ஸ்ரீ ரங்கத்தில் உலகம் போற்றும் ஆசார்யன் ஸ்ரீமத் ராமானுஜர்,ஒரு சமயம் திருக்கோவிலை வலம் வந்துக்கொண்டிருந்தார்.அப்போது மடப்பள்ளியிலிருந்து ஏதோ சச்சரவு சத்தம் கேட்டது.ராமானுஜர் மெதுவாக சத்தம் வரும் இடத்திற்குச் சென்றார்.அவரைக் கண்டதும் அனைவரும் வணங்கினர்.
மடப்பள்ளியில் இருந்தவரைப் பார்த்து என்ன விஷயம்?என்று வினவினார்.அவர் இன்னொருவரைக் காட்டிச் சொன்னார்,இவர் நமது கோவிலில் கைங்கர்யம் செய்பவர்.இவ்வளவு நாட்களாக இவரது கைங்கர்யத்திற்காக,இவருக்கு ஒரு பட்டை ப்ரசாதம் வழங்கப்பட்டு வந்தது.இப்போது அதிகம் வேண்டும் என்று கேட்கிறார்.
அப்படியெல்லாம் கொடுப்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. ராமானுஜர் திரும்பி அவரைப் பார்த்தார்.வேலைச்செய்பவர் சொன்னார்,"ஸ்வாமி,அவர் சொல்வது உண்மைதான். நான் ப்ரும்மச்சாரியாய் இருந்த வரையில் எனக்கு ஒரு பட்டை ப்ரசாதம் போதுமாய் இருந்தது. இப்போது எனக்குக் கல்யாணமாகிவிட்டது.
கோவில் வேலைக்கே நேரம் சரியாப்போகிறது.அதனால், நான் வேற வேலைக்கும் போகமுடிவதில்லை. ஒரு பட்டை ப்ரசாதம் என் குடும்பத்துக்குப் போதவில்லை.அதனால் கூட ஒரு பட்டை ப்ரசாதம் கிடைத்தால் கொஞ்சம் கஷ்டப்படாமல் ஜீவனம் போகும் ஸ்வாமி. ஆனால் இவர் தரமுடியாதுன்னு சொல்கிறார்".
கோவிலின் பொது விதிகளை ஒருவருக்காக மீறுவது சரியில்லை. ராமானுஜர் சற்று யோசித்தார்."சரி, உனக்கு உள்ளே இருக்கும் பெருமாள் மீது நம்பிக்கை உள்ளதா?" எனக்கேட்டார். "இல்ல ஸ்வாமி".தூக்கிவாரிப் போட்டது அனைவருக்கும்."என்னப்பா, கோவில்ல கைங்கர்யம் பண்ற.பெருமாள்மேல் நம்பிக்கை இல்லைங்கற.எப்படி?"
"ஆமாம் ஸ்வாமி, எனக்குப் பெருமாள் மேல நம்பிக்கை இல்லதான். ஆனால்,உங்களை நம்புகிறேன்.நீங்கதான் என் பெருமாள்". "அப்பாடா,சரி. என்னை நம்புகிறாயா?உனக்கு யார் மேலயாவது நம்பிக்கை இருந்தா சரிதான்.கோவில்ல,பாசுரம்,பூஜை சப்தம், பாடல்கள்,வேதம்,உபன்யாசங்கள் இதெல்லாம்தான் கேக்கணும்.
சண்டை சச்சரவுச் சத்தமெல்லாம் கோவில்ல கேக்கக்கூடாது.நீ சண்டை போடாம கிளம்பிப் போ. என்னை நம்பறதானே? நான் பாத்துக்கறேன்". "சரி ஸ்வாமி,மீண்டும் விழுந்து வணங்கி விட்டுப் போய்விட்டான்.அவனிடம் சொன்னாரே தவிர,ராமானுஜர் பணிகளில் மூழ்கிவிட்டார்.அந்தப் பையனிடம் சொன்னது மறந்து விட்டது.
இது நடந்து ஒரு வருஷம் இருக்கும்.ஒருநாள் அம்மா மண்டபத்தில் குளித்துவிட்டு வந்து கொண்டிருந்தார் ராமானுஜர்.அப்போது எதிரில் அந்தப்பையன் வந்தான்.ராமானுஜரைக் கண்டதும்,மகிழ்ச்சியோடு விழுந்து வணங்கினான்.அவனைப் பார்த்ததும் சட்டென்று முன்பு தான் பார்த்துக்கொள்கிறேன்,
என்று சொன்னது நினைவுக்கு வந்தது. அடடா, மறந்துவிட்டோமே. என்று வருந்தினார்.அவனைப் பார்த்து,"என்னப்பா, காலக்ஷேபங்கள் எல்லாம் எப்படிப் போகிறது?". "ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ஸ்வாமி.தினமும் நீங்க அனுப்பற பையன் வந்து, எங்களுக்கு தேவைக்குமேல ப்ரசாதத்தை வீட்டுக்கே கொண்டுவந்து,
கொடுத்துவிட்டுப் போகிறான்.தேவரீரின் கருணையே கருணை". தூக்கி வாரிப் போட்டது ராமானுஜருக்கு.தினமும் ஒருத்தர் வராரா? "நான் யாரையும் அனுப்பலையேப்பா". "நீங்க அனுப்பினதா சொல்லி ஒருத்தர் தினமும் ப்ரசாதம் கொண்டுவராரே ஸ்வாமி. அவர் பேர் ரங்கராஜன் என்று சொன்னார். ப்ரசாதம் கொடுத்துட்டு நின்னு,
கோவில் தூக்கையெல்லாம் திருப்பி வாங்கிக்கொண்டு போகிறார். ராமானுஜருக்கு காலுக்குக் கீழ் பூமி நழுவியது. அப்படியே உட்கார்ந்து விட்டார். சொன்ன எனக்கே மறந்து விட்டது. ரங்கநாதா, உனக்கேன் இவ்ளோ கருணை,என்று நெகிழ்ந்து போய் அரற்ற ஆரம்பித்தார்.
இறைவன் தன் பக்தன், அடியவர் கொடுத்த வாக்கையும் தானே நிறைவேற்றுவான்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Avvai 🇮🇳

Avvai 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Avvaitweets

6 Feb
பெண்மணி ஒருத்தி், ஐரோப்பாவில் தன்னுடைய மிக நீண்ட சுற்றுலாவை முடித்துக்கொண்டு, தன் சொந்தநாடான தென் ஆப்பிரிக்கா போக, லண்டன் ஏர்போர்ட்டில் காத்திருந்தாள்.அடுத்த பிளேனுக்கு நேரம் நிறைய இருந்ததால், டீயும் பிஸ்கெட்டும் வாங்கிகொண்டு, யாருமில்லாத ஒரு டேபிளில் வந்தமர்ந்தாள்.
காலைப்பேப்பரைப் படித்துக்கொண்டிருந்த அவளுக்கு எதிரிலிருந்து,சடசட என்று சத்தம்கேட்டது.நிமிர்ந்து பார்த்தவளுக்கு, பலத்த அதிர்ச்சி.பார்க்க, படித்தவன்போல் நன்றாக, உயர்ந்த விலையில் உடை உடுத்தி இருந்த ஒரு இளைஞன்,அவள் பிஸ்கெட் ஒன்றை அதன் கவரில் இருந்து எடுத்து சுவைத்துக் கொண்டிருந்தான்.
ஒரு பிஸ்கெட்டுக்காக, அந்நிகழ்ச்சியை பெரிதுபடுத்த விரும்பாத அப்பெண், அமைதியாக தானும் ஒன்றை எடுத்துத் தின்றாள். ஒன்று இரண்டு நிமிடங்கள் கடந்தன. திரும்பவும் சடசட என்ற அதே சத்தம். இன்றொரு பிஸ்கெட்டை எடுத்து அந்த இளைஞன் தின்றுக் கொண்டிருந்தான். மாற்றி மாற்றி இருவரும் எடுத்துத்தின்று,
Read 10 tweets
4 Feb
சுப்பன் சொன்னான் மந்திரத்தை
   சொக்கன் கேட்டான் தலைகுனிந்து
இப்புவி மயங்குது காட்சிகண்டு
   இதற்கு சாட்சி சுவாமிமலை
மாம்பழம் கேட்டது இருபிள்ளை
   மதியால் வென்றது முதல்பிள்ளை
மலைமேல் நின்றது மறுபிள்ளை
   மயிலுமே சாட்சி பழநிமலை
தீயவன் சூரனைக் கொன்றவனே
   செந்தூர் கடலினைக் கொண்டவனே
மாயோன் மருகன் முருகையனே
   மலரொன்று சாட்சி திருச்சீரலை
Read 7 tweets
2 Feb
கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் முருகன். அஞ்சு(பயம்) முகம் தோன்றில் ஆறு முகம் தோன்றும் என்ற சொல் வழக்கு உண்டு. ஆறுமுகனுக்கு வேண்டிக்கொள்ளப்படும் பிரார்த்தனைகளில்,காவடி எடுப்பது விசேஷமான ஒன்றாகும். காவடி எடுப்பதற்கு காரணம் இருக்கிறது.
மிகுந்த பக்திமானான இடும்பன், சூரபத்மனுக்கு போர்க்கலையை போதிக்கும் ஆசானாக இருந்தான்.ஆனால் சூரபத்மன் அநேக கொடுமைகள் புரியவே,அவனை விட்டகன்று அகத்தியரிடம் வந்து சேர்ந்தான்.அகத்தியர் பொதிகை மலைக்கு வந்து தங்கியபொழுது தன் சிஷ்யனான இடும்பனை அழைத்தார்.
தன்னுடைய வழிபாட்டிற்காக,கயிலையில் சிவசக்தி ஸ்வரூபமாக விளங்கும் கந்தனுக்குரிய சிவகிரி,சக்திகிரி எனப்படும் இரு சிகரங்களையும் கொண்டு வரும்படி கூறினார்.அகத்தியரின் கட்டளையை சிரமேற்கொண்டு,இடும்பன் கயிலாய மலைக்குச் சென்றான்.அவர் குறிப்பிட்ட சிவகிரி சக்திகிரி இரண்டையும் தூக்கியெடுத்து,
Read 12 tweets
31 Jan
”அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்களில் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்”
- என்று கவியரசர் கண்ணதாசன் எப்போதும் சிலாகித்துச் சொன்ன, கண்ணன் எனும் மன்னன்,ஒருநாள் தர்மரை அழைத்துச் சொன்னார்.
"தர்மா! தீயவன் என்று நீ நினைக்கும் அல்லது பார்க்கும் ஒருவனைத் தேடிப்பிடித்து, இங்கே அழைத்துக்கொண்டு வா!”
அதை உடனேச் செய்து, கண்ணனை மகிழ்விக்க அவர் விரைந்தார்.
அதே போல துரியோதனனையும் அழைத்த கண்ணன் சொன்னார்.
"துரியோதனா! நல்லவன் என்று நீ நினைக்கும் அல்லது பார்க்கும் ஒருவனைத்
தேடிப்பிடித்து, இங்கே அழைத்துக்கொண்டு வா!”
துரியோதனனும் அவ்வாறே செய்வதற்கு விரைந்தான். பரந்தாமன் சொன்னது காலை நேரத்தில். அன்று மாலை, விளக்கு வைக்கும் நேரத்திற்குத் திரும்பி வந்த தர்மர் சொன்னார், "க்ருஷ்ணா எனக்குத்தெரிந்த அத்தனைப் பேர்களையும் நினைத்துப் பார்த்துவிட்டேன்.
Read 8 tweets
29 Jan
நாரதர் ஒரு சமயம் "கிருஷ்ணா! உங்களுடைய மாயை மிகவும் வலிமை வாய்ந்தது என்று சொல்கிறார்கள்.பிரம்மத்தை (தெய்வத்தை) உணர்ந்த பிரம்மஞானி தேவரிஷியாகிய நானும் மாயையால் பாதிக்கப்படுவேனா?"என்று கேட்டார்.கிருஷ்ணர், நாரதரின் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல்,
சற்று தூரத்திலிருந்த ஒரு குளத்தை சுட்டிக்காட்டி,"நாரதரே!அதோ அந்தக் குளத்தில் மூழ்கி எழுந்து வாருங்கள்"என்று கூறினார். கிருஷ்ணர் கூறியபடியே,நாரதர் தன் கையில் இருந்த மகதி என்ற வீணையை,குளக்கரையில் வைத்துவிட்டு,குளத்தில் சென்று மூழ்கி எழுந்தார்.மூழ்கி எழுந்தாரோ இல்லையோ,
அவர் அழகிய இளம் பெண்ணாக மாறியிருந்தார்!தான் நாரதர் என்ற பழைய நினைவுகள் அனைத்தும் அவருக்கு அறவே இல்லாமல் போயிற்று.குளக்கரையில் அவர் வைத்த வீணையும் இல்லை. கிருஷ்ணரும் அங்கு இல்லை.இப்போது நாரதப் பெண்,குளத்தின் படிகளில் ஏறி மேலே வந்து கொண்டிருந்தாள்.அந்த வழியாக அந்த நாட்டு அரசன்,
Read 17 tweets
28 Jan
மனித ஸ்வபாவத்தில் பொறாமை முக்கிய பங்குக்கொண்டது.  பிறரது அழகு,சந்தோஷம்,செல்வம்,அந்தஸ்து,தாராள குணம், சாமர்த்தியம்,எதைக்கண்டாலும் நம்மிடம் அது இல்லையே என்ற எண்ணம் பொறாமைத்தீயாக வளர்கிறது.நெருப்பு எப்போதுமே  அருகிலே உள்ளதைத்தான் முதலில் அழிக்கும்,எரித்து சாம்பலாக்கும்.
இந்த பொறாமைத்தீ அப்படியல்ல.அதைவிடக் கொடியது. 
பொறாமைப்படுபவனை அப்பளம் மாதிரி வாட்டிவதைக்கும், துன்புறுத்தும்,நிம்மதியில்லாமல் கோபப்பெருமூச்சு விடவைக்கும்.
மஹாராஷ்டிராவில் தேஹு கிராமத்தில்,நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் பெருகிக்கொண்டே வந்தது. அங்கேதான் துக்காராம் என்ற பாண்டுரங்க பக்தன் வசித்துவந்தார்.அவரது பக்தியைக்கண்டு வியந்து,துக்காராமின் அபங்க பஜனையில் தங்களை மறந்து  ஆனந்தக்கண்ணீர் பெருகி,பக்தியில் மூழ்காதவர்களே கிடையாது.
Read 20 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!