நாம் என்ன பேசுகிறோம் என்பது நம் கையில் தான் இருக்கிறது. அப்படி இருக்க, நல்ல இனிய சொற்களை விட்டு விட்டு தேவை இல்லாத தீய சொற்களை ஏன் பேச வேண்டும்?எப்போதும் இனிய சொற்களையே பேசி வந்தால் என்ன கிடைக்கும் என்று கூறுகிறது இந்த நீதி நூல் பாடல்.
முதலில் புகழ் கிடைக்கும். " அவரு ரொம்ப நல்லவரு. எப்ப போனாலும் சந்தோஷம்,சிரிச்சு பேசி,மனசுக்கு இதமா நாலு வார்த்தை சொல்லுவார்"னு,
நம்மைப் பற்றி புகழ்ந்து பேசுவார்கள்.இனிய வார்த்தை சொல்லாவிட்டால் "அதுவா,எப்ப பாரு எரிஞ்சுஎரிஞ்சு விழும்.வாயில நல்ல வார்த்தையே வராதே"என்ற இகழ் வரும்.இரண்டாவது,நம்மை பிடிக்காதவர்கள்,வேண்டாதவர்கள் இருத்தால் கூட, இனிமையாக பேசினால் நாளடைவில் அவர்களும் நமக்கு நண்பர்காளாகி விடுவார்கள்.
இனிய சொல் பகையை முறிக்கும்.கொடிய சொல் நட்பை பிரிக்கும்.
மூன்றாவது,இனிய சொல் பேசுவதனால் நமக்கு என்ன இழப்பு வந்து விடப் போகிறது?ஒன்றும் இல்லை.பின் எதற்கு தயங்க வேண்டும். எப்போதும் இனிய சொற்களையே பேச வேண்டும்.நான்காவது, நம்மை சுற்றி உள்ளவர்கள் எல்லோரும்,நம்மோடு எப்போதும் இணை
பிரியாமல் கூடவே இருப்பார்கள்.இனிய சொற்களைக் கூறுவதானால், என்னவெல்லாம் பயன் இருக்கிறது.எனவே, எப்போதும் இனிய சொற்களையே பேசிப் பழக வேண்டும்.இனிய சொற்களைப் பேசவேண்டும் என்றால்,முதலில் இனிய சொற்களை கேட்கவேண்டும். நல்லவற்றை கேட்க கேட்க அது நம்மையும் அறியாமல் நம்மிடம் ஒட்டிக் கொள்ளும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஜனக மகராஜா ஒருநாள் இரவு தூங்கிக் கொண்டிருந்தார்.அவருக்கு அப்போது ஒரு கனவு வந்தது.அதில் அவர் ஒரு பிச்சைகாரனாக மிகவும் சிரமப்படுவது போல் கனவு.கனவில் அவர் மிகவும் துன்பப்பட்டார்.அப்போது அது கனவு போலவே அவருக்குத் தெரியவில்லை.நிஜம் போலவே இருந்தது.திடுக்கிட்டு "நாராயணா" என்று அலறினார்.
கண் விழித்துப் பார்த்தால் எல்லாம் மாறியிருந்தது.சில வினாடி முன்பு பிச்சைக்காரராக இருந்தவர் இப்போது மன்னராக இருந்தார்.
இது தொடர்ந்து பல நாட்களாக நடந்து கொண்டே இருந்தது.அவர் தினசரி இரவு தூங்கும்போது, கனவில் பிச்சைக்காரனாகி படாத பாடுபடுவார்.
பகலில் எழுந்தால் மன்னனாக சகல சம்போகங்களுடன் இருப்பார்.
ஜனகருக்கு ஒரு பெரும் சந்தேகம் உதித்தது."நான் மன்னனாக இருந்து பிச்சைக்காரனாக இருப்பது போல் கனவு கண்டேனா?
அல்லது பிச்சைகாரனாக இருந்து இப்போது மன்னராக இருப்பது போல் கனவு காண்கிறேனா?" என சந்தேகம் வந்து விட்டது.
பெண்மணி ஒருத்தி், ஐரோப்பாவில் தன்னுடைய மிக நீண்ட சுற்றுலாவை முடித்துக்கொண்டு, தன் சொந்தநாடான தென் ஆப்பிரிக்கா போக, லண்டன் ஏர்போர்ட்டில் காத்திருந்தாள்.அடுத்த பிளேனுக்கு நேரம் நிறைய இருந்ததால், டீயும் பிஸ்கெட்டும் வாங்கிகொண்டு, யாருமில்லாத ஒரு டேபிளில் வந்தமர்ந்தாள்.
காலைப்பேப்பரைப் படித்துக்கொண்டிருந்த அவளுக்கு எதிரிலிருந்து,சடசட என்று சத்தம்கேட்டது.நிமிர்ந்து பார்த்தவளுக்கு, பலத்த அதிர்ச்சி.பார்க்க, படித்தவன்போல் நன்றாக, உயர்ந்த விலையில் உடை உடுத்தி இருந்த ஒரு இளைஞன்,அவள் பிஸ்கெட் ஒன்றை அதன் கவரில் இருந்து எடுத்து சுவைத்துக் கொண்டிருந்தான்.
ஒரு பிஸ்கெட்டுக்காக, அந்நிகழ்ச்சியை பெரிதுபடுத்த விரும்பாத அப்பெண், அமைதியாக தானும் ஒன்றை எடுத்துத் தின்றாள். ஒன்று இரண்டு நிமிடங்கள் கடந்தன. திரும்பவும் சடசட என்ற அதே சத்தம். இன்றொரு பிஸ்கெட்டை எடுத்து அந்த இளைஞன் தின்றுக் கொண்டிருந்தான். மாற்றி மாற்றி இருவரும் எடுத்துத்தின்று,
ஸ்ரீ ரங்கத்தில் உலகம் போற்றும் ஆசார்யன் ஸ்ரீமத் ராமானுஜர்,ஒரு சமயம் திருக்கோவிலை வலம் வந்துக்கொண்டிருந்தார்.அப்போது மடப்பள்ளியிலிருந்து ஏதோ சச்சரவு சத்தம் கேட்டது.ராமானுஜர் மெதுவாக சத்தம் வரும் இடத்திற்குச் சென்றார்.அவரைக் கண்டதும் அனைவரும் வணங்கினர்.
மடப்பள்ளியில் இருந்தவரைப் பார்த்து என்ன விஷயம்?என்று வினவினார்.அவர் இன்னொருவரைக் காட்டிச் சொன்னார்,இவர் நமது கோவிலில் கைங்கர்யம் செய்பவர்.இவ்வளவு நாட்களாக இவரது கைங்கர்யத்திற்காக,இவருக்கு ஒரு பட்டை ப்ரசாதம் வழங்கப்பட்டு வந்தது.இப்போது அதிகம் வேண்டும் என்று கேட்கிறார்.
அப்படியெல்லாம் கொடுப்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. ராமானுஜர் திரும்பி அவரைப் பார்த்தார்.வேலைச்செய்பவர் சொன்னார்,"ஸ்வாமி,அவர் சொல்வது உண்மைதான். நான் ப்ரும்மச்சாரியாய் இருந்த வரையில் எனக்கு ஒரு பட்டை ப்ரசாதம் போதுமாய் இருந்தது. இப்போது எனக்குக் கல்யாணமாகிவிட்டது.
கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் முருகன். அஞ்சு(பயம்) முகம் தோன்றில் ஆறு முகம் தோன்றும் என்ற சொல் வழக்கு உண்டு. ஆறுமுகனுக்கு வேண்டிக்கொள்ளப்படும் பிரார்த்தனைகளில்,காவடி எடுப்பது விசேஷமான ஒன்றாகும். காவடி எடுப்பதற்கு காரணம் இருக்கிறது.
மிகுந்த பக்திமானான இடும்பன், சூரபத்மனுக்கு போர்க்கலையை போதிக்கும் ஆசானாக இருந்தான்.ஆனால் சூரபத்மன் அநேக கொடுமைகள் புரியவே,அவனை விட்டகன்று அகத்தியரிடம் வந்து சேர்ந்தான்.அகத்தியர் பொதிகை மலைக்கு வந்து தங்கியபொழுது தன் சிஷ்யனான இடும்பனை அழைத்தார்.
தன்னுடைய வழிபாட்டிற்காக,கயிலையில் சிவசக்தி ஸ்வரூபமாக விளங்கும் கந்தனுக்குரிய சிவகிரி,சக்திகிரி எனப்படும் இரு சிகரங்களையும் கொண்டு வரும்படி கூறினார்.அகத்தியரின் கட்டளையை சிரமேற்கொண்டு,இடும்பன் கயிலாய மலைக்குச் சென்றான்.அவர் குறிப்பிட்ட சிவகிரி சக்திகிரி இரண்டையும் தூக்கியெடுத்து,
”அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்களில் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்”
- என்று கவியரசர் கண்ணதாசன் எப்போதும் சிலாகித்துச் சொன்ன, கண்ணன் எனும் மன்னன்,ஒருநாள் தர்மரை அழைத்துச் சொன்னார்.
"தர்மா! தீயவன் என்று நீ நினைக்கும் அல்லது பார்க்கும் ஒருவனைத் தேடிப்பிடித்து, இங்கே அழைத்துக்கொண்டு வா!”
அதை உடனேச் செய்து, கண்ணனை மகிழ்விக்க அவர் விரைந்தார்.
அதே போல துரியோதனனையும் அழைத்த கண்ணன் சொன்னார்.
"துரியோதனா! நல்லவன் என்று நீ நினைக்கும் அல்லது பார்க்கும் ஒருவனைத்
தேடிப்பிடித்து, இங்கே அழைத்துக்கொண்டு வா!”
துரியோதனனும் அவ்வாறே செய்வதற்கு விரைந்தான். பரந்தாமன் சொன்னது காலை நேரத்தில். அன்று மாலை, விளக்கு வைக்கும் நேரத்திற்குத் திரும்பி வந்த தர்மர் சொன்னார், "க்ருஷ்ணா எனக்குத்தெரிந்த அத்தனைப் பேர்களையும் நினைத்துப் பார்த்துவிட்டேன்.