ஜனக மகராஜா ஒருநாள் இரவு தூங்கிக் கொண்டிருந்தார்.அவருக்கு அப்போது ஒரு கனவு வந்தது.அதில் அவர் ஒரு பிச்சைகாரனாக மிகவும் சிரமப்படுவது போல் கனவு.கனவில் அவர் மிகவும் துன்பப்பட்டார்.அப்போது அது கனவு போலவே அவருக்குத் தெரியவில்லை.நிஜம் போலவே இருந்தது.திடுக்கிட்டு "நாராயணா" என்று அலறினார்.
கண் விழித்துப் பார்த்தால் எல்லாம் மாறியிருந்தது.சில வினாடி முன்பு பிச்சைக்காரராக இருந்தவர் இப்போது மன்னராக இருந்தார்.
இது தொடர்ந்து பல நாட்களாக நடந்து கொண்டே இருந்தது.அவர் தினசரி இரவு தூங்கும்போது, கனவில் பிச்சைக்காரனாகி படாத பாடுபடுவார்.
பகலில் எழுந்தால் மன்னனாக சகல சம்போகங்களுடன் இருப்பார்.
ஜனகருக்கு ஒரு பெரும் சந்தேகம் உதித்தது."நான் மன்னனாக இருந்து பிச்சைக்காரனாக இருப்பது போல் கனவு கண்டேனா?
அல்லது பிச்சைகாரனாக இருந்து இப்போது மன்னராக இருப்பது போல் கனவு காண்கிறேனா?" என சந்தேகம் வந்து விட்டது.
மந்திரி, ராஜகுரு எனப் பலரிடம் கேட்டுப்பார்த்தார்.யாருக்கும் பதில் தெரியவில்லை.அந்த சந்தேகம் அவர் மனதை அரித்துக் கொண்டே இருந்தது."நான் பிச்சைக்காரனா,மன்னனா" என்று அவர் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார்.பிறகு ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
தமது சந்தேகத்தைத் தீர்த்து வைப்பவர்களுக்கு,பெரும் பரிசை அளிப்பதாகச் சொன்னார்.நாட்டிலிருந்த வித்வான்கள் எல்லாரும் வந்தனர்.தூர தேசத்திலிருந்து பண்டிதர்கள்,முனிவர்கள்,வேத விற்பன்னர்கள் எல்லாரும் வந்தனர்.யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.
வெளியூரிலிருந்து விதேக நாட்டுக்கு ஒரு முனிவர் வந்தார்.அவர் பெயர் அஷ்டாவக்கிர மகரிஷி.அவர் உடல் 8 கோணலாக வளைந்திருக்கும்.அது ஏனென்றால் அவர் தம் அன்னையின் வயிற்றிலிருந்த போது,கத்துக்குட்டியான அவர் தகப்பனார் வேதத்தை தப்புத் தப்பாக படிப்பாராம்.
அப்போது வயிற்றிலிருந்த மகா ஞானியான குழந்தை,அதைக் கேட்க சகிக்காமல் உடம்பை திருப்புமாம்.அப்படி 8 தடவை திருப்பி உடல் அஷ்ட கோணலாக வளைந்து,அஷ்டா வக்கிரன் என்ற பெயரும் ஏற்பட்டது.ஜனகரின் கேள்வியை அறிந்த அஷ்டாவக்கிர மகரிஷி ஜனகரின் அவைக்குச் சென்றார்.
பண்டிதர்களின் பெருங்கூட்டம் அவையில் இருந்தது.யாருக்கும் பதில் தெரியவில்லை."என் கேள்விக்கு பதில் சொல்ல ஆளே இல்லையா?" என ஜனகர் வேதனையுடன் கேட்டார்.நான் சொல்கிறேன்" என்றார் அஷ்டாவக்கிரர்.அரசவை முழுக்க அவரை திரும்பிப் பார்த்தது.
அவரைப் பார்த்த மறு வினாடியே பண்டிதர்கள் சிரிக்கத் துவங்கி விட்டனர்.குள்ளமாக,கறுப்பாக,எண் கோணலாக வளைந்த உடலை வைத்துக் கொண்டு ஒருவர் சபைக்கு வந்தால் எப்படி இருக்கும்?அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.சிரிப்பொலி அடங்கும் வரை அஷ்டாவக்கிரர் மவுனமாக நின்றார்.
"என் கேள்விக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள்"என்று ஜனகர் ஆவலுடன் கேட்டார். "சொல்கிறேன்.அதற்கு முன் சபையில் இருக்கும் தோல் வியாபாரிகளையும்,கசாப்புக் கடைகாரர்களையும் வெளியே அனுப்புங்கள்"என்றார் அஷ்டாவக்கிரர்."என்ன சொல்கிறீர்கள்?இது பண்டிதர்களின் சபை.இங்கு எந்த கசாப்பு கடைக்காரனும்,
தோல் வியாபாரியும் இல்லை" என்றார் ஜனகர்."இங்கு பண்டிதன் என யாரும் இல்லை.இங்கிருப்போர் அனைவரும் கசாப்புக் கடைக்காரர்களும் தோல் வியபாரிகளும் தான்" என்றார் அஷ்டாவக்கிரர்.சபை முழுக்க கொதித்தெழுந்தது. "என்ன திமிர் இந்த குரங்கனுக்கு?" என்று சப்தமிட்டார் ராஜகுரு.
"வேதம் கற்ற பண்டிதர்களை இழிவுபடுத்திய இவனை கழுவிலேற்றுங்கள்" என்று அனைவரும் கூச்சலிட்டனர்."ஏன் அப்படி சொன்னீர்கள்?"என்று பரிவுடன் கேட்டார் ஜனகர்."கற்றறிந்த பண்டிதர்களை கசாப்புக் கடைக்காரன் என்று சொல்லலாமா?" என்று கேட்டார். உரத்த குரலில் அஷ்டாவக்கிரர் பதில் சொன்னார்.
"ஓ மன்னா! உன் கேள்விக்கு பதில் நான் சொல்கிறேன் என்று சொன்னேன். சபை முழுக்க என்னைப் பார்த்து சிரித்தது.ஏன் சிரித்தார்கள்? என் குறைவான ஞானத்தைக் கண்டு சிரித்தார்களா?நான் தவறாகச் சொன்ன விளக்கத்தைக் கண்டு சிரித்தார்களா? இல்லை. இது எதைக் கண்டும் அவர்கள் சிரிக்கவில்லை.
என் உருவத்தைப் பார்த்துச் சிரித்தார்கள்.என் தோலின் நிறத்தை வைத்து, என் உடலின் உருவத்தை வைத்து இவர்கள் என்னை, என் அறிவை மதிப்பிட்டார்கள்.என் தோலை வைத்து என் மதிப்பை நிர்ணயிக்கும் இவர்கள் தோல் வியாபாரிகள் தானே? தோல் வியாபாரிதான் தோலின் நிறத்தை வைத்து ஆட்டுத் தோலுக்கு விலை போடுவான்.
கசாப்புக் கடைக்காரன் தான் ஆட்டின் உருவத்தை வைத்து ஆட்டுக்கு மதிப்பு போடுவான்.இவர்களும் என்னை அப்படித்தான் மதிப்பிட்டார்கள்.அதனால்தான் இவர்களை தோல்வியாபாரி என்றேன்.பண்டிதர்கள் இருக்கவேண்டிய சபையில் தோல் வியாபாரிகளுக்கு என்ன வேலை?அதனால் தான் இவர்களை வெளியே போகச் சொன்னேன்" என்றார்
அஷ்டாவக்கிரர்.அவமானமடைந்த பண்டிதர்கள் தலைக்குனிந்து சபையை விட்டு வெளியேறினார்கள்.வந்தவர் மகா ஞானி என ஜனகரும் அறிந்தார். மகாப் பணிவுடன் அவர் காலடியில் அமர்ந்து தன் சந்தேகத்துக்கு விடை கேட்டுத் தெரிந்து கொண்டார்.
ஜனகருக்கு அஷ்டாவக்கிரர் சொன்ன அந்த உபதேசம் 'அஷ்டாவக்கிர கீதை' என்ற பெயருடன் விளங்குகிறது.அந்த உபதேசத்தை பெற்ற ஜனகர்,அன்று முதல் மகா ஞானியாகி விட்டார்.ஜனகரின் சந்தேகம் தீர்த்த மகரிஷியின் விளக்கம் -
"தூங்கியபோது கண்டதும் கனவு தான்.இப்போழுது நீ வாழும் வாழ்வும் கனவுதான்.உன்னுடைய ராஜ
வாழ்வும்,பிச்சைக்கார வாழ்வும் இரண்டும் உண்மையில்லை. அரசனாக இருக்கும்பொழுது சந்தோஷப்படாதே. தூங்கும்பொழுது அந்த சந்தோஷம் போய்விடும்.பிச்சைக்காரனாக இருக்கும்பொழுது வருத்தப்படாதே. கண்விழித்தவுடன் அந்த வருத்தம் மறைந்துவிடும். இரண்டு நிலையிலும் ஒரே மாதிரி இருக்கக் கற்றுக்கொள்” என்றார்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Avvai 🇮🇳

Avvai 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Avvaitweets

13 Feb
நீதி நூல் - இனிய சொல் 

நாம் என்ன பேசுகிறோம் என்பது நம் கையில் தான் இருக்கிறது. அப்படி இருக்க, நல்ல இனிய சொற்களை விட்டு விட்டு தேவை இல்லாத தீய சொற்களை ஏன் பேச வேண்டும்?எப்போதும் இனிய சொற்களையே பேசி வந்தால் என்ன கிடைக்கும் என்று கூறுகிறது இந்த நீதி நூல் பாடல்.
"வட்டவுல கெட்டுமிசை மட்டற நிரப்பும்
வெட்டவரு துட்டரை விலக்கிவச மாக்கும்
நட்டமிலை யெட்டனையு நட்டுநர ரெல்லாம்
இட்டமுறு கட்டுதவும் இன்மொழிய தன்றோ"

முதலில் புகழ் கிடைக்கும். " அவரு ரொம்ப நல்லவரு. எப்ப போனாலும் சந்தோஷம்,சிரிச்சு பேசி,மனசுக்கு இதமா நாலு வார்த்தை சொல்லுவார்"னு,
நம்மைப் பற்றி புகழ்ந்து பேசுவார்கள்.இனிய வார்த்தை சொல்லாவிட்டால் "அதுவா,எப்ப பாரு எரிஞ்சுஎரிஞ்சு விழும்.வாயில நல்ல வார்த்தையே வராதே"என்ற இகழ் வரும்.இரண்டாவது,நம்மை பிடிக்காதவர்கள்,வேண்டாதவர்கள் இருத்தால் கூட, இனிமையாக பேசினால் நாளடைவில் அவர்களும் நமக்கு நண்பர்காளாகி விடுவார்கள்.
Read 5 tweets
6 Feb
பெண்மணி ஒருத்தி், ஐரோப்பாவில் தன்னுடைய மிக நீண்ட சுற்றுலாவை முடித்துக்கொண்டு, தன் சொந்தநாடான தென் ஆப்பிரிக்கா போக, லண்டன் ஏர்போர்ட்டில் காத்திருந்தாள்.அடுத்த பிளேனுக்கு நேரம் நிறைய இருந்ததால், டீயும் பிஸ்கெட்டும் வாங்கிகொண்டு, யாருமில்லாத ஒரு டேபிளில் வந்தமர்ந்தாள்.
காலைப்பேப்பரைப் படித்துக்கொண்டிருந்த அவளுக்கு எதிரிலிருந்து,சடசட என்று சத்தம்கேட்டது.நிமிர்ந்து பார்த்தவளுக்கு, பலத்த அதிர்ச்சி.பார்க்க, படித்தவன்போல் நன்றாக, உயர்ந்த விலையில் உடை உடுத்தி இருந்த ஒரு இளைஞன்,அவள் பிஸ்கெட் ஒன்றை அதன் கவரில் இருந்து எடுத்து சுவைத்துக் கொண்டிருந்தான்.
ஒரு பிஸ்கெட்டுக்காக, அந்நிகழ்ச்சியை பெரிதுபடுத்த விரும்பாத அப்பெண், அமைதியாக தானும் ஒன்றை எடுத்துத் தின்றாள். ஒன்று இரண்டு நிமிடங்கள் கடந்தன. திரும்பவும் சடசட என்ற அதே சத்தம். இன்றொரு பிஸ்கெட்டை எடுத்து அந்த இளைஞன் தின்றுக் கொண்டிருந்தான். மாற்றி மாற்றி இருவரும் எடுத்துத்தின்று,
Read 10 tweets
4 Feb
சுப்பன் சொன்னான் மந்திரத்தை
   சொக்கன் கேட்டான் தலைகுனிந்து
இப்புவி மயங்குது காட்சிகண்டு
   இதற்கு சாட்சி சுவாமிமலை
மாம்பழம் கேட்டது இருபிள்ளை
   மதியால் வென்றது முதல்பிள்ளை
மலைமேல் நின்றது மறுபிள்ளை
   மயிலுமே சாட்சி பழநிமலை
தீயவன் சூரனைக் கொன்றவனே
   செந்தூர் கடலினைக் கொண்டவனே
மாயோன் மருகன் முருகையனே
   மலரொன்று சாட்சி திருச்சீரலை
Read 7 tweets
4 Feb
ஸ்ரீ ரங்கத்தில் உலகம் போற்றும் ஆசார்யன் ஸ்ரீமத் ராமானுஜர்,ஒரு சமயம் திருக்கோவிலை வலம் வந்துக்கொண்டிருந்தார்.அப்போது மடப்பள்ளியிலிருந்து ஏதோ சச்சரவு சத்தம் கேட்டது.ராமானுஜர் மெதுவாக சத்தம் வரும் இடத்திற்குச் சென்றார்.அவரைக் கண்டதும் அனைவரும் வணங்கினர்.
மடப்பள்ளியில் இருந்தவரைப் பார்த்து என்ன விஷயம்?என்று வினவினார்.அவர் இன்னொருவரைக் காட்டிச் சொன்னார்,இவர் நமது கோவிலில் கைங்கர்யம் செய்பவர்.இவ்வளவு நாட்களாக இவரது கைங்கர்யத்திற்காக,இவருக்கு ஒரு பட்டை ப்ரசாதம் வழங்கப்பட்டு வந்தது.இப்போது அதிகம் வேண்டும் என்று கேட்கிறார்.
அப்படியெல்லாம் கொடுப்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. ராமானுஜர் திரும்பி அவரைப் பார்த்தார்.வேலைச்செய்பவர் சொன்னார்,"ஸ்வாமி,அவர் சொல்வது உண்மைதான். நான் ப்ரும்மச்சாரியாய் இருந்த வரையில் எனக்கு ஒரு பட்டை ப்ரசாதம் போதுமாய் இருந்தது. இப்போது எனக்குக் கல்யாணமாகிவிட்டது.
Read 12 tweets
2 Feb
கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் முருகன். அஞ்சு(பயம்) முகம் தோன்றில் ஆறு முகம் தோன்றும் என்ற சொல் வழக்கு உண்டு. ஆறுமுகனுக்கு வேண்டிக்கொள்ளப்படும் பிரார்த்தனைகளில்,காவடி எடுப்பது விசேஷமான ஒன்றாகும். காவடி எடுப்பதற்கு காரணம் இருக்கிறது.
மிகுந்த பக்திமானான இடும்பன், சூரபத்மனுக்கு போர்க்கலையை போதிக்கும் ஆசானாக இருந்தான்.ஆனால் சூரபத்மன் அநேக கொடுமைகள் புரியவே,அவனை விட்டகன்று அகத்தியரிடம் வந்து சேர்ந்தான்.அகத்தியர் பொதிகை மலைக்கு வந்து தங்கியபொழுது தன் சிஷ்யனான இடும்பனை அழைத்தார்.
தன்னுடைய வழிபாட்டிற்காக,கயிலையில் சிவசக்தி ஸ்வரூபமாக விளங்கும் கந்தனுக்குரிய சிவகிரி,சக்திகிரி எனப்படும் இரு சிகரங்களையும் கொண்டு வரும்படி கூறினார்.அகத்தியரின் கட்டளையை சிரமேற்கொண்டு,இடும்பன் கயிலாய மலைக்குச் சென்றான்.அவர் குறிப்பிட்ட சிவகிரி சக்திகிரி இரண்டையும் தூக்கியெடுத்து,
Read 12 tweets
31 Jan
”அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்களில் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்”
- என்று கவியரசர் கண்ணதாசன் எப்போதும் சிலாகித்துச் சொன்ன, கண்ணன் எனும் மன்னன்,ஒருநாள் தர்மரை அழைத்துச் சொன்னார்.
"தர்மா! தீயவன் என்று நீ நினைக்கும் அல்லது பார்க்கும் ஒருவனைத் தேடிப்பிடித்து, இங்கே அழைத்துக்கொண்டு வா!”
அதை உடனேச் செய்து, கண்ணனை மகிழ்விக்க அவர் விரைந்தார்.
அதே போல துரியோதனனையும் அழைத்த கண்ணன் சொன்னார்.
"துரியோதனா! நல்லவன் என்று நீ நினைக்கும் அல்லது பார்க்கும் ஒருவனைத்
தேடிப்பிடித்து, இங்கே அழைத்துக்கொண்டு வா!”
துரியோதனனும் அவ்வாறே செய்வதற்கு விரைந்தான். பரந்தாமன் சொன்னது காலை நேரத்தில். அன்று மாலை, விளக்கு வைக்கும் நேரத்திற்குத் திரும்பி வந்த தர்மர் சொன்னார், "க்ருஷ்ணா எனக்குத்தெரிந்த அத்தனைப் பேர்களையும் நினைத்துப் பார்த்துவிட்டேன்.
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!