பெண்மணி ஒருத்தி், ஐரோப்பாவில் தன்னுடைய மிக நீண்ட சுற்றுலாவை முடித்துக்கொண்டு, தன் சொந்தநாடான தென் ஆப்பிரிக்கா போக, லண்டன் ஏர்போர்ட்டில் காத்திருந்தாள்.அடுத்த பிளேனுக்கு நேரம் நிறைய இருந்ததால், டீயும் பிஸ்கெட்டும் வாங்கிகொண்டு, யாருமில்லாத ஒரு டேபிளில் வந்தமர்ந்தாள்.
காலைப்பேப்பரைப் படித்துக்கொண்டிருந்த அவளுக்கு எதிரிலிருந்து,சடசட என்று சத்தம்கேட்டது.நிமிர்ந்து பார்த்தவளுக்கு, பலத்த அதிர்ச்சி.பார்க்க, படித்தவன்போல் நன்றாக, உயர்ந்த விலையில் உடை உடுத்தி இருந்த ஒரு இளைஞன்,அவள் பிஸ்கெட் ஒன்றை அதன் கவரில் இருந்து எடுத்து சுவைத்துக் கொண்டிருந்தான்.
ஒரு பிஸ்கெட்டுக்காக, அந்நிகழ்ச்சியை பெரிதுபடுத்த விரும்பாத அப்பெண், அமைதியாக தானும் ஒன்றை எடுத்துத் தின்றாள். ஒன்று இரண்டு நிமிடங்கள் கடந்தன. திரும்பவும் சடசட என்ற அதே சத்தம். இன்றொரு பிஸ்கெட்டை எடுத்து அந்த இளைஞன் தின்றுக் கொண்டிருந்தான். மாற்றி மாற்றி இருவரும் எடுத்துத்தின்று,
கடைசியில் ஒரே ஒரு பிஸ்கெட் மட்டும் மிஞ்சியபோது,அந்த பெண்மணிக்கு கோபம் அளவுக்கு மீறி ஏறிவிட்டது.ஆனால் எதுவும் சொல்லத் தயக்கம்.அந்த இளைஞன் கடைசி பிஸ்கெட்டை தானே எடுத்து,அதை இரண்டாக உடைத்து,அவளுக்குப் பாதி கொடுத்துவிட்டு,தன் பாதியை வாயில் போட்டுக்கொண்டுவிட்டு, எழுந்து போய்விட்டான்.
சிறிது நேரங்கழித்து,பிளேன் கிளம்பும் நேரம் வந்தபோது,டிக்கெட் காண்பிக்கச் சொன்னார்கள்.அப்பொழுது வரையிலும்,இன்னும் அந்தப்பெண் அந்த இளைஞன்மீது கோபத்தின் உச்சியில்,மனதில் மருவிக் கொண்டிருந்தாள். மண்டைக்குள் எரிச்சல் அதிகமாகிக் கொண்டே போனது. டிக்கெட் எடுக்க தன் ஹேன்ட்பேகைத் திறந்தாள்.
அதற்குள் அவள் தனக்காக வாங்கிய பிஸ்கெட் பாக்கெட்,அப்படியே பிரிக்காமல் இருந்தது.மனதுக்குள் அந்தநொடியே அவமானத்துக்கு உள்ளானாள்.இத்தனை நேரமாக இவள்,அந்த இளைஞனின் பிஸ்கெட்டை தின்றுக் கொண்டு இருந்திருக்கிறாள்.இதில் அந்த இளைஞன்,கடைசியை தாராளமாக பாதி ஒடித்து வேறு பகிர்ந்தளித்திருக்கிறான்.
இந்தப் பெண்மணி இப்பொழுது அனுபவித்ததுதான் paradigm shift.ஒரு மனிதரைப் பற்றியோ, ஒரு பொருளைப் பற்றியோ, ஒரு சம்பவத்தைப் பற்றியோ நாம் நம் மனதிற்குள் ஏற்படுத்தி வைத்திருக்கும் மனப்பிம்பம், அல்லது அதைப்பற்றிய நமது கண்ணோட்டம், 'கருத்து’ எனலாம்.
அவ்வாறு நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் கருத்து சரியானது தான் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை.
ஒரு நிமிடம் அந்த இளைஞன் மேல் அதீத கோபத்தில் இருந்தாள்,அவன் இவள் பிஸ்கெட்டை கேட்காமல் தின்கிறான் என்று.
அடுத்தநிமிடம், இவள் கேட்காமலேயே தின்றபோதும், அந்த இளைஞன் ஒன்றும் சொல்லாமல், இவள்மேல் பரிவுகாட்டி பகிர்ந்துகொண்டபோதும், கடைசி பிஸ்கெட்டை பிரித்து கொடுத்தபொழுதும், அவன்மேல் இருந்த அபிப்ராயம் அப்படியே தலைகீழாக மாறியது.
We need to look at the context of situations instead of judging the book by its cover.
கண்ணால் காண்பதும் பொய்.காதால் கேட்பதும் பொய்.தீர விசாரித்தறிவதும்கூட 100% மெய் என்று சொல்வதற்கில்லை, அதற்குரிய தெளிவான அறிவு வேண்டும்.
(ஷான் கோவி என்பவரின் புத்தகத்திலிருந்து)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஸ்ரீ ரங்கத்தில் உலகம் போற்றும் ஆசார்யன் ஸ்ரீமத் ராமானுஜர்,ஒரு சமயம் திருக்கோவிலை வலம் வந்துக்கொண்டிருந்தார்.அப்போது மடப்பள்ளியிலிருந்து ஏதோ சச்சரவு சத்தம் கேட்டது.ராமானுஜர் மெதுவாக சத்தம் வரும் இடத்திற்குச் சென்றார்.அவரைக் கண்டதும் அனைவரும் வணங்கினர்.
மடப்பள்ளியில் இருந்தவரைப் பார்த்து என்ன விஷயம்?என்று வினவினார்.அவர் இன்னொருவரைக் காட்டிச் சொன்னார்,இவர் நமது கோவிலில் கைங்கர்யம் செய்பவர்.இவ்வளவு நாட்களாக இவரது கைங்கர்யத்திற்காக,இவருக்கு ஒரு பட்டை ப்ரசாதம் வழங்கப்பட்டு வந்தது.இப்போது அதிகம் வேண்டும் என்று கேட்கிறார்.
அப்படியெல்லாம் கொடுப்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. ராமானுஜர் திரும்பி அவரைப் பார்த்தார்.வேலைச்செய்பவர் சொன்னார்,"ஸ்வாமி,அவர் சொல்வது உண்மைதான். நான் ப்ரும்மச்சாரியாய் இருந்த வரையில் எனக்கு ஒரு பட்டை ப்ரசாதம் போதுமாய் இருந்தது. இப்போது எனக்குக் கல்யாணமாகிவிட்டது.
கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் முருகன். அஞ்சு(பயம்) முகம் தோன்றில் ஆறு முகம் தோன்றும் என்ற சொல் வழக்கு உண்டு. ஆறுமுகனுக்கு வேண்டிக்கொள்ளப்படும் பிரார்த்தனைகளில்,காவடி எடுப்பது விசேஷமான ஒன்றாகும். காவடி எடுப்பதற்கு காரணம் இருக்கிறது.
மிகுந்த பக்திமானான இடும்பன், சூரபத்மனுக்கு போர்க்கலையை போதிக்கும் ஆசானாக இருந்தான்.ஆனால் சூரபத்மன் அநேக கொடுமைகள் புரியவே,அவனை விட்டகன்று அகத்தியரிடம் வந்து சேர்ந்தான்.அகத்தியர் பொதிகை மலைக்கு வந்து தங்கியபொழுது தன் சிஷ்யனான இடும்பனை அழைத்தார்.
தன்னுடைய வழிபாட்டிற்காக,கயிலையில் சிவசக்தி ஸ்வரூபமாக விளங்கும் கந்தனுக்குரிய சிவகிரி,சக்திகிரி எனப்படும் இரு சிகரங்களையும் கொண்டு வரும்படி கூறினார்.அகத்தியரின் கட்டளையை சிரமேற்கொண்டு,இடும்பன் கயிலாய மலைக்குச் சென்றான்.அவர் குறிப்பிட்ட சிவகிரி சக்திகிரி இரண்டையும் தூக்கியெடுத்து,
”அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்களில் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்”
- என்று கவியரசர் கண்ணதாசன் எப்போதும் சிலாகித்துச் சொன்ன, கண்ணன் எனும் மன்னன்,ஒருநாள் தர்மரை அழைத்துச் சொன்னார்.
"தர்மா! தீயவன் என்று நீ நினைக்கும் அல்லது பார்க்கும் ஒருவனைத் தேடிப்பிடித்து, இங்கே அழைத்துக்கொண்டு வா!”
அதை உடனேச் செய்து, கண்ணனை மகிழ்விக்க அவர் விரைந்தார்.
அதே போல துரியோதனனையும் அழைத்த கண்ணன் சொன்னார்.
"துரியோதனா! நல்லவன் என்று நீ நினைக்கும் அல்லது பார்க்கும் ஒருவனைத்
தேடிப்பிடித்து, இங்கே அழைத்துக்கொண்டு வா!”
துரியோதனனும் அவ்வாறே செய்வதற்கு விரைந்தான். பரந்தாமன் சொன்னது காலை நேரத்தில். அன்று மாலை, விளக்கு வைக்கும் நேரத்திற்குத் திரும்பி வந்த தர்மர் சொன்னார், "க்ருஷ்ணா எனக்குத்தெரிந்த அத்தனைப் பேர்களையும் நினைத்துப் பார்த்துவிட்டேன்.
நாரதர் ஒரு சமயம் "கிருஷ்ணா! உங்களுடைய மாயை மிகவும் வலிமை வாய்ந்தது என்று சொல்கிறார்கள்.பிரம்மத்தை (தெய்வத்தை) உணர்ந்த பிரம்மஞானி தேவரிஷியாகிய நானும் மாயையால் பாதிக்கப்படுவேனா?"என்று கேட்டார்.கிருஷ்ணர், நாரதரின் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல்,
சற்று தூரத்திலிருந்த ஒரு குளத்தை சுட்டிக்காட்டி,"நாரதரே!அதோ அந்தக் குளத்தில் மூழ்கி எழுந்து வாருங்கள்"என்று கூறினார். கிருஷ்ணர் கூறியபடியே,நாரதர் தன் கையில் இருந்த மகதி என்ற வீணையை,குளக்கரையில் வைத்துவிட்டு,குளத்தில் சென்று மூழ்கி எழுந்தார்.மூழ்கி எழுந்தாரோ இல்லையோ,
அவர் அழகிய இளம் பெண்ணாக மாறியிருந்தார்!தான் நாரதர் என்ற பழைய நினைவுகள் அனைத்தும் அவருக்கு அறவே இல்லாமல் போயிற்று.குளக்கரையில் அவர் வைத்த வீணையும் இல்லை. கிருஷ்ணரும் அங்கு இல்லை.இப்போது நாரதப் பெண்,குளத்தின் படிகளில் ஏறி மேலே வந்து கொண்டிருந்தாள்.அந்த வழியாக அந்த நாட்டு அரசன்,
மனித ஸ்வபாவத்தில் பொறாமை முக்கிய பங்குக்கொண்டது. பிறரது அழகு,சந்தோஷம்,செல்வம்,அந்தஸ்து,தாராள குணம், சாமர்த்தியம்,எதைக்கண்டாலும் நம்மிடம் அது இல்லையே என்ற எண்ணம் பொறாமைத்தீயாக வளர்கிறது.நெருப்பு எப்போதுமே அருகிலே உள்ளதைத்தான் முதலில் அழிக்கும்,எரித்து சாம்பலாக்கும்.
இந்த பொறாமைத்தீ அப்படியல்ல.அதைவிடக் கொடியது.
பொறாமைப்படுபவனை அப்பளம் மாதிரி வாட்டிவதைக்கும், துன்புறுத்தும்,நிம்மதியில்லாமல் கோபப்பெருமூச்சு விடவைக்கும்.
மஹாராஷ்டிராவில் தேஹு கிராமத்தில்,நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் பெருகிக்கொண்டே வந்தது. அங்கேதான் துக்காராம் என்ற பாண்டுரங்க பக்தன் வசித்துவந்தார்.அவரது பக்தியைக்கண்டு வியந்து,துக்காராமின் அபங்க பஜனையில் தங்களை மறந்து ஆனந்தக்கண்ணீர் பெருகி,பக்தியில் மூழ்காதவர்களே கிடையாது.