ரயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது.டிக்கெட் பரிசோதகரின் காலில் ஏதோ இடறியது. குனிந்து அதை எடுத்தார்.அது ஒரு பழைய மணி பர்ஸ்.ஓரமெல்லாம் ஜீரணம் ஆகி,மெருகு குலைந்திருந்தது. பர்ஸைத் திறந்தார்.சில கசங்கிய நோட்டுகளும்,சில்லறைகளும் இருந்தன.அத்துடன் ஸ்ரீகிருஷ்ணரின் படம் ஒன்றும் இருந்தது.
பர்ஸைத் தலைக்கு மேலே பிடித்துக் காட்டிய பரிசோதகர்,இது யாருடையது?என்று குரலை உயர்த்திக்கேட்டார்.ஒரு முதியவர்,அது என்னுடையது என்றார்.பர்ஸின் நிலையையும்,முதியவரின் வயதையும் கண்டு,ஜோடிப் பொருத்தம் பார்த்தே பர்ஸை தந்திருக்கலாம்.ஆனாலும் பரிசோதகர்,உம்முடையதுதான் என்பதற்கு என்ன ஆதாரம்?
எனக் கேட்டார்.அதில் கிருஷ்ணர் படம் இருக்கும் என்றார் பெரியவர்."இதெல்லாம் ஒரு ஆதாரமா?யார் வேண்டுமானாலும் கிருஷ்ணர் படம் வைத்திருக்கலாமே". "ஐயா" என்று செருமியவாறு முதியவர் ஏதோ கதை சொல்வது போல் சொல்ல ஆரம்பித்தார். வண்டி வேகமெடுத்ததால் காற்று பெட்டியினுள் பரவ, இறுக்கம் விலகியது.
அனைவரும் அவரது கதையைக் கேட்க ஆர்வமாகினர். முதியவர் தொடந்து, "நான் படித்துக் கொண்டிருந்தபோது,என் அப்பா எனக்கு இந்தப் பர்ஸைக்கொடுத்தார். அப்பா அவ்வப்போது தரும் சில்லறைகளை இதில் சேர்க்க ஆரம்பித்தேன்.வீட்டில் தேடிப் பிடித்து,என் அப்பாவும்,அம்மாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை,
கண்டுபிடித்து அதில் வைத்தேன். நான் வாலிபனானேன். பள்ளித் தகவல்களுக்காக என்னைப் புகைப்படம் எடுத்தனர். ஆஹா!அரும்பு மீசையும்,குறும்புச் சிரிப்புமாக இருந்த என்னை,எனக்கே மிகவும் பிடித்தது. அம்மா அப்பா படத்தை எடுத்துவிட்டு என் படத்தை பர்ஸில் வைத்து,நொடிக்கு 100தரம் பார்த்துக் கொண்டேன்.
சில வருடங்களில் திருமணமாயிற்று. இப்போது மனைவியின் முகத்தை அடிக்கடி பார்க்க விரும்பினேன். பர்ஸில் மாற்றம். என் படம் இருந்த இடத்தில்,என் அன்பு மனைவி. அலுவலக வேலையின் இடையில் பர்ஸைத் திறந்து புகைப்படத்தைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது. இதெல்லாம் சில காலம்தான்.
எங்கள் அன்புமயமான வாழ்க்கையின் சாட்சியாக மகன் பிறந்தான். பர்ஸில் மறுபடியும் மாற்றம்.மனைவியின் இடத்தை மகன் ஆக்கிரமித்துக் கொண்டான். பலமுறை படத்தைப் பார்ப்பதும், என் மகன் என்று மற்றவர்களுக்குக் காட்டுவதும்,எனக்கு ஒரே பெருமை தான். வருடங்கள் ஓடின,மனைவி காலமானாள்.
என் மகனுக்குத் தன் குடும்பத்தை கவனிக்கவே நேரம் போதவில்லை. என்னை எப்படி கவனிப்பது? என்னைத் தனிமை வாட்டியது. கூட்டத்தில் தொலைந்து விட்ட குழந்தையாய் தவித்தேன்.அப்போது தான் இந்தப் படத்தை,ஒரு கடையில் பார்த்தேன்.அன்பே உருவான கிருஷ்ணரின் கண்கள் என் நெஞ்சை வருடின.
அவனது உதட்டின் முறுவல்,என் உள்ளத்தில் நேசத்தையும், பாசத்தையும் நிறைத்தது. சொன்னால் நம்புங்கள், புல்லாங்குழலிருந்து தன் கையை எடுத்து, என் கரம் பற்ற நீட்டினான் கிருஷ்ணன். என் கண்கள் அருவியாய் நீரைச் சொரிந்தன. உடனே கிருஷ்ணனின் படத்தை வாங்கி பர்ஸில் வைத்து,
நெஞ்சோடு அணைத்துக் கொண்டேன். என் கவலையும் பறந்தது; தனிமையும் மறைந்தது. என்றென்றும் எவருக்கும் நிரந்தரமான துணையாக இருப்பவர் இறைவன் மட்டுமே. முதியவர் நிறுத்தினார். ஆனால், வண்டியில் இருந்த ஒவ்வொருவர் நெஞ்சிலும்,கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசிக்கத் தொடங்கினார்.
பரிசோதகர் நெகிழ்ச்சியுடன் பர்ஸை முதியவரிடம் கொடுத்தார். இவ்வளவுதான் மனித வாழ்க்கை.இதற்குள் இத்தனை போட்டியும், பொறாமையும்,மான அவமானங்களும்,ஏமாற்றமும்,தோல்வியும், ஏழ்மையும்,வாட்டும் தனிமையும்.
ஆனால் இறைவனை உள்ளத்தில் வைத்து பூஜித்தால், என்றும் எப்போதும் எந்த நிலையிலும் நம்முடனேயே இருப்பான். அனைத்தும் அவன் செயல்,அனைத்தும் கிருஷ்ணார்ப்பணம் என்றிருந்தால், நமக்கு எது நன்மையோ அதையே இறைவன் கொடுப்பான். நடப்பது நன்மையாகவே இருக்கும்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகக்குலத்தை சேர்த்த செல்வந்தன் ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்துவந்தார்.தம்பதிகள் அறிவிலும் அறத்திலும் சிறந்தவர்களாக விளங்கினர்.காலப்போக்கில் வணிகன் ஒரு பெண் குழந்தையைப் பெற்றான். அக்குழந்தை சீராட்டி வளர்க்கப்பட்டு,உரிய காலத்தில் மணப்பருவத்தை அடைந்தது.
வணிகன் மதுரையில் வாழ்ந்து வந்த,ஏற்கனவே திருமணமான தன் மருமகனுக்கே பெண்ணை கொடுக்கப் போவதாக உறவினர்களிடம் கூறிக்கொண்டிருந்தான்.சில நாட்கள் சென்றதும் வணிகனும், அவனது மனைவியும் இறந்துவிட்டனர்.இறந்தவருக்குச் செய்யவேண்டிய இறுதிக் கடன்களை செய்து முடித்த சுற்றத்தார்,
மதுரையில் உள்ள மருமகனுக்கு அச்செய்தியை ஓலை மூலம் தெரிவித்தனர்.அவ்வோலையில், “உன் மாமனும்,மாமியும் இறந்து விட்டனர்.உன் மாமனுக்கு நிறைய சொத்தும் ஒரு பெண்ணும் உண்டு.ஆதலால் நீ வந்து உன் மாமன் பெண்ணைத் திருமணம் செய்து செல்வாயாக"என்று எழுதியிருந்தனர்.
நாம் என்ன பேசுகிறோம் என்பது நம் கையில் தான் இருக்கிறது. அப்படி இருக்க, நல்ல இனிய சொற்களை விட்டு விட்டு தேவை இல்லாத தீய சொற்களை ஏன் பேச வேண்டும்?எப்போதும் இனிய சொற்களையே பேசி வந்தால் என்ன கிடைக்கும் என்று கூறுகிறது இந்த நீதி நூல் பாடல்.
முதலில் புகழ் கிடைக்கும். " அவரு ரொம்ப நல்லவரு. எப்ப போனாலும் சந்தோஷம்,சிரிச்சு பேசி,மனசுக்கு இதமா நாலு வார்த்தை சொல்லுவார்"னு,
நம்மைப் பற்றி புகழ்ந்து பேசுவார்கள்.இனிய வார்த்தை சொல்லாவிட்டால் "அதுவா,எப்ப பாரு எரிஞ்சுஎரிஞ்சு விழும்.வாயில நல்ல வார்த்தையே வராதே"என்ற இகழ் வரும்.இரண்டாவது,நம்மை பிடிக்காதவர்கள்,வேண்டாதவர்கள் இருத்தால் கூட, இனிமையாக பேசினால் நாளடைவில் அவர்களும் நமக்கு நண்பர்காளாகி விடுவார்கள்.
ஜனக மகராஜா ஒருநாள் இரவு தூங்கிக் கொண்டிருந்தார்.அவருக்கு அப்போது ஒரு கனவு வந்தது.அதில் அவர் ஒரு பிச்சைகாரனாக மிகவும் சிரமப்படுவது போல் கனவு.கனவில் அவர் மிகவும் துன்பப்பட்டார்.அப்போது அது கனவு போலவே அவருக்குத் தெரியவில்லை.நிஜம் போலவே இருந்தது.திடுக்கிட்டு "நாராயணா" என்று அலறினார்.
கண் விழித்துப் பார்த்தால் எல்லாம் மாறியிருந்தது.சில வினாடி முன்பு பிச்சைக்காரராக இருந்தவர் இப்போது மன்னராக இருந்தார்.
இது தொடர்ந்து பல நாட்களாக நடந்து கொண்டே இருந்தது.அவர் தினசரி இரவு தூங்கும்போது, கனவில் பிச்சைக்காரனாகி படாத பாடுபடுவார்.
பகலில் எழுந்தால் மன்னனாக சகல சம்போகங்களுடன் இருப்பார்.
ஜனகருக்கு ஒரு பெரும் சந்தேகம் உதித்தது."நான் மன்னனாக இருந்து பிச்சைக்காரனாக இருப்பது போல் கனவு கண்டேனா?
அல்லது பிச்சைகாரனாக இருந்து இப்போது மன்னராக இருப்பது போல் கனவு காண்கிறேனா?" என சந்தேகம் வந்து விட்டது.
பெண்மணி ஒருத்தி், ஐரோப்பாவில் தன்னுடைய மிக நீண்ட சுற்றுலாவை முடித்துக்கொண்டு, தன் சொந்தநாடான தென் ஆப்பிரிக்கா போக, லண்டன் ஏர்போர்ட்டில் காத்திருந்தாள்.அடுத்த பிளேனுக்கு நேரம் நிறைய இருந்ததால், டீயும் பிஸ்கெட்டும் வாங்கிகொண்டு, யாருமில்லாத ஒரு டேபிளில் வந்தமர்ந்தாள்.
காலைப்பேப்பரைப் படித்துக்கொண்டிருந்த அவளுக்கு எதிரிலிருந்து,சடசட என்று சத்தம்கேட்டது.நிமிர்ந்து பார்த்தவளுக்கு, பலத்த அதிர்ச்சி.பார்க்க, படித்தவன்போல் நன்றாக, உயர்ந்த விலையில் உடை உடுத்தி இருந்த ஒரு இளைஞன்,அவள் பிஸ்கெட் ஒன்றை அதன் கவரில் இருந்து எடுத்து சுவைத்துக் கொண்டிருந்தான்.
ஒரு பிஸ்கெட்டுக்காக, அந்நிகழ்ச்சியை பெரிதுபடுத்த விரும்பாத அப்பெண், அமைதியாக தானும் ஒன்றை எடுத்துத் தின்றாள். ஒன்று இரண்டு நிமிடங்கள் கடந்தன. திரும்பவும் சடசட என்ற அதே சத்தம். இன்றொரு பிஸ்கெட்டை எடுத்து அந்த இளைஞன் தின்றுக் கொண்டிருந்தான். மாற்றி மாற்றி இருவரும் எடுத்துத்தின்று,
ஸ்ரீ ரங்கத்தில் உலகம் போற்றும் ஆசார்யன் ஸ்ரீமத் ராமானுஜர்,ஒரு சமயம் திருக்கோவிலை வலம் வந்துக்கொண்டிருந்தார்.அப்போது மடப்பள்ளியிலிருந்து ஏதோ சச்சரவு சத்தம் கேட்டது.ராமானுஜர் மெதுவாக சத்தம் வரும் இடத்திற்குச் சென்றார்.அவரைக் கண்டதும் அனைவரும் வணங்கினர்.
மடப்பள்ளியில் இருந்தவரைப் பார்த்து என்ன விஷயம்?என்று வினவினார்.அவர் இன்னொருவரைக் காட்டிச் சொன்னார்,இவர் நமது கோவிலில் கைங்கர்யம் செய்பவர்.இவ்வளவு நாட்களாக இவரது கைங்கர்யத்திற்காக,இவருக்கு ஒரு பட்டை ப்ரசாதம் வழங்கப்பட்டு வந்தது.இப்போது அதிகம் வேண்டும் என்று கேட்கிறார்.
அப்படியெல்லாம் கொடுப்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. ராமானுஜர் திரும்பி அவரைப் பார்த்தார்.வேலைச்செய்பவர் சொன்னார்,"ஸ்வாமி,அவர் சொல்வது உண்மைதான். நான் ப்ரும்மச்சாரியாய் இருந்த வரையில் எனக்கு ஒரு பட்டை ப்ரசாதம் போதுமாய் இருந்தது. இப்போது எனக்குக் கல்யாணமாகிவிட்டது.