராணம் சொல்வது:
"செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க"

அவனது கையும் சிவந்த நிறம் என்னும் திருப்புகழ்:
"செங்கை வேல் வென்றிவேல்"

அவனது பாதம் சிவப்பு என்னும் திருப்புகழ்:
"கோல ப்ரவாள பாதத்தில்" (அதாவது, முருகனின் சிவந்த பாதத்தில்)+
Read 8 tweets
31 Jan
திருஞானசம்பந்தர் பெருமான் திருக்கல்லூர்ப்பெருமணம் திருக்கோவிலில், தம் திருமண நாளன்று, இறைவனின் ஜோதியில் கலந்தார்.

இதைக் கொச்சைப்படுத்தும் விதமாக "அவரைத் தமிழ் எதிரிகள் எரித்துக் கொன்றனர்" என்று வாதிடுவது எவ்வளவு மூடத்தனம் என்று பார்ப்போம்.+
பாண்டிய அரசி மங்கையர்க்கரசியார் மற்றும் அமைச்சர் குலச்சிறையார் இருவரின் வேண்டுகோளை ஏற்றுப் பாண்டிய மண்ணில் சைவம் தழைக்க மதுரை வந்து சேர்ந்தார் சம்பந்தர்.

மதுரை சைவ மடத்தில், தம் பரிவாரத்துடன் தங்கியிருந்தார்.

அவரை அழிக்கச் சமணர்கள் மடத்திற்குத் தீ வைத்தனர்.+
இதற்கு, சமணராக மாறியிருந்த மன்னன் கூன் பாண்டியன் அரிகேசரி மாறவர்மன் உடந்தை.

உடனே சம்பந்தர், "பொய்யராம் அமணர் கொளுவுஞ் சுடர் பையவே சென்று பாண்டியற்கு ஆகவே" என்று பதிகம் பாடினார்.

இதுவே பாண்டிய மன்னன் உடம்பை நோயாகப் பற்றியது. +
Read 8 tweets
31 Jan
"தேவார மூவர் முதலிகள் , பிராமணர்களின் வேள்வி முறைகளை ஏற்கவில்லை" என்ற கூற்று மிக மிகப் பொய்யானது.

1) வேதத்தையும் வேள்விகளையும் சிறப்பித்தனர்
2) வேத நிந்தனை செய்தோரைக் கண்டித்தனர்.

சில எடுத்துக்காட்டுகள்.+
திருஞானசம்பந்தர் பெருமான், தான் கௌடின்ய கோத்திரத்தைச் சேர்ந்தவன் (கவுணியன்) என்று பலப்பல தேவாரப் பாடல்களில் உரைக்கிறார்.

வேள்விகள் பற்றிய சம்பந்தர் பிரான் பாடற்குறிப்புகளில் சிலக் கற்கண்டுச் சிதறல்கள்:

"வேத வேள்வியை நிந்தனை செய்து உழல் ஆதமில்லி அமணொடு தேரரை"+
"வைதிகத்தின் வழியொழுகாத அக் கைத்தவமுடைக் காரமண் தேரர்" (வைதிகத்தின் படி ஒழுகாத புத்தமத்தினரைக் கடிதல்)

"வேட்டு வேள்வி செயும் பொருளை விளிமூட்டு சிந்தை முருட்ட மண் குண்டர்"

"அழல் அது ஓம்பும் அருமறையோர் திறம் விழல் அது என்னும் அருகர்" (அழல் = அக்னி)

"வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்"+
Read 15 tweets
29 Jan
திருநாவுக்கரசர் தேவாரத்தில் "தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்" என்று வருகிறதே; அப்படியானால் அவர் சமஸ்கிருதத்தை மறுக்கிறார் என்றா பொருள்?

அது போல், நான்மறை என்று தேவாரம் குறிப்பிடுவது அறம் பொருள் இன்பம் வீடுபேறா?

தமிழகச் சிவனும் "வடகத்திய சிவனும்" வெவ்வேறானவர்களா?+
முதலில் "தமிழோடு இசைபபாடல்" பற்றி.

இது எப்போது பாடப்பட்டது?

அப்பர் பிரான் சமண சமயம் தழுவி யிருந்தார். கடும் சூலை நோயால் (வயிறு வலி) அவதிப்பட்டார். சிவபெருமானை நோக்கிக் "கூற்றாயினவாறு" என்ற பதிகம் பாடினார்.

இதுவே, காலவரிசைப்படி முதன்முதல் தேவாரப் பாடல் ஆகும்.+
அந்தப் பாடலில் அவர் சொல்கிறார்:
"என்ன தான் சமணமதம் மாறி அத்தி-நாத்திக் கொள்கை பேசினாலும் நான் உன்னை பூசிக்கும் முறையை மறக்கவில்லை."

சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்; தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்;
.. உன் நாமம் என்நாவில் மறந்தறியேன்

அப்பர் சொன்ன "தமிழோடு இசைபாடல்" சூழ்நிலை இதுவே+
Read 13 tweets
27 Jan
#ஆகமம்
#சைவம்

சில காலமாகச் சிலர் இவ்வாறெல்லாம் சொல்லி வருகிறார்கள்:

"சைவம் வேறு, சனாதன தர்மம் வேறு.

வேதத்துக்கும் சைவத்துக்கும் தொடர்பு இல்லை.

குடமுழுக்கு தமிழில் தான் நடத்தப்பட வேண்டும்.

சமஸ்கிருதம் எதற்கு?"

இவற்றில் உண்மையோ சைவம் சம்பந்தப் பட்ட விஷய அறிவோ இல்லை.+
முதலில் - சைவம், வை(ஷ்)ணவம், சாக்தம், கௌமாரம் முதலிய பெயர்கள் சமஸ்கிருதம் தான்.

சரி, தமிழ்ச் சைவ முதல்வர்கள் யார்? சைவ சமயக் குரவர்கள் நால்வர். அவர்கள் பாடல்களில் மேலோட்டமான பரிச்சயம் இருந்தாலும் மேற்கண்ட கூற்றுகள் தவிடுபொடி ஆகிவிடும்.+
திருஞானசம்பந்தர் தேவாரம் எங்கணும் வேதம், வேள்விகள், அந்தணர் சிறப்புகள் விரவியுள்ளன.

எ.கா:

"அருநெறிய மறைவல்ல முனி" (அதாவது, சிவபெருமான் அரிய வேதங்களில் வல்லவர்)

"வேதத்தில் உள்ளது நீறு"

"வேத வேள்வியை நிந்தனை செய்து உழல் ஆதமில்லி அமணொடு தேரரை வாதில் வென்றழிக்கத் திருவுள்ளமே"+
Read 32 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!