மனிதர் யாவரும் சரி நிகர் சமமாக வாழ்வோம் என்று கூறுபவர் எப்படி தம்மை இந்து என்று கூறிக்கொள்ள முடியும்? மூட மதிக்காரர், கொடுமைக்காரர், அடிமை சூத்திரன் என்று கூறிக்கொள்ள எப்படித்தான் மனம் இடம் தரும்? எப்படித்தான் துணியும்? இந்து மதம் என்பதிலே உள்ளக் கடவுள் முறை, சமுதாய முறை,
மதக்கதைமுறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவைகளை அலசிப்பார்த்த பிறகு யாருக்குத்தான் தன்னை ஓர் இந்து என்று கூறிக்கொள்ள மனம் இடம் தரும்? பாம்பை எடுத்து படுக்கையில் விட்டுக்கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா? வீதிக் குப்பையை வீட்டுக்குள் கொண்டுபோய்ச் சேர்ப்பாரா?
மதி துலங்கும் விஷயங்களைவிட்டு மதிகெடுக்கும் கற்பனைகளைக் கட்டி அழுவாரா? மீளாமார்க்கம் தேடுவதைவிட்டு, மாளவழி தேடிக் கொள்வாரா? விடுதலைக்கு வழி பிறந்த பின்னர், அடிமை முறிச்சீட்டில் கையொப்ப மிடுவரா? கண் தெரியும்போது குழியில் வீழ்வாரா? தாம் திராவிடர் என்று தெரிந்த பிறகு,
திராவிடர் தன்னிகரற்று வாழ்ந்த இனம் என்பது தெரிந்த பிறகு, தம்மை இழிவு செய்து கொடுமைக்கு ஆளாக்கும் இந்து மார்கத்தில் போய்ச் சேர இசைவாரா? வீரத்திராவிடர் என்ற ஓர் உணர்ச்சி வீறிட்டு எழப்பெற்றோர், இனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்தும் பாரார்! அதன் இடுக்கிப் போய்ச் சேரார்!
இழிவைத்தேடார்!!.
நமக்கு நாலு; ஆறு நாற்பத்தெட்டுக் கண் படைத்த கடவுள்கள் வேண்டாம். நமக்கு ஒரே ஆண்டவன் போதும். உருவமற்ற தேவன்! உண் வேண்டாத சாமி! ஊரார் காசை கரியாக்கும் உற்சவம் கேட்காத சாமி! ஆடல் பாடல், அலங்காராதிகள், அப்பம், பாயசம், அக்காரவடிசல் கேட்காத சாமி!
அங்கே இங்கே என்று ஆளுக்கு ஆள் இடத்தைப் பிரித்து வைக்காத சாமி! அர்ச்சனை உண்டியல் என்று கூறி அக்ரகாரத்தை கொழுக்க வைக்காத சாமி இருந்தால் போதும்! நம்மிடமிருந்து தியானத்தைப் பெறட்டும். அருளைத் தரட்டும் நம்மிடமிருந்து தட்சினைப் பெற்று தக்பாசூரர்களக்கு தானம் தரும் தேவதைகள் நமக்கு
வேண்டாம் என்பதை உறுதிபடுத்தவே நாம் நம்மை இந்து அல்ல என்று கூறுகிறோம்.
ஆள் நடமாட ஓர் உலகம். ஆவி உலவ மற்றோர் உலகம். இந்திரன் இருக்க ஓர் உலகம். நான் தங்க ஓர் உலகம், மேலே ஏழு, கீழே ஏழு, எனப் பதினான்கு உலகங்களாம். அதல, விதல, சுதல தராதல, இராசாதல, மகாதல பாதாளம் என ஏழாம்!
பூலோக, மகாலோக, சத்யலோக என மேல் உலகம் ஏழாம்! இத்தனை உலகங்கள் இந்துவுக்கு உண்டாம், ஓட்டிலே, நமக்கு இவை வேண்டாம் நாமிருக்கும் நாடு நமக்கு இருந்தால் போதும் நான் செய்யும், புன் செய்யும், சாலையும், சோலையும், வாவியும், நதியும் மக்களுக்கு சுபீட்சமும் இருக்கட்டும். காமதேனும்,
கற்பக விருட்சமும் ரம்பையும், ஊர்வசியும் உலவும் உலாம் வேண்டாம். நாமிருக்கும் நாட்டிலே நாம் கீழ் ஜாதி என்ற கொடுமை இன்றி நாமார்க்கும் குடியல்லோம் என்று நாம் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்திலேதான், நாம் நம்மை இந்து அல்ல என்று கூறிக்கொள்கிறோம்.
பேரறிஞர் அண்ணா
(ஆரிய மாயை, 26-4-1943)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நீதிக்கட்சியின் வரலாறு, ஓர் அரசியல் கட்சியின் வரலாறு அல்லது தமிழக அரசியல் வாழ்க்கையின் ஓர் ஆராய்ச்சியேயாகும். உப்பு பல பண்டங்களுடன் கலந்து சுவை கூட்டுவதைப்போல நீதிக்கட்சியின் பண்பாடு, இன்று பல கட்சிகளிலும் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.
நீதிக் கட்சியினர் 17 ஆண்டுக்காலம் ஆட்சி நடத்தினர். அவர்கள் காலத்தில்தான் “கோயில் சொத்துக்களுக்குக் கணக்கு வைக்க வேண்டும்” என்று கூறும் அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் போன்ற சிறந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
நீதிக் கட்சியின் ஆட்சி நடைபெற்ற அந்த நாட்களில், இந்தியாவில் “இரட்டை ஆட்சிமுறை” செயலில் இருந்தது. முக்கியமான அதிகாரங்களையெல்லாம் ஆங்கிலேயர்கள் தங்கள் கையில் வைத்துக்கொண்டு , சில்லறை அதிகாரங்களை மட்டுமே மாநில ஆட்சியாளர்களிடம் தந்தனர்.
தமிழரின் தன்மானத்தைச் சுட்டுக் கருக்கும் ஆரியத் தீ! தமிழரின் வாழ்வைச் சித்திரவதை செய்யும் வாளி! இந்தத் தீவாளி, வருகிறது. தீபம் ஏற்றுங்கள், புத்தாடை புனையுங்கள், புன்முறுவல் செய்யுங்கள் என்று புராணீகர்கள் கூறுவர், தீபாவளி ஸ்நானம் என்று மகத்துவம் கூறுவர்,
கூறமுடியும், புலமையின் காரணமாக, என்று கூறுவோருக்கும், மனைதோறும் அகல்விளக்குச் சுடர்விடும் அழகு, நமது நாட்டுக்கலையின் கனிவு என்றுகூறும் கலாரசிகர்கட்கும், நாம், மதிவழிநடமின் என்று கூறி, சொல்லை இழக்க விரும்பவில்லை. புறம்போக்கு நிலத்திலே பொழுது புலருமுன் ஆரம்பித்து,
எலக்ட்ரிக்
ரயில்வே
மோட்டார்
கப்பல்
நீர்மூழ்கிக் கப்பல்
அதைக் கண்டுபிடிக்கும் கருவி
டார்ப்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி
விஷப்புகை
அதைத் தடுக்கும் முகமூடி
இன்ஜக்ஷன் ஊசி
இனாகுலேஷன் ஊசி
இவைகளுக்கான மருந்து
ஆப்ரேஷன் ஆயுதங்கள்
தூரதிருஷ்டிக் கண்ணாடி
ரேடியோ
கிராம போன்
டெலிபோன்
தந்தி
கம்பியில்லாத் தந்தி
போட்டோ மெஷின்
சினிமாப்படம் எடுக்கும் மெஷின்
விமானம்
ஆளில்லா விமானம்
டைப் மெஷின்
அச்சு யந்திரம்
ரசாயன சாமான்
புதிய உரம்
புதிய விவசாயக் கருவி
சுரங்கத்துக்கள் போகக் கருவி
மலை உச்சி ஏற மெஷின்
சந்திர மண்டலம் போக விமானம்
அணுவைப் பிளக்கும் மெஷின்
இன்னும், எண்ணற்ற, புதிய, பயன்தரும், மனிதனின் கற்பனைக்கே எட்டாதிருந்த, மனிதனின் உழைப்பைக் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள் ஆகியவைகளைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம்,
அவர்களில் எவருமோ உயிருடனில்லை! அத்தனை பேரும் மடிந்துவிட்டனர்! மண்ணோடு மண்ணாகிவிட்டனர்!
மடிந்தனர்! மறைந்தனர்! ஆனால் அவர் வாழ்ந்த பொழுது வழங்கிய மொழி மட்டும் அழியாது பாதுகாக்கத் திட்டமிடப் பட்டுள்ளது.
பேசியோர் இல்லை-பேசப்பட்ட மொழி இருக்கிறது!
மடிந்த மக்கள்-எனினும் அவர்கள் வாழ்விலே இருந்த மொழியை அழியாது நிலைக்கச் செய்யப் புதுமுறை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
மாங்க்ஸ் என்ற மொழி பேசுவோரில் இன்று எவருமே உயிருடனில்லை. இருந்தும் அவர்கள் மொழியை இப்பொழுது கேட்க முடியும்!
இடிந்த கோட்டை, பாழான அகழ், கலமான மணி மண்டபம், சிதைந்த சிற்பங்கள், சீர் கெட்டுப் போன சித்திரங்கள் என்று காண்கிறோமே, அது போலவே பழையமொழி மாங்க்ஸை கேட்கச் செய்திருக்கின்றனர்.
(இந்தி நல்லெண்ணத் தூதுக்குழுவினருக்கு 11.10.1950 அன்று அண்ணா அளித்த பேட்டி)
சதுர்வேதி: எங்கள் தூதுக்குழு அரசியல் சார்பற்றது. சமாதானம், நட்பு ஆகியவைகளைப் பலப்படு்த்தும் நோக்கத்துடனேயே வந்திருக்கிறோம்.
தாங்கள் இந்திமொழி பரவுதல் கூடாது எனக் கூறுவதாக கேள்விப்பட்டோம். இந்தி ஆரிய மொழி என்று தாங்கள் கூறுவதாகவும் அறிந்தோம். பல மொழிச் சேர்க்கையால் உருவான மொழியே இந்தியாகும் இதுவே பொது மொழியாக இருக்கும் நிலையிலிருப்பது என்று கருதுவதோடு, அவ்வாறு இருக்க அது அருகதையுள்ளது என்றும் உறுதியாக
நம்புகிறோம். ஆனால் தாங்கள் அது கூடாது என எதிர்ப்பதாகவும் அதற்கு முக்கியக் காரணமாக இந்தி ஆரிய மொழி என்று கூறுவதாகவும் கேள்விப் பட்டோம். ஆகவே, இது பற்றிய தங்கள் கருத்துகளை அறிய விரும்புகிறோம்.
அறிஞர் அண்ணா Communal G.O ( Law made by Justice party grants reservation in Madras State ) ரத்து செய்யப்பட்டதை ஒட்டி அதை எதிர்த்து எழுதியக் கட்டுரையின் ஒரு பகுதி
சட்டம்,திட்டமாகக் கூறுகிறது,
‘ஜாதி காரணமாக,யாரையும்,கல்வித் துறையிலே அனுமதிக்க மறுக்கக் கூடாது என்று, இது, பரந்த நோக்கமாம்.ஜனநாயகப் பண்பாம். புதிய இந்தியாவின் இலட்சணமாம். இராமராஜ்யக் கோட்பாடாம்! இதன் விளைவு என்ன ஆகும் என்று எண்ணும் போதே நேர்மையாளர்களின் நெஞ்சம் நடுக்கமெடுக்கிறது.
கம்யூனல் ஜி.ஒ-ரத்தாகி விட்டது – இனி, பார்ப்பன மாணவர் இவ்வளவு எண்ணிக்கைதான் கல்லூரிகளில் சேர்க்கப்படுவர், என்ற முறை இராது, ‘மார்க்கு’ என்னும் தகுதியைக் கவனித்து யாரும் சேர்த்துக் கொள்ளப்படுவர்.