அவருடைய இயற்பெயர் ஸ்ரீனிவாச நாயக்.கி.பி.1480லேயே 9கோடி சொத்திற்கு அதிபதி.ஆனால் ஒரு மகாகருமி.நாயக் 18வயதில், கடவுள் பக்தையான,தான-தர்மத்தில் சிறந்தவளான, சரஸ்வதி எனும் பெண்ணை மணந்தார்.அவர் வாழ்ந்த ஊரில் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் பாண்டுரங்கனாகக் காட்சியளித்தான்.
மக்கள் தெருவில் தினமும் பஜனை பாடுவார்கள்.நாயக் கண்டுகொள்ளமாட்டார்.பார்த்தான் பாண்டுரங்கன்.ஒரு முதிய ஏழை அந்தணன் உருவில்,ஏழு வயது சிறுவனோடு,நாயக்கின் கடைமுன் வந்து நின்றான் இறைவன்."ஐயா!தர்மப்பிரபுவே"
நாயக் அந்த அந்தணனை திரும்பிக்கூட பார்க்கவில்லை. விடுவானா இறைவன்?
திரும்பவும் கூப்பிட்டார்."டேய்!யாருடா நீ?"அதட்டினார் நாயக்.
"ஐயா நான் ஓர் ஏழை பிராமணன்.இவன் என் ஒரே மகன்.ஏழு வயது.பூநூல் போடவேண்டும்.நீங்கள் உதவி செய்தால் நடக்கும் பிரபு.ஏதாவது கொஞ்சம் பணம் கொடுங்கள் சாமி."
"போ போ வேறு எங்காவது பிச்சை எடு.என்னிடம் பணமே இல்லை"விரட்டினார் நாயக்.
எவ்வளவு கெஞ்சிக்கேட்டும் நாயக்கின் மனம் இளகவில்லை. ஆனால் பகவான் அவரை விடுவதாயில்லை.தினமும் வந்து, நமக்கு படியளப்பவனே,அவரிடம் பிச்சை கேட்டான்.நாயக்கும் அலுக்காமல் விரட்டினார்.ஒருநாள்,"உங்களிடம் யாசகம் வாங் காமல் போகமாட்டேன் பிரபு"என்று சொல்லி,இறைவன் நாயக்கின் கடைவாசலில்
உட்கார்ந்து விட்டான்."இது ஏதடா வம்பு"என்று அலுத்துக்கொண்ட நாயக்,கல்லாப் பெட்டியிலிருந்து ஒரு செல்லாக்காசை எடுத்து,அந்தணன் மேல் தூக்கி எறிந்தார். "இந்தா,இதை எடுத்துப் போ.இனிமேல் கடைப்பக்கம் வராதே"
அந்தக் காசை பார்த்துவிட்டு,"பிரபு இது தேய்ந்து போயிருக்கிறதே.எதற்கும் பிரயோஜனமில்லை.
வேறு நல்ல காசு கொடுங்களேன்"என்றான் இறைவன்.நாயக் யோசித்தார்."நல்ல காசா?ஏதாவது பொருள் கொண்டுவந்து என் கடையில் அடமானம் வை.நல்ல காசு தருகிறேன்"என்றார்.
அந்தணன் அச்சிறுவனை அழைத்துக்கொண்டு,நேராக நாயக்கின் வீட்டிற்குச்சென்றான்.
அங்கே, வெள்ளிக் கிழமையாதலால் துளசி பூஜையை முடித்துவிட்டு, நாயக்கின் மனைவி ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தாள். "பவதி பிக்ஷாம் தேஹி". ஓடிச்சென்று வாசலில் பார்த்தாள்.பார்த்ததும் காலில் விழுந்து கும்பிட்டாள்.
"என்ன வேண்டும் சுவாமி?". "அம்மா நான் ஓர் ஏழை.வயதாகி விட்டது.இவன் என் பையன்.
இவனுக்கு பூணூல் போட பணமில்லை.ஒரு கஞ்சனைக் கேட்டேன்.அவன் மிகப் பெரிய பணக்காரன்.ஆனால் சல்லிக்காசுகூட தரமாட்டேன் என்று என்னை அடிக்காத குறையாகத் துரத்திவிட்டான் அம்மா.உன்னைப் பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்கிறாய்.ஏதாவது உபகாரம் பண்ணம்மா."
"பணம் நம்மிடம் கிடையாது.அப்படியே இருந்து,தர்மம் செய்தேன் என்று தெரிந்தால் புருஷன் அடித்தே கொன்றுவிடுவான்.இவருக்கு நாம் எப்படி உதவுவது?"என்று யோசித்த சரஸ்வதி முடிவில் தன்னுடைய பரிதாபமான நிலையை விளக்கினாள்."அட நீ என்னம்மா.புருஷன் உனக்குக் கொடுத்ததை தர்மம் செய்தால்தானே ஆபத்து?"
திருமணத்தின்போது உன் பெற்றோர் போட்ட நகைகள் உன்னுடையதுதானே?அதைக் கொடுத்தால் அவர் என்ன செய்ய முடியும்?"என்று அவளை உசுப்பேற்றினான் பிராமணன்."அட உண்மைதானே?சட்டென்று தன்னுடைய வைர மூக்குத்தியைக் கழட்டி அந்த பிராமணனிடம் கொடுத்துவிட்டாள் சரஸ்வதி.
அவளை மனதார வாழ்த்திவிட்டு,சிறுவனுடன் நேரே நாயக்கின் அடகுக்கடைக்கே வந்தான் பிராமணன்.நாயக்கிற்கோ, மறுபடியும் தொந்தரவு ஆரம்பித்துவிட்டதோ என்று தோன்றியது.
"இந்தாரும்.இந்த மூக்குத்தியை எடுத்துக் கொண்டு ஏதாவது பணம் கொடும்"என்று மிரட்டினான் பிராமணன்.
கையில் மூக்குத்தியை வாங்கி பரீட்சித்துப் பார்த்து,"இதை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே"என்று யோசித்தார் நாயக்.சிறிது நேரம் கழித்து,"ஓய் பிராமணரே.இந்த மூக்குத்தி இங்கேயே இருக்கட்டும்.இப்போது என்னிடம் காசு இல்லை. நாளை வந்து பணம் வாங்கிக்கொள்"என்றார்.அதை ஒப்புக்கொண்டான் அந்தணன்.
உடனே நாயக் தன் கடையை பூட்டிவிட்டு,நேரே வீட்டிற்குப் போனார்.மனைவியைப் பார்த்தபோது அவள் முகத்தில் மூக்குத்தி இல்லை."சரஸ்வதி மூக்குத்தி எங்கே?போய் போட்டுக் கொண்டுவா".சரஸ்வதி வெலவெலத்துப் போனாள். "ஐயோ இப்போது என்ன செய்வது?அந்த பிராமணனுக்கு தானம் கொடுத்தேன் என்றால் கொன்று விடுவாரே?"
கடைசியில் சரஸ்வதி ஒரு முடிவுக்கு வந்தாள். "இந்த துஷ்டனிடம் மூர்க்கத்தனமாக அடிபடுவதைவிட சாவதேமேல்" என்ற முடிவோடு,ஒரு பாத்திரத்தில் விஷத்தைக் கலந்து கையில் வைத்துக்கொண்டு துளசி மாடத்தை வலம் வந்தாள்."தாயே துளசி.நான் உன்னிடம் வந்து விடுகிறேனம்மா"என்று சொல்லி விஷத்தை குடிக்க
முற்படுகையில்,விஷப் பாத்திரத்தில் ஏதோ விழும் ஓசை கேட்டது.சரஸ்வதி உள்ளே கைவிட்டுப் பார்த்தபோது,அவளின் மூக்குத்தி இருந்தது.அவளை ஆனந்தமும்,வியப்பும் அணைத்துக் கொண்டது. "என்னைக் காப்பாற்றிவிட்டாய் தாயே"என்று கண்களில் நீர் பெருக விழுந்து கும்பிட்டாள்.
பிறகு கணவனிடம் ஓடிச்சென்று,"இந்தாருங்கள் மூக்குத்தி"என்று கொடுத்தாள். நாயக்கிற்கு ஒன்றும் புரியவில்லை.மூக்குத்தியை எடுத்துக்கொண்டு பித்துப் பிடித்தவர்போல,மீண்டும் தனது அடகு கடைக்குச் சென்றார். கல்லாப் பெட்டியைத் திறந்து,உள்ளே பத்திரமாக வைத்திருந்த மூக்குத்தியைத் தேடினார்.
அங்கே அது இல்லை.கடை முழுவதும் தேடினார், கிடைக்கவில்லை. நாளை அந்த பிராமணன் வந்து,"எனக்கு பணம் வேண்டாம்.என்னுடைய நகையைக் கொடுங்கள்"என்று கேட்டால் என்ன செய்வது? மனைவியினுடைய மூக்குத்தியையா அவனுக்குக் கொடுப்பது? பிரமை பிடித்தது அவனுக்கு. கூடவே பயமும் வந்தது.மறுநாள் காலை!
கடைத் திறந்த வினாடியில் அந்தக்கிழவன் சிறுவனோடு வந்து விட்டான்"ஐயா பிரபுவே நான் கொடுத்த நகைக்கு பணம் தருவதாகச் சொன்னீர்களே.இன்றும் பணம் இல்லாவிட்டால் பரவாயில்லை.என்னுடைய நகையைக் கொடுங்கள்.வேறு கடையில் அடமானம் வைத்துக் கொள்கிறேன்"என்றான். நாயக்கின் நிலை பரிதாபமானது.
"ஐயா மன்னித்துவிடுங்கள்.வெளியிலிருந்து கொஞ்சம் பணம் வரவேண்டியிருக்கிறது.வந்தவுடன் தருகிறேன்.முடிந்தால் மாலை வாருங்களேன்.கண்டிப்பாக பணம் தருகிறேன்."சரி சரி சாயங்காலமும் என்னை ஏமாற்றிவிடாதே".கிழவன் போனபின்பு, தன் கடையில் பணிபுரியும் ஒரு வேலையாளை அனுப்பி,அந்தக் கிழவன் எங்கே போகிறான்
என்று கண்காணிக்கச் சொன்னார்.பின்தொடர்ந்து சென்ற வேலையாள் சிறிது நேரங்கழித்து பதைபதைப்புடன் ஓடிவந்தான்."என்னடா ஏன் இப்படி ஓடி வருகிறாய்?". "அய்யா என்னை மன்னித்துவிடுங்கள்.கிழவர் இரண்டு மூன்று தெருக்கள் தாண்டி,பாண்டுரங்கன் கோவிலுக்குச் சென்றார்.நேரே கர்ப்பக் கிரகத்துள் புகுந்தார்.
பின்னர் மறைந்து விட்டார்" நாயக் திடுக்கிட்டார்.என்ன இது? கடைக்கு வந்த முதியவர் யார்?என்ன அதிசயம் இது!கடையைப் பூட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் நடந்த சம்பவத்தைச் சொன்னார்.அவளும் மூக்குத்தியை அந்தக் கிழவருக்கு தானம் தந்ததையும், அவர் வாழ்த்திவிட்டுப் போனதையும் சொன்னாள்.
நாயக் கடவுளே தன்னை பரீட்சித்து விட்டதை உணர்ந்தார்.
அப்போது ஓர் அசரீரி பூஜை அறையிலிருந்து கேட்டது.
"இத்தனை செல்வங்களை வைத்துக்கொண்டு தான தருமம் செய்யாமல் வாழ்கிறாயே? உனக்கு எப்படி நற்கதி கிடைக்கும்?இனி உன் பெயர் ஸ்ரீனிவாச நாயக் இல்லை.இந்த ஊரின் பெயரான புரந்தரகட என்கிற பெயரால்
இனி உன் பெயர் புரந்தரதாசன்.பகவானைப் பாடு. நீ நாரதருடைய அம்சம்.ஸ்ரீ கிருஷ்ண தேவராயருடைய குல குருவான ஸ்ரீ வியாசராயரை தஞ்சமடைவாயாக.அவர் உனக்கு குரு உபதேசம் செய்வார்".தன் மனைவி, மக்களோடு இறைவன் நாமங்களைப் பாடியவாறே ஹம்பி சென்று ஸ்ரீ வியாசராயரை சரணடைந்தார்.
அவர் ஸ்ரீநிவாச நாயக்கின் பிறப்பின் ரகசியத்தைச் சொல்லி அவருக்கு குரு உபதேசம் செய்தார். கால்நடையாகவே பாரத தேசத்தை மூன்று முறை வலம் வந்தார் புரந்தரதாசர்.சுமார் நான்கு லட்சம் பாடல்களை இறைவன் மீது பாடியுள்ளார்.
விட்டலா! விட்டலா! விட்டலா!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ரயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது.டிக்கெட் பரிசோதகரின் காலில் ஏதோ இடறியது. குனிந்து அதை எடுத்தார்.அது ஒரு பழைய மணி பர்ஸ்.ஓரமெல்லாம் ஜீரணம் ஆகி,மெருகு குலைந்திருந்தது. பர்ஸைத் திறந்தார்.சில கசங்கிய நோட்டுகளும்,சில்லறைகளும் இருந்தன.அத்துடன் ஸ்ரீகிருஷ்ணரின் படம் ஒன்றும் இருந்தது.
பர்ஸைத் தலைக்கு மேலே பிடித்துக் காட்டிய பரிசோதகர்,இது யாருடையது?என்று குரலை உயர்த்திக்கேட்டார்.ஒரு முதியவர்,அது என்னுடையது என்றார்.பர்ஸின் நிலையையும்,முதியவரின் வயதையும் கண்டு,ஜோடிப் பொருத்தம் பார்த்தே பர்ஸை தந்திருக்கலாம்.ஆனாலும் பரிசோதகர்,உம்முடையதுதான் என்பதற்கு என்ன ஆதாரம்?
எனக் கேட்டார்.அதில் கிருஷ்ணர் படம் இருக்கும் என்றார் பெரியவர்."இதெல்லாம் ஒரு ஆதாரமா?யார் வேண்டுமானாலும் கிருஷ்ணர் படம் வைத்திருக்கலாமே". "ஐயா" என்று செருமியவாறு முதியவர் ஏதோ கதை சொல்வது போல் சொல்ல ஆரம்பித்தார். வண்டி வேகமெடுத்ததால் காற்று பெட்டியினுள் பரவ, இறுக்கம் விலகியது.
காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகக்குலத்தை சேர்த்த செல்வந்தன் ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்துவந்தார்.தம்பதிகள் அறிவிலும் அறத்திலும் சிறந்தவர்களாக விளங்கினர்.காலப்போக்கில் வணிகன் ஒரு பெண் குழந்தையைப் பெற்றான். அக்குழந்தை சீராட்டி வளர்க்கப்பட்டு,உரிய காலத்தில் மணப்பருவத்தை அடைந்தது.
வணிகன் மதுரையில் வாழ்ந்து வந்த,ஏற்கனவே திருமணமான தன் மருமகனுக்கே பெண்ணை கொடுக்கப் போவதாக உறவினர்களிடம் கூறிக்கொண்டிருந்தான்.சில நாட்கள் சென்றதும் வணிகனும், அவனது மனைவியும் இறந்துவிட்டனர்.இறந்தவருக்குச் செய்யவேண்டிய இறுதிக் கடன்களை செய்து முடித்த சுற்றத்தார்,
மதுரையில் உள்ள மருமகனுக்கு அச்செய்தியை ஓலை மூலம் தெரிவித்தனர்.அவ்வோலையில், “உன் மாமனும்,மாமியும் இறந்து விட்டனர்.உன் மாமனுக்கு நிறைய சொத்தும் ஒரு பெண்ணும் உண்டு.ஆதலால் நீ வந்து உன் மாமன் பெண்ணைத் திருமணம் செய்து செல்வாயாக"என்று எழுதியிருந்தனர்.
நாம் என்ன பேசுகிறோம் என்பது நம் கையில் தான் இருக்கிறது. அப்படி இருக்க, நல்ல இனிய சொற்களை விட்டு விட்டு தேவை இல்லாத தீய சொற்களை ஏன் பேச வேண்டும்?எப்போதும் இனிய சொற்களையே பேசி வந்தால் என்ன கிடைக்கும் என்று கூறுகிறது இந்த நீதி நூல் பாடல்.
முதலில் புகழ் கிடைக்கும். " அவரு ரொம்ப நல்லவரு. எப்ப போனாலும் சந்தோஷம்,சிரிச்சு பேசி,மனசுக்கு இதமா நாலு வார்த்தை சொல்லுவார்"னு,
நம்மைப் பற்றி புகழ்ந்து பேசுவார்கள்.இனிய வார்த்தை சொல்லாவிட்டால் "அதுவா,எப்ப பாரு எரிஞ்சுஎரிஞ்சு விழும்.வாயில நல்ல வார்த்தையே வராதே"என்ற இகழ் வரும்.இரண்டாவது,நம்மை பிடிக்காதவர்கள்,வேண்டாதவர்கள் இருத்தால் கூட, இனிமையாக பேசினால் நாளடைவில் அவர்களும் நமக்கு நண்பர்காளாகி விடுவார்கள்.
ஜனக மகராஜா ஒருநாள் இரவு தூங்கிக் கொண்டிருந்தார்.அவருக்கு அப்போது ஒரு கனவு வந்தது.அதில் அவர் ஒரு பிச்சைகாரனாக மிகவும் சிரமப்படுவது போல் கனவு.கனவில் அவர் மிகவும் துன்பப்பட்டார்.அப்போது அது கனவு போலவே அவருக்குத் தெரியவில்லை.நிஜம் போலவே இருந்தது.திடுக்கிட்டு "நாராயணா" என்று அலறினார்.
கண் விழித்துப் பார்த்தால் எல்லாம் மாறியிருந்தது.சில வினாடி முன்பு பிச்சைக்காரராக இருந்தவர் இப்போது மன்னராக இருந்தார்.
இது தொடர்ந்து பல நாட்களாக நடந்து கொண்டே இருந்தது.அவர் தினசரி இரவு தூங்கும்போது, கனவில் பிச்சைக்காரனாகி படாத பாடுபடுவார்.
பகலில் எழுந்தால் மன்னனாக சகல சம்போகங்களுடன் இருப்பார்.
ஜனகருக்கு ஒரு பெரும் சந்தேகம் உதித்தது."நான் மன்னனாக இருந்து பிச்சைக்காரனாக இருப்பது போல் கனவு கண்டேனா?
அல்லது பிச்சைகாரனாக இருந்து இப்போது மன்னராக இருப்பது போல் கனவு காண்கிறேனா?" என சந்தேகம் வந்து விட்டது.
பெண்மணி ஒருத்தி், ஐரோப்பாவில் தன்னுடைய மிக நீண்ட சுற்றுலாவை முடித்துக்கொண்டு, தன் சொந்தநாடான தென் ஆப்பிரிக்கா போக, லண்டன் ஏர்போர்ட்டில் காத்திருந்தாள்.அடுத்த பிளேனுக்கு நேரம் நிறைய இருந்ததால், டீயும் பிஸ்கெட்டும் வாங்கிகொண்டு, யாருமில்லாத ஒரு டேபிளில் வந்தமர்ந்தாள்.
காலைப்பேப்பரைப் படித்துக்கொண்டிருந்த அவளுக்கு எதிரிலிருந்து,சடசட என்று சத்தம்கேட்டது.நிமிர்ந்து பார்த்தவளுக்கு, பலத்த அதிர்ச்சி.பார்க்க, படித்தவன்போல் நன்றாக, உயர்ந்த விலையில் உடை உடுத்தி இருந்த ஒரு இளைஞன்,அவள் பிஸ்கெட் ஒன்றை அதன் கவரில் இருந்து எடுத்து சுவைத்துக் கொண்டிருந்தான்.
ஒரு பிஸ்கெட்டுக்காக, அந்நிகழ்ச்சியை பெரிதுபடுத்த விரும்பாத அப்பெண், அமைதியாக தானும் ஒன்றை எடுத்துத் தின்றாள். ஒன்று இரண்டு நிமிடங்கள் கடந்தன. திரும்பவும் சடசட என்ற அதே சத்தம். இன்றொரு பிஸ்கெட்டை எடுத்து அந்த இளைஞன் தின்றுக் கொண்டிருந்தான். மாற்றி மாற்றி இருவரும் எடுத்துத்தின்று,