இப்போதான் ரஜினியின் முழு ப்ரஸ்மீட் பார்த்தேன்!

1. நேற்று வரை பாஜகவில் இருந்த பொறுப்பாளரைக் காட்டி, இவர் எனக்குக் கிடைத்தது எனது பாக்கியம் என்கிறார் ரஜினி.

2. தங்கள் கட்சியை விட்டு வேறு கட்சிக்கு செல்லும் அறிவுசார் அணியின் பொறுப்பாளரை பாஜக மனமகிழ்வோடு வாழ்த்தி வழியனுப்புகிறது.
3. அதிமுகவுடன் தேர்தல் கூட்டணியை அறிவித்து விட்டு, ரஜினியின் அரசியல் அறிவிப்பை பாஜகவின் அத்தனைத் தலைவர்களும், “ஸ்வீட் எடு! கொண்டாடு!” என்கின்றனர்.

4. “ஆட்சி மாற்றம்” காலத்தின் கட்டாயம் என்ற ரஜினியை முழு மனதோட வாழ்த்துகிறேன் என்கிறார் ஆளும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்.
5. அதிமுக, பாஜக ஆதரவு வேடம் அணிந்திருந்த ஊடக நடுநிலைகள்
ரஜினி டிபி மாத்திகிட்டாங்க.

6. அதிமுகவின் தலைவர்கள் தனக்கான சந்தர்ப்பம்
எதுவென தெரியும்வரை மயான அமைதி காக்கின்றனர்.

7. ரஜினி அரசியல் பிரவேசம் செய்திகள் வரும் போதெல்லாம் துடித்துப் போய் கொதித்தெழும் சீமானைக் காணோம்!
முற்றிலும் முரண்பாடுகளாகவே இருக்கும் இந்த அரசியல் சூழலில்,
வழக்கம்போல இணையத்தில் திராவிட இயக்க ஆதரவாளர்கள் மட்டும் கோபம், கேலி, கிண்டல், கொதிப்பு என நவரசங்களையும் காட்டி களமாடுகின்றனர். தேவையே இல்லாத ஆணி எனினும், இது மட்டும்தான் இயல்பா தெரியுது.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SKP KARUNA

SKP KARUNA Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @skpkaruna

6 Nov
7.5% for Aided schools : My opinion.
அரசு உதவி பெறும் பள்ளிகள் (Aided schools) எனப்படும் இவைகள் தனியார் கல்வி அறக்கட்டளைகள், வணிகர் சங்கங்கள், ஹிந்து அமைப்புகள், முஸ்லீம் ஜமாத்கள், கிருத்துவ மிஷினரிகள் போன்றவைகளால் துவக்கப்பட்டு நடத்தப்படுபவை.
1. இங்கு ஆசிரியர்கள் நியமனம்
அறக்கட்டளைகளால் நியமிக்கப்படுவர். சம்பளம் அரசு தரும். இந்த ஆசிரியர் நியமனங்கள்தான் அறக்கட்டளையின் ஜாக்பாட். ஒரு ஆசிரியர் பணி ஓய்வு பெற்ற பிறகுதான் காலி இடம் நிரப்பப்படும் என்பதால் பெரும் போட்டியே அதற்கு நடக்கும். எனக்குத் தெரிந்து ஓய்வு பெற இரண்டு ஆண்டுகள் மீதமிருந்த ஒருவருக்கு
இரண்டு ஆண்டு சம்பளத்தை முன்கூட்டியே தந்து விருப்ப ஓய்வில் அனுப்பிவிட்டு அந்த இடத்தை அறக்கட்டளை செகரட்டரி தனது மகளுக்கு தந்த கதையெல்லாம் உண்டு. பல லட்சங்கள் (30 லட்சம்) கொடுத்து பணிக்கு வந்த ஆசியரின் தரமும், நோக்கமும் எப்படி இருக்கும் என்பது உங்கள் யூகத்துக்கு.,
2. மாணவர் சேர்க்கை
Read 15 tweets
23 Oct
#thread
ஆளுநர் என்பருக்கான உரிமை என்ன? தேவை என்ன?
அரசியலமைப்புச் சட்டத்தின் படி மாநில அரசின் தலைமை ஆளுநரும், மத்திய அரசின் தலைமை குடியரசுத் தலைவரும் ஆவார்கள். இது பிரிட்டிஷ் அரசின் கவர்னர் ஜெனரல், அவர் பிரதிநிதியான மாகாண மாகாண ஆளுநர் எனும் முறையின் நீட்சி. இந்தியா குடியரசாக ஆன
பிறகு இந்தப் பதவிகள் ஜனாதிபதி, ஆளுநர் என அலங்காரப் பதவியாக ஆகிவிட்டன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எடுக்கும் முடிவுகளுக்கான அரசாணையை, சட்டத்தை அங்கீகரிக்கும் வேலை இவர்களுடையது. இது போக பெரும்பான்மையை முடிவு செய்வது, ஆட்சியமைக்க அழைப்பது போன்ற தேர்தல் முடிவுகளும் இவர்களிடம்
உண்டு. அரசால் வெளியிடப்படும் எந்தவொரு ஆணையும், சட்டமும், ஏன் டெண்டரும் கூட "ஆளுநரின் பேரில்" என்றே வெளிவரும். அதுவும் ஒரு சம்பிரதாயம்தான். சரி! இப்போது சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள "அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5%
Read 8 tweets
14 Oct
வரி விதிப்பின் அடிப்படை குறித்த ஒரு திரி இது.,
வரிகளின் (Taxation) வகைகள்.,
சொத்து வரி : இது உள்ளாட்சிக்கு சொத்து வைத்திருப்பவர்கள் செலுத்த வேண்டிய வரி.
வாகன வரி : வாகனங்கள் சாலையைப் பயன்படுத்த செலுத்த வேண்டிய வரி.
எக்சைஸ் வரி : ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் செலுத்தும் வரி.
வருமான வரி : தனிநபர், நிறுவனங்களின் ஆண்டு வருமானத்துக்கான வரி.,
கலால் வரி : மதுபான உற்பத்தி, வியாபாரத்துக்கான வரி.
ஜி.எஸ்.டி : இது பொருட்களின் உற்பத்தி, விற்பனை, சர்வீஸ்களுக்கான வரி.,
இவை போக professional tax, capital gain tax, gift tax, entertainment tax, library tax, நில வரி,
ஆயத்தீர்வை வரி, என நம்மைச் சுற்றி வரிக் குதிரைகள் போல வரிகள் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. (பிச்சைக்காரர்கள் மட்டும்தான் இதுவரை எஸ்கேப் ஆனவர்கள். விரைவில் அவர்களையும் நிர்மலா மேடம் வரி வலைக்குள் கொண்டு வருவார் என நம்புவோம்.)
சரி! இன்றைக்கு சூப்பர் ஸ்டார் விலக்கு கேட்ட
Read 9 tweets
25 Sep
#SPbalasubramanyam
அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவுக்கு வருகிறார்! ஒபாமா என நினைவு. குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்து. அதற்கு அழைக்கப்பட்ட எஸ்பிபியை நமது குடியரசுத்தலைவர் அமெரிக்க ஜனாதிபதிக்கு அறிமுகப்படுத்துகிறார்..
“இவர் எஸ்பிபி., எங்க நாட்டின் புகழ் வாய்ந்த பாடகர்.,
35000 பாடல்கள் பாடியிருக்கார்”
அமெரிக்க பிரசிடெண்ட் தலையாட்டி கை குலுக்கிட்டு நகர்ந்து விடுகிறார். பிறகு நடந்தது எஸ்பிபி இப்படி சொன்னார்..,
“அந்த அறிமுகத்தின் பிறகு, பிரசிடெண்ட் யாரையோ தேடிக் கொண்டே இருந்ததைப் பார்த்தேன்., என் பக்கம் வரும்போதெல்லாம் நான் விலகிக் கொண்டே இருந்தேன்.
இறுதியாக என்னை அவர் தோள் பிடித்து நிறுத்திவிட்டார். என்னைத்தான் தேடினார் என்பதையே அப்போதுதான் நான் உணர்ந்தேன். என் கையில் இருந்த காலிக் கோப்பையை எங்கே வைப்பது என தடுமாறிய அந்தக் கணத்தில் அவரே அதை வாங்கி, அருகிருந்த ஒரு டிரேயில் வைத்து விட்டு, Mister Singer! Is that true?
Read 6 tweets
19 Sep
Post Covid Care : thread.,
உயர் பொறுப்பில் உள்ள ஓர் அரசு மருத்துவரிடம் நேற்று பேசினேன். நுரையீரல் துறை நிபுணர் அவர். அவர் சொன்ன சில எச்சரிக்கைகளை இங்கே பகிர்கிறேன்.
1. முதலில் நமது சுகாதாரத் துறைச் செயலாளர் பெண்மணி குறிப்பிட்டதைப் போல கோவிட் வைரஸ் ஒரு எளிய ஃப்ளூ ஜுரம் அல்ல.
2. மிக வேகமாக தனது தன்மையை மாற்றிக் கொள்ளும் வகையாக உள்ளது. எனவே, தடுப்பூசி வந்தாலும் அதிலும் எல்லோருக்குமான நிரந்தர தீர்வாக அமையுமா என்பது ஐயமே!
3. ஒரு முறை கரோனா பாசிட்டிவ் வந்து குணமாகி கரோனா நெகட்டிவ் ஆனவுடன், அந்த நோய் 'முற்றிலுமாக' நீங்கி, இனி அபாயமில்லை என பொருள் அல்ல.
4. கரோனா வைரஸ் விலகும்போது சிலருக்கு அவரவர் உடல்தன்மையை வைத்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திச் செல்கின்றன. இதை கவனித்து முன்கூட்டியே கண்டுபிடிக்க நம்மிடம் வழிமுறையும் இல்லை. அதற்கான வசதிகளும் இல்லை.
5. கடந்த வாரத்தில் அவரிடம் வந்த நுரையீரல் தொற்று கேஸ்களில் 7ல் 5 கரோனா குணம்
Read 5 tweets
8 Sep
ஆன்லைன் வகுப்பு : துவக்கத்தில் இது புதிய முறையாக இருந்ததால், ஆசிரியர்கள், மாணவர்கள் இருவருமே சுவாரஸ்யமாக பங்கெடுத்தனர். சில நாட்களிலேயே, லாக் இன் பண்ணிட்டு டிவிட்டர்லே குடும்பம் நடத்தும் டெக்னிக் போல சிலதை மாணவர்களுக்கும் கத்துகிட்டாங்க. அதை முறியடிக்கும் விதமாக ஆசிரியர்கள்
ஸ்பாட் கேள்விகள், உடனடி பதில்கள் என புதிய யுத்தியை கையாண்டனர். இப்படியான திருடன் - போலீஸ் விளையாட்டின் போதுதான், முதல்வரின் அந்த ‘ஆல் பாஸ்’ அறிவிப்பு வந்து மாணவர்கள் வாயில் ஐஸ்கிரீமாகவும், ஆசிரியர்கள் தலையில் கேஸ் சிலிண்டர் விலையாகவும் வந்து இறங்கியது. அந்தக் கணம் முதல் நாமும்
ஆல் பாஸ்தான் என்பதை பசங்க ஹெவியா நம்ப ஆரம்பிச்சுட்டாங்க. மனிதக் கடவுள் எடப்பாடியார் நம்மைக் கைவிட மாட்டார்னும், அப்படியே கைவிட்டாலும் ஸ்டாலின் அங்கிளுக்கு குரூப் மெஸேஜ் போட்டா போதும்னு வாட்ஸ்சப்லே பேசிகிட்டு உற்சாகமா இருந்தாங்க. இந்தக் கதையில் திடீர் திருப்பமா ஏ.ஐ.சி.டி மெயில்
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!